அருமையான பதிவு லதா பைஜூ.தன்னை மகனாக வளர்த்தவரை கொலை செய்து, சிறுவயதில் இருந்தே தன் மேல் பிரியம் வைத்த இளாவை ஏமாற்றி வேறு பெண்ணை திருமணம் செய்தவன், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பினாலும் தெய்வம் (நின்று)அன்றே கொன்று விட்டது....
ஆறுதல் சொல்வது போல வந்து,சத்யாவின் மனைவி,குழந்தைய பத்தி விசாரிக்கிறாங்க என்ன ஜென்மங்களோ.அடுத்த வீட்டு கதையை கேட்க ஆலாய் பறக்கும்,இதுங்க எல்லாம் எப்போ தான் திருந்துவாங்களோ.
வீணா பாட்டி,லலிதாட்ட பேசி விக்ரம்,இளா கல்யாணம் செய்ய சொல்லி திட்டம் போடறாளா. அழகுக்காக ஒருத்தியை கல்யாணம் பண்ணிட்டு,பணத்துக்காக இளாவை கல்யாணம் பண்ண துரோகியை மறந்திட சொன்னாலும்,இளா அவன் மேல் கொண்ட காதல் உண்மை தானே.
இளா அதை மறந்து வெளியே வருவாளா.விக்ரமை திருமணம் செய்வாளா.
இலக்கியாவின் குமுறல் நியாயமானதுதான்
உடம்பால் கெட்டு போவதை விட மனதால் கெட்டது யாருக்குமே கொஞ்சம் ஜாஸ்தி வலியைத்தான் கொடுக்கும்
அவ்வளவு நம்பிய ஒருவன் பொய்த்து போனால் தாங்கிக் கொள்வது கொஞ்சம் கஷ்டம்தான்
அதை விடுங்க
விக்ரமுக்கு கால் சரியாச்சா? இல்லையா?
போலீஸ் வேலைக்கு விக்ரம் போவானா?மாட்டானா?
வந்து அதை முதலில் சொல்லுங்க
அப்படியே பிரம்மாவையும் கூட்டிட்டு வந்துடுங்க, லதா டியர்