இனிக்கும்உறவுகள்என்றும் தொடர்ந்துவர....

Advertisement

Eswari kasi

Well-Known Member
#இனிக்கும்உறவுகள்என்றும் #தொடர்ந்துவர....

#இனியாவதுபின்பற்றுங்கள் !

1. ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தவுடன் ..
இது சொந்த வீடா ..வாடகை வீடா ...
வாடகை எவ்வளவு.... என்று கேட்க ஆரம்பிக்காதீர்கள் ..
(அவர்கள் எந்த வீட்டில் இருந்தாலும் மேற்கொண்டு நீங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை)

2 . நீங்க முதலியாரா .. கவுண்டரா .கிரிஸ்டியனா என்று கேட்டு சங்கடப்படுத்தாதீர்கள் .
(அவர்கள் எந்த சாதியாக இருந்தாலும் மேற்கொண்டு நீங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை)

3.வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவர்களின் பொருளாதார நிலையை அறிய கண்களாலே துழவாதீர்கள்.

4.வீட்டிற்கு வந்தவர்களிடம் ..
காபியா டீயா என்றால் ..
கொடுங்கள் என்று அன்போடு கேட்டு அருந்துங்கள். அல்லது மோரோ ,குளிர்பானமோ ..கொடுப்பதை மனம் குளிர்ந்து அருந்துங்கள்.
இப்பதான காபி சாப்பிட்டு வந்தேன் .. என்று அலட்சியப் படுத்தாதீர்கள்.

5.வீட்டிற்கு அழைப்பிதழ் கொடுக்க வரும்போது ..
அவர்களிடமே பேர் கேட்டு எழுதாதீர்கள்.

6.வீட்டிற்கு வந்தவர் வருகிறேன் என்று சொல்லி வெளியில் சென்று தெருவில் நடக்கும் வரை /வாகனம் எடுக்கும் வரை
அவர்களிடம் கண்களால் உரையாடுங்கள். மாறாக உடனே கேட்டையோ ,கதவையோ சாத்தாதீர்கள்.

7.ஏன் உங்க மனைவி வேலைக்கு போறாங்க ... ? அல்லது ஏன் வேலைக்கு போகல.. என்று ஆராய்ச்சி கேள்வி கேட்காதீர்கள்.

8. சாப்பாட்டு நேரத்துல வந்தவங்க கிட்ட "சாப்பிடுறீங்களா" என்று கேட்கும் வீட்டில் பச்சை தண்ணி கூட குடிக்காதீர்கள். மாறாக "சாப்பிடுங்க "என்று சொல்ற வீட்டில நிச்சயமாக சாப்பிடுங்க.
உறவுகளை வளர்க்க அதுவே உன்னத வழி.

9.பையன் அல்லது பொண்ணு என்ன பண்றா‌.. என்று கேட்காதீர்கள்...
வேண்டுமென்றால் உங்கள் பையன் அல்லது பொண்ணு என்ன படிக்கிறார்கள் /எங்கு வேலை செய்கிறார்கள் .. என்று சொல்லுங்கள்..
கேட்பவருக்கு பிடித்திருந்தால் அவர் சொல்லட்டும்..அவரை வற்புறுத்தாதீர்கள்.

10. friendly ஆ பேசறேன் ,உரிமையில பேசறன்னு ...பொதுவுல ...அவங்களுக்கோ அவங்க பிள்ளைகளுக்கோ advice ஆரம்பிக்காதீர்கள்.

11.உங்களுக்கு என்ன குறைச்சல்.. இரண்டு பேரு சம்பளம் ... பையன் கை நிறைய சம்பாரிக்கிறான் ...இப்படி சொல்றவங்க கிட்ட ../நினைக்கறவங்க கிட்ட தள்ளியே நில்லுங்க.
அல்லது உறவுகளை விட்டு விலகிடுங்க.

12.நீங்க எங்கெல்லாம் plot/flat வாங்கி வச்சிருக்கீங்களோ‌‌....
வந்த இடத்தில் பட்டியலிடாதீர்கள்..
இது அவருக்கு அவர் மனைவிமுன் மிகுந்த தர்ம சங்கடத்தை உருவாக்கும்....
இதை உணருங்கள்.

13.வந்த இடத்தில் உங்கள் புத்திசாலித்தனத்தை காட்டாதீர்கள்..
மாறாக அன்பை காட்டுங்கள்.அதற்கே உலகளவில் அதிக demand.

14. வீட்டிற்கு வருபவர்களிடம் பிள்ளைகளை அறிமுகப்படுத்தி அவர் எந்த வகையில் உறவினர் அல்லது நண்பர் ... என்று...
பிள்ளைகள் மூலம் உங்கள் உறவுகளுக்கு பாலம் அமையுங்கள்.

15. வீட்டிற்கு வந்தவர்களிடம் கணவனை அல்லது மனைவியை விட்டு கொடுக்காமல் பேசுகிறேன் என்று தற்பெருமை, தம்பட்டம் அடிக்காதீர்கள்..
அல்லது.. வீட்டிற்கு வந்தவர்களிடம் தனது மனைவி/கணவன் பற்றியோ விளையாட்டு க்கு சொல்கிறேன் என்று கிண்டலடிக்காதீர்கள்.

16.மிக முக்கியமான இன்னொன்று
பிள்ளைக்கு கல்யாணமாயிடுச்சா?
குழந்தை எதுவும் ?
எத்தனை வருஷமாச்சு?
டாக்டரை எதுவும் பார்த்தீங்களா?
இது ஒரு கேவலமான உரையாடல்

17.இரண்டு அல்லது மூன்று நண்பர்கள் போதும் .. உங்கள் personal / family விஷயங்களை பகிர்ந்து கொள்ள.
மற்ற அனைத்து நண்பர்களிடம் நாசூக்காகவும்,இயல்பாகவும் பழக கற்று கொள்ளுங்கள்.

- படித்ததில் பிடித்தது
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் டியர்.... இதுல போட்டிருக்க எல்லா கேள்வியையும் எங்க மாமியார் வாரவங்ககிட்ட கண்டிப்பா கேட்பாங்க... அவங்க பதில் சொல்ல முடியாம முழிப்பாங்க... எங்களுக்குத்தான் ரொம்ப தர்ம சங்கடமா இருக்கும்.... அவங்களுக்கு கொஞ்சம் காது கேட்காது..... வயது 94 ஆகுது... ஆனா பதில சொல்லுறவரைக்கும் விடவே மாட்டாங்க கேட்டுக்கிட்டே இருப்பாங்க... நாங்களும் எத்தனையோ தரம் சொல்லி சொல்லி பார்த்துட்டு... என்ன பண்ணுறதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு இருக்கோம்... அப்படியே எல்லாக்கேள்வியும் மாறாம இருக்கா....ஒரு வேள அவுககிட்ட மாட்டின யாரோதான் போட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன் டியர்....
 

Eswari kasi

Well-Known Member
ஹாய் டியர்.... இதுல போட்டிருக்க எல்லா கேள்வியையும் எங்க மாமியார் வாரவங்ககிட்ட கண்டிப்பா கேட்பாங்க... அவங்க பதில் சொல்ல முடியாம முழிப்பாங்க... எங்களுக்குத்தான் ரொம்ப தர்ம சங்கடமா இருக்கும்.... அவங்களுக்கு கொஞ்சம் காது கேட்காது..... வயது 94 ஆகுது... ஆனா பதில சொல்லுறவரைக்கும் விடவே மாட்டாங்க கேட்டுக்கிட்டே இருப்பாங்க... நாங்களும் எத்தனையோ தரம் சொல்லி சொல்லி பார்த்துட்டு... என்ன பண்ணுறதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு இருக்கோம்... அப்படியே எல்லாக்கேள்வியும் மாறாம இருக்கா....ஒரு வேள அவுககிட்ட மாட்டின யாரோதான் போட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன் டியர்....
Antha kalathu periyavangala onnum seiya mudiyathu dear, namma apadi kekatheenganu sonna nammala yethirthu pesuvathaga solluvanga, aparam adhukku vera neraiya advice vanga vendiyathu varum.

Adhunala avanga kelvi la erunthu thapaikka ore vali kaila erukkura cell phone dhane phone varatalum phone vantha mathiri escape agidanum dear
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Antha kalathu periyavangala onnum seiya mudiyathu dear, namma apadi kekatheenganu sonna nammala yethirthu pesuvathaga solluvanga, aparam adhukku vera neraiya advice vanga vendiyathu varum.

Adhunala avanga kelvi la erunthu thapaikka ore vali kaila erukkura cell phone dhane phone varatalum phone vantha mathiri escape agidanum dear
கண்டிப்பா நீங்க சொன்னது உண்மை டியர்.... ஆனா இவங்க போன எடுத்து நாம பேசிக்கிட்டு இருந்தா.... அவங்களும் பேசனும் சொல்லுவாங்க.... அப்படி குடுத்தாலும் அந்த பக்கம் என்ன சொல்லுறாங்க... யார் பேசுறாங்கன்னெல்லாம் கேக்காம இவங்கபாட்டுக்கு பேசிக்கிட்டு இருப்பாங்க.... எங்க பசங்களோட பிரண்ட்ஸெல்லாம் வந்தா இவங்கல வாசல்ல பார்த்திட்டா... பயபுள்ளைய எல்லாம் ஒட்டத்துல கிளம்பிருதுக.... எல்லாம் எஸ்கேப் ஆகிருதுக.... நான்தான் எங்கிட்டும் போக முடியாம மாட்டிக்கிறது....
 

Eswari kasi

Well-Known Member
கண்டிப்பா நீங்க சொன்னது உண்மை டியர்.... ஆனா இவங்க போன எடுத்து நாம பேசிக்கிட்டு இருந்தா.... அவங்களும் பேசனும் சொல்லுவாங்க.... அப்படி குடுத்தாலும் அந்த பக்கம் என்ன சொல்லுறாங்க... யார் பேசுறாங்கன்னெல்லாம் கேக்காம இவங்கபாட்டுக்கு பேசிக்கிட்டு இருப்பாங்க.... எங்க பசங்களோட பிரண்ட்ஸெல்லாம் வந்தா இவங்கல வாசல்ல பார்த்திட்டா... பயபுள்ளைய எல்லாம் ஒட்டத்துல கிளம்பிருதுக.... எல்லாம் எஸ்கேப் ஆகிருதுக.... நான்தான் எங்கிட்டும் போக முடியாம மாட்டிக்கிறது....
Evangalal ungalukku yeppavathu nanmai kidaikkum, pala nerangali kastam dhan dear
Ethvum kadanthu pogum dear(kastam palakidum)
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:D yenakku 3 sons,second twins yepadi varkeenga kastam ache apadinu kepanga dear,
Muthala kastama erukkum aparam kastam palagidum solluven.
Avangalum ungale mathiri sripanga:D
சோ ஸ்வீட் டியர்.... ரொம்ப கஷ்டம்தான் டுவின்ஸ வளர்கிறது... எனக்கு ஆரம்பத்துல ரொம்ப ரொம்ப கஷ்டமாயிருக்கும்.... இப்பல்லாம் அதவிட வேற வேற பெரிய பிரச்சனைகள் வரும் போது இது பெரிசா தெரியல.. ஆனா நம்ம வீட்டுக்கு வாரவங்கதான்.... அப்படி அலருவாங்க.... அதுலயும் போன மாசம் ஊருல இருந்து எங்க அத்தை ஒருத்தங்க வந்திருந்தாங்க... எங்க மாமியார் பேச ஆரம்பிக்கும் போதே நானும் எவ்வளவோ சிக்னல் கொடுத்து பார்த்தேன்... அப்படியே இந்த பக்கம் வந்திருங்கன்னு... ஆனா அவங்க பாவம் வயசானவங்க பேசுறாங்க இடையில எழுந்து வரக்கூடாதுன்னு ம்ம்ம் சொல்லிக்கிட்டு இருந்தாங்க... ஒரு அரைமணி நேரம் கழிச்சு என்ன பண்ணுறாங்கன்னு எட்டிப் பார்க்கிறேன்.... எங்க அத்தை இவங்க பேசுனத கேட்டு கேட்டு மயங்கி விழுந்திட்டாங்க... ஆனா அதக்கூட பார்க்காம எங்க மாமியார் பேசிக்கிட்டே இருக்காங்க... அப்புறம் எங்க வீட்டுக்காரர் ஆஸ்பிட்டலெல்லாம் கூட்டிட்டு போய் அப்ப போனவங்கதான் எங்க வீடுன்னு சொன்னா போதும் ..... ஐயோன்னு ஒரே அலறல்தான்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top