சும்மா மலர் என்னவோ உலகத்தையே திருத்த வந்த ஒரு தேவதை மாதிரியும் பிரவாகன் என்னவோ வில்லன் மாதிரியும் சொல்லக்கூடாது. அவன் ப்ராக்டிகலா ஒரு பிசினெஸ்மேன் யார், யாரை எப்படி சமாளிக்க முடியுமோ அப்படி சமாளிக்கிறான். அதனால்தான் இவளோ பெரிய சாம்ராஜ்யத்தை ஆள முடிகிறது. அவனிடம் உள்ள குடும்ப பாசம் , அக்கறை...
பிரவாகன் ஏன் மாற வேண்டும் . மலர் சொல்வதை மட்டும் செய்து கொண்டு பெண்டாட்டி தாசனாக இருக்க வேண்டுமா ? கொஞ்சம் கெடுபிடியாக இருந்தாலும் குடும்பத்தினர் எல்லோர் மீதும் அக்கறை காட்டுகிறானே . அதை பாராட்ட வேண்டாமா ? ஹாஸ்பிடல் நிர்வாகத்திலும் மலர் சொன்ன மாற்றங்களை ஏற்படுத்தி கொண்டுதானே இருக்கிறான். அவன்...
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். உலகத்தில 100% நல்லவர்களும் கிடையாது . 100% கெட்டவர்களும் கிடையாது . மலர் தான் போட்டிருக்கும் மஞ்சள் கண்ணாடியை கொஞ்சம் கழட்டிவிட்டு பிரவாகனை பார்க்கலாம். அவனது குடும்ப அன்பு, அக்கறை, பொறுப்பு பாசம் முன்பு இல்லா விட்டாலும் இப்போது வந்துள்ள காதல் எல்லாம் தெரிய...
பிரவாகன் தனக்கு தெரிந்த வழியில் வளர்ந்து நிக்கிற நிறுவனத்தை காப்பாற்றிக்கொண்டான். காதலிக்க மாதிரி நடித்து, ஏமாற்றி, இல்ல கல்யாணம் பண்ணி அவளை கொடுமை படுத்தவில்லையே. நல்ல கணவனாகவும், வரப்போகும் பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாகவும்தானே நடக்கிறான். தன்னை சேர்ந்தவர்கள் எல்லோரையும் நன்றாக வைக்கத்தானே...
பிரவாகன் மலர் ரெண்டு பேருக்குமே ஆழ் மனதில் ஒருவர் மீது ஒருவருக்கு காதல் இருக்கு. அதை உணராமல் சும்மா பிளாக் மெயில் பண்றது, சண்டை போடறது என்று நடந்து கொள்கிறார்கள்.
இவளோட அண்ணன் அம்மா இவளுக்கு நிறைய செய்யணும். அண்ணி கட்டியிருக்கும் புடவையை கூட கேட்டு வாங்குவாள். ஆனால் அவ புருஷன் தன் தங்கைக்கு செய்ய கூடாது என்ன ஜென்மம் இந்த காயத்ரி. சீர் செய்யும் அண்ணன், அண்ணிக்கும் மதிப்பில்லை. சின்ன தம்பி மேலும் பாசம் இல்லை. இவளெல்லாம் திருந்தவே மாட்டாளா
எப்படிப்பா இப்படி ஒரு பொண்ணு ? பர்வதத்திற்கும் வயசுக்குள்ள பக்குவம் இல்லை. பொண்ணு என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் சரி . அம்மாவையும் அண்ணனையும்தான் சொல்லணும் ஆரம்பத்திலேயே தட்டி வைத்து இருந்தா இப்படி பேசுவாளா , நடப்பாளா. ஊருக்கு போக பஸ் ஏறும் முன் அண்ணன் இன்னும் ஏதும் வாங்கி கொடுத்திருப்பான்...
கதாசிரியர்தான் ஒரு அத்தியாயத்தில் அழகா சொல்லி இருப்பாங்க .... அன்பும், அனுசரணையும் கிடைக்காத இரு உள்ளங்கள் இணைந்தன.ஒருவர் மற்றவரிடம் அடைக்கலம் கொண்டனர்..என்று. குமரன் ஆரம்பித்த விதம் வேண்டுமானால் தப்பாக இருக்கலாம். ஆனால் அதன் பின் அவன் உண்மையான நேசத்துடன்தானே அவளிடம் பழகினான். எனவே அவனை...
கார்த்திக்கு வாழ்க்கை கட்டாயமாக ஆரம்பித்தாலும் குமரன் நல்லவன்தான் . சூஸ் தி பெஸ்ட் என்று சாய்ஸ் சொல்ல முடியாது . தான் அவசரத்தில் செய்த தப்பைதான் உணர்ந்து அவளிடம், பெத்தவங்களிடமும் சொல்லி விடுகிறானே. அப்புறம் என்ன ? நடைமுறை வாழக்கையை உணர்ந்து கார்த்தி அவனுடன் இணைந்ததே நல்லது. அப்பா தேர்வு செய்த...
கார்த்தி மஹாவை கேட்ட கேள்விகள் சரிதான். ஆனால் வார்த்தைகள் குமரனை காயப்படுத்தாமல் இருக்கட்டும். கட்டாய கல்யாணம் செய்தாலும் அவளுக்காக எவ்வளவு யோசிக்கிறான் ; செய்கிறான் . அவர்கள் இப்போது நல்ல புரிதலுடன் , நேசத்துடன் இருக்கிறார்கள். அது மாறக்கூடாது. ப்ரியா மாதிரி அரை குறை படிப்போடு நிறுத்தாமல்...
ராணி சொல்லும் அத்தனை வசவுகளும் அவள் பெண் ப்ரியாவுக்குதான் கச்சிதமாக பொருந்தும். கார்த்திகா நல்லபடியாக குடும்ப நிர்வாகம் செய்து காசு சேர்த்து வைத்து கொடுக்கிறாள். ஆனால் ப்ரியா மாமியார் பார்த்து வைத்த வீட்டில் பொறுப்பே இல்லாமல் தூங்கிக்கொண்டுதானே இருந்தாள். கதிர் கொஞ்சம் புரிந்து கொண்டு விட்டான்...
இப்படியே இயல்பா இருவரும் மற்றவர் மனதை புரிந்து கொண்டால் சந்தோஷம்தான். பார்ப்போம் . குமரன் என்னதான் நல்லவனாக இருந்தாலும் அதை கொண்டாட தெரியாமல் பிடுங்கி எடுக்கும் அம்மா மற்றும் தங்கை. இனிமேலாவது குமரன் கொஞ்சம் சுதாரிக்க வேண்டும். ஒரு மாதம் பூரா ரெஸ்ட் எடுக்கணுமா இல்ல மெடிசின் எடுத்துக்கொண்டு ஓரளவு...
கடத்திக்கொண்டு போய் கல்யாணம் செய்தாலும் ஒரு கண்ணியவான்தான் குமரன். கார்த்தி அம்மாவை நினைத்து வருத்தம் கொள்வதை விட குமரனை புரிந்து கொள்ள முயற்சிக்கட்டும் .