விரிவான நடுநிலைமையான அலசல்...இதற்காகவே என்றும் உங்கள் கருத்துக்கு காத்திருப்பது....நன்றி உமா...என்ன சொல்ல ... மல்லிகா ...
அறிவார்த்த கருத்துக்கள் , ஆழமான கருத்துக்கள், உணர்வுபூர்வமான கருத்துக்கள் , நகைசுவை கருத்துக்கள் , நக்கல் கருத்துக்கள் , சுய முயற்சி கவிதைகள் , சந்தர்ப்ப சினிமா பாடல்கள் என்று போட்டு ஏற்கனவே அரை பயித்தியமாக இங்கு சுற்றி கொண்டு இருந்தவர்களை ஒரே பதிவில் முழுபயித்திமாக்கிய பெருமை உங்களை தான் சாரும் .....
Hats off ...
1. எபிசொட் ஹயிலைட் ஒன்று .....வர்ஷினி.....ஒரு எரிமலை...எண்ணற்ற மனக்குமுறல்களை தன்னுள் உள்ளடக்கி இருக்கும் ஒரு எரிமலை .....சிறுவயதில் இருந்து தன எண்ணங்களையும், உணர்வுகளையும் வெளிப்படுத்த சரியான உறவுகள் , சந்தர்ப்பங்கள் என்று அமையாமல் தன்னுள் அடக்கியே பழக்க பட்டவள்......அவளுடைய தனிமை அவளுக்கு அவளே உருவாக்கி கொண்ட ஒரு பாதுகாப்பு கவசம்......ஒரு மாறுபட்ட பெண்ணாக , வித்தியாசமான பெண்ணாக வளர்ந்து விட்டாள்..... அவளுடைய மனா உளைச்சல்களுக்கு எல்லாம் ஈஸ்வர் மட்டும் கரணம் இல்லை ......அனால் அவனும் ஒரு பெரும் காரணம் அதற்கு ......அவனால் தான் அவன் கொடுத்த அனுபவத்தால் தான் அவளின் எண்ணங்கள் தான் சரியா தவற என்ற மனஅழுத்தத்தை பெரும் அளவில் அதிகமாக்கி போதையை நாடும் அளவிற்கு அவளை தள்ளி விட்டது...... இருந்தும் அவன் மீது உள்ள பிடிப்பு, அவனில்லாமல் எதுவும் முடியாது என்ற அவளின் தவிப்பு மற்றும் இஇயலாமை பெரும்
கோபமாக வெளிய்ப்படுகிறது ...... இன்னும் வெளி வர வேண்டியவை நிறைய இருக்கிறது என நினைக்கிறேன் .....
2.எபிசொட் ஹயிலைட் ரெண்டு ........ஒரு முழுமையான காதல் கணவனாக ஈஸ்வர் இந்த பதிவில் வெளி வந்து இருக்கிறான்......தன் கதை மனைவியின் மனா வலிகளை தன்னுடையாகி கொள்ள முடியாமல் அவள் கொடுக்கும் உடல் வலிகளை சகித்து , அவளை பாது காக்க என்னும் அவன் தீவிரம், உறுதி......அவளை புரிந்து கொள்ள வேண்டும், முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்ற அவனுடைய துடிப்பு, பரிதவிப்பு, ஏக்கம் என்ற எல்லா உணர்வுகளும் உங்கள் கைவண்ணத்தில் மிக அற்புதமாக வெளிவந்து இருக்கிறது ......
அவனுடைய கொஞ்சல், கெஞ்சல் , கோபம் மட்டுறும் அவன் யாசிப்பு ........இன்னும் சொல்லி கொன்டே போகலாம்....ஒரு கை தேர்ந்த சிற்பி செதுக்குவது போல நாயகன் நாயகி கதாபாத்திரங்களை பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறீர்கள் .....again hats off
3.எபிசொட் ஹயிலைட் மூன்று .....ஐஸ்வர்யா.......பார்த்தவுடன் வர்ஷினி காதலை உணர்ந்து கொள்ளவது ......அவள் சிந்தைகளும் வெகு யதார்த்தமாக ஏமாற்ற பட்ட ஒரு பெண்..... அவள் எண்ண போக்குகளை அப்படியே கொடுத்துகிளீர்கள் .......ஈஸ்வற்கு வர்ஷினியின் மேல் இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை, அவனுக்கு வர்ஷினி எவ்வளவு முக்கியமானவள் என்பதை அஸ்வின் நேரில் பார்த்து தெரிந்து கொண்டான்( ரஞ்சனி காணாமல் போன எபிசொட் ....பத்து , வர்ஷினி , ஈஸ்வர் அனைவரும் அஷ்வினை தேடி செல்லும் எபிசொட்) .
இப்போது ஐஸ்வர்யா, வர்ஷினி காதலை தெரிந்து கொண்டு உள்ளாள்.....இவ்வாறு நீங்கள் கொண்டு வந்தது எனக்கு மிகவும் பிடித்தது ......நிறைவாகவும் உள்ளது.....நான் முன்பே இருவரின் காதலையும் பிறர் உணர்வதாக வரும் காட்சி அமைப்பு கேட்டு இருந்தேன் .....
கொடுத்து விட்டீர்கள் ..
அடக்கி வைக்க பட்ட எரிமலை வெடித்து சிதறும் (ஆரம்ப சிதறல் ) அந்த காட்சி அழகாக ,
உணர்ச்சி பூர்வமாக , உணர்வு மயமானதாக வந்து உள்ளது .....
இதோடு நிறுத்தி கொள்கிறேன் ......ரொம்ப பெரிதாக போய் விட்டது கமெண்ட்......
இருந்தும் மனதின் தாக்கத்தை முழுவதும் என்னுடைய எழுத்தில் கொண்டு வர முடியவில்லை....
மல்லிகா ...நன்றி ...மிக்க நன்றி