E11 Nee Enbathu Yaathenil

Advertisement

Joher

Well-Known Member
பாசக்கார துரையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை............

அதுவும் வேலையை வேற விட்டுட்டு வந்திருக்கிறார்............

அப்போ சுந்தரி??????????????
 

Manimegalai

Well-Known Member
ஹாய் மல்லி சிஸ்:)
ரொம்பபபபபபப நன்றி:)
இரண்டு பதிவுகள் ...மிக அருமையான பதிவுகள்....தனியே வாழும் சுந்தரிக்கு ஒரு ஆபத்து வரும்போது பக்கத்தில் யாரும் இல்லாதபோது எவ்வளவு கஷ்டம்...கண் கலங்க வைத்த பதிவு:(தாலி போட்டு இருக்காங்க சுந்தரி....அவங்க உண்மையாகவே திருமண உறவை மதித்து நடந்து இருக்காங்க....கண்ணன் மேலும் அன்பு இருக்கு....அவர் பொட்டு வைக்கும் போது....தூக்கும் போது...ஒன்றுமே செய்யலை....(நான் அடிப்பாங்க நினைச்சேன்)
கண்ணன் 2 மாதம் நேரம் எடுத்துக் கொண்டது
வேலை விட்டுட்டு கிராமத்திலே தங்க வருவதற்காக...மிகவும் மகிழ்ச்சி(கடினமான முடிவு)
ஆனால் எடுத்தது பாராட்டுதலுக்குரியது...:)
 

fathima.ar

Well-Known Member
வாடிய செடிதனில்
சுடுநீர் கொட்டியதே..

நிழலாய் இருந்த
உறவும் மயங்கி போக..

வரமாய் வந்தவனை
வேதனையிலும் காக்க..

தன்னை காக்க
மறந்ததே...


பாலைவனமாய் போன
நாட்களிலும் கொடிதாய்
போனதால்..
முட்கள் கூடி போனதோ..

கற்றையாய் பணமிருந்தும்
ஒற்றையாய் நிற்கும் போது
ஏற்படும் அச்சமும்
தனிமையும்
சொல்லில் அடங்காது..

தன்னை பாதுகாக்கவும்
ஒருவர் வருவது...
தண்ணீரை கண்ட
வாடிய செடியின் நிலை அன்றோ..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top