Hi mam
ஊருக்கு வந்தவுடன் கண்ணனுக்கு பார்வையெல்லாம் பக்கத்து தோப்பு வீட்டிற்கு போகின்றது பார்தீர்களா,
பிள்ளைப்பாசம் அப்படி பார்க்கச்செயகின்றது,
கட்டிய மனைவி வேண்டாம், ஆனால் தன் பிள்ளை வேணும்,
அந்த இருட்டிலும் தன்குழந்தையை வரிவடிவமாகவேனும் பார்க்கவேண்டுமென்று இரத்தபாசம் தூண்டுகின்றது,
நான் நினைக்கிறேன் கண்ணன் முதன்முறையாக சுந்தரி பற்றி
இப்போதுதான் நல்லவிதமாக நினைக்கின்றார் ,
அதற்கு விமலா அவர்களின் தற்கொலை முயற்ச்சியும் சுந்தரி அவரை காப்பாற்றியதும்தான் காரணம்,
சுந்தரி எவ்வளவு தைரியமாக தோட்டக்கிணற்றுக்குள் குதித்து காப்பாற்றியிருக்கின்றார்
கெட்டிக்காரிதான்,
எப்பவுமே கைநழுவிப்பபோனது பொருளானாலும் சரி உறவானாலும் சரி அதன் மதிப்பே தனிதான்,
இனிமேல்தான் சுந்தரியின் பழக்கவழக்கம் பண்பு உயரம் இவைகளை பார்த்துப் பார்த்து கண்ணன் ஏங்கப்போகின்றார்.
நன்றி
Aravin22