thank u krish sistNice ud sis
thank u rabi sistnice ud
thank u rudhra sistNice ud
thank u saro sistஅருமையான பதிவு
guys likes potta anaivarukkum nanri......love u alll..... my sisters thank u ......hi friends thank u all........ for u r comments and likes for the previous update .........
here is the next....ud..
give the comments and likes and boost me for the next ud......
அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அவள் இதழ்களை நினைக்க இத்தனை நேரம் இருந்த தேன் சுவை மாறி உப்பு தன்மை தந்திட இருவரின் கண்களும் கலங்கியது எத்தனை அழகாக இருந்திருக்க வேண்டிய வாழ்க்கை மாறாக இருவருக்கும் அத்தனை வலியை கடந்த இரண்டு வருடங்களாக தந்திருக்கிறது இப்பொழுது இருக்கும் நெருக்கத்தில் இருந்து விலக இருவருக்கும் மனதில்லை
இந்த கணம் இப்படியே உறையாத என்றெண்ணி களித்தனர்
நீண்ட இதழ் யுத்தத்தில் பெண்ணவளின் இதழில் இருந்து ரத்தம் கசிய
அஜய் அதற்கு மேல் தாளாமல் அவள் இதழில் இருந்து தன்னிதழை வலுக்கட்டாயமாக பிரித்தெடுக்க
அஜி ரத்தம் வருது டி ஏண்டி என்ன இப்டி சாகடிக்கற என்று ரத்தம் வலிந்து கொண்டிருந்த இதழை தன் கைகுட்டைக்கொண்டு துடைக்க
இல்ல அஜய் உங்கள சாகடிச்சர கூடாதுன்னு தான் உங்கள விட்டுட்டு போனேன்
என்று தேம்பி அழ
என்ன டி சொல்ற என்று இதழ் நடுங்க கேற்க
அவள் ஹாண்ட் பாக் இல் இருந்து ஒரு கோப்பையை நீட்டினாள்
அதில் பிரபல மருத்துவ மனையின் பெயர் பொறிக்க பட்டிருக்க
அவன் இதயம் எகிறி வெளியே வந்துவிடும் அளவு வேகமாக துடிக்க
என்ன செய்தும் அவன் மன உணர்ச்சிகள் அடங்க மறுக்க கண்கள் தான் பாட்டிற்கு நீரை பொழிந்து கொண்டிருந்தது
தன் மொத்த சத்தியும் வடிந்த நிலையில் கைகள் நடுங்க அதை வாங்கியவனால் பிரித்து பார்க்க முடியவில்லை
தொழிலில் பலரை புலியென வேட்டையாடி அழித்து எதிரிகளுக்கு தன் ராட்சத முகத்தை காட்டி சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவனால்
தன்னவளின் ஒரு வார்த்தை உயிர் உருக்கும் வலியை தர வாழ்நாளின் முதல் தடவையாக தன் கரங்கள் நடுங்குவதை உணர்ந்தவனால்
அதை படிக்கும் தைரியம் வரவில்லை
காதல் அந்த ஆறடி ஆண்மகனை கோழையாக்கி அழவைத்து பயம் அறியாதவனுக்கு பயம் காட்டி எக்கு மனதையும் உருக்கி விட்டிருந்தது
இந்த பைலை வாங்கி பிரிச்சு பாக்கவே நீங்க இவ்ளோ வலியையும் வேதனையையும் அனுபவிக்கறீங்க பாவா அப்புடி இருக்கும் போது
நா அனுபவிச்ச வலிய நீங்க எப்டி தாங்குவீங்க என்று கேற்க
அஜி என்று கூறும் பொது அவன் நாக்கு ஒன்றோடு ஒன்று ஒட்டி தடுமாற வார்த்தைகளை முற்று பெற வைக்க முயன்று போராடி தோற்றான் அந்த வெற்றி கரமான எதிலும் வெற்றி அடைந்தே தீர வேண்டும் என்று வெறி உடைய அந்த தொழிலதிபன்
வலியை சுமந்த விழிகளில் அவளை பார்க்க இது பொய்யாக இருக்க வேண்டும் என்று உலகில் இருக்கும் அத்தனை கடவுளையும் வேண்டினான் அந்தோ பரிதாபம் அவனுக்கு தெரியவில்லை தன்னவள் தனித்து நின்று தன் உயிரை காப்பாத்தி கொள்ள போராடி இருக்கிறாள் என்று தனக்காக தன் வாழ்வை திருப்பி தந்திட வந்திருக்கிறாள் என்று அவள் உயிரையும் சேர்த்தி தன் உயிரையும் மீட்டு வந்திருக்கிறாள் என்று
அவள் உடல் பிரச்சனையால் தான் தன்னை விட்டு பிரிந்து சென்றிருக்கிறாள் என்பது தெரிந்து விட இப்போது மனதை அரிது கொண்டிருந்த கேள்வி அவள் நன்றாக இருக்கிறாளா இல்லை இன்னும் சிக்கலால் ஏதாவது இருக்குமோ என்பது மட்டும் தான் அதை தன்னால் தாங்கி கொள்ள முடியுமா என்பது தான்
அவனுக்கு அந்த கஷ்டத்தை கொடுக்காமல் தானே சொல்ல ஆரம்பித்தாள்
பாவா நீங்க ஜெர்மன் போனீங்க இல்ல அப்போ ஒரு மூணு நாள் எந்த பிரச்னையும் இல்ல
அதுகப்ரோம் ஒரு நாள் திடீர்ன்னு காலைல எந்திருக்கும் போது பயங்கரமா தலை சுத்த ஆரம்பிச்சுடுச்சு காய்ச்சல் தலை வலி உயிரே போற மாதிரி அப்டி ஒரு வலி உங்களுக்கு போன் பண்லான்னு நினைச்சன் ஆனா நீங்க ரெஸ்ட் எடுக்கற நேரத்துல கூப்டு டிஸ்டர்ப் பண்ண வேண்டான்னு விட்டுட்டேன்
சரி ஹாஸ்பிடல் போயிட்டு வந்து உங்களுக்கு போன் பண்லானு நம்ம ஆபீஸ்க்கு கூப்டு இன்போர்ம் பண்ணிட்டு கிளம்பிட்டேன்
போய் ஸ்கேன் பண்ணும் போது தான் தெரிஞ்சுது மூளை ல கட்டி இருக்கு ஆபரேஷன் பண்ணாலும் பொழைக்கறது கஷ்டம் இல்லன்னா கோமாக்கு போறதுக்கு நெறய வாய்ப்புஇருக்குன்னு சொன்னாங்க அப்டி பண்ணாலும் அதுக்கு முன்னாடி நெறய டிரீட்மென்ட் எடுக்கணும் அதுக்கப்புறமும் நெறய டிரீட்மென்ட் எடுக்கணும் அப்போ தான் புராணமா குணமாக முடியும்னு சொன்னாங்க இதோ இப்போ நல்லா இருக்கேன்
உங்க கிட்ட சொல்ல முடியல ஒரு வேல எனக்கு ஏதாவது ஆச்சுன்னா நிச்சயமா நீங்க இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணிக்க மாட்டிங்கன்னு எனக்கு தெரியும்
நா வலியையும் வேதனையையும் அனுபவிக்கறத உங்களால பாக்க
முடியாதுன்னு தெரியும் அதனால தான் உங்கள பிரிஞ்சு வந்தேன் நீங்க சொன்னது உண்மை தான் அன்னைக்கு நீங்க வரலைனா சொல்லாமலே போய் இருப்பேன் சுத்தமா தைரியம் இல்ல
என்று அவள் உணர்ச்சிகளை அடக்க பெரும் பாடு பட்டு போனால் கஷ்டத்தை அடையும் பொது அதில் இருந்து மீண்டு வரும்போது நமக்கு தைரியத்தை கொடுக்கும் கடவுள் அதை மீண்டும் நாம் நினைக்கும் பொழுது கண்ணீரை வர வளைத்து விடுகிறார் அது கழிவிரக்கம்
இம்ம்
என்று மூச்செடுத்து தன்னை நிதான படுத்தி கொண்டு சொல்ல ஆரம்பித்தாள்
எங்கே தன் வேதனை அவனை வாட்டி விடுமோ என்கிற பயம்
ஹைதெராபாத் போய்ட்டேன் அங்க சித்தி இருந்தாங்க ஹர்ஷ தான் என் கூட இருந்தா வேற யாருக்கு தெரியாது நா யாருக்கும் சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டேன் ஒருவேளை நா இரந்தா கூட உங்களுக்கு அது தெரிய வர கூடாதுன்னு நெனச்சன்
காதலென்றது தன் இணை கூட சந்தோசமா வாழறது மட்டும் இல்ல
அவங்களோட சந்தோஷத்துக்காக நம்ம வாழறது எனக்கு நீங்க சந்தோசமா இருக்கனும் எந்த சூழ்நிலைலியும் உங்களுக்கு சின்ன வருத்தம் கூட ஏற்படக்கூடாது உங்கள கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழலாம்னு நெனச்சன் ஆனா உங்க வாழ்க்கையையும் என்னால பாதிலியே முடுஞ்சுர கூடாதுன்னு தான் உங்கள விட்டுட்டு
போனேன்
ஆபரேஷன் பண்ணி பொழச்சு வந்த போது கூட சந்தோச பட முடியல ஜெய் நா யாருக்காக வாழணும்னு பெரிய கேள்வி திரும்பவும் என் முன்னால இருந்துச்சு
என்னோட வார்த்தை உங்கள காய படித்தியிருக்கும்னு நல்லா தெரியும் மன்னிப்பு கேக்கணும்னு தான் வந்தேன்
இன்னும் நீங்க யாரையும் கல்யாணம் பண்ணிக்கலன்னு தெரிஞ்சுது
அப்ப தான் என்ன நீங்க மறக்கவே இல்ல இன்னும் நீங்க என்ன விரும்புறீங்கன்னு தான் உங்க கிட்ட திரும்பியும் வந்தேன்
உங்கள விட்டு பிரியும் போது உடல் அளவுல மட்டும் தான் அஜய் வந்தேன் ஆனா என்னோட உயிர் என்று அவன் கண்ணில் தன் கண்களை கலக்க விட்டவள் இங்க இருக்கு என்று அவன் மார்பை வருட தன்னவளின் காதலில் தேகம் சிலிர்த்து குழந்தையாய் தன்னவளின் மார்பில் முகம் புதைத்து கரைந்தான் அந்த காதலன்
அப்பா அம்மாகிட்ட பேசாம இருந்தது அவங்க நிச்சயமா என்ன தனியா விட மாட்டாங்கன்றது நால தான் அதனால தான் அவங்க கிட்ட பேசல
அப்புறம் உங்கள கஷ்ட படுத்தற மாதிரி பேசினது நீங்க என்ன வெறுக்கணும்ன்றது நால தான்
ஏன் டி உன்ன எப்புடி என்னால வெறுக்க முடியும்
இந்த அஜய் நீ பாக்கற அஜய் வேற டி நா....
என்ன முழுமையா மாத்தினவ நீ என்று அவள் முகத்தை தன் இரு கைகளால் தாங்கியவனின் கண்ணில் தெரிந்தது காதல் காதல் காதல் மட்டுமே
பாவா என்று அவன் நெஞ்சில் முகம் புதைத்து அழ அவளை தேற்றும் வலி தெரியாமல் அவள் முதுகை ஆதரவாக வருடி விட்டவன் கண்கள் கலங்கி இருந்தது
ஏன் டி எனக்காகன்னு சொன்னியே நீ இல்லாம நா என்ன டி பண்ணுவேன் நீ என்னோட அஜி எனக்கு மட்டுமே சொந்தமானவ
உன்ன நா எப்பவுமே வெறுத்தது இல்ல டி என்று அவளை அணைத்தான்.
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்ன தகாதென..