அருமையான கதை ஹேமா.
"பிச்சை போட்டது போட்டது தான் அது பொருளாயிருந்தாலும் சரி புருஷனாக இருந்தாலும் சரி'... என்ற தன்னுடைய நிலைபாட்டை அகிலாம்மா எந்த இடத்திலும் மாற்றிக்கொள்ளாதது அருமை.
'அதிலும் என் கணவனின் கடைசி ஆசையை நிறைவேற்ற வா' என்னும் பூரணியின் சுயநல ஆசைக்கு அகிலாம்மா குடுத்த பதில் சாட்டையடி...
பூரணி தன்னோட தவறை இன்னமும் உணராதது வருத்தத்துக்குரியது.
பாசம் இருக்க வேண்டியது தான், அதற்காக கண்மூடித்தனமான பாசம் என்பது வாழ்வில் பல அனர்தங்களைத்தான் கொண்டுவரும். அந்த பாசம் மரியாதையையும் இழந்து விடும். இரத்தினசாமியின் பாசமும் அவ்வகையே...
அதிரூபன், மின்னலென அஷ்மியின் வாழ்வில் வந்து, வானவில்லாய் வண்ணங்கள் காட்டி மாயாஜாலங்கள் செய்தவன். அகிலாம்மாவின் உணர்வுகளை புரிந்து அவர்கள் வழியிலேயே சென்று தாயையும், மகளையும் சேர்த்த தந்திரக்காரன்...
பயந்து, பயந்து வருதுன்னு சொன்ன
பொண்ணா ஒருநாள் என்றாலும் ரெத்தினசாமிக்கு பயத்தை காட்டியது என நம்மை வியக்க வைத்தவள் அஷ்மி. அவ்வளவு பயந்தவ ரத்தினசாமிகிட்டயும் , பூரணிகிட்டயும் விளாசு, விளாசுன்னு விளாசும்போது "ரௌத்திரம் பழகு" என்ற பாரதியின் வரிகள் உண்மையிலேயே எனக்கு ஞாபகம் வந்தது...
அடுத்து செல்லாக்குட்டி அஷ்மி...
ஆத்தாடி! பொண்ணா அது? தேவதைங்க... அதி வாழ்வில் தோழி என்னும் பெயரில் கிடைத்த தேவதை...
அவளுடைய ஒவ்வொரு டயலாக்ஸும் கலக்கல் தான். அதுவும் அவளுடைய மயில்சாமி டயலாக் செம...
மொத்தத்தில் நிறைவான கதை ஹேமா...வாழ்த்துகள்.