ஹாய் ஃப்ரெண்ட்ஸ்....
அடுத்த அப்டேட்டுடன் வந்துட்டேன். எப்படி இருக்குன்னு படிச்சுட்டு சொல்லுங்கப்பா... அடுத்த பகுதி எப்படியும் வெள்ளி தான் தர முடியும்னு நினைக்கிறேன். அதற்கு இடையில் முடிந்தால் ஒரு குட்டி எபியோடு வந்துவிடுகிறேன்.
அந்த ஒற்றை படுக்கை அறை ப்ளாட்டினுள் அனைத்து பொருட்களையும் அதனதன் இடத்தில் சரியாக வைத்திருக்கிறோமா என்று ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டனர் நிரல்யாவும் கதிரும். அவர்கள் இருவரும் தனிக்குடித்தனம் வந்திருந்தனர், கதிரின் கட்டளைப்படி.
நிரல்யாவிற்கு இதில் துளியும் விருப்பமில்லை. தந்தையர் இருவரும் இருப்பதால் ஏதோ சகஜமாக அவளிடம் பேச முயற்சிக்கிறான் கதிர். அவர்களை விட்டு பிரிந்து வந்தால் அதுவும் இல்லாமல் போய்விடுமோ என்ற பயம் அவளுக்கு. அந்த பயமும் சரிதான் என்பது போல் இரட்டை படுக்கை அறைகளை கொண்ட ப்ளாட்களாக பார்க்க ஆரம்பித்தான் கதிர். அவன்மேல் காதல் இல்லாவிடினும், சிறிதளவு ஈர்ப்பு தோன்றிவிட்டிருந்த நிரல்யாவின் மனதிற்கு இது சிறிது சுணக்கத்தை அளித்தது. அவன் இடைவெளி வேண்டியே இருப்பிடம் மாற்றுகிறான் என்பது மிகத் தெளிவாய் புரிந்தது. இருப்பினும், அவன் தன்னையும் வீடு பார்க்க அழைத்துச் சென்றது ஆறுதலாய் இருக்க, அவனுடன் சென்றவள் பல காரணங்கள் கூறி ஒவ்வொன்றாய் நிராகரித்தாள்.
கதிரும் கல்லூரிக்கு அருகிலேயே வீடு வேண்டும் என்று கண்டிஷனிட்டதால், அடுத்து ஒற்றை படுக்கை அறை கொண்ட ப்ளாட்களை பார்க்க, தன் எண்ணம் ஈடேறியதில் முதல் வீட்டையே ஒத்துக்கொண்டாள் நிரல்யா. இதோ, தற்போது அபிராமியின் உதவியுடன் வீட்டில் குடிவந்தும் விட்டனர்.
தினமும் காலை, மாலை இருவேளையும் மேற்கொள்ளும் பயணத்தில் துவண்டுவிடுபவளுக்காகவே இந்த முடிவை எடுத்திருந்தான் அவன். அவள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும் என்று தெரிந்தவர் ஒருவரை பிற வேலைகள் செய்வதற்கு உதவிக்கும் வைத்துவிட்டான். ஆனால், அவனது இந்த செயலே இருவரையும் இறுக்கிப் பிடிக்கும் என்பதை அவன் அறியவில்லை.
கதிரின் இந்த முடிவால் பெரியசாமிக்கும் மாணிக்கத்திற்கும் மனவருத்தம் இருந்தாலும், பிள்ளைகள் இருவரும் தனியாக சிலகாலம் சந்தோஷமாக இருக்கட்டும் என்ற எண்ணத்தில் அதற்கு ஒத்துக்கொண்டனர். மூவரையும் அவன் முதலிலேயே அழைத்திருந்தாலும் யாருக்கும் ஊரை விட்டு வர மனமில்லை. எனவே, அடிக்கடி தங்களை வந்து பார்க்குமாறு மட்டும் கேட்டுக்கொண்டனர்.
அபிராமி அளித்துச் சென்ற சப்பாத்தியை சாப்பிட்ட இருவரும் தங்களது படுக்கை அறைக்கு செல்ல, அங்கே முழு நீளத்தையும் அடைத்து சிரித்தது பெரிய மரக்கட்டில் ஒன்று. ஸோஃபாவில் படுக்கலாம் என்று நினைத்து ஹாலுக்கு வந்தவனுக்கு முப்பத்தி இரண்டு பல்லையும் காட்டி மீண்டும் இளித்தன அங்கே அழகுற வீற்றிருந்தன ஒற்றை இருக்கை கொண்ட சோஃபாக்களும் டீப்பாயும். தன்னால் அங்கே உறங்க முடியாது என்பது தெள்ளத்தெளிவாக புரிந்தது அவனுக்கு. இவற்றை எல்லாம் பார்த்து தன் வாய்க்குளேயே சிரிப்பை அடக்கியபடி நின்றிருந்தாள் நிரல்யா. வீட்டிற்கு தேவையான பொருட்களை பார்த்துப் பார்த்து வாங்கியவள் அவள்தானே!
ஒரு நொடி பால்கனிக்கு சென்று உறங்கலாமா என்று அந்தப் பக்கம் பார்வையை வீசியவனின் எண்ணம் புரிந்தவள், “அங்க எல்லாம் உங்களால படுக்க முடியாது, ரொம்ப சின்ன இடம். உள்ளயே வாங்க” என்று சென்றுவிட்டாள்.
ஆனால், உள்ளே வந்தால் இருவரும் ஒரே கட்டிலில் படுக்க வேண்டி வரும் என்று அங்கேயே நின்றிருந்தவனைக் கண்டவள், “ஹலோ மிஸ்டர். கதிர்நிலவன், எனக்கு அந்த மாதிரி எந்த எண்ணமும் கிடையாது. உங்கள் கற்புக்கு நான் கியாரெண்டி” என்று வாயாலேயே வாரெண்டி கார்டு அளித்தவள், “இந்த உத்தமர் தன் காதலியிடம் சொக்கத்தங்கமாகவே ஒப்படைக்கப்படுவார்” என்று அவனை கடுப்பேற்றிவிட்டாள்.
அதில் அவள் எண்ணப்படி கடுப்பானவன், உள்ளே சென்று கட்டிலின் ஒர் ஓரம் அவளுக்கு முதுகு காட்டி படுத்தவன் விரைவில் தூங்கியும் போனான். ஆனால், தூங்காமல் அதுவரை நடந்தவற்றை யோசித்துக்கொண்டிருந்தாள் நிரல்யா.
அன்று தோழிகள் மூவரும் வெளியில் சென்றிருந்தனர். அம்மாவிற்கு அன்பளிக்க புடவை வாங்க வேண்டுமென்று அஞ்சலி கூறியதால் அவளுடன் சென்றனர் மிஷாவும் நிரல்யாவும். ஒரு பிரபலமான துணிக்கடைக்கு அழைத்துச் சென்றவள் ஒவ்வொரு தளமாய் புரட்டி எடுத்துக்கொண்டிருந்தாள்.
அப்போதுதான் மிஷா அஞ்சலியை பார்த்து கேட்டாள், “ஏண்டி, அங்க வைத்திருக்கிறது கூரைப்பட்டு தான?” என்று.
அதற்கு பதிலளித்த அஞ்சலியும், “ஆமாம்டி, இதேதான் என் அம்மாவோட முகுர்த்தப்பட்டு. அதுல தான் என்ன தொட்டில்ல போட்டாங்க” என்க, கேட்டுக்கொண்டிருந்த நிரல்யாவோ, “முகுர்த்தப்பட்டுல தொட்டில் கட்டுவாங்களா?” என்று வினவினாள்.
“கட்டுவாங்க டீ. இப்படி பருத்தி ஆடைல செய்யுற கூரைப்புடவைய முகுர்த்தத்துக்கு கட்டுறவங்க அவங்களோட குழந்தைய இதுல தான் தொட்டில் கட்டி போடுவாங்க. முதல் குழந்தைக்கு கொஞ்ச நாள் மட்டும் தான் யூஸ் பண்ணுவாங்க. இரண்டாவது குழந்தைக்கு அந்த துணி போகுற வரைக்கும் யூஸ் செய்வாங்க. நான் சும்மா இருக்காம என் கைல வெச்சிருந்த ஸ்பூனை வைத்து அதை கிழிச்சுட்டேன்” என்க,
அதை கேட்ட மிஷாவோ, “உனக்கு அப்புறம் யாரும் யூஸ் செய்யாம செய்துட்டியேடி” என்று அஞ்சலியை கலாய்த்துக்கொண்டிருந்தாள், அஞ்சலி வீட்டிற்கு ஒரே பெண் என்று.
இங்கே நிரல்யாவோ, தீவிரமான ஆராய்ச்சியில் இருந்தாள். அவளுக்கு பருத்தி ஆடையா இல்லை சில்க் சாரி முகுர்த்தப்பட்டாய் இருந்ததா என்று. எவ்வளவு யோசித்தும் அவள் அன்று என்ன புடவை அணிந்திருந்தாள் என்று நியாபகம் வரவே இல்லை. வீட்டிற்கு சென்று திருமண ஆல்பத்தில் பார்க்க வேண்டும் என்று குறித்துக்கொண்டாள். (அதுக்குள்ள தொட்டில் கட்ட போயாச்சா?)
வீட்டில் முதல் வேலையாக தங்கள் அறைக்கு விரைந்து அலமாரியில் திருமண ஆல்பத்தை தேடியவள் அதனை எடுத்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்து புரட்டலானாள்.
ஒவ்வொரு புகைப்படமாக பார்த்து ரசித்துக்கொண்டு வந்தவள் ஒவ்வொன்றையும் பார்த்து வருத்தம் கொண்டது நிஜம். கதிரின் முகம் சந்தோஷத்தில் ஜொலிக்க, நிரல்யாவோ யாருக்கு வந்த விருந்தோ என்ற ரீதியில் இருந்தாள். அதை நினைத்துப் பார்த்தவளுக்கு கண்கள் கலங்கியது. வந்த கண்ணீரை துடைத்துவிட்டு ஆல்பத்தை அதனிடத்தில் வைக்கப் போக, அங்கே ஒரு ஓவியம் இருந்தது. என்னவென்று விரித்து பார்த்தவளின் கண்கள் வியப்பில் விரிந்தது.
நிரல்யாவை ஓவியமாய் தீட்டியிருந்தான் அவளது கண்ணாளன். சிலிர்த்துப்போனாள் அவள் அதன் கீழே இருந்த தேதியைக் கண்டு. அவர்கள் திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தீட்டியிருந்தான் அந்த ஓவியத்தை. அதனை தன் அலைபேசியில் ஒரு புகைப்படம் எடுத்துவிட்டு மீண்டும் அதனிடத்தில் வைத்தவள் வெளியேறி சென்றுவிட்டாள். மகிழ்ச்சியுடன் துக்கமும் சேர்ந்துகொண்டது அவளுக்கு.
இதுவரை அவளுக்கு கதிருடனான திருமணத்தில் காதல் இருக்கக்கூடும் என்று அவள் எண்ணியிருக்கவே இல்லை. அதுவும் கதிர் அவளை காதலித்திருப்பான் என்று? இப்பொழுது அவள் ஓவியத்தைக் கண்டதும் அவன் அவளை எவ்வளவு விரும்புகிறான் என்று ஐயம் திரிபர தெரிந்தது அவளுக்கு. இடது புருவத்தினுள் ஒளிந்திருக்கும் மச்சத்தைக் கூட அதில் தீட்டியிருந்தானே!
மனம் முழுக்க காதலுடன் தன்னை கரம் பிடித்தவனுக்கு தான் அளித்தது என்னவென்று அவளுக்கு நினைவிற்கு வர, எங்கேனும் சென்று முட்டிக்கொள்ளலாமா என்று தோன்றியது சில நிமிடங்கள். தன் தந்தைக்காக அவனுடன் வாழ துணிந்துவிட்டவளுக்கு அவன் மேல் இதுவரை காதல் என்ற உணர்வு சுத்தமாக வரவே இல்லை. ஆனால், இன்று அவன் காதலை உணர்ந்த பிறகு ஏனோ, அதனை அனுபவிக்க ஆவல் கொண்டது மனது.
பலாப்பழத்தின் சுவை அறிய அதன் முட்களை பொறுத்துத்தான் ஆகவேண்டும் அல்லவா? துன்பங்களை கடக்காமல் காதலும் இனிக்காதே.
அடுத்த அப்டேட்டுடன் வந்துட்டேன். எப்படி இருக்குன்னு படிச்சுட்டு சொல்லுங்கப்பா... அடுத்த பகுதி எப்படியும் வெள்ளி தான் தர முடியும்னு நினைக்கிறேன். அதற்கு இடையில் முடிந்தால் ஒரு குட்டி எபியோடு வந்துவிடுகிறேன்.
அந்த ஒற்றை படுக்கை அறை ப்ளாட்டினுள் அனைத்து பொருட்களையும் அதனதன் இடத்தில் சரியாக வைத்திருக்கிறோமா என்று ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டனர் நிரல்யாவும் கதிரும். அவர்கள் இருவரும் தனிக்குடித்தனம் வந்திருந்தனர், கதிரின் கட்டளைப்படி.
நிரல்யாவிற்கு இதில் துளியும் விருப்பமில்லை. தந்தையர் இருவரும் இருப்பதால் ஏதோ சகஜமாக அவளிடம் பேச முயற்சிக்கிறான் கதிர். அவர்களை விட்டு பிரிந்து வந்தால் அதுவும் இல்லாமல் போய்விடுமோ என்ற பயம் அவளுக்கு. அந்த பயமும் சரிதான் என்பது போல் இரட்டை படுக்கை அறைகளை கொண்ட ப்ளாட்களாக பார்க்க ஆரம்பித்தான் கதிர். அவன்மேல் காதல் இல்லாவிடினும், சிறிதளவு ஈர்ப்பு தோன்றிவிட்டிருந்த நிரல்யாவின் மனதிற்கு இது சிறிது சுணக்கத்தை அளித்தது. அவன் இடைவெளி வேண்டியே இருப்பிடம் மாற்றுகிறான் என்பது மிகத் தெளிவாய் புரிந்தது. இருப்பினும், அவன் தன்னையும் வீடு பார்க்க அழைத்துச் சென்றது ஆறுதலாய் இருக்க, அவனுடன் சென்றவள் பல காரணங்கள் கூறி ஒவ்வொன்றாய் நிராகரித்தாள்.
கதிரும் கல்லூரிக்கு அருகிலேயே வீடு வேண்டும் என்று கண்டிஷனிட்டதால், அடுத்து ஒற்றை படுக்கை அறை கொண்ட ப்ளாட்களை பார்க்க, தன் எண்ணம் ஈடேறியதில் முதல் வீட்டையே ஒத்துக்கொண்டாள் நிரல்யா. இதோ, தற்போது அபிராமியின் உதவியுடன் வீட்டில் குடிவந்தும் விட்டனர்.
தினமும் காலை, மாலை இருவேளையும் மேற்கொள்ளும் பயணத்தில் துவண்டுவிடுபவளுக்காகவே இந்த முடிவை எடுத்திருந்தான் அவன். அவள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும் என்று தெரிந்தவர் ஒருவரை பிற வேலைகள் செய்வதற்கு உதவிக்கும் வைத்துவிட்டான். ஆனால், அவனது இந்த செயலே இருவரையும் இறுக்கிப் பிடிக்கும் என்பதை அவன் அறியவில்லை.
கதிரின் இந்த முடிவால் பெரியசாமிக்கும் மாணிக்கத்திற்கும் மனவருத்தம் இருந்தாலும், பிள்ளைகள் இருவரும் தனியாக சிலகாலம் சந்தோஷமாக இருக்கட்டும் என்ற எண்ணத்தில் அதற்கு ஒத்துக்கொண்டனர். மூவரையும் அவன் முதலிலேயே அழைத்திருந்தாலும் யாருக்கும் ஊரை விட்டு வர மனமில்லை. எனவே, அடிக்கடி தங்களை வந்து பார்க்குமாறு மட்டும் கேட்டுக்கொண்டனர்.
********
அபிராமி அளித்துச் சென்ற சப்பாத்தியை சாப்பிட்ட இருவரும் தங்களது படுக்கை அறைக்கு செல்ல, அங்கே முழு நீளத்தையும் அடைத்து சிரித்தது பெரிய மரக்கட்டில் ஒன்று. ஸோஃபாவில் படுக்கலாம் என்று நினைத்து ஹாலுக்கு வந்தவனுக்கு முப்பத்தி இரண்டு பல்லையும் காட்டி மீண்டும் இளித்தன அங்கே அழகுற வீற்றிருந்தன ஒற்றை இருக்கை கொண்ட சோஃபாக்களும் டீப்பாயும். தன்னால் அங்கே உறங்க முடியாது என்பது தெள்ளத்தெளிவாக புரிந்தது அவனுக்கு. இவற்றை எல்லாம் பார்த்து தன் வாய்க்குளேயே சிரிப்பை அடக்கியபடி நின்றிருந்தாள் நிரல்யா. வீட்டிற்கு தேவையான பொருட்களை பார்த்துப் பார்த்து வாங்கியவள் அவள்தானே!
ஒரு நொடி பால்கனிக்கு சென்று உறங்கலாமா என்று அந்தப் பக்கம் பார்வையை வீசியவனின் எண்ணம் புரிந்தவள், “அங்க எல்லாம் உங்களால படுக்க முடியாது, ரொம்ப சின்ன இடம். உள்ளயே வாங்க” என்று சென்றுவிட்டாள்.
ஆனால், உள்ளே வந்தால் இருவரும் ஒரே கட்டிலில் படுக்க வேண்டி வரும் என்று அங்கேயே நின்றிருந்தவனைக் கண்டவள், “ஹலோ மிஸ்டர். கதிர்நிலவன், எனக்கு அந்த மாதிரி எந்த எண்ணமும் கிடையாது. உங்கள் கற்புக்கு நான் கியாரெண்டி” என்று வாயாலேயே வாரெண்டி கார்டு அளித்தவள், “இந்த உத்தமர் தன் காதலியிடம் சொக்கத்தங்கமாகவே ஒப்படைக்கப்படுவார்” என்று அவனை கடுப்பேற்றிவிட்டாள்.
அதில் அவள் எண்ணப்படி கடுப்பானவன், உள்ளே சென்று கட்டிலின் ஒர் ஓரம் அவளுக்கு முதுகு காட்டி படுத்தவன் விரைவில் தூங்கியும் போனான். ஆனால், தூங்காமல் அதுவரை நடந்தவற்றை யோசித்துக்கொண்டிருந்தாள் நிரல்யா.
***********
அன்று தோழிகள் மூவரும் வெளியில் சென்றிருந்தனர். அம்மாவிற்கு அன்பளிக்க புடவை வாங்க வேண்டுமென்று அஞ்சலி கூறியதால் அவளுடன் சென்றனர் மிஷாவும் நிரல்யாவும். ஒரு பிரபலமான துணிக்கடைக்கு அழைத்துச் சென்றவள் ஒவ்வொரு தளமாய் புரட்டி எடுத்துக்கொண்டிருந்தாள்.
அப்போதுதான் மிஷா அஞ்சலியை பார்த்து கேட்டாள், “ஏண்டி, அங்க வைத்திருக்கிறது கூரைப்பட்டு தான?” என்று.
அதற்கு பதிலளித்த அஞ்சலியும், “ஆமாம்டி, இதேதான் என் அம்மாவோட முகுர்த்தப்பட்டு. அதுல தான் என்ன தொட்டில்ல போட்டாங்க” என்க, கேட்டுக்கொண்டிருந்த நிரல்யாவோ, “முகுர்த்தப்பட்டுல தொட்டில் கட்டுவாங்களா?” என்று வினவினாள்.
“கட்டுவாங்க டீ. இப்படி பருத்தி ஆடைல செய்யுற கூரைப்புடவைய முகுர்த்தத்துக்கு கட்டுறவங்க அவங்களோட குழந்தைய இதுல தான் தொட்டில் கட்டி போடுவாங்க. முதல் குழந்தைக்கு கொஞ்ச நாள் மட்டும் தான் யூஸ் பண்ணுவாங்க. இரண்டாவது குழந்தைக்கு அந்த துணி போகுற வரைக்கும் யூஸ் செய்வாங்க. நான் சும்மா இருக்காம என் கைல வெச்சிருந்த ஸ்பூனை வைத்து அதை கிழிச்சுட்டேன்” என்க,
அதை கேட்ட மிஷாவோ, “உனக்கு அப்புறம் யாரும் யூஸ் செய்யாம செய்துட்டியேடி” என்று அஞ்சலியை கலாய்த்துக்கொண்டிருந்தாள், அஞ்சலி வீட்டிற்கு ஒரே பெண் என்று.
இங்கே நிரல்யாவோ, தீவிரமான ஆராய்ச்சியில் இருந்தாள். அவளுக்கு பருத்தி ஆடையா இல்லை சில்க் சாரி முகுர்த்தப்பட்டாய் இருந்ததா என்று. எவ்வளவு யோசித்தும் அவள் அன்று என்ன புடவை அணிந்திருந்தாள் என்று நியாபகம் வரவே இல்லை. வீட்டிற்கு சென்று திருமண ஆல்பத்தில் பார்க்க வேண்டும் என்று குறித்துக்கொண்டாள். (அதுக்குள்ள தொட்டில் கட்ட போயாச்சா?)
************
வீட்டில் முதல் வேலையாக தங்கள் அறைக்கு விரைந்து அலமாரியில் திருமண ஆல்பத்தை தேடியவள் அதனை எடுத்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்து புரட்டலானாள்.
ஒவ்வொரு புகைப்படமாக பார்த்து ரசித்துக்கொண்டு வந்தவள் ஒவ்வொன்றையும் பார்த்து வருத்தம் கொண்டது நிஜம். கதிரின் முகம் சந்தோஷத்தில் ஜொலிக்க, நிரல்யாவோ யாருக்கு வந்த விருந்தோ என்ற ரீதியில் இருந்தாள். அதை நினைத்துப் பார்த்தவளுக்கு கண்கள் கலங்கியது. வந்த கண்ணீரை துடைத்துவிட்டு ஆல்பத்தை அதனிடத்தில் வைக்கப் போக, அங்கே ஒரு ஓவியம் இருந்தது. என்னவென்று விரித்து பார்த்தவளின் கண்கள் வியப்பில் விரிந்தது.
நிரல்யாவை ஓவியமாய் தீட்டியிருந்தான் அவளது கண்ணாளன். சிலிர்த்துப்போனாள் அவள் அதன் கீழே இருந்த தேதியைக் கண்டு. அவர்கள் திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தீட்டியிருந்தான் அந்த ஓவியத்தை. அதனை தன் அலைபேசியில் ஒரு புகைப்படம் எடுத்துவிட்டு மீண்டும் அதனிடத்தில் வைத்தவள் வெளியேறி சென்றுவிட்டாள். மகிழ்ச்சியுடன் துக்கமும் சேர்ந்துகொண்டது அவளுக்கு.
இதுவரை அவளுக்கு கதிருடனான திருமணத்தில் காதல் இருக்கக்கூடும் என்று அவள் எண்ணியிருக்கவே இல்லை. அதுவும் கதிர் அவளை காதலித்திருப்பான் என்று? இப்பொழுது அவள் ஓவியத்தைக் கண்டதும் அவன் அவளை எவ்வளவு விரும்புகிறான் என்று ஐயம் திரிபர தெரிந்தது அவளுக்கு. இடது புருவத்தினுள் ஒளிந்திருக்கும் மச்சத்தைக் கூட அதில் தீட்டியிருந்தானே!
மனம் முழுக்க காதலுடன் தன்னை கரம் பிடித்தவனுக்கு தான் அளித்தது என்னவென்று அவளுக்கு நினைவிற்கு வர, எங்கேனும் சென்று முட்டிக்கொள்ளலாமா என்று தோன்றியது சில நிமிடங்கள். தன் தந்தைக்காக அவனுடன் வாழ துணிந்துவிட்டவளுக்கு அவன் மேல் இதுவரை காதல் என்ற உணர்வு சுத்தமாக வரவே இல்லை. ஆனால், இன்று அவன் காதலை உணர்ந்த பிறகு ஏனோ, அதனை அனுபவிக்க ஆவல் கொண்டது மனது.
பலாப்பழத்தின் சுவை அறிய அதன் முட்களை பொறுத்துத்தான் ஆகவேண்டும் அல்லவா? துன்பங்களை கடக்காமல் காதலும் இனிக்காதே.
***********