malar02
Well-Known Member
சுட்டுவிடும் வார்த்தைகள்
சுக்கிரனாய் ஆனதற்கு
கேட்டுவிட்டாய் இன்று ....
சூழல்களில் சுழலவிட்டுவிட்ட
வாழ்க்கை
சுற்றமில்லை, சொந்தமில்லை....
காயக்காப்புகள் உன்னால் அடைந்தாலும்
காயாத பாசத்தை
தேக்கி வைத்திருக்கும் தமையன்...
விவாகம் மட்டுமே
நிர்ணயப்பதில்லை விதியை
விளையாடி பார்க்கப்போகிறேன்
விரிசல்களோடு ....
விளையாட்டாய் நின்றவன் அன்று
விவேகமாய் விசாரணையில் ....
.
நிமிர்ந்த கண்களில் நிம்மதியில்லை(இருவருக்கும் )
நிதர்சனகள் புரியும் போது
இறந்த வாழ்க்கையென்றால்
இளைப்பாறுதல் இருக்காது
இது மறந்த வாழ்க்கை
மறுவாழ்வுக்கு மார்க்கமிருக்கோமோ....
விடை தெரியா கணக்குகள்
விடைத்தாளில்
விளக்கங்கள் அறியாமல்
விடையெழுதப்பட்டதோ !
வரையரை இல்லாத வகைகளுடன்
முற்று பெறாத வரைபடம் உலகில் காதல் மட்டுமே!