எப்போது வருவார்கள் என்றதற்கு, ரொம்ப நாட்கள் ஆகும் எனச் சொல்லிவிட்டுச் சென்றதாகச் சொன்னான்.
கீர்த்தியிடம் அவள் பெற்றோரை எப்படியும் திருமணத்திற்கு வரவழைக்கிறேன் எனச் சொல்லிவிட்டு, இப்போது பார்த்தால்… அவள் பெற்றோர் நாட்டிலேயே இல்லை. என்ன செய்வது எப்படிக் கீர்த்தியை சமாதானம் செய்வது என யோசனையில் இருந்த தர்மா, ஜமுனாவை வீட்டிற்கு அனுப்பிவிட்டு, அலுவலகம் சென்றான்.
அதன்பிறகு பெற்றோரை நினைத்து அழுவதை எல்லாம் விட்டு தெளிவாக சிந்திக்க ஆரம்பித்தாள்.