அத்தியாயம் 11
புதுமணத் தம்பதிகள் வீடு வர… அருணா அவர்களுக்கு ஆரத்தி எடுத்தாள். கீர்த்திப் பூஜை அறையில் விளக்கேற்றி வந்ததும், அருணா அவர்களுக்குப் பால் பழம் கொடுக்க…. உண்டு முடித்தும், தர்மா கீர்த்தியுடன் சென்று அவனது தாத்தா பாட்டி, மற்றும் தன் அம்மாவிடம் ஆசிவாதம் வாங்கினான். பிறகு கீர்த்தியின் பாட்டியிடமும் வாங்கினர்.
“நாங்க இங்க இருந்தா தர்மா எங்களையே தான் பார்த்திட்டு இருப்பான். அதனால்தான் இன்னைக்கே கிளம்பிட்டோம். அவனும் கொஞ்சம் ப்ரீயா இருக்கட்டும்.” என்றார் நாயகி.