Advertisement

மருதாச்சலமூர்த்தி!

அம்மா பிறந்ததும் இறந்து விட, அப்பா வேறு திருமணம் செய்து கொண்டு போய் விட, அம்மாவை பெற்ற பாட்டி தான் வளர்த்தார். ரோட்டோர இட்லி கடை வைத்திருந்த ஆயா, அப்படி தான் அவனுக்கு ஞாபகம் இருக்கிறது. இன்னும் மாமா, சித்தி, பெரியம்மா இந்த உறவுகளும் நினைவடுக்கில் இருக்கின்றன. அவனின் பத்து வயதில் பாட்டி இறந்துவிட யாரும் ஆதரிக்க அன்றி இவனும் ரோட்டோரமாய் தான் நின்றான்.

அன்றிலிருந்து உணவு வேண்டி உழைப்பு ஆரம்பித்து விட்டது. ஒரு டீக்கடையில் டீ கிளாஸ் கழுவும் வேலையில் ஆரம்பித்தான். அங்கேயே படுக்கை குளியல், பின்பு பன்னிரண்டு வயதில் டீ மாஸ்டராக உயர்ந்தான். பதினைந்து வயது வரை அங்கேயே தங்கி வேலை.

அந்த வயது வந்த பிறகு தனக்கும் ஒரு வீடு, வசிக்க வேண்டும் என்று தோன்ற, வாடகைக்கு வீடு தேடினான். ஒரு சமையலறை ஒரு கூடம் அதற்கே பன்னிரண்டு வருடம் முன்னமே ஆயிரம் ரூபாய், அது ஒரு லைன் வீடு.

================================

இவனும் பதில் பேச, அவரும் பேச.. அடித்து விட்டான்.

அப்போது அவரின் கண்களில் தெரிந்த பயம் இவனுக்கு ஒரு உற்சாகத்தை கொடுக்க..

“என்ன பண்ணுவியோ தெரியாது, எனக்கு வீடு வேணும்!” என்று மிரட்டினான்.

இவன் டீ கடையில் இருக்கிறான், அதற்கு பக்கம் அந்த ஏரியா போலிஸ் ஸ்டேஷன் வேறு. அதனால் போலிஸ் காரர்கள் வருவதும் போவதுமாய் இருக்க அவனுக்கு அவர்கள் எல்லாம் பழக்கம் வேறு.

அது தெரிந்த அந்த தரகரால் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை.

பதினாறு வயது தான், ஆனால் ஒல்லியாய் இருந்தாலும் உயரமாய் இருப்பதால் பெரிய பையன் போல தெரிவான்.

அதையும் விட பழகுவதற்கு இனிமையானவன், இயற்கையாகவே அவனுக்கு எல்லோரிடமும் அவனுக்கு சிநேகிதம் பிடிக்கும் திறமை இருந்தது.

கருப்பானவன் தான், ஆனால் களையானவன். ஒரு மரியாதை கொடுக்க கூடிய தோற்றத்தை கொண்டிருப்பான்.

======================================

டீ குடிக்க வந்த ஒரு கான்ஸ்டபிளிடம் “அண்ணா எனக்கு கொஞ்சம் சம்பளம் அதிகமா ஒரு வேலை கிடைக்குமா” என்றான்.

அவனை யோசனையாய் பார்த்தவர்…

“ஒரு வேலை இருக்கு, செய்வியா, பணம் அதிகம். ஆனா ரிஸ்க் இருக்கு மாட்டினா, ஜெயில் தான்!”  

“என்ன வேலை அண்ணா?”

“ஸ்மக்ளிங் கூட்ஸ் இருக்கு, கப்பல்ல வரும். ஆனா அது துறை முகத்துக்கு வரும்முன்ன கொஞ்சம் தூரம் கடல்ல போய் வாங்கிட்டு வரணும், போட்ல போக பசங்க இருக்காங்க. ஆனா அவங்களை மட்டும் நம்பி விட முடியாது, எஸ்கேப் ஆயிட்டாங்கன்னா?”

“நான் ஆக மாட்டேனா அண்ணா?” என்றவனிடம்,

“ஆக மாட்ட” என்றார் புன்னகையுடன்.

அப்படி ஆரம்பித்தது தான் அந்த தொழில். எத்தனை ரிஸ்கியான வேலை என்றாலும் செய்து முடிப்பான். ஆனால் பொருட்கள், தங்கம், இப்படி தான்! வேறு மாதிரி வேலைகள் செய்ய மாட்டான். அதாவது ஆயுதம் போதை பொருள் இப்படி!”

இப்படியாக பண வரத்து அதிகமாக… முதலில் ஆட்களுக்காக செய்தவன் பின்பு அவன் தனக்காக செய்ய லட்சங்களில் ஆரம்பித்து கோடி வரை பணம் கண்டான்.

================================

முதல் முறையாக வாழ்க்கையில் யாருமற்று இருப்பதை உணர்ந்தான். காலால் இட்டால் தலையால் செய்ய ஆட்கள் அவனுடன் இருந்தார்கள் தான், ஆனாலும் சொல்லவில்லை.       

இப்போதெல்லாம் அவன் பார்க்கும் இளவயது பெண்களை எல்லாம் “இப்படி ஒரு பொண்ணு வந்தா நல்லா இருக்குமா?” என்று பார்க்க துவங்கினான்.

அப்படி இந்த ஒரு வருடமாக பார்த்த போதும் அவனை அதிகம் பிடிக்க வைத்தது ஜெயந்தி மட்டுமே.

அவளின் பெயர் கூடத் தெரியாது. ஆனால் அவளின் வீட்டை பார்த்தான், அதிலுள்ள ஆட்களை பார்த்தான், வசதியில்லை என்று புரிந்தது. பெண் கேட்போமா கொடுப்பார்களா இல்லை இந்த பெண்ணிடம் காதல் சொல்வோமா என்று நினைக்க…

“இந்த வயசுல காதல் சொல்வியா?” என்று அவனின் மனமே அவனை பார்த்து சிரிக்க, வயது என்னவோ இருபத்தி ஏழு தான் ஆனால் சிறு வயதில் இருந்து உழைப்பதினால் வயது முதிர்ந்த எண்ணங்கள் தான் இருக்கும்.

நிச்சயம் தோற்றம் அப்படி கிடையாது. நன்றாக உடை அணிந்தால் வசீகரனே. ஆனால் தன்னை எடுத்துக் காட்டிக் கொள்ள மாட்டான். ஏனோ தானோ வென்று இருப்பான். ஒரு வருடம் முன்பு வரை செய்த தொழில் அப்படி அல்லவா. யாருடைய கவனத்தையும் கவர்ந்து விடக் கூடாது என்பதில் அவ்வளவு கவனமாய் இருப்பான். இப்போதும் அதுவே தொடர்ந்தது.      

Advertisement