Advertisement

போகலாமா என விஜய் எழுந்து வர , பில் என்ற படி செர்வ் செய்த பையன் பின் வர, இந்த மேடம் கொடுப்பாங்க என்று சைந்தவியை கை காட்டினான்.

ம்ம் நான் ஏன் கொடுப்பேன் நீ கொடு என்று பேசியவாறே அவளின் பர்சினை விஜயிடம் நீட்டினாள்.

இந்த பர்ஸ் ஜிப் கூட ஓபன் பண்ண முடியாத அளவுக்கு கட்டியிருக்கேன் நீ கொடு என

ம்கூம் என்னால பசில இதை திறக்க முடியலை நீ கொடு என வார்தையாடினால் ஆம் விஜயின் பார்வையின் வசியம் அப்படி சைந்தவியினிடத்தில்.  

இப்படியாக இவர்கள் பேசிக் கொண்டிருக்க, ப்ரித்வி பில் கொடுத்து முடித்து , அவங்களை அனுப்பிவிடு என்று அந்த பையனிடம் சொல்லி வெளியே காரில் சென்று அமர்ந்து விட்டான.

==================================

சைந்தவியும் பசியோடு இருக்க விட்டு விட்டு சாப்பிடுகிறான் முகத்தினில் சிறு சுணக்கமும் இன்றி அதனை ரசித்து பார்த்திருக்கிறாள், அவனுக்கு முன்பாக காஞ்சனா உண்டு விடுவாள் இவனுக்கு காத்திருப்பது எல்லாம் கிடையாது.

அத்தை மகள் , சைந்தவி இப்படி செய்யவுமே தந்தை அவனை கட்டாயப் படுத்தி தங்கையின் மகளை திருமணம் செய்து விட்டார்.

முக லட்சணம் இருந்தாலும் குண லட்சணம் சிறிது குறைவு அதனையும் விட சற்று பெரிய உருவம் ஆம் குண்டாக இருப்பாள். எப்போதும் சிக்கென அழகாக இருக்கும் சைந்தவி அவளுக்கு உறுத்தலே அதன் பொருட்டே எப்போதும் சைந்தவியை இழுத்து பேசுவாள் , ஒரு வார்த்தை ப்ரித்வி பேசிவிட்டாலும் வீடு அன்று போர்க்களம் தான்

அமைதி விரும்பியான ப்ரித்வி அதனால் அமைதியாகிவிடுவான் இல்லை இன்னும் சைந்தவியை பேசுவார்கள், இவர்களுக்காகவாவது சைந்தவி நன்றாக வாழ வேண்டும் என்பது ப்ரித்வியின் ஆசை

===============================

தேங்க்ஸ் ப்ரித்வி என்றான்

எதுக்கு என்று திரும்பி கேட்டவனிடம்

எதுக்கா அது தெரியலை என்றான் புன்னகையுடன்

எதுக்குன்னு தெரியலைன்னாலும் இனிமே சொல்லாதே என்றான் ப்ரித்வியும் புன்னகை முகத்துடன்

ம்ம்ம் முடியாது கண்டிப்பா சொல்வேன் எனக்கு எப்போ எப்போ தோணுதோ அப்போ அப்போ எல்லாம் சொல்வேன் என்றான் விஜய்.

அண்ணா டேய் பசிக்குது கார் எடு அவன் நல்லா மொக்கி இருக்கான் சோ மொக்கை போடுவான் எனக்கு ஏதாவது வாங்கி கொடுத்து வீட்ல விடு என்று சைந்தவி அதட்ட

======================================

இருவரும் அருகருகே படுத்திருந்தாலும் அவரவர் இடத்தினில் அவரவர். அப்படி ஒன்றும் பெரிய படுக்கை இல்லையென்றாலும் சிறியதும் இல்லை. ஆனாலும் ஒட்டி உரசவேயில்லை.  

நேரம் பார்த்தவன் ஷப்பா பன்னிரண்டு மணிநேரத்திற்கும் மேலாக உறங்கியிருப்பது புரிய, சைந்தவி இன்னும் உறக்கத்தில்.

உறங்கும் அவளை அவள் எழும்வரை கிட்ட தட்ட திரும்ப ஒரு மணிநேரம் பார்த்திருந்தான். தொடவில்லை அணைக்கவில்லை முத்தமிட மனம் விழையவில்லை.

அந்த அழகு முகத்தை முதல் முறை பார்ப்பது போல இமைக்காமல் பார்த்திருந்தான். முகத்தை விட்டு வேறு எந்த பாகத்திலும் பார்வையை திருப்ப வில்லை.

கை நழுவிப் போன சொர்க்கம், மீண்டும் அருகில்.

இனி நீ என்ன செய்ய போகிறாய், வாழ்க்கை எப்படி இருக்கும். அன்று அவளை திருமணம் செய்த நாட்கள் நினைவில் வந்தது. இன்னும் கூட பக்குவமாய் கையாண்டு இருக்கலாம்.

காதல் கூட சரியான வயதில் வரவேண்டும். எனக்கு வந்தது காதலா காதல் என்றால் என்ன யோசனைகள் ஓடியது.

====================================

சைந்தவி முகம் துடைத்தபடி வெளியில் வந்தவள், நேத்து குளிசீன்களா என

இல்லை என்பது போல விஜய் தலையாட்டா

சுடு தண்ணீர் வைக்காட்டுமா

இல்லை பச்சை தண்ணீர் ல தான் குளிப்பேன் என்றான்

ஓகே அப்போ குளிசிடுங்க இன்னும் ஒரு செட் ட்ரெஸ் தான் இருக்கு, ஆபிஸ் வேர் எதுவும் இல்லை. பர்சேஸ் பண்ணனுமா என

யோசிக்கலாம் என்று சொல்லியபடி எழுந்து அவன் குளியலறை போக

என்ன இதுல யோசிக்க இருக்கு என்று யோசித்தவாறே சைந்தவி சமையலறை சென்றாள்.

Advertisement