“முழுசா சொல்லவிடு தானே. உன்கிட்ட நான் நல்ல பிள்ளைன்னு பேர் வாங்கி அவார்ட்டா வாங்கப் போறேன். அது மத்தவங்களை பொறுத்தவரை மட்டுமே இருக்கட்டும். சோ…” என்று இழுத்தான் அவன்.
“ஹப்பா கமுக்கமா இருக்கவங்களை நம்பக் கூடாதாம். எங்க பெரியத்தை சொல்லுவாங்க. அது சரியா போச்சே. நீங்க இவ்வளவு பேசுவீங்கன்னு இன்னைக்கு தான் பார்க்கறேன். ரொம்ப சாப்ட்டா இருக்கீங்கன்னு நினைச்சேன்”
“இவ்வளவு பேசுவீங்களா நீங்க… ஹ்ம்ம்… உங்களை…” என்றவள் அவன் தலை முடியை பிடித்து ஆட்ட சந்தோசமாய் அவளிடம் சரணடைந்தான் அவன்.
கதிர், நயனாவின் செல்லப் பெண் நேத்ராவிற்கு ஓராண்டு ஆகவிருந்த தருவாயில் தான் விலோசனாகருவுற்றாள்சில பல பரிசோதனைகளுக்கு பின். ஆதிக்குஅளவில்லாமகிழ்ச்சிஉண்டானது. அவளைபூவாய்தாங்கினான்.
——————-
“தாத்தா” என்று வந்து நின்றாள் ஆதி விலோசனாவின் செல்ல மகள் அற்புதா. விலோசனாவிற்கு ஆபரேஷன் செய்து தான் பிறந்திருந்தாள் அவள். தற்போது அவளுக்கு ஒன்றரை வயது நிரம்பியிருந்தது.
நேத்ரா தான் அவளுக்கு எல்லாம். விலோசனாவிற்கு நயனா எப்படி ஒவ்வொன்றுக்கும் துணை நிற்பாளோ அப்படித்தான் நேத்ராவும் அற்புதாவிற்காக நிற்பாள்.
யாரும் அவளை திட்டிவிட முடியாது, அவர்களை ஒரு வழி செய்துவிடுவாள் நேத்ரா. அற்புதாவும் லேசுப்பட்டவள் இல்லை நேத்ராவிடம் பழகி பழகி அவளின் தைரியம் அனைத்தும் அவளுக்கும் வந்திருந்தது.
“தாத்தா”
“சொல்லுடா”
“உங்களுக்கு கல்யாணமா”
அதைக்கேட்டதும் அருள்செல்வன் சிரித்துவிட்டு “யாரு சொன்னது உனக்கு” என்றார்.
“சொல்லுங்க“
“எனக்கு எதுக்குடா இன்னொரு கல்யாணம் எல்லாம் அதான் உங்க பாட்டி இருக்காளே” என்று இவர் சொல்ல “கிழவனுக்கு வயசாகிப் போச்சு, நினைப்ப பாரு இன்னொரு கல்யாணமாம். அதுவும் குழந்தையை வைச்சுட்டு பேச்சை பாரு… ரொம்பத்தான் உங்க தாத்தாவுக்கு” என்றவாறு நொடித்தவாறே வந்தார் சந்தியா.
“குழந்தை சொல்ல வர்றதை முழுசா கேளுங்க… அதுக்குள்ள பதில் சொல்லாதீங்க” என்ற சந்தியாவின் முறைப்பில் கப்பென்று அடங்கினார் அவர்.
இரண்டு வருடத்திற்கு முன்பு தான் அவர் வாலண்டரி ரிடையர்மென்ட் வாங்கியிருந்தார். கதிர், நயனாவின் திருமணம் முடிந்த நேரம் அது.
அவர் வேலையில் இருக்கும் போது நெஞ்சுவலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இதயத்தில் பிளாக் இருப்பதாக சொல்லியிருக்க அடுத்த சில மாதத்தில் அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.
ஆதி அப்போதே சொல்லிவிட்டான் இனி அவர் வேலை செய்யக்கூடாது என்று. சந்தியாவும் அதிகம் பயந்து போயிருந்தார் அந்நேரம். அவரும் மகன் பேச்சையே வேதவாக்காக எடுத்துக்கொண்டு கணவரிடம் பேச வேறுவழியில்லாது அவர் தன் வேலையை விட்டு வீட்டில் தானிருக்கிறார்.
“செல்லக்குட்டி இதை யாரு உங்களுக்கு சொன்னாங்கன்னு முதல்ல சொல்லுங்க”
“ஆதிப்பா அம்மாகிட்ட சொன்னாங்க”
“என்ன சொல்றா இவ??” என்று மனைவியை திரும்பி பார்த்து இவர் கேட்கவும் ஆதியும் விலோசனாவும் வரவும் சரியாக இருந்தது.
“அப்பா உங்களுக்கும் அம்மாவுக்கும் அறுபதாம் கல்யாணம் பண்ணிடலாம்ன்னு இருக்கோம்ப்பா. அதைத்தான் பேசிட்டு இருந்தேன் சனாகிட்ட இந்த வாண்டு உங்ககிட்ட வந்துஸ் சொல்லிட்டா” என்றவன் மகளை அப்படி அள்ளித் தூக்கியவன் மேலே தூக்கிப்போட்டு பிடித்து விளையாடினான்.
“அப்பா அதெல்லாம் செய்யணும்ப்பா” என்று மகன் முடித்துவிட தன் மனைவியை பார்த்தார் அவர்.
“சந்து…”
“அவன் தான் ஆசைப்படுறான்ல” என்றார் அவர்.
“அவன் மட்டுமா” என்று அவர் கேட்க சந்தியாவிற்கு வெட்கம் வந்துவிட்டது. ஒன்றும் சொல்லாமல் வேறு புறம் அவர் திரும்பிக் கொள்ள விலோசனா தன் கணவனுக்கு ஜாடைக்காட்டினாள் அவர்களை.
இருவரும் குழந்தையுடன் நழுவிக்கொள்ள அருள்செல்வன் “சந்து உனக்கு ஆசையிருக்கா” என்று சொல்லி அவர் கையை பிடித்தார்.
“சின்ன பையன் மாதிரி கையை பிடிக்கறீங்க விடுங்க. அதான் ஆதி சொல்லிட்டான்ல” என்று அவர் எழப்போக “நீ சொல்லு அப்போ தான் நான் சரி சொல்வேன்” என்றார் அருள்செல்வன் விடாப்பிடியாய்.
“ஹ்ம்ம் எனக்கும் ஆசை தான்” என்றுவிட்டு அங்கிருந்து அவர் நகரப்போக “அப்போ எனக்கு சக்கரை தூக்கலா ஒரு காபி போட்டு கொண்டு வா சந்து” என்று இவர் சத்தமாக சொல்லிவிட “அம்மா அதெல்லாம் போடாதீங்க” என்று உள்ளிருந்து குரல் வரவும் அடங்கினார் அவர்.
இதோ அவர்களின் அறுபதாம் கல்யாணமும் அமோகமாய் முடிந்தது. ஆதியும், கதிரும் சேர்ந்து அதை சிறப்பாய் நடத்தி முடித்திருந்தனர். கதிரும் ஒரு பிள்ளையாய் இருந்து ஆதிக்கு அத்தனையிலும் துணை நின்றான் உடன் நயனாவும்.
வந்திருந்த சொந்தகள் அனைவரும் கிளம்பி சென்றிருந்தனர். தற்போது கதிர் குடும்பத்தினரும் அவர்களும் மட்டுமே இருந்தனர். “அப்பா” என்று வந்து நின்றான் ஆதி.
“சொல்லுப்பா ஆதி”
“நீங்களும் அம்மாவும் இன்னும் கொஞ்ச நேரத்துல கொடைக்கானலுக்கு கிளம்பணும். அங்க நான் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன்ப்பா”
“என்னது” என்றவர் எப்போதும் போல் தன் மனைவியை பார்த்தார் உடன் “சந்து” என்றழைப்புடன்.
“இவரு வேற எப்போ பார்த்தாலும் சந்து பொந்துன்னுட்டு என்னைய பார்த்து வைப்பாரு” என்று வேறு புறம் திரும்பி முணுமுணுத்தார் சந்தியா.
“என்னங்க” என்று கணவருக்கு பதிலும் கொடுத்தார்.
அவர் தன் மனைவியிடம் பேச்சை விடுத்து மகனிடமே பேசினார். “என்னப்பா ஆதி இதெல்லாம் இந்த வயசுல ஹனிமூன் எல்லாம் எங்களுக்கு எதுக்கு??” என்று சொல்ல ஆதி லேசாய் சிரித்துக் கொண்டான்.
‘விவஸ்தைகெட்ட மனுஷன் அவன் சொன்னானா ஹனிமூன்னு இவரா வாயை கொடுக்கறாரு’ என்று மனதிற்குள் புலம்பியது சந்தியாவே தான். “அதெல்லாம் வேணாம் நாங்க போகலை” என்று திட்டவட்டமாக மறுத்தார் அவர்.
கதிர் முன்னே வந்தவர் “அப்பா நீங்க ஏன் அப்படி நினைக்கறீங்க. உங்களுக்கும் அம்மாவுக்கும் ஒரு சேஞ்சா இருக்கும்ப்பா, அதுக்கு தான் போயிட்டு வாங்க, ஒரு வாரம் தானே” என்று சொல்ல அதிர்ந்து பார்த்தார் அவர்.
“என்னது ஒரு வாரமா அதெல்லாம் முடியாது. என் பேத்தியை பார்க்காம என்னால ஒரு நாள் கூட இருக்க முடியாது. தவிர வாரா வாரம் நேத்ராவும் இங்க வருவா, நான் இங்க தான் இருப்பேன்”
“என்னோட சந்தோசமே இங்க தான் இருக்கு. அதைவிட்டு அங்க போய் நான் என்ன செய்யப் போறேன். வேலையை தான் விடச் சொன்னீங்க விட்டேன். இது என்னால முடியாது” என்று சிறு குழந்தையாய் அடம் பிடித்தார் அவர்.
“அப்பா உங்களை யாரு அவங்களை விட்டு தனியா போகச் சொன்னது. அவங்களையும் கூட்டிட்டு தான் போகப் போறீங்க” என்றான் கதிர்.
“நேத்ராவும் அனுப்பி வைப்பியா கதிரு” என்றார் அவர் ஆர்வமாய்.
“ஆமாப்பா ரெண்டு பேரும் உங்களோட தான் வர்றாங்க” என்றான் ஆதியும்.
“அப்போ சரி சந்து நாம போவோம்” என்று அப்போது தான் திரும்பினார் மனைவியின் புறம்.
அவரோ கொலைவெறியாய் பார்த்தார் தன் கணவரை. ‘நான்லாம் ஒரு மனுஷியா உமக்கு தெரியலையா’ என்ற பார்வை அது.
அருள்செல்வனுக்கு அப்போது தான் மனைவியின் முறைப்பே புரிய “சந்து” என்றார்.
“இல்லை இன்னைக்கு தான் ஆச்சு” என்று அதற்கும் பதில் வைத்திருந்தார் அவர்.
“சந்து நாம என்ன சின்னஞ்சிறுசுகளா என்னை தெரியாதா உனக்கு. உன்னளவுக்கு விவரமா பேச எனக்கு தெரியாது சந்து. நான் பேசினதுல தப்பிருந்தா மன்னிச்சுக்கோ நீ இல்லாம நான் மட்டும் அங்க போவனா. நான்னா அதுல நீயும் தானே இருக்கே” என்றார் அவர். அதில் அப்படியே உருகியிருந்தார் சந்தியா. ‘இவருக்கா பேசத் தெரியாது’ என்றும் மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.
அதுவரை அவர்களின் சம்பாஷனையை பார்த்திருந்த மற்ற இரு தம்பதிகளுக்கும் தாங்களும் தங்கள் இணையுடன் இப்படியொரு அன்னியோன்யமாய் கடைசி வரை இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதாய்.
குழந்தைகளும் அந்த மூத்த தம்பதிகள் கொடைக்கானல் கிளம்பிச் சென்றனர். இங்கு நம் இளம் தம்பதிகள் அடுத்த வாரிசுகளுக்கு தயார் செய்யும் முனைப்புடன் இருந்தனர்.
மலைகளின் இளவரசி கொடைக்கானலுக்கு சென்று வந்ததால் தான் அவர்களுக்கு முதலில் இளவரசி பிறந்தாளாம். அவர்களுக்கு அடுத்த இளவரசர்கள் வேண்டுமாம் அதற்கு தான் தங்கள் மனைவியின் பின்னே தனித்தனியே சுற்ற ஆரம்பித்தனர் ஆதியும், கதிரும்.