Advertisement

எல்லா வர்க்கும் என்டே  நமஸ்காரம் . நிங்களிண்டே சம்சாரிச்சு தீர்ச்சய்யாய் பிராப்ளம் சொல்வ் செய்யானே நங்கள் இவடே உள்ளூ ,  பெகளம் இண்டாகாதே அவரவரிண்டே பிராதே இவர்மாரிடத்து கொடுத்தங்கில் , ஃபாஸ்ட் அய்ட்டு பணி நடக்கும் . பிளீஸ் எல்லா வரும் கோப்பேரட் செய்தெங்கில் நன்னாய் இரிக்கும்.

 

இப்படி ஏசியானெட் சேனலை ஒளிக்கவிட்டுக் கொண்டிருப்பது யாருன்னு நினைக்கிறீங்க. வேர யாரு நம்ம Maggie தான்.

 

பயின்று கொடுத்த பொழுதிலும் பெரிதுவக்கும் தன் மாணாக்கணை சான்றோன் எனக் கேட்ட ஆசான் என்கிற பெருமிதத்தில் சுந்தரம் அவளை பார்வையாலே மெச்சி கொண்டு சுந்தரம் நா கொக்கா என்று மனதிலே நினைத்து கொண்டு இருக்கும் போதே , நம்ம என்ன கொக்கு மாதிரியாய் இருக்கோம் , நோ நோ , சுந்தரம் நா கெத்து தா என்று சொல்லி காலரை தூக்கிவிட்டு கொண்டு இருந்தான் .

 

 இது வழக்கம் போல் எல்லா திங்கட்கிழமை களிலும்   நடக்கும் ஒன்று தான். கோரிக்கை வைக்க வருபவர்கள் இதென்ன கேளிக்கைகள் என்கிற அளவிற்கு ஏதாவது ஒன்று கலவரம் செய்தது விட்டே அங்கிருந்து நகர்வார்கள்.  எவ்வளவு தான் Maggie முயன்று கோரிக்கைகளை தீர்வுக்கான அடுத்து அடுத்து வேலைகளை தொடர்ந்தாலும் அரசியல் வாதிகள் தலையீடு, பண முதலைகள் தலையீடு , இல்லையில் ஓயாது நடக்கும் பந்த் போன்றவற்றால் நடக்க விருக்கும் வேளைக் கூட பாதியில் நின்று விடும் . இதனால் தான் மேகி அவர்களிடத்தில் முயன்று எல்லாவற்றையும் செய்யவதாக அவர்களை ஒருவாறு சமாதானப் படுத்தி அவர்களின் கோரிக்கைளை தருமாறு மிகவும் எடுத்துக் கூறிக்கொண்டு இருந்தாள்.

 

இதைக் கேட்டு கொஞ்சம் ஆசுவாசம் அடைந்த மக்கள் தங்களுக்குள்ளே ” சகாவே ( தோழனே ) இவர்மாரிடத்தில் நம்மலிண்டே கோரிக்கைகளை வைக்கா , இவர்கள் ஓக்க எங்கனே சொள்வ் செய்யுந்து நோக்கான் பின்னே நாம் தீர்மானிக்காம். ” என்று சொல்லிக்கொண்டே போடப்பட்டத் திடலை நோக்கிச் சென்று கொண்டு இருந்தனர் .

 

தூரத்தில் காரினில் அருகே நின்று இதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த காத்தமுுத்தண்ணா ” திங்க கிழமை ஆனாலே இப்படித் தான், குறைதீர்ப்பு நாளுண்ணு வச்சாங்கியே நம்ம சத்திய கத்தியே குறைக்க வச்சுருவாங்ய , வாரா வாரம் இந்தப் புள்ள இதுகள சமாலிக்கெதே பெரிய டாஸ்க் பா ” என்று புலம்பிக் கொண்டே வாயிலை எதிர் நோக்கி கொண்டிருந்தார் .

 

திடீரென்று அங்க கைகலப்பு உண்டானது . மனதிலே  நல்லாத்தானே போய்ட்டு இருந்தது என்று . சலித்து கொண்டு Maggie  அங்கே விரைந்தாள் . அச்சங்கோவில் ஆறு பாசன ஒத்திக்கீட்டுக்கான மனஸ்தாபம் எப்பொழுதும் ஆலப்புழா. மாவட்டம்    மாவேளிக்கரா கிராமத்திற்கும் பத்தனம்திட்டா அச்சங்கோவில் கிராமத்திற்கும் நடுக்கும் ஒன்று தான் . இரு மாவட்டக் கலெக்டரும் இதெற்குத் தீர்வு கொண்டு வர போராடினால் இதற்குத் தீர்வு கொண்டு வரக் கூடாது என்று அரசியல் வாதிகள் போராடிக் கொண்டு இருந்தார்கள். அதனாலே இந்த பிரச்சனை ஜவ்வு மிட்டாய் போல இழுத்துக் கொண்டே சென்றது.

சிறிய சண்டை பெரிய வெட்டு குத்து அளவுக்கு போய் விட்டது நிலமைக் கட்டுக் கடங்காமல் போய் கொண்டிருப்பதை கவனித்த செவ்வந்தி ,  அங்கிருந்த காவல் துறை ஆட்களை பார்க்க , அங்கே எப்பொழுதும் விட சிறிதளவே இருந்ததை பார்த்து என்ன செய்ய என்று யோசிக்கும் முன்னர் மின்னல் வேகத்தில் அந்த டாடா சுமோ வந்து நிற்பதுற்கு கூட இடம் தராமல் ரன்னிங் கிலே இறங்கியவன் தன் சாட்டையை எடுத்து விலாச ஆரம்பித்தான் . கிட்டத்தட்ட குருதி முழுவதும்  வடியும் அளவுக்கு அடித்து தோய்த்து எடுத்துக்கொண்டு இருந்தான் .

  சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்த மேகி தனக்கு என்று கொடுக்கப் பட்ட துப்பக்கியினால் மேல் நோக்கி டுமீல் டுமீல் டுமீல் என்று சுட்டால் சண்டை போயட்டவர்களை தவிர மற்றவர்கள் எல்லாம்  பயத்தில் தரையில் அமர்ந்து கொண்டார்கள் . கிட்டத்தட்ட எல்லாரும் ஸ்தம்பித்து நின்றுவிட்டார்கள்.

 மேகி ” மாதவ் கெட் தெம் இன் டூ  கேஜ் ( அவர்களை வலையில் பிடியுங்கள் ) “என்று  ஆணையிட்டவாரே மக்களை நோக்கி மலையாளத்தில் அங்கே இருந்த காவல் துறையினரை நோக்கி கை காட்டி  ” பேடிக் கண்டா , இவர் மார் இவர்களை ஓக்க தகர்தெரியும்ம் . ” ( பயப்படாமல் இருங்கள் இவர்கள் எல்லாம் இவர்களை பார்த்துக் கொள்வார்கள் )

   மாதவ்       தன் சாட்டையினை அங்கே இருந்த காவலாளி இடம் கொடுத்து விட்டு கொத்தாக ஒரு வனை அவன் புறம் இழுத்து ” கொண்ணு களையும் . ஷுஷிச்சு இருக்கணம் அட்டோ ” என்று  சொல்லி அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த வருணை ” பருண் . டேக் கேர் ” என்று சொல்லி கண் ஜாடையாக எல்லாரையும் அங்கே இருந்த வேண்ணில் ஏற்ற கட்டளை யிட்டான் . எதையோ சாத்தித்த சந்தோஷம் அவன் மனதில். இந்த நாளுக்காக எத்தனை  நாளாய் காத்து கொண்டிருந்தான் . சிங்கம் சூர்யா சொன்னது போல ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு. இவ்வளவு நாள் காத்திருந்தது இதற்கு தான் .

 இந்த ஆபரேஷனை மேகி யிடம் சொல்லவில்லை மாதவ் என்கிற  , மாதவ் பேனர்ஜீ IPS , சொந்த ஊர் மேற்கு வங்காளம் ஆனால் அவனுக்கு என்று அல்லோட் செய்தது தென் இந்தியா தான் ,  அதில் அவன் எந்த மாநிலம் வேண்டுமானால் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லவும் , அவன் தேர்ந்து எடுத்தது கேரள மாநிலம் தான்.

அதற்கு காரணம் அவன் பெற்றோர்கள் , அவர்கள் வங்காளத்தில் லே வாழ்ந்து பழகியவர்கள் அதே போன்ற சீதோஷ்ண நிலையில் உள்ள இடத்தை ஆராயும் போது அவன் கண்ணில் பட்டது கேரளம் தான் . கிட்டத்தட்ட அவர்கள் ஊரின் எல்லா அம்சமும் ஒருங்கே பெற்ற ஊர் , தன் தாய் தந்தையை எக்காரணம் கொண்டும் தனியே விட அவனுக்கு மனம் இல்லை. ஒற்றை பிள்ளையாய் இருந்ததினால் அவர்களுக்கும் அவனை விட்டு இருக்க மனம் கொள்ள வில்லை . அவர்களிடம் கலந்து பேசி கேரள மாநிலம் தேர்ந்தெடுத்தான் .

பேனர்ஜிே வம்சாவளி அரச பாரம்பரியம் சார்ந்த பிராமணர்கள்  ஆனால் மீனை மட்டும் அசைவ வகையில் உண்ணுவார்கள். இவர்களும் பெரிய வசதியான குடும்பம்தான் மகனின் ஆசைக்காக மாத்திரம் இங்கே வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது.  

மலையாளம் புலமை இல்லாமல் இருந்தாலும்  , செய்கை யிலேயே முக்கால்வாசி வேலையை முடித்து விடுவான் . கோவம் என்பதை விட அழுத்தம் தான் அதிகம் அவனிடம் இருக்கும்.  பொறுமை கிலோ என்ன விலை என்று கேட்பான். என்னடா இவர் போலீஸ் மாத்ரி பேச மாட்டெங்கிரார் என்று சொல்பவர்கள் தான் அதிகம் முழுவதும் செயல் தான். ஓங்கி அடிச்சா ஒண்டு ர டன் வெயிட்   பாக்கிரிய என்று டியலாக் அடிக்காமல் அடித்து விட்டு எத்தனை கிலோ இருக்கும் என் கை என்று கேட்கும் ரகம்.

டிபார்ட்மெண்டில் அவன் செல்ல பெயர்  ‘ நம்பியார் ‘ என்று தான் , ஆனால் இது யாவும் அவனுக்கு தெரிந்தும் தெரியாததை போலே காட்டிக் கொள்வான் .     அவன் முகத்தை வைத்து என்ன நினைக்கிறான் என்று யாராலும் கண்டுக் கொள்ள முடியாது இருவரை தவிர ஒன்று அவன் அம்மா மற்றொன்று அவன் ஆருயிர் நண்பன்.

      இவ்வாறு பிரச்சனை எல்லாம் ஓய்ந்து போன பிறகு மேகி மாதவிடம் சிறு தலையசைப்புடன் மக்கள் குறைத் தீர்புக்கென்று போட்ட திடலுக்குள் சென்றாள். மேகி கீழ் 5 துணை கலெக்டர் இருப்பார்கள் , பொது பணித்துறை , வருவாய் மீட்பு , நிலம் கையகப்படுத்துதல் , நில சீர்திருத்தங்கள் ,  தேர்தல் மற்றும் பேரிடர் மோண்மை. மேகி யின் மேற்பார்வையில் தான் எல்லாம் நடக்கும்.

    இதில் குறிப்பாக தேர்தல் துறையில் பணியாற்றும் சௌந்தர்யா  மேகியின் மிக ஆத்மார்த்தமான ப்ரெண்ட் மற்றும் செயலாளர் . அவள் இல்லையேல் மேகி க்கு அனுக் கூட அசையாது . மேகி க்கு   சுந்தரம் வலக்கை என்றால் சௌந்தர்யா அவளது மூளை. மேகி நினைத்து முடிப்பதற்குள் அதற்கான திட்ட த்தை தீட்டிவிடுவாள் .

    சௌந்தர்யா கேரளாவில் பிறந்து வளர்ந்த தமிழ் பெண். கேரள மாநில தேர்வு எழுதி துணை கலெக்டர் ஆக இங்கே இரண்டு வருடமாக பணி யாற்றிவருகிராள்.மேகி அவளை செல்லமாக சவுண்ட் என்று தான் அழைப்பாள் .  மேகியையே தனது ரோல் மாடல் ஆக எண்ணிக் கொண்டு அவளைப்போல் இருக்கக் முயற்சி செய்து கொண்டிருந்தாள் , ஆனால் இவள் மிகவும் traditional . இப்பொழுது கூட , அங்கே திடலில் அவள் தான் எல்லாவற்றையும் ஒழுங்குப் படுத்திக் கொண்டிருந்தாள்.    எல்லா துறை காலக்டரையும் அவர்களின் துறை சார்ந்த கோரிக்கைகளை அவர்களே பார்க்குமாறு பிரித்து அனுப்புவதற்கு கிளர்க் மூலம் வழி செய்துக் கொண்டிருந்தாள்..

    மேகி உள்ளே சென்று எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு சிறு சிறு திருத்தங்களை கூறிக் கொண்டிருந்தாள். எல்லாம் செவ்வனே இருப்பதை உறுதி செய்தப் பின் வெளியே வந்தாள். அங்கே மாதவ் காத்தமுத்தண்ணா மற்றும் சுந்தரத்துடன் பேசிக் கொண்டிருந்தான் . கட்டுப்படுத்திக் கொண்ட கோபத்துடன் அங்கே ஆஜர் ஆன மேகி ”  வொய் யூ கேம் லேட் மேன் ?” என்று மாதவ் நோக்கி கேட்டுக் கொண்டு மற்ற இருவரையும் சந்தேக பார்வை பார்த்தாள்.

    ” சில் மேகி . ” என்று நமட்டு சிரிப்புடன் சொன்னான் மாதவ் .

    அவர்கள் பேசின ஆங்கில வாய்மொழி தமிழில்

    ” நீ இவளோ பொறுப்பு இல்லாம இருப்பேன்னு நான் நெனசுக் கூட பாக்கல மேடி ”

     அதற்கும் ஒரு சிறு சிரிப்பு தான் , மேடி என்று மேகியால் மட்டும் அழைக்கப்படும் நம் மாதவிடம்.

     ” நீ தான் எதாவுது plan பண்ணி இங்க இவளோ பெரிய கலவரம் வர பண்ணியா ? ”

” மேகி அவங்கள பிடிக்க எனக்கு வேர வழி தெரியல . அதான் லேட் ஆ வர்ற மாதிரி வந்து எல்லாரையும் புடிசுதே ”

” நல்லா இருந்தவங்க எப்டி திடீர்னு அடிச்சுக்கிடாங்க , அதுக்கும் ஏதாவது plan வச்சுருந்தியா ?”

விஷம சிரிப்புடன் மேடி மேகி யை பார்த்து சிரித்துவிட்டு , excuse me என்று சொல்லி சௌந்தர்யா இருக்கும் இடத்தை நோக்கி நடந்தான்.

சுந்தரம் மணதினுள்ளே ” பெரிய அலைபாயுதே மேடி நெனப்பு . ஆளும் அவனும். ஆமா    இவன் யாருக்கு route விடுறா , சௌந்தர்யா வா இல்ல அக்காவையா ? . டேய் அருணு சிக்கரம் வாடா மண்ட காயுது . ” சொல்லிக் கொண்டிருந்தான்.

இது கடல் கடந்து இருந்த அருணுக்கு கேட்டுதோ என்னவோ அருண் அழைத்தான்.

அவன் அழைத்தான் அவனுக்கு மட்டுமே வருகின்ற பிரத்யேக ரிங்டோன்  , சௌந்தர்யா காதுக்கு எட்ட ” இவன் voice எல்லாம் ரிங்டோன் ah வச்சுருக்காங்க இந்த அக்கா . அவனும் அவன் மோகரையும் என்று மனதினுள்    சொல்லிக் கொண்டு அவள் வேலையை தொடர்ந்தாள்.

 

ஆனால் அவளையே பார்த்துக் கொண்டிருந்தன இரு கண்களுக்கும் மேலான கேமரா லென்ஸ். மேடி யினுடைய சட்டை பட்டனில் கேமரா எப்பொழுதும் இருக்கும். இன்றும் அதே போல் அதில் அழகாய் பட்டுடுத்தி தலர்வாய் தன் நீண்ட முடியை பின்னலிட்ட சிறு சந்தன கீற்று இட்ட சௌந்தர்யாவை  விதம் விதமாக படம் பிடித்துக் கொண்டிருந்தான் .

 

Advertisement