Advertisement

அத்தியாயம் -9

    வீட்டிற்கு வந்த ராகவ் தன் கோபத்தை கட்டுப்படுத்தும்  முயற்சியில் முழு வீழ்ச்சாக இருந்தான். ஏழு வருடம் எந்தவித தொந்தரவு இல்லாமல் போய்கொண்டு இருந்த அவன் தொழில் முதல் முதலாக ஒரு சறுக்கல் அதுவும் தன் தம்பியின் மூலம் என்று நினைக்கையில் ராகவால் கோபத்தை கட்டுபடுத்த முடியவில்லை.

      இவனை பற்றிய ரகசியம் தெரிந்ததால் தான் அந்த ‘ராமுவை’ சிறையில் வைத்து கொலை செய்ய உத்தரவிட்டான்.. அந்த கேஸ்லையும் மூக்கை நுழைத்து எல்லாம் விசாரித்து கொண்டு இருக்கிறான். வாழ்வில் முதல் முறையாக ‘அடுத்து என்ன செய்யலாம்’ என்ற கேள்விக்கு விடை தெரியாது விழித்து கொண்டு இருந்தான் ராகவ்.

      விஜய் தன்னை நெருங்குவதற்குள் அவனை கண்டிப்பாக வேறு விஷயத்தில் திசை திருப்பி விட்டுவிட வேண்டும் என்று தீர்மானித்தான்…. ஆனால், இனி தான் விஜய் இதில் தீவிரமாக இறங்க போகிறான் என்பதை பாவம் ராகவ் அறியவில்லை.

********

      “அத்தை” என்று மித்து அழைத்ததும் சுயநினைவுக்கு வந்தவள் அப்படி என்ன தன் அறையில் விஜய் பற்றி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேகமாக வீட்டிற்குள் நுழைந்தவளை அவள் அண்ணியின் கலவரமான முகமே வரவேற்றது.

        “என்ன அண்ணி, ஏதாவது ப்ரோப்ளமா?” மனதில் பயம் உண்டாக விசாரித்தாள்.  

          “அன்னை ஆசிரமத்தில் இருந்து இப்போதான் போன் வந்தது. உன் ப்ரண்ட் பிரியா விஷம் குடித்து   தற்கொலை பண்ணிட்டாலாம்… உன்கிட்ட போலீஸ் ஏதோ விசாரணை செய்யனுமா”

         முகம் வெளுக்க அப்படியே உறைந்து போய் நின்றாள் கார்த்திகா. ‘அவளின் பள்ளி தோழி! இரண்டு வாரத்திருக்கு முன்பு கூட பேசிவிட்டு வந்தாள்.. வேலை கிடைத்ததும் அவள் முகத்தில் தெரிந்த சந்தோசம்!!! அதற்குள் ஏன் இந்த முடிவு?’ என்றவளுக்கு விஜய் சொன்ன விஷயம்  பற்றிய எண்ணம் துளியும் இல்லை.

        தொண்டை அடைக்க தன் அண்ணியிடம் “நான் ஆசிரமத்துக்கு போய்ட்டு வரேன் அண்ணி” அவசரமாக கிளம்பியவளை தடுத்து “உங்க அண்ணன் வந்ததும் போ கார்த்தி. எல்லோரும் பக்கத்துல ஒரு விசேஷத்திற்கு போயிருக்காங்க” அவளின் அண்ணி பேச்சை கேளாது அவசரமாக கிளம்பி சென்றுவிட்டாள் அந்த ரட்சகனின் தேவதை.

         கார்த்திகாவை விட்டு வரவும்… விஷயம் அறிந்தவன் நேராக ஆசிரமத்திற்க்கு வந்து விட்டான் விஜய். ஆனால், அவனுக்கு தன் தேவதையும் அங்கு வருவாள் என்பதை அவன் எதிர்பார்க்கவில்லை.

          கன்னம், மூக்கு சிவக்க கண்ணீர் முகமாக வந்தவளை விஜய் எதிர்பார்க்கவில்லை. ஆசிரமத்தின் உரிமையாளர்கள் மற்றும் சில போலீஸ் நின்று கொண்டு இருந்ததை பார்த்தவள் அங்கு தன் ரட்சகனும் இருக்கிறான் என்று தன் புலன்கள் அறிந்த நொடியில் இதுவரை இருந்த பயம் விலக அவனிடம் ஓடினாள்.

        “டிசி…பி சார் என் ப்ர….ண்ட்” என்று அவள் திணறவும் விஜய்க்கு எல்லாம்  புரிந்தது.

         “என் கூட வா” என்று அவள் தோழி தற்கொலை செய்து கொண்ட அறையை நோக்கி அழைத்து சென்றான்.

          அங்கு வாயில் நுறைத்தள்ள கண்கள் மேலே சொருக இறந்து கிடந்தாள் பிரியா.. பயத்தில் நெஞ்சை பிடித்துக்கொண்டு விஜயை ஓட்டி நின்றாள். “ஒரு பொண்ணு அடிக்கடி ப்ரியாவை  பார்க்க இங்கு வருவதாக சிஸ்டர் சொன்னாங்க… அதான் போன் போட்டு வரவழைக்க சொன்னேன். அந்த பொண்ணு நீயாக இருப்பனு நான் எதிர்பார்க்கவில்லை”

        “உன் பிரண்ட் யாரையாவது லவ்….” அவன் சொல்லி முடிப்பதற்குள் “இல்லை அப்படி எதுவும் கிடையாது… இரண்டு வாரத்துக்கு முன்ன வேலை கிடைத்ததாக  சொல்லி ட்ரீட் வைச்சா” தொண்டை அடைக்க தன் பேச்சை நிறுத்தினாள்.

        “அவளுடைய பிரண்ட்ஸ் சர்க்கிள் நீ மட்டுதான வேறு யாரவது ?” என்றவனின் கேள்விக்கு ‘இல்லை’ என்று தலை அசைத்து தன் தோழியின் உடல் அருகில் சென்றாள்.

        விலகி கிடந்த சுடியின் துப்பட்டாவை எடுத்துவளின் மூளையை சென்று அடைந்தது அந்த ‘பெர்பும்’ மணம்… அது என்ன ஸ்மெல் என்று அப்பொழுது அவளால் கண்டு அறியமுடியவில்லை.

       யோசனையாக அந்த அறையை சுற்றி பார்த்து கொண்டு இருந்தவன் ஒரு தடையமும் கிடைக்காது அழுது கொண்டு இருந்தவளின் அருகில் சென்றான்…

        தன் தோழியின் கையை பிடித்து அழுதுகொண்டு இருந்ததை கண்டவன் அப்பொழுதுதான் ப்ரியாவின் கையில் மெலிதாக கம்பி கிழித்து இருந்த அடையாளம் தெளிவாக தெரிந்தது.     

        முதன் முதலில் விஜய் அதிர்ச்சியில் ஒன்றுமே ஓடாது  அப்படியே உறைந்து போய் நின்ற நொடி அதுதான். ‘அந்த ராமு, பின் பிரியா’ இருவரையும் கொலை செய்தது ஒரே கும்பல். மேலும் இது தற்கொலை இல்லை என்பதை இந்த நொடி அறிந்து கொண்டான்.

         ‘அந்த சிறைசாலை கைதியின் கையில் இருந்த அதே கம்பி கிழித்த அடையாளம். அப்படியென்றால் இவள் உடம்பிலும் விஷம் ஏறி இருக்கும் …. ஆனால், எப்பொழுது?’ தன் மனதில் எழுந்த கேள்வி எதற்கும் விடை தெரியாது நின்று இருந்தான் விஜய்.

தேவதை வருவாள்………..

 

Advertisement