Advertisement

 

 “மூணு வருஷம் முன்னாடி நான் ஒரு ப்ரொஜெக்ட்க்காக டெல்லி வந்துருக்கேன். அப்ப தான் உங்களை பாத்தேன். ஆனா அதுக்கு முன்னாடியே உங்க முகம் தெரியாது. ஆனா அடிக்கடி உங்களை நினைச்சிப்பேன். என்ன குழப்பமா இருக்கா அத்தான்?”

 

“ம்ம்ம்”

 

“ஊருல எல்லாரும் அவங்க முறை பையன் கூட சேர்த்து வச்சு கிண்டல் பண்ணுவாங்களா? தேனை கூட செந்தில் அண்ணா கூட சேர்த்து வச்சு கிண்டல் பண்ணுவோம். அப்ப எல்லாம் என்னோட அத்தை பையன்னு உங்க ஞாபகம் வரும். உங்களை பாத்ததும் என்னால கண்ணை எடுக்கவே முடியலை. முதல் கார்ணம் அச்சு அசலா தேன்மொழி மாதிரி இருந்த உங்க தோற்றம். ரெண்டாவது உங்க கம்பீரம். என் கூட வந்தவங்க எல்லாம் உங்க அழகை சுட்டி காட்டினப்ப நானும் உங்க அழகில் மயங்கி தான் போனேன்”

 

…..

 

“அத்தை சொன்ன அவங்க பையன் நீங்களா இருப்பீங்களோனு ஒரு சந்தேகம். ஆனால் உங்களை பார்த்ததுமே உங்க நடை உடை உங்க கார் எல்லாமே உங்க பிரமாண்டத்தை எனக்கு காட்டுச்சு. உங்களை நெருங்குறது கஷ்டம்னு தெரிஞ்சது. தோற்று போன மனசோட தான் டெல்லில இருந்து போனேன்”

 

…..

 

“ஆனா அங்க போன அப்புறம் நான் சாதாரணமா இருந்தாலும் என்னால உங்களை மறக்க முடியலை. அத்தை, தேன்மொழியை பாக்கும் போதெல்லாம் உங்களோட நினைப்பு எனக்குள்ளே அரிச்சிகிட்டு உங்க நினைப்பு தான். கல்யாணம் பத்தி பேசுனா உங்க ஞாபகம் தான். அதுக்கு பின்னாடி தான் எந்த காலத்துலயும் உங்க நினைப்பு என்னை விட்டு போகாதுன்னு புரிஞ்சது”

 

….

 

“சென்னை ஹாஸ்ப்பிட்டல் ஓனர் டெல்லில தான் இருந்தார். அதனால மீட்டிங் எல்லாமே அங்க தான் நடக்கும். சோ அங்க வர மாதிரி வாய்ப்பு கிடைச்சது. காதல் கொண்ட மனசு உங்களை பாக்க மாட்டோமான்னு தவிச்சது. ஆனா என்ன அதிசயம்னா நான் தங்கி இருந்த ஹோட்டல் பின்னாடி ஜன்னல் வழியா உங்களை பாத்தப்ப தான் அது உங்க ஆபிசுனு புரிஞ்சது. நீங்க கார்ல இருந்து இறங்கி உள்ளே போறதை பாத்தேன். அது உங்க ஆபிசுனு கன்பார்ம் பண்ண ரெண்டு நாளா வாட்ச் பண்ணேன். அத்தையை சாக்கு வச்சு உங்க கிட்ட பேசலாம்னு நான் வந்தப்ப உங்க செக்யூரிட்டி உள்ளே விடலை”

 

….

 

“அப்ப என்னோட லெவல் புரிஞ்சது. சோர்ந்து போய் திரும்பும் போது தான் அலெக்ஸ் அண்ணனை பாத்தேன்”

 

“என்னது அலெக்ஸ்சா?”

 

“ஹ்ம்ம் ஆமா அத்தான். என்னை யாருன்னு கேட்டார். நான் உங்களை விரும்புறேன்னு சொன்னதும் சந்தேக பட்டார். நீங்க நம்பலைன்னா பரவால்ல. கடைசி வரைக்கும் அவர் தான் எனக்கு எல்லாமும்னு சொல்லிட்டு போய்ட்டேன். அப்புறம் ஒரு வருஷம் உங்க நினைவோடு தான் வாழ்ந்தேன். இன்னொரு டைமும் உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைச்சது. அப்ப தூரத்துல இருந்தே உங்களை பாத்துட்டு இருக்கும் போது அலெக்ஸ் அண்ணன் பாத்துட்டாங்க. அப்ப என்ன நினைச்சாங்களோ? அவங்க நம்பர் கொடுத்து எனக்கு போன் பண்ணுனு சொல்லிட்டு போய்ட்டாங்க”

 

…..

 

“அப்புறம் தான் அவங்களுக்கு கால் பண்ணி என் காதலை அவங்களுக்கு புரிய வச்சு ஒரு வழியா அவங்க நம்பி உங்களை பத்தி நிறைய சொல்லுவாங்க. நிறைய போட்டோ அனுப்புவாங்க. உங்களை பாக்கணும்னே இங்க வர ஆரம்பிச்சேன். அவங்க சொல்ற இடத்துக்கு போவேன். அவங்க உங்களை கூட்டிட்டு வருவாங்க. அப்படி தான் அன்னைக்கு நான் ஹோட்டல் வந்ததும்”

 

“அட பாவி கூடவே இருந்து இவ்வளவு வேலையை செஞ்சது அவனா? இரு அவனுக்கு போன் போடுறேன்”, என்று சொல்லி போன் செய்தான்.

அதுவோ அணைத்து வைக்க பட்டிருந்தது. “ஹா ஹா சுவிட்ச் ஆப் பண்ணிட்டாங்களா? என்னை கண்டு புடிச்சிட்டேன்னு அண்ணா கிட்ட சொன்னீங்களா?”

 

“ஹ்ம்ம் ஆமா. அவன் கிட்ட தான் முதல்ல சொன்னேன். டைவர்ஸ் பேப்பர் கேட்டேன்”

 

“அப்ப உண்மை தெரிஞ்சு நீங்க திட்டுவீங்கன்னு அண்ணா எஸ்கேப் ஹா ஹா”

 

“சிரிக்கவா செய்ற? அவன் கிட்ட கூட புலம்புனேனே? ஒன்னு கூட சொல்லலை”

 

“என்  காதலை நான் தான் சொல்லணும்னு நினைச்சிருப்பாங்க. அன்னைக்கு உங்களை காணும்னு தேடி உங்களை கண்டு புடிச்சு அவன் ரொம்ப வெக்ஸ் ஆகி இருக்கான் மா. இன்னைக்கு போய் உன் காதலை சொல்லு. கண்டிப்பா எடுப்பான். அவனுக்கு இப்ப ஆறுதல் தேவைன்னு சொல்லி அவங்க தான் என்னை ஹோட்டல்ல விட்டுட்டு வெளிய வெயிட் பண்ணாங்க”

 

“என்ன வெயிட் பண்ணானா?”

 

“ஆமா, என்னை எப்படி அங்க விட்டுட்டு போவாங்க? அதுவும் மிட் நைட்ல?”

 

“இதுல எல்லாம் பொறுப்பு தான் ராஸ்கல். ஒரு குளுவா அது கொடுத்தானா?”

 

“ப்ச் நான் சொல்ல கூடாதுன்னு சொன்னா அவங்க என்ன செய்வாங்க”

 

“சரி சரி சொல்லு. அவன் வெளிய நிக்கும் போது நீ எப்படி என் ரூம்க்கு வந்த?”

 

“சர்வர் கிட்ட ரூம் நம்பர் கேட்டேனா? ஒரு மாதிரி பார்த்தான் . அவனை சமாளிச்சு உங்க ரூம்க்கு வந்து கதவை தட்டுனா, உடனே அது  திறந்துட்டு. நீங்க போதைல இருப்பீங்கன்னு எல்லாம் எதிர் பாக்கலை.. அப்படியே ஒட்டு மொத்தமா குப்புற படுத்துருந்தீங்களா? நான் விஷ்ணுன்னு கூப்பிட்டேன். சத்தமே இல்லை. கிட்ட வந்து பாத்த அப்புறம் தான் குடிச்சிருந்ததே தெரிஞ்சது”

 

அன்றைய நினைவுகளில் மூழ்கி போனாள் சத்யா.  அன்று நடுக்கத்துடன் அவன் அறைக்குள் நுழைந்தவள் குடித்தவனை பார்த்து வருந்தினாள்.

 

அவனை நேராக படுக்க வைத்து அவன் ஷூ மற்றும் சாக்ஸை கழட்டினாள். இந்த நிமிடம் எதுவும் அவனிடம் பேச முடியாததால் “கிளம்பலாம்”, என்று முடிவு எடுத்து வாசல் வரை வந்தவளை அவன் குரல் தேக்கி நிறுத்தியது.

 

“எனக்கு ஏன் யாருமே இல்லை? எனக்கு அம்மா கூட இல்லை”, என்று புலம்பி கொண்டிருந்தான்.

 

அவனுடைய தோற்றம் ஒரு ஆதரவற்ற குழந்தை போல் அவளுக்கு தோன்றியது. அடுத்த நொடி அவன் அருகில் சென்றவள் அவன் தலையை எடுத்து தன் மடியில் வைத்து கொண்டாள்.

 

அவனோ ஆதரவு போல அவள் இடுப்பை கட்டி கொண்டு எதை எதையோ புலம்பி கொண்டிருந்தான். சின்ன வயதில் இருந்து பதிந்த அவனுடைய ஒவ்வொரு வலியையும்  சொல்லி கொண்டே இருந்தான்.

 

அடுத்த நொடி தன்னுடைய போனை எடுத்தவள் “என்னால இந்த நிலைமைல விஷ்ணுவை விட்டு வர முடியாது அண்ணா. சாரி”, என்று அலெக்ஸுக்கு மெஸேஜ் அனுப்பி வைத்தாள். அதை படித்த அலெக்ஸ்  அங்கேயே ஒரு அறை எடுத்து தங்கி விட்டான்.

 

விஷ்ணு புலம்ப புலம்ப ஆறுதலுக்காக அவனை தட்டி கொடுத்த படி இருந்தாள். அவள்  மடியில் முகம் புதைத்து இருந்தவனோ அவளிடம் நெருக்கமாக தஞ்சம் அடைந்தான்.

 

ஆசை கொண்ட அவள் மனமும் அவன் அருகாமையை ரசித்தது. அவளை அறியாமலே அவள் விரல் அவன் தலை கோதியது. அவள் உதடுகள் அவன் நெற்றி கன்னம் என்று பதிந்தது.

 

ஒரு மணி நேரம் மேல அப்படியே அமர்ந்து அவனை ரசித்து கொண்டே இருந்தாள். அவன் பேச்சுக்களை கேட்டு கொண்டே இருந்தாள். அதற்கு மேலே முதுகு வலித்தால் அவனை தலையணையில் படுக்க வைத்தாள்.

 

அவன் கைகள் அவளை தேடியது . அடுத்த நொடி அவனை நெருங்கி படுத்து கொண்டாள். அவனும் அவளை அணைத்து கொண்டான். மனதில் இருந்த வலிக்கு ஆறுதல் போல அவளை வளைத்து கொண்டது அவன் கரம்.அவன் கண்கள் திறந்து திறந்து மூடினாலும் அவன் சுயநினைவில் இல்லை என்று புரிந்தது.

 

முதலில் ஆதரவாக அவனுக்குள் அவள் புதைந்திருந்தாலும் சிறிது நேரத்தில் அவன் ஆண், தான் பெண் என்ற எண்ணம் வந்து சிறிது கூச்சத்தை கொடுத்தது.

 

இது தவறென்று மூளை எடுத்துரைத்தாலும் காதல் கொண்ட மனது அதை சட்டை செய்தது. அவனை தன் நெஞ்சோடு அணைத்து கொண்டவள் “எப்பவுமே உங்களுக்கு நான் இருப்பேன் விஷ்ணு. இந்த நிலைமையிலா உங்களை நான் பாக்கணும்?”, என்று ஆதரவாக சொல்லி கொண்டே இருந்தாள்.

 

அனைத்தும் சரியாக தான் சென்றது, அவன் தன்னுடைய உதடுகளை அவள் மார்பில் பதிக்கும் வரை. சட்டென்று தீ பற்றிய உணர்வு. தேகம் முழுவதும் தகித்தது போல உணர்ந்தாள். முத்தத்துக்கே அப்படி என்றாள் அவன் உதடுகளோ அங்கேயே அலைந்தது. அவனை வெடுக்கென்று தள்ளி விட தோன்றாமல் அவனை தன்னோடு இறுக்கி கொண்டாள்.

 

தவறு  என்று தெரிந்தும் அவளால் அவனை விட்டு விலக முடிய வில்லை.  அவன் கைகள், அவன் உதடுகள் அவள் உடம்பில் ஏற்படுத்திய அதிர்வலைகளை தாங்க முடியாமல் அவள் கண்களில் கண்ணீர் வடிந்தாலும் “எனக்கு இவர் வேணும். கண்டிப்பா என்னோட காதலை இவருக்கு புரிய வைப்பேன்”, என்று முடிவெடுத்த பின்னர் அவன் செய்கையை ரசிக்க தொடங்கினாள்.

 

அவனோ சுயநினைவை தான் இழந்திருந்தானே தவிர அவனுடைய கைகள் மற்றும் உதடுகள் அவளை ஆராய்ந்து கொண்டிருந்தது. அவள் உடையை தாண்டிய அவனுடைய தீண்டலில் கரைந்தவள் அவன் உடையால் சிரம படுவதை அறிந்து அதை அவளே வெட்கத்தை விட்டு களைந்தாள்.

 

அவனுடைய உடைகளையும் கழட்டினாள். இதை சொல்லி கொண்டிருந்த சத்யா அவன் முகத்தில் வந்த உணர்வுகளில் “அத்தான் ப்ளீஸ், இதுக்கு மேல வேண்டாமே. உங்களை முழுசா எடுத்து கிட்டேன் போதுமா?”, என்று வெட்கத்துடன் முடித்தாள்.

 

“சரி விடு என்னைக்கு இருந்தாலும் நான் கண்டிப்பா தெரிஞ்சிக்குவேன். அப்படி இல்லைன்னா அன்னைக்கு நடந்ததை டெமோ செஞ்சு காட்டுன்னு சொல்லுவேன். சரி அப்புறம் என்ன நடந்தது? சென்சார் போட்டு சொல்லு”

 

“அப்புறம் எழுந்து டிரெஸ்லாம் போட்டுட்டு உங்களை எல்லாம் சரி செஞ்சுட்டு தான் லெட்டர் எழுதினேன்? இல்லைனா நீங்க வேற யாரையாவது லவ் பண்ணிட்டா என்ன செய்றது? அதான்”

 

“ஹ்ம்ம் விவரம் தான், அப்புறம்”

 

“அப்புறம் நல்ல தூங்குன உங்களை இறுக்க கட்டி புடிச்சு கண்ணீர் விட்டு லெட்டரை வச்சிட்டு அண்ணனுக்கு கால் பண்ணேன். நீங்க முழிச்சிட்டா ஆபத்தாச்சே. காதலை சொல்லாம அந்த நிலைமைல என்னை பாத்தா நீங்க என்ன பண்ணுவீங்கன்னு தெரியாதே? அண்ணனுக்கு கால் பண்ணேன். அவங்க வந்து கூட்டிட்டு போனாங்க. என்னை என்னோட ரூம்ல விட்டுட்டு உங்களை கூப்பிட வந்தாங்க”

 

“அட பிராடு, சரி அவனுக்கு அன்னைக்கு நடந்தது எதுவும் தெரியாதா?”

 

“இதெல்லாமா அவங்க  கிட்ட நான் சொல்ல முடியும்”

 

“ப்ச் நான் தான் நல்லவன் மாதிரி உளறிட்டேன்”

 

“சரியான ஓட்டை வாய், போங்க அத்தான்”

 

“ஆனா அவன் அப்ப கூட சொல்லலை பாரேன். அவனுக்கு முன்னாடியே  அம்மா பத்தி எல்லாம் தெரியுமா?”

 

“ஹ்ம்ம் தெரியும் அத்தான். நான் அப்படி நடந்துக்கிட்டேன்னு என்னை தப்பா நினைக்கிறீங்களா அத்தான்?”

 

“இல்லை டா குட்டி? மறுபடியும் அப்படி நடக்காதான்னு ஆசையா இருக்கு’, என்று சிரித்தான் விஷ்ணு.

 

“விளையாடாதீங்க. நான் சீரியஸா கேக்கேன்”

 

“உன்னால அந்த நேரத்துல வேற என்ன செஞ்சிருக்க முடியும் சத்யா. நான் யாருன்னே தெரியாதவனா இருந்திருந்தா கண்டிப்பா என்னோட தனியா இருக்க நீ நினைச்சிருப்பியா? அது நானா இருக்க போய் தான என்னை நெருங்குன? இதுல உன்னை தப்பா நினைக்க ஒண்ணுமே இல்லை.  அப்புறம் என்ன நடந்தது?”

 

“அப்புறம் நடந்தது எதுவுமே நானும் எதிர்பாக்கலை. நீங்க ஊருக்கு வந்தது, சென்னைக்கு என் ரூம்க்கு வந்தது எதுவுமே அண்ணா என் கிட்ட சொல்லலை. அதான் உங்களை பார்த்து அதிர்ச்சில மயங்கி விழுந்துட்டேன். அப்புறம் அத்தை கூட சேர்ந்தது சந்தோசமா இருந்தது. முன்னாடியே இப்படி அறிமுகம் கிடைச்சிருந்தா நான் அப்படி எல்லாம் செஞ்சிருக்க மாட்டேன் அத்தான். எங்க நீங்க கிடைக்க மாட்டிங்களோனு தான் அப்படி எல்லாம் நடந்தது”

 

“விடு டா, ஆனா  அன்னைக்கு நடந்ததுக்கு குழந்தை உருவாகிருந்தா என்ன டி செஞ்சிருப்ப?”

 

“போங்க அத்தான்”, என்று சிணுங்கியவள் “நான் ஒரு நர்ஸ் தெரியும் தான? அப்படியே எதாவது ஆகியிருந்தாலும் என் விஷ்ணு எனக்கு கொடுத்த பரிசுன்னு சந்தோசமா ஏத்துக்குவேன். என்ன வீட்ல தெரிஞ்சா வெளக்கமாறு பிஞ்சிருக்கும்”

 

அவள் காதலில் மெய் சிலிர்த்தவன், அவளை இறுக்கி கட்டி கொண்டான். “என் மேல உனக்கு கோபம் வரலையா சத்யா? ஆனா நான் என்னையே வெறுத்துட்டேன் தெரியுமா? என்னை காதலிச்ச பொண்ணை நானும் காதலிக்கிறேன்னு சொல்லிக்கிட்டு உன்கிட்டயும் மயங்கி நின்னேன். இப்பவும் எனக்கு அது தப்பா தான் தெரியுது. அன்னைக்கு நைட் நடந்தது எனக்கு தெரியாம இருக்கலாம். ஆனா அப்புறம் உன்கிட்ட மயங்குனது தப்பு தான? பாக்குற எல்லா பொண்ணு கிட்டயும் நான் இப்படி மயங்குறது தப்பு தான?”

 

“அத்தான் யாருமே தெரியாத ஒரு பொண்ணை ஒரு லெட்டர் வச்சு விரும்புறது ரொம்ப கஷ்டம். என்னை கேட்டா அது நான் உங்களுக்கு வச்ச செக். நீங்க என்னை விட்டு போக கூடாதுன்னு சுயநலமா யோசிச்சு, நீங்க வேற பொண்ணை நெருங்க கூடாதுன்னு உங்களை கற்பழிச்சிட்டேன்னு உங்களுக்கு காமிச்சிட்டு போனேன். ஆ கிள்ளாதீங்க”

 

“ஹா ஹா. சரி சொல்லு டி”

 

“ஆனா நீங்க உங்களை எடுத்து கிட்ட அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணனும்னு நினைச்சீங்க. அது மட்டுமில்லாம உங்களுக்கு அத்தனை வருசம் கிடைக்காத அன்பு பாசம் அந்த பொண்ணு மூலமா கிடைக்கணும்னு நினைச்சீங்க? அது தப்பு இல்லையே”

 

“ஆனாலும் உன் கிட்டயும் மயங்குனேன்ல?”

 

“அது தப்பு இல்லை. அது என்னை கல்யாணம் பண்ண அப்புறம் வந்தது உரிமை. உங்க பொண்டாட்டி கிட்ட நீங்க மயங்காம இருந்தா உலகம் தப்பா சொல்லும் அத்தான். என்கிட்ட மயங்குனீங்க தான?”

 

“மயங்குனேனா? கல்யாணம் அப்பவே மொத்தமா விழுந்துட்டேன். நீ அவ்வளவு அழகுன்னு அன்னைக்கு தான் கண்ணுல விழுந்தது. அப்புறம் உன்னோட இடுப்பு பாத்தேனா?”

 

“இது எப்ப?”

 

“அன்னைக்கு தான் மதியம்”

 

“ஹா ஹா நல்ல பையன்னு நினைச்சேன்?”

 

“போடி என்னை கண்ட்ரோல் பண்ண நான் எப்படி தவிச்சேன் தெரியுமா? உன்கிட்ட மயங்குற மனசு, தப்பு பண்ணுற டான்னு திட்டும். அன்னைக்கு அருவில குளிச்சது அப்புறம் அன்னைக்கு நைட் முத்தம் என்னை புரட்டி தான் போட்டுச்சு. நீ இப்பவே வேணும் டி”, என்று தாபத்துடன் அவள் கையை பற்றினான் விஷ்ணு.

 

 தீ பற்றும் …….

 

Advertisement