Advertisement

காதல் செய்வேன் கட்டளைப்படி..

காதல் 5

குறித்த நேரத்தில் உறவினர்கள் நண்பர்கள் சூழ, செல்வி குகாவாக இருந்தவளை திருமதி குகாவாக மாற்றினான் பரிதிமாறன்..  

திருமணம் முடிந்து உறவினர்கள் நண்பர்கள் என்று ஒவ்வொருவராக பரிசுகளைக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.. குகாவின் சொந்தங்களை மாறனுக்கு அவள் அறிமுகப்படுத்த, அவனின் சொந்தங்களை அவன் குகாவுக்கு அறிமுகம் செய்தான்..

வெகு நேரம் நின்றுக் கொண்டே இருக்க குகாவிற்கு கால் வலித்தது.. அவள் முகத்திலேயே அதை புரிந்து கொண்டவன்,

“கால் ரொம்ப வலிக்குதா?” என்றான்

“இல்லை.. நின்னுட்டே இருக்கிறதுனால ஒரு மாதிரி இருக்கு..”

“இன்னும் கொஞ்ச நேரம் தான்.. அப்புறம் சாப்பிட போயிடுவோம்.”

“ம்”

பின் அகல்யா, ரோகிணி மற்றும் அவர்களின் கல்லூரி தோழிகள் சிலர் சேர்ந்து கேக் வாங்கி வந்திருந்தனர்.. இருவரையும் அதை கட் செய்ய சொல்லி, ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டுக் கொள்ள செய்தனர்.. பரிசுப் பொருட்களைக் கொடுத்துவிட்டு அவர்கள் சென்றனர்..

எல்லா சடங்குகளும் முடிந்ததும் குகாவின் வீட்டிற்கு மணமக்களை அழைத்துச் சென்றனர்.. அங்கே அவர்களுக்கு பாலும் பழமும் கொடுத்து முடித்ததும் சிறியவர்கள் பட்டாளம் இருவரையும் கலாய்த்துக் கொண்டிருந்தனர்..

“பொண்ணுப் பார்க்கும் போது என் தம்பி  வரலை.. அதனால நீ பாடாம எஸ்கேப் ஆகிட்ட.. இப்போ ஒரு பாட்டு பாடு குகா..” மாறனின் அக்கா சிந்து  கேட்க, குகா “ம்ஹூம்” என்று தலைய ஆட்டினாள். அனைவரும் சேர்ந்து அவளை பாடியே ஆக வேண்டும் என்று சொன்னதும்

யாரோ நீ புன்னகை சிந்தியே  என்னை நான்

உன்னிடம் தேடவே செய்ததென்ன

யாரோ நீ காற்றுக்கு சொந்தமாய் தென்றல் போல்

வந்தென்னை வேறோடு சாய்பதென்ன

அந்தி நேரம் மஞ்சள் வானம்

கொஞ்சி பேசும் உந்தன் கோபம்

எந்தன் நெஞ்சில் காதல் செய்தி சொல்லலாமே

சின்னச் சின்னக் கோபம் கொண்டு

சின்னச் சின்னச் சண்டைப் போட்டு

மெல்ல மெல்ல பேசிப் பேசிப் பார்க்கலாமே..

மாறனையும் தரையையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே பாடினாள் குகா..

“சண்டை தானே டேய் நோட் செஞ்சுக்கோ. டெய்லி சண்டை தான் இனிமே..” என்றதும் அனைவரும் சிரித்தனர்..

ரோகிணி அவள் கணவனுடன் வந்திருந்தாள்.. அவள் நேரம் ஆவதை உணர்ந்து குகாவிடம் விடைபெற வந்தாள்.

“நான் கிளம்புறேன் குகா..”

“அதுக்குள்ள கிளம்புறியா?”

“மணி இப்பவே ஆறாகப் போகுது.. அவரும் ரொம்ப நேரமா கம்பெனிக்கு ஆள் இல்லாமல் தனியாவே உட்கார்ந்திருக்கார்.. சென்னைல தானே இருக்கப் போறோம்.. அங்கே பார்ப்போம்” என்றவள் புறப்பட்டாள்.

மாலை குலதெய்வ கோவிலுக்கு சென்றுவிட்டு வந்தனர்..

“குளிச்சுட்டு இந்த புடவையைக் கட்டிக்கோ குகா..” சீதா ஒரு சேலையை மகளிடம் கொடுக்க

“என்னமா திரும்ப பட்டுப் புடவையை கட்ட சொல்லுறீங்க.. தூங்க போற நேரத்துல ஏன்மா படுத்துறீங்க..”

மகளை முறைத்துக் கொண்டே “சொல்லுறதை கேளு.. திட்டு வாங்காதே.” என்றவர் அகல்யாவிடம் “உன் அறிவுகெட்ட ப்ரெண்டுக்கு சொல்லுமா..” என்றவர் அங்கிருந்து சென்றார்..

சீதா சென்றதும், அகல்யா வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தாள்.

“எதுக்குடி சிரிக்கிற?”

“நெஜமா தூங்க போறியா என்ன?” அவள் வினவ

“அடியே.. உன்னை கொல்லப் போறேன்.”

“ஒரு வேலை ட்ரெஸ் எதுக்குன்னு யோசிக்கிறியோ?” என்றதும் தோழியை இரண்டடி அடித்தாள்.

“அப்போ அதான் உண்மை.”

“அகல்.. சும்மா இருக்க மாட்டியா? போன்ல கூட நாங்க இன்னும் சரியா பேசலை.. முதல்ல நாங்க பேசி பழக வேண்டாமா?”

“தாண்டவம் படத்துல அனுஷ்கா சொல்லுவாளே, முதல்ல மீட் பண்ணனும், தென் ப்ரெண்ட் ஆகணும், லவ் பண்ணனும், அப்பறம் தான் எல்லாம்னு அப்படியா?”

“நீ அடிவாங்காம போக மாட்டடி..”

“சரி சரி புடவையை மாத்து, தலைவாரி விட்டுட்டு நான் வீட்டுக்கு கிளம்புறேன்..” என்றதும் குளித்துவிட்டு புடவையைக் கட்டிக் கொண்டாள்.

“ஹே கிளிப் எல்லாம் குத்தாதே..” என்றதும் மீண்டும் அகல்யா சிரிக்க ஆரம்பித்தாள்.

“உன் டர்ட்டி மைன்ட தூக்கி குப்பைல போடு.”

“இன்னும் ரெடி ஆகலையா நீ?” என்று கேட்டவாறே சீதா உள்ளே வந்தார்..

“இதோ முடிஞ்சுது அத்தை..” என்றவள் அவளின் தலையில் பூவை வைத்துவிட்டாள்.. அந்நேரம் அகல்யாவின் தாயும் அங்கே வந்தார்..

“மணி ஒன்பது ஆகப் போகுது.. இன்னும் நீ வீட்டுக்கு வரலை..”

“அவளை ரெடி பண்றேன்மா..”

“ஆமா இவ பத்து புள்ள பெத்த நூத்துக் கிழவி.. இவ புதுப்பொண்ணை ரெடி பண்றா?” என்றவர் சீதாவிடம் “மூத்தவங்க யாராயாச்சும் இதை எல்லாம் செய்ய சொல்லாம்ல அண்ணி..” என

“ரூமுக்கு அனுப்புறதுக்கு பெரியவங்கள போக சொல்லிருக்கேன் அண்ணி.. இப்போ சும்மா புடவை மாத்தி பூ வைக்கிறது தானே.. அவ வயசு பிள்ளைங்க கூட இருந்தா அதுங்க சும்மா பேசிகிட்டே கிளம்பிடுங்க.. பெரியவங்க யாராச்சும் இருந்தா கொஞ்சம் சங்கடமா பீல் பண்ணுங்கன்னு தான் விட்டுட்டேன்..”

“நீங்க சொல்லுறதும் சரி தான்..” என்றார்..

“அகல் நீ வந்து சாப்பிடு. நான் இவ சித்திய வர சொல்லுறேன். அவங்க துணைக்கு இருப்பாங்க..” என்ற சீதா அங்கிருந்து அகல்யாவின் தாயுடன் நகர்ந்தார்..

“ஓகே மேடம்.. ஆல் தி பெஸ்ட்.. ஹேப்பி மேரீட் லைப்..” என்றவள் தோழியை அணைத்துக் கொண்டாள்.

“தேங்க்யூ செல்லம்..”

“சீக்கிரம் என்னை அத்தை ஆக்கிடு..”

“நீ அடங்க மாட்ட.. சீக்கிரம் உன்னோட லவ் மேட்டரை அத்தைகிட்ட போட்டுக் கொடுக்குறேன் இரு..”

“அதை செய்டி முதல்ல.. அம்மா அல்ரெடி நீங்க ரெண்டு பேரும் மிங்கிள் ஆகிட்டீங்க நான் மட்டும் சிங்கிளாவே இருக்கேன்னு என்னை கேள்வி கேக்குறாங்க.. நீ போய் என் காதலை சொன்னா சீக்கிரமே ஒரு நல்ல முடிவு எடுப்பாங்க”

“எடுப்பாங்க எடுப்பாங்க.. உன் காலை தான் எடுப்பாங்க..”

குகாவின் சித்தி வந்ததும் அகல்யா புறப்பட்டாள். குகாவின் கையில் பால் சொம்பைக் கொடுத்த சித்தி,

“பாத்து நடந்துக்கோ.. காலைல குளிச்சுட்டு நிச்சய புடவையை தான் கட்டனும்.. ரூம்ல அக்கா வெச்சுட்டாங்க..”

“அவர் வீட்டுக்கு போகும் போது தான் அதை கட்டணும்னு அம்மா சொன்னாங்க.. விருந்து எல்லாம் முடிஞ்ச பின்னாடி தானே சித்தி தூத்துக்குடி போறோம்..”

“எத்தனை சேலை மாத்துவ.. ஒழுங்கா சொல்லுறதை செய்..”

“அக்காவும் தங்கச்சியும் அதட்டுறதுல ஒன்னுக்கு ஒன்னு சலச்சவங்களே இல்லை..” என்று முனங்கிக்கொண்டே பால் சொம்புடன் அறைக்குச் சென்றாள். பதட்டம் வெட்கம் எல்லாம் கலந்து பெண்மைக்கே உரிய வெட்கத்துடன் அறைக்குள் நுழைந்தாள் குகப்ரியா.

மாறன் அங்கே அமர்ந்திருக்க அவன் அருகே சென்றவள் பாலை அவனிடம் கொடுக்க

“எனக்கு மில்க் சுத்தமா பிடிக்காது குகா..” என்றான்..

“கொஞ்சமா குடிங்க.. ஒரு வாய் மட்டும்..” என்றதும் ஒரு சொட்டு வாயில் ஊற்றிக் கொண்டான்.

“டெய்லி நைட் மில்க் குடிச்சா தான் எனக்கு தூக்கம் வரும்..” என்றவள் மீதி இருந்த பாலை குடித்து முடித்தாள்.

“நம்ம ரெண்டு பேரோட டேஸ்ட் மொத்தமா வேற இல்ல..” என்றான் சிரிப்புடன்.. அவளும் “ம்” என்றதும்

“ட்ரெஸ் சேன்ஞ் பண்ணனும். நீ முதல்ல மாத்திட்டு வந்துடுறியா? அப்பறம் நான் போறேன்.”

“இல்ல நீங்க ரெஸ்ட்ரூம்ல மாத்திக்கோங்க.. சில்க் சாரீ பாத்ரூம் ஈரத்துல நனைஞ்சிடும்”

“சரி நீ இங்க மாத்திக்கோ.. நான் உள்ள போறேன்.” என்றவன் ஷார்ட்ஸ் டீ ஷர்டை எடுத்துக் கொண்டு ரெஸ்ட்ரூமுக்குள் சென்றான்..

இரண்டு நிமிடம் கழித்து அவன் உள்ளிருந்து

“குகா வரவா?” என்று கேட்க

“ம் வாங்க..” என்றவள் கட்டிலில் அமர்ந்திருந்தாள்.

“என் மேல கொலைவெறில இருப்பேன்னு நினைக்கிறேன்..”

“நானா? இல்லையே.. ஏன் அப்படி கேக்குறீங்க?” என்றாள் ஒன்றும் புரியாமல்..

“போன்ல அடிக்கடி உன்னோட பேசவே இல்லைல.. அதான்..”

“ஆரம்பத்துல கொஞ்சம் வருத்தமா இருந்தது.. என் ஆபிஸ் கொலிக்ஸ் எல்லாம் என்கேஜ்மெண்ட் முடிஞ்சதும் அவங்க பியான்சி கிட்ட மணிக்கணக்கா பேசுவாங்க.. நீங்க போன் செஞ்சாலும் ரொம்ப பேச மாட்டீங்க.. முக்கியமா அத்தை எதாச்சும் கேட்க சொல்லிருந்தா அதைக் கேட்க தான் கால் பண்ணுவீங்க.. அப்போ எல்லாம் என்னடா இவர் பேசவே இல்லைன்னு இருந்தது. கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தேன், இப்பவே எல்லாம் பேசிகிட்டா ஆப்டர் மேரேஜ் என்ன பேசுறது.. இதுவே பெட்டர்ன்னு தோனுச்சு..”

“எக்ஸ்சாக்ட்லி.. என்னோட பாய்ன்டும் இது தான்.. இப்பவே எல்லாமே தெரிஞ்சுகிட்டா ஆப்டர் மேரேஜ் எனக்கு உன்னைப் பத்தி தெரிஞ்சுக்க எதுவுமே இல்லாம போகிடும்..” என்றதும் அவள் மெலிதாக புன்னகைத்தாள்.

“உன் சிரிப்பே சரியில்லையே.. உன்கூட கொஞ்சம் பேசின வரை எனக்கு தெரிஞ்சது.. எனக்கு டோட்டல் ஆப்போசீட் நீன்னு.. பட் ஆபோசீட் தானே அட்ராக்ட் பண்ணும்..” என்றதற்கும் அவள் சிரித்து மட்டும் வைத்தாள்.

“ரொம்ப மொக்கை போடுறேனோ..”

“லைட்டா..”

“அடிப்பாவி.”

“நம்ம ப்ர்ஸ்ட் மீட்ல நான் தான் அதிகமா பேசுனேன்.. இப்போ நீங்க பேசுங்க தப்பில்ல..”

“ஹாஹா.. சரி நீ மார்னிங்கே கால் வலிக்குதுன்னு சொன்ன.. தூங்கு. மீதி கதைய நாளைக்கு பேசுவோம்.. குட் நைட்..” என்றான்

மறுநாள் காலையில் குளித்து வெளியே வந்தவள் ஹாலில் தந்தை அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு அவர் அருகில் சென்றாள்.

“குட் மார்னிங் பா..”

“குட் மார்னிங்டா.. மாப்பிள்ளை எங்க?” என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே மாறனும் அவர் அருகில் வந்து அமர்ந்தான்..

“போய் உங்க ரெண்டு பேருக்கும் காபி எடுத்துட்டு வா..” என்றதும் சமையல் அறைக்கு சென்று தாயிடம் காபியை வாங்கிக் கொண்டு கணவனிடம் கொடுத்தாள்.

“அப்பா உங்களுக்கு?”

“நான் குடிச்சுட்டேன் மா..” என்றவர் மருமகனிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்..

“அத்தை காபி சூப்பர்” அங்கே வந்த சீதாவிடம் மாறன் கூறியதும் அவர் சிரித்துக் கொண்டே கப்புகளை எடுத்துச் சென்றார்.

“குகா மாதிரி என்ன சொன்னாலும் அத்தையும் அதே லைட் ஸ்மைல் பண்றாங்க.. அத்தைக் கிட்ட இருந்து தான் உனக்கு இந்த பழக்கம் வந்துச்சோ.”

“இதை எல்லாம் வெச்சு குகாவை அமைதின்னு நினைச்சுடாதிங்க மாப்பிள்ளை.. கோபம் வந்தா மேடம் காளி அவதாரம் எடுத்துடுவாங்க.. காபில உப்பை போட்டுடுவா..”

“என்னது உப்பையா?” என்றவன் அலற

“ரொம்ப இல்லை மாப்பிள்ளை.. இப்போ நீங்க ஒன்றரை ஸ்பூன் சர்க்கரைப் போட்டுபீங்கன்னா, அதுல ஒரு ஸ்பூன் சர்க்கரை போடுவா, அரை ஸ்பூன் உப்பை போட்டுடுவா..

நான் கடைல இருந்து எதாச்சும் பில்லை செக் செய்ய எடுத்துட்டு வந்தா, அதுல கிறுக்கி வெச்சுடுவா.. மாடில காயப் போட்டுருந்த துணியை எடுத்து பக்கத்து வீட்டுல தூக்கிப் போட்டுடுவா..” என்று அவர் அடுக்கிக் கொண்டே போக

“அப்பா போதும் சும்மா இருங்க..” என்று குகா அடக்கினாள்.

மாறன் சிரித்துக் கொண்டே குகாவின் தம்பியிடம் “உன்னை என்ன பண்ணுவா?” என்று கேட்க

“என்கிட்ட எல்லாம் வால் ஆட்ட மாட்டா மாமா.. அவ எனக்கு ஒன்னு செஞ்சா பதிலுக்கு ரெண்டு செஞ்சுடுவேன். மேடம் அதுனால என்கிட்ட அடக்கி தான் வாசிப்பாங்க..”

“பாத்து இருந்துக்கோங்க மாப்பிள்ளை.. கேஸ் பைல் எல்லாம் ஜாக்கிரதையா வெச்சுக்கோங்க..” ராஜன் கூறியதும்

“இதை எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லிருக்கணும் மாமா.. இப்ப வந்து அலெர்ட் பண்றீங்களே? நியாயமா..” அவன் அழும் குரலில் கூற

“இப்போ சும்மா இருக்கீங்களா எல்லாரும்.” என்றவள் தாயிடம்

“அம்மா இந்த அப்பாவை பாருமா. என் இமேஜை ரொம்ப டேமேஜ் செய்றார்.”

“சும்மா இருங்க..” என்று கணவரிடம் கூறிய சீதா மகளை தன்னோடு ரூமிற்கு அழைத்துச் சென்றார்.

“அப்பா என் இமேஜை ரொம்ப டேமேஜ் செஞ்சுட்டார்..”

“நீயும் இனிமே பார்த்து நடந்துக்கணும் குகா.. இங்க நம்ம வீட்ல செய்ற சேட்டை எல்லாம் மாப்பிள்ளை கிட்டயும் செய்யாதே.. அவர் மேல கோபம் வந்தாலும் பேசி தீர்த்துக்கோ.. அவர் ஆபிஸ் பேப்பர் எதுலையும் கிறுக்கிடாதே..”

“அம்மா இதெல்லாம் நான் ஸ்கூல் படிக்கும் போது செய்தது.. ஸ்டில் சொல்லிக் காமிச்சிகிட்டே இருக்கீங்க.. அதெல்லாம் நான் இப்போ அப்படி செய்ய மாட்டேன்..”

“செய்யாம இருந்தா சந்தோஷம் தான்..” என்றவர் மகளின் நெற்றியைப் பார்த்து

“வகிட்டில கும்குமம் வை..” என்றதும் அவள் எடுத்து வைத்துக் கொண்டாள்.

“தினமும் மறக்காம வெச்சுக்கோ.. எல்லாத்தையும் பொறுப்பா கவனிச்சுக்கோ.. விளையாட்டுத்தனமா இருந்தாலும் பொறுப்புன்னு வந்துட்டா நீ சரியா தான் செய்வ.. இருந்தாலும் அம்மாவா எனக்கு கொஞ்சம் பயம்.. பார்த்து இருந்துக்கோடா.. பொறுப்பான மருமகளா  மாமியாரை அனுசரிச்சு நடந்துக்கோ.. அவங்க தூத்துக்குடில இருக்காங்க நம்ம சென்னைல தானே இருக்கோம்ன்னு பொறுப்பில்லாம இருந்துடாதே..” என்று அவர் கூறிக் கொண்டே போக, குகாவின் கண்ணில் கண்ணீர் வந்தது.. மகளின் கண்ணீரைப் பார்த்த சீதா, அவளை அணைத்துக் கொண்டு

“இது எல்லா பொண்ணுங்களுக்கும் நடக்கிறது தான்.. அழுகாதே.. மூணு வருஷமா நீ தனியா தான் இருக்க.. இப்ப ஹாஸ்டலுக்கு பதில் மாப்பிள்ளை கூட வீட்டுல இருக்கப் போற.. அவ்வளவு தான்டா வித்தியாசம்.. அடிக்கடி நாங்க வரோம் நீயும் இங்க வந்து எங்களைப் பாரு..” அவர் ஆறுதல் கூற கூற மேலும் குகாவின் அழுகை அதிகமானது..

நெடுநேரம் சமாதனம் செய்த பின்பே அவள் அழுகை மட்டுப்பட்டது.. மதிய விருந்து முடிந்து, தூத்துக்குடிக்கு புறப்படும் ஏற்பாடு நடந்துக் கொண்டிருந்தது..

அவளை வழியனுப்ப அகல்யா அவள் அம்மாவுடனும் தம்பியுடனும் வந்திருந்தாள்.. அகல்யாவின் தம்பி, குகாவை முறைத்துக் கொண்டே நிற்க, குகா அவன் அருகில் சென்று

“என்னடா எதுக்கு இப்படி முறைக்கிற?” என்றதும், அவன் அவளை மீண்டும் முறைத்துவிட்டு வேறு புறம் திரும்பினான்..

“என்னடி ஆச்சு இவனுக்கு.. எதுக்கு என் மேல கோபமா இருக்கான்..” குகா, அகல்யாவிடம் கேட்க

“நீயே கேட்டுக்கோ. நீயாச்சு அவனாச்சு.. உங்களுக்கு இடைல வந்தேன், என்னை முட்டாள் ஆக்கிடுவீங்க..” என்றாள்

“ச்சீ பே..” என்று அகல்யாவிடம் கூறியவள், அகல்யாவின் தம்பியிடம்

“மச்சான் டேய் எதுக்குடா இப்படி முறைக்கிற? உன் டார்லிங் நான் பாவம் இல்ல..”

“இப்படி சொல்லி சொல்லி என்னை ஏமாத்திட்ட இல்ல..” என்றான் சோகமாக

“என்னடா சொல்ற? புரியுற மாதிரி தான் பேசேன்..”

“என்னைக் கட்டிக்கிறேன் கட்டிக்கிறேன்னு சொல்லிட்டு இப்போ அவரை கட்டிகிட்ட இல்ல..” மாறனைக் கைக்காட்டி அவன் கூற, குகா வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தாள்.

அவன் தன்னை காட்டியதையும், குகாவின் சிரிப்பையும் பார்த்த மாறன் அவர்கள் அருகில் வந்து என்னவென்று கேட்க, அகல்யா அனைத்தையும் சொன்னாள்.

“எனக்கு இது முன்னாடியே தெரியாதேடா. தெரிஞ்சதுனா உன் லவ்வர உன்கிட்ட இருந்து பிரிச்சிருக்க மாட்டேன்.. சரி விடு.. இப்பவும் ஒன்னும் பிரச்சனை இல்லை.. உன் டார்லிங்க நீயே வெச்சுக்கோ..” குகாவின் கையைப் பிடித்து அகல்யாவின் தம்பியின் கையில் கொடுக்க, குகா மாறனின் கையில் ஒரு அடி அடித்தாள்..

“நினைப்பு தான்.. அன்னிக்கே சொன்னேன் தானே.. மாட்டுனது மாட்டுனது தான்.. எஸ்கேப் எல்லாம் ஆக முடியாது..” என்றாள்.

“விடுடா தம்பி..  குகாவோட பொண்ணை உனக்கு மேரேஜ் செஞ்சு வெச்சுடலாம்..” அகல்யா கூறியதும், அவளைப் பார்த்து கை எடுத்துக் கும்பிட்டவன்

“ஒரு ஆணியும் நீங்க  …” என்றதும் அங்கே ஒரு சிரிப்பலை உருவானது..

 

Advertisement