அத்தியாயம் 15
ஜெய் சனிக்கிழமை இரவு ஒன்பது மணிப் போலத்தான் வந்தான். வந்தவன் வேலை இருக்கிறது என அதிகாலையே வெண்ணிலாவை அழைத்துக் கொண்டு பொள்ளாச்சிக்கு கிளம்பிவிட்டான். மதியம் உண்டுவிட்டுக் கிளம்பலாம் என்றால் கேட்கவில்லை.
ஒரு நொடி பயந்தே போனான். “ஹே எங்கப் போன?”
“நானும் அதே தான் கேட்கிறேன். வாய்விட்டுச் சொன்னா தானா… இதுக்கூட உங்களுக்குப் புரியாதா?” என வெண்ணிலாவும் தன் தரப்பில் நிற்க, கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டு நின்றனர்.