Precap -5
"இதுல நான் என்ன வேண்டா வெறுப்பா நடந்துக்கிட்டேன் சொல்லு..??நீங்க இப்படி ஏவி ஏவி சொல்லிட்டு இருக்கிறதாள தானே கேக்குறேன்.."
"உனக்கு பிடித்தமான ஒரு விஷயத்தை எனக்கு பிடிக்கல அதுனால செய்யாதே சொன்னா நீ தாங்குவியா..??" என மோனி கேட்க அதிர்ந்து தான் போனாள் வாசவி..
இவளுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது. யாரோ பேர் மட்டுமே தெரிந்த ஒருவனை பார்க்க இத்தனை பெண்கள் மையல் கொண்டுள்ளாகள். அவனின் சுயரூபம் அறியாது இத்தனை பெண்கள் அவனின் மேல் கொண்டுள்ள ஆர்வத்தை பார்த்து மனம் பிசைந்தது.
இங்கே பெண்கள் யாவும் அவனின் பின்னே சுற்றி திரிய நினைக்க ,அதுவே அவனை ப்லே பாயாக ஆக அவளின் மனதில் அவனை உருவகப்படுத்தியது.
அதுமட்டுமல்லாது மோனியின் கேள்வியில் மறந்திருந்த தாய் தந்தையின் செயல் ஞாபகத்திற்கு வரவே ஏவியின் மீது இருந்த வெறுப்போடு வலி வின்னென்ன வலிக்க செய்து அங்கு இருக்கவே மூச்சு முட்டியது அவளுக்கு.
மோனியிடம் திரும்பி ,"எனக்கு ரொம்பவே தலை வலிக்குது .வெளில கொஞ்சம் காத்தோடமா நின்னுட்டு வரேன் " என்று வெளி வந்தாள் வாசவி.
வெளியே வந்து நின்றவளுக்கு இயற்கையின் தீண்டல் அவளின் தலைவலியை சிறிது மட்டுப்பட உதவியது.
அங்கே பக்கத்தில் ஒரு பூங்கா போல் அமைத்திருக்க ,அதற்கு நடுவில் புத்தர் சிலை அமைத்து வைத்திருந்தார்கள். அந்த சிலையை சுற்றிலும் பல வண்ண நிறங்களில் பூக்கள் அமைத்து வைத்து ,பார்க்கவே மனது கவரும் அழகோடு இருந்தது.
அதனையே இரசித்து பார்த்திருவளின் பின்னாலில் இருந்து ஒரு ஆடவனின் குரல் வரவும் திடுக்கிட்டு திரும்பியவள் விழி விரித்து நின்றாள்.
அவளை பார்த்தவனுக்கும் அதே திகைப்பு தான் .ஆனால் ஏனோ சொல்ல முடியாத சந்தோஷ பரவசநிலை அவனுக்குள் ஆர்பரிக்க இதயம் வேகவேகமாக துடித்து அதன் இருப்பினை அழுத்தமாக காட்டியது.
"நீங்க இங்க என்ன பண்றீங்க..??" என சந்தோஷமாக வாசவி கேட்க
"அதை நான் தான் கேக்கணும்.." என பதிலளித்தான் அவன்.
"அது எப்படி நீங்க கேக்க முடியும் . நான் இந்த காலேஜ்ல படிக்கிறேன் . அதுனால கேக்குறேன் ஆனா நீங்க..???"என இழுக்க
"உன்னோட பதிலையே உனக்கான கேள்விக்கான பதிலும் இருக்கு " என்க
"அப்படியா சொல்றீங்க "என ஆல்காட்டி விரலை தாடையில் வைத்து விழிகளில் நயனங்களுடன் தலை சாய்த்து கேட்டாள்.
அதில் அப்படியே முழுதாக துலைந்து தான் போனான் அவன். அவளின் ஒவ்வொரு செயல்களும் அவனை அவளுக்குள் இழுத்துச் சென்றது...
அதற்குள் அவனின் நண்பர்களில் ஒருவன் "ஏவி " என்றழைக்க
அவளையே பார்த்திருந்தவனுக்கு அவளின் முகம் மாற்றங்களோடு நயனங்கள் புரிந்த விழிகள் வெறுப்பை கக்கியதை பார்த்து நொடி பொழுது கூட தாமத்திக்காமல் ,"ஏவி வருவான். அவன் ஏதோ ஒரு முக்கியமான வேலையில இருக்கான் . வந்துடுவான்,இப்போ நீங்க கிளம்புங்க "என சொல்லி அவர்களை அனுப்பி வைத்தான்.
"எங்க போனாலும் இந்த ஏவி தானா.." என கடுப்போடு அவனின் முன்பு கோவப்பழமாய் மூக்கு நுனி சிவக்க நின்றிருந்தாள்.
"இதுல நான் என்ன வேண்டா வெறுப்பா நடந்துக்கிட்டேன் சொல்லு..??நீங்க இப்படி ஏவி ஏவி சொல்லிட்டு இருக்கிறதாள தானே கேக்குறேன்.."
"உனக்கு பிடித்தமான ஒரு விஷயத்தை எனக்கு பிடிக்கல அதுனால செய்யாதே சொன்னா நீ தாங்குவியா..??" என மோனி கேட்க அதிர்ந்து தான் போனாள் வாசவி..
இவளுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது. யாரோ பேர் மட்டுமே தெரிந்த ஒருவனை பார்க்க இத்தனை பெண்கள் மையல் கொண்டுள்ளாகள். அவனின் சுயரூபம் அறியாது இத்தனை பெண்கள் அவனின் மேல் கொண்டுள்ள ஆர்வத்தை பார்த்து மனம் பிசைந்தது.
இங்கே பெண்கள் யாவும் அவனின் பின்னே சுற்றி திரிய நினைக்க ,அதுவே அவனை ப்லே பாயாக ஆக அவளின் மனதில் அவனை உருவகப்படுத்தியது.
அதுமட்டுமல்லாது மோனியின் கேள்வியில் மறந்திருந்த தாய் தந்தையின் செயல் ஞாபகத்திற்கு வரவே ஏவியின் மீது இருந்த வெறுப்போடு வலி வின்னென்ன வலிக்க செய்து அங்கு இருக்கவே மூச்சு முட்டியது அவளுக்கு.
மோனியிடம் திரும்பி ,"எனக்கு ரொம்பவே தலை வலிக்குது .வெளில கொஞ்சம் காத்தோடமா நின்னுட்டு வரேன் " என்று வெளி வந்தாள் வாசவி.
வெளியே வந்து நின்றவளுக்கு இயற்கையின் தீண்டல் அவளின் தலைவலியை சிறிது மட்டுப்பட உதவியது.
அங்கே பக்கத்தில் ஒரு பூங்கா போல் அமைத்திருக்க ,அதற்கு நடுவில் புத்தர் சிலை அமைத்து வைத்திருந்தார்கள். அந்த சிலையை சுற்றிலும் பல வண்ண நிறங்களில் பூக்கள் அமைத்து வைத்து ,பார்க்கவே மனது கவரும் அழகோடு இருந்தது.
அதனையே இரசித்து பார்த்திருவளின் பின்னாலில் இருந்து ஒரு ஆடவனின் குரல் வரவும் திடுக்கிட்டு திரும்பியவள் விழி விரித்து நின்றாள்.
அவளை பார்த்தவனுக்கும் அதே திகைப்பு தான் .ஆனால் ஏனோ சொல்ல முடியாத சந்தோஷ பரவசநிலை அவனுக்குள் ஆர்பரிக்க இதயம் வேகவேகமாக துடித்து அதன் இருப்பினை அழுத்தமாக காட்டியது.
"நீங்க இங்க என்ன பண்றீங்க..??" என சந்தோஷமாக வாசவி கேட்க
"அதை நான் தான் கேக்கணும்.." என பதிலளித்தான் அவன்.
"அது எப்படி நீங்க கேக்க முடியும் . நான் இந்த காலேஜ்ல படிக்கிறேன் . அதுனால கேக்குறேன் ஆனா நீங்க..???"என இழுக்க
"உன்னோட பதிலையே உனக்கான கேள்விக்கான பதிலும் இருக்கு " என்க
"அப்படியா சொல்றீங்க "என ஆல்காட்டி விரலை தாடையில் வைத்து விழிகளில் நயனங்களுடன் தலை சாய்த்து கேட்டாள்.
அதில் அப்படியே முழுதாக துலைந்து தான் போனான் அவன். அவளின் ஒவ்வொரு செயல்களும் அவனை அவளுக்குள் இழுத்துச் சென்றது...
அதற்குள் அவனின் நண்பர்களில் ஒருவன் "ஏவி " என்றழைக்க
அவளையே பார்த்திருந்தவனுக்கு அவளின் முகம் மாற்றங்களோடு நயனங்கள் புரிந்த விழிகள் வெறுப்பை கக்கியதை பார்த்து நொடி பொழுது கூட தாமத்திக்காமல் ,"ஏவி வருவான். அவன் ஏதோ ஒரு முக்கியமான வேலையில இருக்கான் . வந்துடுவான்,இப்போ நீங்க கிளம்புங்க "என சொல்லி அவர்களை அனுப்பி வைத்தான்.
"எங்க போனாலும் இந்த ஏவி தானா.." என கடுப்போடு அவனின் முன்பு கோவப்பழமாய் மூக்கு நுனி சிவக்க நின்றிருந்தாள்.
Last edited: