uyirai tholaithaen UD 15

Advertisement

preethi sri

Well-Known Member
hi friends pona padhivukku likes and comments potta anaivarukkum nanri :):):)

indha padhivukkum ungal karuthugalai sollungal (y)(y):geek::)


கார் ஹாஸ்டல் அருகில் நிப்பாட்ட பட்டிருந்தது அந்த தெருவில் அதிகமான வீடுகள் மட்டும் இருந்ததால் ஆல் நடமாட்டம் சற்று குறைவாகவே இருக்கும் சாலையின் இருபுறமும் நல்ல அடர்த்தியான மரங்கள் அதனால் சற்று இருள் பூசினால் போல் இருக்கும்

ஹாஸ்டல் காம்பௌண்ட் வெளிய இருக்கும் மரத்தின் அடியில் நிப்பாட்டிவிட்டு வந்திருந்தான் அதனால் அந்த இடைவெளியில் இருவரும் நிற்பது யாருக்கும் தெரியாது

அஜய் அவள் இடை பற்றி அருகில் இழுக்க இதற்கு எதிர்பார்த்திராத அபி பூங்கோத்தாக அவன் மேல் மோதி நிற்க அவளின் பெண்மையின் தீண்டலின் அவன் இன்னும் அவள் மேல் பித்தாகி போனான்

அஜய் இது ஹாஸ்டல் யாராவது பாத்தா தப்பா நினைப்பாங்க என்று சன்னக் குரலில் அவன் காதில் முனங்க தன் காரின் பின் சீட் கதவை
திறந்தான் அது ஏ சி கார் என்பதால் கண்ணாடி குளோசாகி இருந்தது
இன்னும் கார் கண்ணாடியில் பிளாக் ஷீட் கவர் செய்து இருந்ததால்
கார் உள்ளெ இருப்பவர்கள் வெளியில் பார்க்கலாம் அனால் வெளியில் இருந்து பார்த்தல் காருக்குள் யார் இருக்கிறார்கள் என்ரே தெரியாது



அஜயின் மோகம் கரை உடைக்க அபி அவன் கரங்களில் துவண்டாள்

அவள் உடுத்தி இருந்த மேல் சட்டை விலக அவன் கரங்கள் அவள் தேசத்தில் ஊர்வலம் நடத்தியது பெண்மையை உணர்ந்து கொள்ளும் வேகம் அவனிடம் அஜய் என்று அபி வாய் திறக்க அவள் இதழ்களையே வன்மையாய் சிறை செய்திருந்தான் அவன் கரம் பாவை அவளின் வெற்றிடையை வருடி கொடுக்க அவன் கரங்களின் சூட்டை அவள் தேகத்தில் கடத்திட முயன்றான்

அவனின் முரட்டு தனத்தில் அவளின் மென்மையான இதழ்களின் ரத்தம் கசிய தேன் சுவை மாற அவன் தன் இதழை அவளிடம் இருந்த பிரித்த அஜய்கு இப்போது தான் அவன் செய்து கொண்டிருந்த முட்டாள் தனம் தெரியவர சட்டென அவளை விட்டு விலகி அமர்ந்தான்

அவள் இதழ்களில் ரத்தம் அவனை குற்ற உணர்வுக்கு உள்ளாகியது

சாரி டி என்ன மன்னிச்சுடு என்று அவன் மன்னிப்பு வேண்ட

அஜய் ப்ளீஸ் நீங்க எந்த தவறும் செய்யல என்று கூற

அவன் குற்ற உணர்வில் தவிக்கிறான் என்று புரிய
அபி அவன் முகத்தை இரு கைகளால் ஏந்தி கொண்டு

ஐ லவ் யு அஜய்

ஐ நீட் யு நொவ்
என்று அவன் இதழ்களை தீண்ட தன்னவளின் முதல் முத்தம் உயிர் வரை தீண்டியது
இன்னும் ரத்தம் கசிய அவள் இதழ்களை தன்னிடம் இருந்து பிரித்தஅஜய் வேணாம் டி உன்ன கஷ்ட படுதிக்காத என்று கண்கள் கலங்க கூற
அஜய் என்று அவன் மார்பில் புதைந்து விடுபவள் போல் அவனுள் இன்னும் ஒன்றினால்

அவளை ஆதரவாக தோல் தட்டி கொடுத்து சமாதானம் செய்தான்

அவள் மென்மையான இதழ் ரத்த சிவப்பு ஆகி இருந்தது அஜய்க்கு பாவம் எப்படி இவளுக்கு வலித்திருக்குமோ என்று வேதனை அடைந்தான்

அவனுடைய கில்ட் ஐ போக்கும் வகையில் அவன் கரம் பற்றி ஜெய் தேங்க்ஸ் போர் திஸ் என்று அவள் இதளை சுட்டி காட்ட இப்போது அவளின் முகத்தின் சிறிப்பும் சிவப்பும் சொல்லியது அவன் தொடுகையில் குலைந்த அவள் தேகமும் காதல் கொண்ட அவள் மனம் தன்னை நாடி இருக்கிறது என்று

தேங்க்ஸ் இப்டி சொல்ல கூடாது அஜி பேபி

என்று அவள் நெற்றியில் மென்மையாக தன் இதழை ஒற்றி எடுத்து தேங்க்ஸ் பேபி என்று கூறினான்


பேபி நீ போய் ரெடி ஆயிட்டு வா நம்ம வீட்டுக்கு போலாம் என்று கூற சரி என்று பதினைந்து நிமிடம் களித்து இறங்கி வந்தால் ரெட் அண்ட் பிளாக் கலர் சில்க் புடவை அணிந்து விரிய விடப்பட்டிருந்த கூந்தலை
ஒரு கிளிப் குத்தி அடக்கியிருந்தால் கண்ணுக்கு மையிட்டு புருவ மத்தியில் அரக்கு நிற சிறு பொட்டு வைத்து அலகு பதுமையாக வந்தால்
புடவை அவளின் நிறத்திற்கு வனப்பை கூட்டஇடை பளிங்கு போல் தெரிந்தது ( டேய் அஜய் இந்த பொண்ணுங்களே இப்படிதான் டா மனுசனா டெம்ப்ட் ஏத்தி பாப்பாங்க )

அவன் மனசாட்சி அஜய் ஏன் டா வா இன்னைக்கு இவ்ளோ அழகா இருக்கா நீ வேற கண்ட்ரோல் ல இல்ல மகனே பாத்து டா

உங்க அப்பா விஸ்வனாதன் இது நால தான் டா ஒரே வீட்ல இருக்க விடல இல்லைனா அபி இந்நேரம் ஆறு மாசமா இருந்திருப்பா என்று அவன் மனசாட்சி கூற அபியும் காரில் வந்து அமர சரியாக இருந்தது

கார் அஜயின் விடு இருந்த தெருவுக்குள் சென்றது

அஜய் எனக்கு ரொம்ப [பசிக்குது மொதல்ல ஹோட்டல் போய் சாப்டுட்டு நம்ம வீட்டுக்கு வரலாம் என்று கூற

அடி சாப்பாட்டு ராமி ( ராஜாக்கு substitute )

மொதல்ல வீட்டுக்கு வா என்று குறி விட்டு அவளை அழைத்து சென்றான் வாசலில் கார் நிறுத்தி விட்டு அவளை டின்னிங் ரூம்க்கு அழைத்து சென்றான்

டேபிள் மீது

இருந்த ஹாட் பேக் இல் சிக்கன் பிரியாணி பெப்பர் சிக்கன் கிரேவியை செய்து வய்த்திருந்தான் அதை பார்த்த அபி இது எல்லா நீங்க தான் சமச்சீங்களா என்று கண்கள் கலங்க கேற்க

என் பொண்டாட்டி நா செய்யாம வேற யாரு செய்வா என்று வழக்கம் போல் அவன் கூறிய பதிலில் முகம் மலர்ந்தால்

அவள் அன்னையின் இறப்புக்கு பின் இன்று வரை அவள் அசைவ உணவை தவிர்த்திருந்தால் தனக்கு என்ன பிடிக்கும் என்று தன் அன்னைக்கும் மட்டுமே தெரியு ம் அவருக்கு பின் தனக்காக சமைத்து தரும் தன் கணவனை காதலுடன் நோக்கினால்

அஜய் அவளுக்கு ஊட்டி விட உதட்டில் காயம் பட்டு இருந்ததால் காரத்திற்கு எரிச்சல் தர வு ஆஹ் என்று குறி சாப்பிட்டு கொண்டிருந்தாள்

அப்போது தான் அபிக்கு நியாபகம் வந்தது ஐயோ அஜய் நீங்களும் இன்னும் சாப்பிடலை இல்லை என்று குறி அவனுக்கு ஊட்டிவிட்டால்
இருவரும் ஒருவழியாக உணவை முடித்துவிட்டு உரையாடி கொண்டிருந்தார்கள் இல்லை கொஞ்சி கொண்டிருந்தார்கள்


பாவம் அவளுக்கு தெரிய வில்லை அவளுடைய சந்தோஷம் காணாமல் போக போகின்றது என்று

உயிர் தொலையும்






 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top