UVVP 06

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
அத்தியாயம் - 6

“ஊஃப்....... நீ நம்ம ஷண்மதி-ய தான் ....”

“"யா, கோயம்புத்தூர் பிரீலான்சர், நமக்கு ஆர்ட்டிகள் கொடுக்கிற அதே ஷண்மதி தான்..., இவ .... அன்னிக்கு அந்த காரை போட்டோ எடுத்தது, அதை தொடர்ந்து நடந்தது...எல்லாத்தையும், கம்பளைண்ட்-ஆ குடுக்க லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்க்கு போயிருக்கா... அங்க இவ எதிர்பாத்தா மாதிரியே , யாரும் இவளை சட்டை பண்ணலை. ஆனா, இவளை பத்தி எல்லா விஷயமும் கறந்துட்டு, எங்க சொல்லணுமோ அங்க சொல்லிட்டாங்க..அந்த மகா விசுவாசமான போலீஸ்..."

" இந்த பொண்ணு சும்மா இல்லாம, ..அடுத்த ரெண்டு வாரத்து-ல ட்ராஃபிக் சிக்னல்-ல இருந்த CCTV மூலமா, அது எந்த ரூட்-ல வந்ததுங்கிற விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டா.... காரை அதோட நம்பரை வச்சு ஓனர் யாரு, எப்போ கை மாறிச்சு-ன்னு அதோட மொத்த வரலாறும் இவை கையில......., "

"அதெப்பிடி?"

"இந்தியா-ல இருந்துகிட்டு கேக்கிற கேள்வியா இது...? காசு, பணம், துட்டு மணி..மணி ... ஸார், .. "

"வெல் ....ஷண்மதி எல்லா இடங்களுக்கும் போய் தகவல் சேகரிக்கறது தெரிஞ்ச விநாயகத்தோட ஆளுங்க... இந்த விஷயத்தை குடையறத நிறுத்தலைன்னா.. , . அவளை தீர்த்துக் கட்டப் போறதா... ஷண்மதி வீட்டுக்கே போன் பண்ணினதால, வீட்டுல எல்லாரும் பதறி, அவளை வேற ஊருக்கு பேக் அப் பண்ண முடிவு செய்ஞ்சாங்க... அப்போ ஷானு, எனக்கு கால் பண்ணி, சென்னைக்கு வர்றதா சொன்னா.. நல்ல safe-ஆன ஹாஸ்டல் பாத்து அரேன்ஜ் பண்ணினோம்."

"ஏன் ? நம்ம வீட்டுக்கே கூப்பிட்டு இருக்கலாமே?"

"அவங்கவங்க பிரைவசி அவங்கவங்களோட... தவிர அவதான் ஹாஸ்டல் வேணும்-னு கேட்டா... நாம காலைல வெளில போனா, ஈவினிங் தான் வர்றோம்... அவ அனீஸியா பீல் பண்ணக் கூடாது, பாருங்க.."

"யாருக்கும் தெரியாம சென்னை வந்தா ஷண்மதி. அவ பேரன்ட்ஸ் கிட்ட, இனி நாங்க பாத்துப்போம்-னு சொன்னதுக்கு அப்பறம்தான் அவங்களுக்கு நிம்மதியே வந்தது..".

"சென்னை வந்தப்பறம், அவ தெரிஞ்சு கிட்ட தகவல்களை சொன்னா. எங்களுக்கே கொஞ்சம் அதிர்ச்சி & வேதனை.., அது எல்லாமே விநாயகத்தைத்தான் மையப்புள்ளி ஆக்கிச்சு......ஆனா மணிவேல் இதுல சம்பந்தப்பட்டு இருக்காரா இல்லையா?, அது தெரியலை.."

"இதெல்லாம் ஒரு பக்கம் நடக்கும்போதே, அமைச்சருக்கு உடம்பு சரியில்லாம போச்சு.. ரெண்டு/மூணு மாசம் வீட்லயே முழு ஓய்வெடுக்க போறேன்னு அறிக்கை மட்டும் கொடுத்தார்... மணிவேல்."

"அதுக்கு கொஞ்ச நாள் கழிச்சு, "நான் இமய மலைக்கு போறேன், இனி சந்நியாசம்தான் என்னோட வாழ்க்கை முறை"-ன்னு சொல்லி காவி கட்டி நடையை கட்டினார், விநாயக மூர்த்தி.. ... அது, அவரை பத்தி தெரிஞ்சவங்களுக்கு fishy -யா இருந்தது, ஆனாலும் ஒரு பெரிய நியூஸா வரல, அவர் பெரிய பிரபலமும் இல்லல்லியா ?"

ஓய்வெடுத்து வெளியே வந்த அமைச்சர் மணிவேலுக்கு இடது கை செயலிழந்து போயிருந்தது... கட்டை விரலும் ஆபரேஷன் பண்ணி எடுத்துட்டாங்க...அதோட ...மேடை பேச்சையும் வெகுவாய் குறைச்சிட்டார்.. அப்பப்போ எங்கயாவது பேசினாலும், பேசறதை எழுதி வச்சு பேச ஆரம்பிச்சார்.. அதுதான் அவரோட முதல் தப்பு..

"காரணம், எந்த நேரம் எந்த விஷயத்த பத்தி பேசினாலும் தேதி வருஷத்தோட கொஞ்சம் கூட மறதியில்லாம , தடையில்லாம பேசறவரு மணிவேல்... அவர் இப்போ கொஞ்ச நாளா ...குறிப்பை கையில் வச்சுக்கிட்டு பேசறதை யாரும் தப்பாவோ இல்ல சந்தேகப் பட்டோ பாக்கல.., கணேஷை தவிர.."



"இவனோட சந்தேகத்தை ஷானு கிட்ட சொல்ல, ரொம்ப உன்னிப்பா அவரை கண்காணிக்க ஆரம்பிச்சா..",

"கிட்ட தட்ட ஒரே மாதிரி இருக்கிறவங்க மணிவேலும், விநாயகமும், அண்ணன் தம்பிங்க அப்படி இருக்கிறதுல எந்த அதிசயமும் இல்ல....... கொஞ்சம் நரையும், தளர்ந்த நடையும், ட்ரெஸிங்-லயும் தான் வித்தியாசம் தெரியும்..."

"ஒரு பக்கம் கணேஷ் , மணிவேல் ஓய்வெடுக்க ஆரம்பிச்ச பீரியட் -ல்ல இருந்து, இன்னிக்கு வரை, அவர் வீட்டோட நெட்ல என்னென்ன ஆக்ட்டிவிட்டிஸ் நடக்குதுன்னு ஹேக் - பன்னினான்."

"மணிவேல் பேசின பேச்சுக்கள், அவர் கலந்துக்கிட்ட நிகழ்ச்சிகள், அவர் சம்பந்தப்பட்ட பொது விஷயங்கள் .. இதெல்லாம் தான் முக்கியமா அந்த மாதங்கள்ல பதிவிறக்கப்பட்டு இருக்கு..."

"கூடவே, மினிஸ்டர் பேங்க் அக்கௌன்ட், மெயில் பாஸ்வேர்ட் எல்லாமே மாத்தப்பட்டு இருக்கு..."

" இவர் மணிவேலா இல்லையா ன்னு... கைரேகை வச்சு கண்டு பிடிக்க கூடாதுனு தான், சுகர் அதிகமானதால, கட்டை விரலை ஆபரேஷன் பண்ணி எடுத்திட்டதா கதை விட்டிருக்காரு..தவிர, அவர் இடது கை செயலிழந்ததாவும் நாடகமாடிட்டு இருக்காரு... இந்த இடைப்பட்ட காலத்துல...மத்த எல்லா மேனரிசமும் அமைச்சர மாதிரியே செய்ய பழகிட்டாரு, விநாயகம்"


"ஆள் மாறித்தான் இருக்காங்களா? நிச்சயமா தெரியுமா ன்னு கேட்டா... நம்ம பதில் ... கிடையாது .... இது ஒரு யூகம்தான்..., எப்படி நிரூபிக்க?"

"இப்போ நமக்கு அவரை பத்தின பர்சனல் பக்கங்கள் தெரியணும்-னா , அவரோட இளமை காலத்தில , மத்தவங்களுக்கு தெரியாம, வீட்டுக்குள்ள நடந்த ஏதாவது ஒரு விஷயத்தை வச்சு தான் கண்டு பிடிக்க முடியும்.... அமைச்சருக்கு இருக்கிறது ஒரே பொண்ணு.. கல்யாணம் பண்ணி நியூ ஜெர்சி-ல இருக்காங்க, அரசியல்ல ஆர்வம் இல்ல.. சோ, அங்கேயே படிச்சு, அங்கேயே செட்டில் ஆனவங்க... அவங்களை தேடித்தான் கணேஷ் இப்போ அங்கே போயிருக்கான்", என்று கூறி முடித்திருந்தாள்...

இப்போ அப்படி என்ன கண்டுபிடிச்சு இருப்பாங்க? பதவில இருக்கிறவரை கைது பண்ற அளவு? மண்டை குடைந்தது ஷிவாவிற்கு.. வீடு வந்து சேர்ந்திருந்தான், மணி ஒன்பதை நெருங்கி இருந்தது....

"இவன் காரினை பார்த்ததும் செக்யூரிட்டி கேட்டை திறந்து வழிவிட ,

காரை நிறுத்தி இறங்கி, வீட்டினுள் சென்றான்... அனல் பார்வை பார்த்த மனையாளை ஆரத்தழுவி முத்தமிட தோன்றிய மனதை அன்னையைக் கண்டதும் அடக்கினான்..

"இதான் வீட்டுக்கு வர்ற நேரமாடா?", மங்கை...

"இல்லம்மா, பாக்டரி போனதால லேட்... "

"சரி சரி, இன்னும் நேரம் கடத்தமா சீக்கிரம் சாப்பிட்டு படுங்க..", எனக் கூறி அவர் செல்ல..

மங்கை தலை மறைந்தவுடன், "என்ன பேச்சு பேசறீங்க போன்-ல?", உஷ்ணமாய் கேட்டாள் மாயா..

"என்ன பேசினேன்?", சிரிப்பை மென்றபடியே ஷிவா....

"ம்ஹூம்.... நான் இந்த ஆட்டத்துக்கு வரலை... சாப்பிடலாம் வாங்க...", இப்போது ரூல்ஸ் ரங்கநாயகியாய் மாறியிருந்தாள் ..

அவனுக்கும் பேசவேண்டி இருப்பதால்..." பைவ் மினிட்டிஸ் , பிரெஷ் அப் ஆயிட்டு வந்துடறேன்", சொன்னவாறே அவர்கள் அறைக்கு சென்று மறைந்தான்...

மாயா உணவினை டேபிளில் எடுத்து வைத்துக் கொண்டிருக்க, வெளி வாசல் திறந்து கணேஷ் வீட்டினுள் வந்துகொண்டிருந்தான்....

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


நித்தமுனை வேண்டி மனம் நினைப்ப தெல்லாம் நீயாய்ப்
பித்தனைப்போல் வாழ்வதிலே பெருமையுண்டோ? திருவே!
சித்தவுறுதி கொண்டிருந்தார்
செய்கை யெல்லாம் வெற்றிகொண்டே
உத்தமநிலை சேர்வ ரென்றே
உயர்ந்த வேதமுரைப்ப தெல்லாம்
சுத்த வெறும் பொய்யோடீ? சுடர்மணியே! திருவே,
மெத்தமயல் கொண்டு விட்டேன் மேவிடுவாய், திருவே!

உன்னையன்றி இன்ப முண்டோ உலகமிசை வேறே?
பொன்னை வடிவென் றுடையாய்! புத்தமுதே, திருவே!
மின்னொளி தருநன் மணிகள்
மேடை யுயர்ந்த மாளிகைகள்
வண்ண முடைய தாமரைப்பூ
மணிக்குள முள்ள சோலைகளும்
அன்னம் நறுநெய் பாலும் அதிசயமாத் தருவாய்!
நின்னருளை வாழ்த்தி என்றும் நிலைத்திருப்பேன், திருவே!

-
மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top