UUU 3 - 26.1

Advertisement

Priyaasai

Active Member
View attachment 10890


பின் மாலை பொழுதில் சென்னை வந்து சேர்ந்த சரண் எழில் வீட்டு கேட்டை திறக்க முற்ப்பட,

'எப்படி இருக்க சரண்..??' என்று கேட்டவாறே பக்கத்து வீட்டு பாக்கியம் அம்மா வந்தார்

'நல்லா இருக்கேன்ம்மா.., நீங்க எப்படி இருக்கீங்க..??'

"நாங்க நல்லா இருகோம்பா, என்ன நீ உன்னை இவ்ளோ நாளா பார்க்கவே முடியலை.., அலர் வீடு காலி பண்ணின அடுத்த நாளே நீ இங்க குடி வருவன்னு சொல்லி இருந்தா நாங்களும் நீ வருவன்னு எதிர்பார்த்தோம் பார்த்தா ஒரு மாசம் மேல ஆகியும் நீ வரவே இல்லை..",

"ஆமாம்மா சின்ன வேலையா ஊருக்கு கிளம்பினேன் அப்புறம் சூழ்நிலையால வரவே முடியலை"

'அவிகுட்டி எப்படி இருக்கான்..??'

'அவருக்கென்ன சூப்பரா இருக்கார்' என்றவாறு அவன் வீட்டு கதவை திறந்தான்.

ப்ரீத்தியை நாதன் அழைத்து சென்ற பின்னர் கடந்த சில மாதங்களாகவே வார இறுதிகளில் சரண் தன் பொழுதுகளை பெரும்பாலும் இங்கே அவிரனுடன் கழித்ததில் அருகே இருப்பவர்களிடம் நல்ல பரிச்சியம்.

சரண் வீட்டின் உள்ளே நுழையவும் அவன் பின்னோடு வந்த பக்கத்து வீட்டு பெண்மணி, 'என்ன சரண் இது..?? எப்போ கல்யாண சாப்பாடு போடபோறன்னு எத்தனை நாள் கேட்டிருப்பேன் இப்படி எங்களுக்கு எல்லாம் ஒரு வார்த்தை கூட சொல்லாம சீக்ரெட்டா கல்யாணம் முடிச்சி இருக்க' என்று உரிமையாக கோபிக்க,

'உங்களுக்கு எப்படி தெரியும் '

சாயங்காலம் உன்னோட பிரெண்ட் ஒருத்தங்க பேர் கூட ஏதோ திலிப், தில்.. என்று அவர் யோசிக்க,

'திலக்கா..??' என்றான்

'ஆமாபா திலக் அவங்க வைப்போட வந்திருந்தாங்க... அவங்க தான் உனக்கு கல்யாணம் ஆச்சுன்னு சொல்லி நீ வருவன்னு உன்னை எதிர்பார்த்து வந்திருந்தாங்க' என்றிட

அப்போது தான் சரணுக்கே திலக்கிடம் இன்று கீர்த்தி மற்றும் அவன் அன்னையுடன் இங்கு வரப்போவதையும் அதற்க்கான ஏற்பாடுகளையும் செய்ய சொல்லி கூறி இருந்தது நினைவு வந்தது. உடனே தன் கைபேசியை எடுத்து பார்த்தான். அதில் திலக்கிடம் இருந்து ஏகப்பட்ட அழைப்புகள் வந்திருப்பதை கண்டவன் நெற்றியை தட்டி கொண்டு பாக்கியத்திடம்,

'சொல்லகூடாதுன்னு இல்லம்மா கொஞ்சம் அவசரமா நடந்து முடிஞ்சிடுச்சி, யாருக்கும் சொல்றதுக்கு அவகாசம் இல்லை' என்றான் இயல்பான குரலில்

'ஆமா இது என்ன புது மாப்பிள்ளை தனியா வந்திருக்க எங்க உன் வீட்ல வரலையா..??' என்று கேட்க,

'எனக்கு கொஞ்சம் அவசர வேலை அதான் நான் முதல்ல வந்துட்டேன் அவங்க இன்னும் கொஞ்ச நாள்ல வருவாங்கம்மா'

"ஒ அப்படியா சரி சரண் நைட்க்கு டின்னர் நான் கொண்டு வரேன்" என்றிட,

"இல்லம்மா பரவால்ல நா.." என்றவனை தடுத்தவர்,

' ஏன் இதுக்கு முன்ன இங்க வந்தப்போ என்னோட சாப்பாடு சாப்பிட்டது இல்லையா இப்போ மட்டும் என்ன புதுசா..?? எப்படியும் நீ ஹோட்டல் சாப்பாடு சாப்பிட போறது இல்லை இதுக்கு மேல என்ன சமைச்சி எப்படி சாப்பிடுவ..?? நான் கொண்டு வரேன் அவ்ளோதான் ' என்றவர் பேச்சு முடிந்ததாக தன் வீட்டிற்கு சென்றார்.

உள்ளே வந்தவன் முதல் வேலையாக கணினியை எடுத்து கொண்டு அமர்ந்து தனக்காக காத்திருந்த தன் குழுவினருடன் இணைந்து வேலையை தொடங்கி இருந்தான்.

ஆம் இங்கிருந்து சரண்யாவின் நிச்சயத்திர்க்காக நான்கு நாட்கள் விடுப்பு எடுத்து கொண்டு கிளம்பியவன் அங்கு அவன் வீட்டிற்கு வந்த கீர்த்தியால்(ப்ரீத்தி) அவள் பிரசவம் முடியும் வரை இரண்டு மாதங்களுக்கு வீட்டில் இருந்தே work from home வேலை செய்வதாக கூறியிருந்தவன் அவள் பிரசவத்திற்கு பின் முடிவு செய்து கொள்ளலாம் என்று இருந்தான்.

ஆனால் எப்போது கீர்த்தியுடனான திருமணத்திற்கு நாள் பார்க்க சொன்னானோ அப்போதே திருமணம் முடிந்த கையோடு கீர்த்தியையும் அன்னையையும் அழைத்து கொண்டு சென்னை சென்றுவிடும் முடிவை எடுத்து இருந்தவன் அலுவலகத்தில் பேசி இந்த வாரம் பணியில் சேர்வதாக அறிவித்து விட்டான்.

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ப்ராஜக்ட் குறித்த குறிப்புகளை திருத்தங்களை குழுவினரிடம் பேசி முடித்து நாளைய வேலைகளையும் பட்டியலிட்டவன் ப்ரேக் எடுத்து கொண்டு நேரத்தை பார்க்க அது எட்டு என்று காட்டியது.

திரும்பியவன் கண்ணில் மேஜை மீது பாக்கியம் வைத்துவிட்டு சென்ற உணவு இருக்க கைகழுவி கொண்டு வந்தவன் தட்டில் போட்டு கொண்டு சப்பாத்தி குருமாவை உண்ண தொடங்க அடுத்த கணமே காரம் பட்டு விரல்களில் சுரீரென்ற வலி பரவியது வலக்கரத்தை விரித்து பார்த்தவனின் பெருவிரல் தொடங்கி மோதிர விரல் மற்றும் உள்ளங்கை வரை ஆங்காங்கு அவள் வளையல்கள் கிழித்து விட்டிருந்த காயம் தென்பட்டது.

இப்போது அதில் காரம் படவும் எரிச்சல் அதிகரிக்க கீர்த்தியை எண்ணி பார்த்தவனின் இதழ்கள் மறுகணமே 'ராட்சசி' என்று முணுமுணுத்தது.

குருமாவை ஒதுக்கி வைத்து விட்டு வெறும் சப்பாத்தியை உண்டு முடித்தவன் மீண்டும் கணினியில் அமர வேலை அவனை இழுத்துகொள்ள தொடங்கிட அவன் முடித்து உறங்கிய போது மணி மூன்று ஆகி இருந்தது.

*

காலை புத்துணர்ச்சியோடு எழுந்த கீர்த்திக்கு இரவு முழுக்க யோசித்து சரணின் விலகலுக்கு இதை தவிர வேறு காரணம் இருக்க முடியாது என்று சரியாக கண்டுபிடித்தவள் மகிழ்ச்சிக்கு அளவற்று போக அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற முடிவுடனே உறங்க சென்றவளுக்கு அன்றைய விடியலே அழகாய் மாறி இருந்தது.

உற்சாகத்தோடு குளித்து முடித்து சரண் அவளின் பிறந்த நாளுக்கு பரிசளித்து இருந்த ஆரஞ்சு வர்ண சுடிதாரை எடுத்து அணிந்து கொண்டவள் ஒப்பனை முடித்து அலரின் அறை முன் வந்து நின்றாள்.

'குட் மார்னிங் கீர்த்தி' என்று அலர் கூற

'இன்னைக்கு நீ ப்ரீயா அமுலு'

இல்.. என்று தொடங்கியவள் கீர்த்தியின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை கண்டு, 'ஹ்ம்ம் ஆமா ப்ரீ தான் என்ன விஷயம் கீர்த்தி' என்று கேட்க

அவளிடம் தன் முடிவை கூறியவள் 'எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்' என்று கேட்க அதே நேரம் அலர் பின்னே வந்து நின்ற எழிலை கண்டவள் 'மாமா நீங்களும் தான்' என்றவள் பின் கீழே சென்று தோட்டத்தில் இருந்த நாதனிடம்,

'குட் மார்னிங் பெரிப்பா' என்றிட,

'ஜுரம் எப்படிமா இருக்கு'

'இப்போ சரி ஆகிடுச்சி பெரிப்பா பாருங்க' என்று தன்னை ஒரு சுற்று சுற்றி காட்டியவள் அங்கு அவருக்கான தேநீரை கொண்டு வந்த வளர்மதியை பார்த்து ஒரு நொடி தன் செயலை நிறுத்தியவள்,

'உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்'

'என்னமா சொல்லு'

'நான் எனக்கு சென்னைக்கு...' என்று தயங்கியவள் 'நான் மாமாகிட்ட போகலா..'

'தகவலா சொல்றியா..?? இல்ல அனுமதி கேட்கிறியா..??' என்ற போது தீபிகாவும் தாயம்மாளும் அங்கு வந்து சேர்ந்தனர்.

அவர் கோபம் புரிந்தவள், 'நீங்க.. உங்களுக்கு இதுல விருப்பம் தானே பெரிப்பா..??'

என் ராசாத்தி என்று கீர்த்தியை நெட்டி முறித்தவர் "யாரை பார்த்து என்ன கேள்வி கேட்கிற..?? எங்க எல்லாருக்கும் விருப்பம் இருக்கபோ என் மகனுக்கு ஏன் இல்லாம போகும் என்று நாதனை பார்த்தவர், கட்டி குடுத்த பொண்ணுங்க புருஷன் கூட வாழ்தாதானே என் மகனுக்கும் மதிப்பு, மரியாதை உன்ன போய் புருஷன் கூட வாழுன்னு சொல்லாம வீட்டோட இருக்கவா சொல்ல போறான்" என்று தாயம்மாள் கேட்க,

தாயை ஒரு பார்வை பார்த்தவர் கண்களை மூடி நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தார். அதை கண்ட வளர்மதி, தீபிகாவிற்கு நெஞ்சம் அடித்து கொண்டது எங்கே கீர்த்தியின் முடிவை வேண்டாம் என்று மறுத்து இதற்கும் ஒரு பிரச்சனை செய்வாரோ என்று..!!

சில நொடிகளுக்கு பின் கண் திறந்து குரலை செருமி, 'சரி வந்து கூட்டிட்டு போக சொல்லு' என்றார்.

'அதில்ல பெரிப்பா.. மாமா.. நான்' என்றவளுக்கு அவருக்கு எப்படி புரியவைப்பது என்ற தவிப்பில் கீர்த்தி நிற்க

"இப்போ என்ன பிரச்சனை உங்களுக்கு..?? அதான் கீர்த்தியே கிளம்புறேன் சொல்றப்போ போயிட்டு வான்னு அனுப்பி வைக்காம எதுக்கு தேவை இல்லாம பேசிட்டு இருக்கீங்க" என்று அங்கே வந்த எழில்

'அது ஒண்ணுமில்ல கீர்த்தி உன் பெரிப்பாக்கு உன்னை தனியா எப்படி அனுப்புறதுன்னு யோசனை..!! நீ போய் ரெடி ஆகு எங்களுக்கும் சென்னையில வேலை இருக்கு நாங்களே உன்னை விட்டுட்டு வரோம்" என்று கூற,

'அப்படியா பெரிப்பா..??' என்றவள் அவர் அருகே சென்று அவர் கரங்களை பற்றி "தேங்க்ஸ், தேங்க் யு சோ மச் பெரிப்பா" என்று கூறிவிட்டு திரும்பியவளை ஓடி வந்து அணைத்து கொண்ட வளர்மதிக்கு சந்தொஷத்தில் வார்த்தை கிடைக்காமல் போக அவளுச்சியில் கண்ணீருடன் முத்தமிட்டார்.

'இப்போ சந்தோஷமா பெரிம்மா..??' என்று கேட்க புன்னகையுடன் தலை அசைத்தார் அதை கண்ட நாதனின் முகம் இறுகி போனது.

அனைவரிடமும் விடை பெற்ற கீர்த்தி எழில் அலருடன் கிளம்பி நேராக சென்றது வைதேகி வீட்டில் இருந்த கலைவாணியிடம் தான் அவரிடம் விஷயத்தை கூறி ஆசி பெற்றவள் எனக்கு இப்பவே உங்களை கூட்டிட்டு போகணும்ன்னு ஆசை பாட்டி என்று கூற,

"நான் எதுக்குமா அங்க..?? நீங்க சந்தோஷமா இருந்தா போதும், நீ பத்திரமா போயிட்டு வா" என்றிட,

அதற்கு இல்லை என்பதாக தலை அசைத்தவள், " அதெல்லாம் இல்ல நீங்க எப்பவும் தயாரா இருங்க பாட்டி சீக்கிரமே மாமாவோட வந்து உங்களை கூட்டிட்டு போறேன்" என்று கிளம்பினாள்.

*

கைபேசி சிணுங்க போர்வையை விலக்கி அதை தேடி எடுத்து அழைப்பை ஏற்ற சரண் கண்விழித்தது என்னவோ 'மாமா' என்ற உற்சாக குரலோடு வீடியோ காலில் அவனை அழைத்த வருணின் முகத்தில் தான்.

குழந்தையை கண்டு அவன் புன்னகைக்க மறுபுறம் இருந்தவனோ எடுத்ததுமே, 'மாமா நீங்க எங்க இருக்கீங்க..??" என்றான்

'சென்னையில'

அதை கேட்டதும் அவன் உற்சாகம் எல்லாம் வடிய, 'அப்போ அம்மா சொன்னது உண்மையா..??' என்றான்

'என்னடா சொன்னாங்க..??'

'நாளைக்கு நீங்க என் பர்த்டேக்கு வர மாட்டீங்கன்னு சொன்னாங்க'

'ஆமா கண்ணா இங்க கொஞ்சம் வேலை நாளைக்கு வரமுடியாது ஆனா உன்னோட டிரஸ் இன்னைக்கு வந்துடும்' என்று அவனை சமாதனபடுத்தி அழைப்பை துண்டித்தவனுக்கு நாளை தான் அலரின் திருமண நாளும் என்பது நினைவில் வர உடனே எழுந்து சுத்தபடுத்தி கொண்டு வெளியில் வர அழைப்பு மணி ஒலித்தது.

திலக் தான் வந்திருந்தான், கூடவே சரண் கூறி இருந்த வீட்டிற்கு அத்தியாவசியமான பொருட்களான கட்டில், டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் மாளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளுடன் வந்திருந்தவன் சரணுடன் சேர்ந்து அனைத்தையும் அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டு நிமிர,

'தேங்க்ஸ் திலக்' என்று அணைத்துகொண்டான் சரண்

"அது இருக்கட்டும் வேர் இஸ் கீர்த்தி..?? வந்ததுல இருந்து பார்க்கலை" என்றான்

'நெக்ஸ்ட் வீக் வருவா !'

'வாட் ..??'

'ஆம்' என்பதாக சரண் தலை அசைக்க,

'என்ன சொல்ற அடுத்த வாரமா..?? கூட கூட்டிட்டு வரேன் சொல்லி இருந்த..??' என்று யோசனையாக அவனை பார்க்க ,

'இல்ல திலக் முதல்ல அப்படி தான் ப்ளான் பண்ணி இருந்தேன் இப்போ அதுல சின்ன சேன்ஜ், அம்மாவும் கீர்த்தியும் சீக்கிரம் வந்துடுவாங்க'

'தென் ஹனிமூன் எங்க..??' என்று அவன் சாதாரணமாக கேட்க,

சில நொடி மெளனமாக இருந்த சரணோ பின் குரலை செருமி 'ப்ராஜக்ட் முடியறவரை எந்த பிளானும் இல்லை அப்புறம் தான் டிஸைட் பண்ணனும்' என்றிட,

"ச்சை இது தான் டியுட் இங்க பிரச்சனையே, இவனுங்களை நம்பி எதுவுமே ப்ளான் பண்ண முடியாது ஹெச் ஆர் பேசினாங்களா..??" என்று கேட்க இல்லையே ஏன்..? என்ற சரணிடம் நேற்று அலுவலகத்தில் நடந்ததை திலக் விளக்க அதன் பின் அவர்களின் பேச்சு வேலை சம்பந்தமாக திரும்பியது.

'ஓகே டியூட் வில் சீ லேட்டர்' என்று அவன் கிளம்ப அவனுடனே வீட்டை பூட்டி கொண்டு சரணும் கிளம்பி இருந்தான்.

உடை எடுக்க வேண்டி மாலுக்கு சென்றவன் வருணுக்கான ஆடையை தேர்ந்தெடுத்துவிட்டு அலர்விழிக்கு புடவை எடுக்க வேண்டி ஐந்தாம் தளத்திற்கு செல்வதற்கு லிப்ட்டிற்க்காக காத்திருந்தவன் அழைப்பு வரவும் சற்று தள்ளி வந்து அதை ஏற்று பேச தொடங்கிட அவன் விழிகளில் விழுந்தாள் கீர்த்தி.

ஆம் அவன் நின்றிருந்த தளத்தில் இருந்து தரை தளத்தை வேடிக்கை பார்த்தவாறு சரண் கைபேசியில் பேச அங்கிருந்த இயங்கும் படிக்கட்டின் (எஸ்கலேட்டர்) முன் கீர்த்தி நின்று கொண்டிருப்பதை கண்டான். எப்போதும் போல கண்களை இறுக மூடி ஒரு கரத்தை அருகே துப்பட்டா கொண்டு முகத்தை மூடி இருந்த பெண்ணின் கரத்தோடு இறுக்கமாய் கோர்த்துக்கொண்டு மற்றொரு கரத்தை தன் கழுத்தில் அணிந்திருந்த டாலரில் அழுந்த பதித்திருந்தாள்.

அதை கண்டவனோ தலையை தட்டி கொண்டு "ச்சை வர வர ரொம்ப மோசமாகிடுச்சி என் நிலைமை" என்று வலக்கரத்தை குவித்து நெற்றியில் தட்டி கொண்டவன்

'ராத்திரி மட்டும் இல்லாம இவளால பகல் கனவு வேற காண ஆரம்பிச்சிட்டேன்.. இவ்ளோ நாள் கண்ணை மூடினா வந்தவ இப்போ கண்ணை திறந்து வச்சிருக்கும் போதும் கண்ணுக்குள்ள வந்து படுத்துறா " என்று கீர்த்தியை திட்டி கொண்டு மீண்டும் லிப்ட்டின் அருகே செல்ல,

"ஹேய் சரண் கம் ஹியர்" என்ற திலக்கின் குரல் அழைக்க,

'என்னடா..?' என்று அங்கு வந்த சரண் அதுக்குள்ள நீ எடுத்து முடிச்சிட்டியா..?? என்று கேட்க.,

அவனோ "லுக் அட் தேர் மேன்" என்று கீழே சுட்டி காட்டிட,

'என்னடா அங்க' என்றான் இன்னமும் எஸ்கலேட்டர் முன் நின்று கொண்டிருந்த கீர்த்தியை பார்த்து ,

"ஹேய் கீர்த்தி மேன்..!! உனக்கு தெரியலை அங்க பாரு எஸ்கலேடர் முன்னாடி நின்னுட்டு இருக்கிறது கீர்த்தி தானே..?? நெக்ஸ்ட் வீக் சொன்ன அப்போ இது யாரு ..?? என்று கேட்க,

அப்போது தான் அவளை கண்டது கனவல்ல நிஜம் என்பது புரிய மீண்டும் கண்ணை கசக்கி கொண்டு கீழே பார்த்தான்.

அன்று அவன் கண்ட அதே குழந்தைதனமான முகமும் அதில் குடிகொண்டிருந்த பயத்துடன் கூடிய அப்பாவித்தனமும் மிளிர நெரிந்த புருவங்களின் கீழ் மூடிய இமைகளுக்குள் கருவிழிகள் அசைந்தாட அவள் இதழ்களோ ஓயாது முணுமுணுத்து கொண்டிருப்பதை கண்டான்.

சரண் அவளை பார்த்த அதே நொடி மெல்ல இமைகளை மலர்த்தியவளின் மருண்ட நயனங்கள் சரணை மாய சுழலில் தள்ள அடுத்த நொடி கையில் இருந்ததை திலக்கிடம் திணித்தவன் அவளை நோக்கி ஓடி இருந்தான்.


ஹாய் செல்லகுட்டீஸ்

இதோ "உயிரில் உறைந்த உறவே !!" அடுத்த அத்தியாயத்தின் முதல் பகுதி பதித்துவிட்டேன் அடுத்த பகுதி விரைவில். சென்ற பதிவிற்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் அளித்தவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் படித்து கதையின் போக்கு எப்படி இருக்குன்னு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
Super
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top