UUU 3 - 23

Advertisement

Rudraprarthana

Well-Known Member
அடப்பாவி விஷ்வா மாமியார் மருமகளை மோத விட்டு எஸ்கேப் ஆகிட்டியே நல்லா வருவ :ROFLMAO::LOL: ப்ரீத்தி பிரஸ்ட் பால்ல அவுட் ஆனது தெரியாம அடுத்த பாலை பேஸ் பண்ணிட்டு இருக்கியே உன்னை பார்த்தா சிரிப்பா வருது :ROFLMAO::LOL::ROFLMAO::LOL:
ஹா ஹா மாமியார் மருமகளுக்கு இடையில் போகாம இருந்தா தான் விஷ்வா காலம் தள்ள முடியும் பேபி அதான் நன்றிகள் :love:
 

Priyaasai

Active Member
உறவு - 23

View attachment 10863


"வேர் இல்லாத மரம்போல்
என்னை நீ பூமியில் நட்டாயே
ஊர் கண் எந்தன் மேலே பட்டால்
உன் உயிர் நோக துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
நீ சொல்லி தந்தாயே"

என்று நள்ளிரவில் பெற்றோரின் அறை வாயிலில் நின்று கொண்டு அவனை பார்க்க மாட்டேன் என்ற பிடிவாதத்தோடு அமர்ந்திருந்த வித்யாவை பார்த்தவாறு விஷ்வா பாடிக்கொண்டிருக்க,

இரு கரங்களால் காதை பொத்தி கொண்டு தன் எதிரே இருந்த சிவசங்கரனிடம், 'போதும் நிறுத்த சொல்லுங்க அவனை' என்றிட,

'இதை ஏன் என்கிட்டே சொல்றே..??'

'நானே தூங்குவேன் யாரும் பாட வேண்டாம்' என்று பொதுவாக சொல்ல

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
வழி நடத்திச் சென்றாயே
உனக்கே ஓர் தொட்டில் கட்டி
நானே தாயாய் மாறிட வேண்டும்"

விஷ்வா இருக்கும் இடத்தை விட்டு அசையாமல் பாடலை தொடர்வதை கண்டு 'இப்போ சொல்ல போறீங்களா இல்லையா..??' என்றார் சற்று குரல் உயர்த்தி,

'தேவிமா இது என்ன புதுசா..?? என்று மனைவியை பார்த்தவர்,

'அது ஏன் கொஞ்ச நாளாவே உங்க ரெண்டு பேருக்கு நடுவுல என்னை இழுக்குற, நீயாச்சு உன் மகனாச்சு நீங்களே பேசி தீர்த்துக்கோங்க எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை '

'என்னங்க' என்று அழைத்து நான் பேச மாட்டேன் என்ற பிடிவாதத்துடன் வித்யா அவரை பார்க்க,

"எனக்கு தெரியாதுமா என்னை ஆளை விடுங்க" என்று தன் இடத்தில் வந்து படுத்தவர் போர்வையை எடுத்து போர்த்த போனவர் மனைவியை பார்த்து,

"ஒன்னு மட்டும் சொல்லிடுறேன் தேவி" என்றிட,

என்ன என்பதாக அவர் திரும்பி பார்க்க,

"அவனுக்கு பிளைட்க்கு நேரமாச்சு" என்றவர் போர்த்தி கொண்டு படுக்க,

"தாய் சொல்கின்ற வார்தைகள் எல்லாம்
நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிர் அல்லவா..!!"

என்று விஷ்வா மீண்டும் தொடர அதை கண்டவர் 'எல்லாம் பாட்டு அளவுல தான் நடப்புல கிடையாது' என்று முனுமுனுத்தவர் சிவசங்கரனின் போர்வையை விலக்கி,

'கிளம்பற நேரத்துல இப்போ என்ன பாட்டு வேண்டி கிடக்கு..!! இங்க நின்னு டைம் வேஸ்ட் பண்ணாம பத்திரமா போயிட்டு வர சொல்லுங்க' என்றார்.

'நீ பேசின எதுவும் எனக்கு காதுல விழல நான் தூங்கி ஒரு மணி நேரமாச்சு' என்று போர்வையை இழுத்து கொண்டு அவர் கூற,

'உங்களை' என்று கண்களை சுருக்கி கணவரை பார்த்தவருக்கு தெரியும் இப்போது அவர் பேசாமல் அவன் கிளம்ப மாட்டான் என்பது,

'காலத்தின் கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியின்
மேலே சுழலாத பூமியும் நீ
இறைவா நீ ஆணையிடு
தாயே நீ எந்தன் மகளாய் மாற..!!'

என்று உருக்கமாக பாடியவாறே விஷ்வா அவர் அருகே வர, தாய் மனம் அத்தனை கோபங்களையும் ஒதுக்கி வைத்து மகனுக்கு தாமதமாவதை எண்ணி தவித்து கொண்டிருந்தது.

ஆம் சில வருடங்களாகவே அவன் பல நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது வழக்கம் என்றாலும் இன்று போல அவசரவசரமாக அதுவும் நள்ளிரவு வேளையில் கிளம்பியது இல்லை அதிலும் டிரைவர் இல்லாமல் அவனே சென்னை வரை வாகனம் ஓட்டி செல்வதில் அவருக்கு உடன்பாடு இல்லை.

'வித்யா ஒரு வார்த்தை சொன்னால் அதை ஏற்று டிரைவர் போட்டு கொண்டு செல்வான் ஆனால் வாழ்வின் முக்கிய முடிவையே தங்களிடம் கலந்தாலோசிக்காமல் தாங்கள் இல்லாமல் அவனாகவே செய்திருப்பதில் அதிருப்தியில் இருப்பவருக்கு இனி எதிலும் அவன் பெற்றோரின் சம்மதத்தை எதிர்பார்க்க வேண்டியது இல்லை ' என்று முடிவுடன் இருக்கிறார்.

ஆனால் இங்கிருந்து சென்னை சென்று அங்கிருந்து மும்பை பின் நியுயார்க் என்று அடுத்த ஒரு நாள் முழுக்க விஷ்வாவின் நேரத்தை பயணமே விழுங்கி கொள்ளும் அதோடு அவனது அலைச்சலும் இதற்க்கு இடையில் அவரது பாராமுகம் நிச்சயம் விஷ்வாவை தூங்கவிடாது என்பது புரிய அதற்கு மேலும் கோபத்தை இறுக்கி பிடித்து அவனை மேலும் தாமதபடுத்த விரும்பாமல், தன் அருகே மண்டியிட்டு அவர் முகம் பார்த்திருந்தவன் புறம் திரும்பியவர் அவன் தலை கோதி,

'ஹாப்பி ஜர்னி..!! பத்திரமா போயிட்டு சீக்கிரம் வா ' என்றிட

'அது உங்க கையில இருக்கு' என்றான்

'என்ன..??' என்பதாக அவர் பார்க்க,

"ப்ரீத்தியை மருமகளா ஏத்துகிட்டேன்னு எப்போ எனக்கு கால் பண்றீங்களோ அடுத்த நாள் இங்க இருப்பேன் " என்று அவன் கூற அவரிடம் மீண்டும் அழுத்தமான மௌனம்,

நாம் இதை பற்றி பேசாமல் இருப்பது நல்லது என்பது போன்ற ஒரு அழுத்தம்.

அதை உணர்ந்த விஷ்வாவின் முகத்தில் குறுநகை படர சில நிமிடங்கள் கழித்து மீண்டும்

"ஆராரிராரோ நான் இங்கே பாட

தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து"

என்று பாட தொடங்க,

'போதும் போதும் இத்தனை நாள் பாடி என்னை தூங்கவச்சது இனி உன் மகனுக்கு தான் நீ தாலாட்டு பாடனும் அதனால சீக்கிரம் வா' என்று அவன் உச்சியில் இதழ் பதித்து விடை கொடுக்க,

"இதை முதல்லே செய்திருக்கலாம் என் தூக்கமாவது கெடாமல் இருந்திருக்கும்" என்ற சிவசங்கரனின் குரல் போர்வையினுள் இருந்து ஒலிக்க,

அதை கேட்ட தாய் மகன் இருவர் முகத்திலும் புன்னகை ,

"சிரிக்காத தேவ்..!! இத்தனை நாள் பத்து மணிக்கு பாடி உங்க அம்மாவை தூங்க வச்ச ஆனா இப்போ மணி ரெண்டாக போகுதுடா இப்பவும் பாடணுமா..?? ஏன் சைலேன்ட்டா சமாதானம் ஆக மாட்டீங்களா நீங்க" என்று அவர்களை கடுப்புடன் பார்த்தவர்,

மனைவி புறம் திரும்பி, "அதான் எவ்ளோ கோபம் இருந்தாலும் அவன் பாட்டு பாடி உன்ன சமாதானம் பண்ணிடுவான்னு உனக்கே தெரியும் அப்புறம் ஏன் தேவிமா என் தூக்கத்தை கெடுக்குறீங்க" என்று எழுந்தமற,

சரி சரிப்பா நான் கிளம்புறேன் நீங்க தூங்குங்க குட் நைட் என்று அவர் அருகே வந்து அவரை அணைத்து கொள்ள,

"ஹாப்பி ஜர்னி தேவ்..!! கம் சூன் " என்று அவர் விடைகொடுக்க வித்யாவை பார்த்தவன்

'சரி கிளம்புறேன்ம்மா' என்று வெளியேற

'இரு தேவ்' என்று விஷ்வாவுடனே கீழே இறங்கி வந்த வித்யாதேவி அவனை பூஜை அறைக்கு அழைத்து சென்று விபூதி கும்குமம் வைத்து விடவும் அவரிடம் ஆசி வாங்கி கொண்டு வாசல் அருகே வந்தவன் தாயின் புறம் திரும்பி


"ம்மா நீங்க கால் பண்றீங்க அப்போதான்" என்று அவன் பேச்சை தொடங்க வித்யாதேவியின் புருவம் முடிச்சிட்டது,

அதை கண்டவன் குரலை செருமி "எஸ் ஐ மீன் இட் ப்ரீத்தியை நீங்க ஏத்துக்கலை எத்தனை வருஷம் ஆனாலும் நான் இங்க வர மாட்டேன்" என்று மிரட்டலான குரலில் கூற,

மகனிடம் இதை எதிர்பார்த்து இருந்தாலும் 'எத்தனை வருடம்' என்ற அவன் வார்த்தையில் சற்று திகைத்து தான் போனார்.

அவர் வலக்கரத்தை எடுத்து அதன் மீது தன் கரத்தை வைத்தவன் "நான் பண்ற ப்ராமிஸ் வேல்யு மத்தவங்களை விட உங்களுக்கு நல்லா தெரியும்" என்று அவரை பார்த்தவன்,

"இட்ஸ் எ பிராமிஸ் நான் சொன்னதுல மாற்றம் இல்லை" என்று கூற,

விழியகலாமல் அவனையே பார்த்திருந்த வித்யாதேவிக்கு மனதில் முதலில் தோன்றிய முகம் பேரனினது தான்..!!

குழந்தையை தந்தையிடம் இருந்து பிரிந்து வைப்பதா ..?? அதுவும் அவரே..!! என்று எண்ணியவருக்கு மகன் மீது இருந்த வருத்தம் கோபமாக உருமாறியது,

"என்ன நினைச்சிட்டு இருக்க தேவ்..?? கிளம்பும் போது இந்த பேச்சு எடுத்து கார்னர் பண்ணி காரியம் சாதிக்க பார்க்கிறியா..?? என்று பொரிந்தவர் அதான் ப்ரீத்தி உன் மனைவியா இந்த வீட்டுக்கு மருமகளா வந்தாச்சே அப்புறம் நான் ஏத்துகிட்டா என்ன..?? ஏற்காமல் போனா என்ன..?? அதுக்காக என் பேரனை தண்டிப்பியா நீ..? " என்று சிவந்த விழிகளுடன் கேட்க,

'அம்மா உலகத்துல எந்த மூலையில இருந்தாலும் என் குழந்தையை பார்க்க வழியா இல்லை ..??' என்று புருவம் உயர்த்தி தாயை பார்க்க,

"அப்போ தண்டனை எனக்கு அப்படி தானே..??" என்று மகனை ஆழ்ந்து பார்த்தவர் , இதனால ப்ரீத்தி மேல வெறுப்பு கூடும் தேவ் புரியுதா உனக்கு..!!

' என் அம்மா அப்படி இல்லை ' என்றான் உடனே

'என் மகனும் இத்தனை நாள் இப்படி இல்லை' என்றார் அவரும் சளைக்காமல்

அதை புரிந்து கொண்டவன் "உங்களை விட முக்கியமான்னு கேட்டா..?? என்னோட பதில் என்னைவிட எனக்கு ப்ரீத்தி முக்கியம்..!!"

அவன் வார்த்தைகளே அவள் மீதான காதலை உணர்த்த 'அப்புறம் ஏன் இந்த ஓட்டம்..?? எதுக்காக..?? யார்கிட்ட இருந்து தப்பிக்க..?? ' என்று அவரும் நேரடியாகவே கேட்டுவிட,

அதற்கு பதிலளிப்பதை தவிர்த்தவன் 'இப்போ என்னை வழி அனுப்ப வந்த மாதிரி என்னை வரவழைக்க ஒரே ஒரு கால் பண்ணுங்க போதும் எங்க இருந்தாலும் வந்துடுவேன்'

"என் மேல அவ்ளோ நம்பிக்கையா..??" என்று கேட்க,

அதற்கும் பதிலளிக்காமல் அவரை பார்த்து புன்னகைத்தவன் அவர் கன்னத்தில் இதழ் பதித்து "பைம்மா குட் நைட்" என்று விடை பெற்று காரில் ஏறி அமர்ந்தான்.

வித்யாதேவி மகனை பார்த்திருக்க காரை ஸ்டார்ட் செய்தவாறு அவரை பார்த்தவன், "மருமகளுக்கான அர்த்தம் உங்களுக்கு தெரியும்..!! வைட்டிங் பார் யுவர் கால் ம்மா" என்றவாறு கிளம்பியிருந்தான்.

மகன் கூறியதன் பொருள் உணர்ந்து பல நிமிடங்கள் அங்கேயே உறைந்து நின்றுவிட்டார் வித்யாதேவி.

****

இருட்டி இருந்த அறையில் விளக்கை ஒளிரவிட்டவள் அங்கு சற்று நேரத்திற்கு முன் இருந்த பூக்களோ மெழுகுவர்த்திகளோ இல்லாமல் சுத்தமாக இருப்பதையும் விஷ்வா இல்லாததையும் கண்டு ஒரு நொடி கண்கள் சுருங்கி விரிந்ததே தவிர அதை கண்டு பெரிதாக பெரிதாக மகிழ்ந்துவிடவில்லை. பின்னே..!! ஆரணியில் இருந்து கிளம்பி இங்கு வரும் வரையில் கூட அவனுடன் ஒரே அறை என்பதை நினைத்து பார்த்திராத ப்ரீத்தி எப்போது அவனை தண்டனையாக ஏற்று கொள்ள முடிவு செய்துவிட்டாளோ அப்போதே அறையில் அவன் இருப்பையும், சீண்டல்களையும் சகித்து கொள்ளும் மனநிலைக்கு தன்னை தயார் படுத்தி கொண்டாள்.

அதனால் எழிலிடம் பேசி முடித்து வெளியில் வந்தவளுக்கு இப்போது அவன் அங்கு இல்லாதது குறித்த நிம்மதியோ, சந்தோஷமோ எதுவும் அவளிடம் தென்படவில்லை. மிக மிக சமநிலையில் அவள் மனம் இருக்க முகத்திலோ உணர்வுகள் அற்று போய் இருந்தது.

முதல் நாள், புது இடம், அறிமுகமில்லாத முகங்கள், பரிட்சயமற்ற சூழல், அன்னியமானவனின் அறை என்ற சஞ்சலம் ஒரு புறம் இருந்தாலும் அதை எல்லாம் மீறிய இத்தனை நாட்கள் இல்லாத நிம்மதி மனதில் விரவி இருப்பதை கண்டு அவளுக்கே ஆச்சர்யம் தான்..!!

நள்ளிரவு நேரம் விஷ்வா எங்கு சென்றான் என்பது அவளுக்கு தெரியாது..!! எப்போது வருவான் என்ற கணிப்பும் இல்லை..!! அவனை அவள் வாழ்க்கை துணையாக ஏற்றிருந்தால் தானே தேட தோன்றும் அவளுக்கும் அவனுக்குமான உறவை அவனே உறுதிபடுத்தி சென்ற பின் அவனும் அதை எதிர்பார்க்க போவதில்லை என்பதை ப்ரீத்தியும் நன்கு உணர்ந்திருந்தாள்.

அவனை தேட தோன்றவில்லையே தவிர கதவை தாழிட மனமில்லை அவன் அறை எப்போது வேண்டுமானாலும் வந்து செல்லும் உரிமையை தடுக்க அவள் யார்..?? அதோடு விஷ்வா கூறிய காதல் கதை நினைவில் எழ கசப்புடன் புன்னகைத்து கொண்டவள் லேசாக கதவை சாற்றிவிட்டு வந்து உள்ளறையில் இருந்து குழந்தையை தூக்கி கொண்டு வர அது ஈரம் செய்திருப்பதை கண்டு துணி மாற்றிவிட்டு இரண்டு மணி நேரத்திற்கும் மேலானதால் உறங்கி கொண்டிருந்த குழந்தையை எழுப்பி பால் கொடுத்து தட்டி கொடுத்தவாறே சில நிமிடங்கள் அறையினுள் நடக்க தொடங்கினாள்.

எப்போதும் கழிவிரக்கம் கொண்டு அதே இடத்தில் தேங்கி நிர்ப்பது அவள் குணமல்ல "Empathy is better than sympathy" என்ற கொள்கை கொண்டவள் இத்தனை வருடங்களில் அவள் கழிவிரக்கம் கொண்டு சிந்திக்க முடியாமல் தேங்கி நின்றது தன் குழந்தை குறித்து மட்டுமே..!! ஆம் தாலியை கழற்றி கொடுத்த போது கூட தன்னை குறித்த கவலை அவளுக்கு இருக்கவே இல்லை ஆனால் சரண் குழந்தையை ஏற்க மறுத்து சென்ற போது அவள் கொண்ட உயிர்வதை அப்பப்பா மீண்டும் அந்த நிமிடங்களை நினைத்து பார்க்கும் சக்தி கூட அவளுக்கு இல்லை.

பிரகாசமால் புறக்கணிக்க பட்டு தனித்து சமூகத்தோடு போராடி வளர தொடங்கியவளுக்கும் குழந்தை குறித்த கற்பனை உண்டு அதில் முக்கியமானது எக்காலத்திலும் தன் குழந்தையை தன் இடத்தில் நிறுத்தி விடகூடாது என்பது..!! ஆனால் காலம் அவள் குழந்தையை ஓரிரு நாட்கள் அவ்விடத்தில் வைத்த போது மூளை மரத்து தான் போனது ப்ரீத்திக்கு. இப்போது விஷ்வாவிடம் பேசி அவளுக்கான இடம் என்ன என்பதை தெளிவு படுத்தியவளுக்கு தன் நிலை குறித்த கழிவிரக்கம் இல்லை அடுத்து என்ன என்ற யோசனை தான்.

உள்ளே நுழைந்த போது அறையின் அலங்காரம் மட்டுமே அவள் கண்ணையும் கருத்தையும் நிறைத்திருக்க இப்போது விழிகளை சுழலவிட்டவாறு நடக்க அறையில் குவிக்கபட்டிருந்த பொருட்களே அவன் ரசனையை எடுத்துரைக்க மெல்ல தட்டி கொடுத்து குழந்தையை உறங்க வைத்தவள் தானும் அருகே படுக்க மனதில் இருந்த வெகுநாள் பாரம் இறங்கிய நிம்மதியில் உடனே அவளை உறக்கம் தழுவிக்கொண்டது.

ஆம் பாரமே தான்..!! பின்னே அவள் செய்து முடித்திருப்பது என்ன அத்தனை சாதாரண காரியமா..?? எளிதாக கடந்து வந்துவிட ..!! என்ன தான் கீர்த்தியின் போர்வையில் பிரகாசத்தின் வீட்டிற்கு சென்றிருந்தாலும் அதன் பின் அவள் எடுத்தவை யாவும் அவளே கற்பனை செய்து கூட பார்த்திராத விடயங்கள் அல்லவா..?? சரண் வீட்டிற்கு செல்லும் முடிவை எடுப்பதற்கு தன் மனதை அவள் தயார்படுத்திய நாட்கள் தான் அவள் வாழ்வில் கொடுமையிலும் கொடுமையானவை..!! கண்மூடித்தனமான ஆத்திரத்தில் அதை செயல்படுத்திய போது இன்று விஷ்வதேவிடம் அவள் இறுதியாக கூறிய வார்த்தைக்கு உயிர் கொடுப்பது போலல்லவா அன்று நடந்து கொண்டாள்.

அவள் நடத்திய யாகத்தில் அவளையே எரித்த போது புலப்படாத ரணமும் உணராத வலியும் தீ அணைந்த பின்னரும் அவளை விழுங்கி கொண்டிருந்தது. எழில், அலர் என்று யாரிடமும் அதை பகிர முடியாமல் தவித்து கிடந்தவளுக்கு இன்று விஷ்வதேவிடம் அனைத்தையும் இறக்கி வைத்த பின்னர் பல நாட்களுக்கு பிறகு அப்படி ஓர் நிம்மதியான உறக்கம்.

காலையில் இருந்தே விஷ்வாவுடனான போராட்டம், பயணம் செய்தது, இரவு அதிக நேரம் விழித்திருந்தது உறங்கிய பின்பும் அவ்வபோது குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக எழுந்தது என்று உறக்கம் தடை பட விடியும் தருவாயில் வர்ஷினி குழந்தையை தூக்கி செல்லவும் மேலும் சில மணி நேரம் தூங்கி எழுந்தாள்.

குளியலறை சென்று முகம் துடைத்தவாறு வெளியில் வந்தவள் மணியை பார்க்க அது ஒன்பதே முக்கால் என்று காண்பித்தது இத்தனை நேரமாகவா தூங்கி இருக்கிறேன் குழந்தை பசித்திருக்குமே என்று அறையை திறந்து கொண்டு அவள் வெளியே வர அதே நேரம் வர்ஷினியும் குழந்தையோடு வந்தாள்.

'அண்ணி குட்டி பையனுக்கு பசிக்குது'

'எங்க போயிட்ட வர்ஷு..?? இங்க தான் இருப்பன்னு நெனச்சேன்' என்றவாறு குழந்தையை வாங்கி கொண்டவள் 'இவ்ளோ நேரம் குழந்தை பால் குடிக்காம இருக்க கூடாது.. என்னை எழுப்பி இருக்கலாம்ல' என்று கேட்க

'அண்ணி இவ்ளோ நேரம் சேம்ப் டீப் ஸ்லீப்ல இருந்தாரு எத்தனை முறை ட்ரை பண்ணியும் எந்திரிக்கவே இல்லை, இப்போ அம்மா வந்து எழுப்பி விடவும் முழிச்சவர் ஒரே அழுகை சார்க்கு இப்பதான் பசி தெரியுது ' என்றவள் அங்கிருந்த இண்டர்காமில் தகவல் கொடுக்க அடுத்த சில நிமிடங்களில் ப்ரீத்திக்கான பால் வந்து சேர்ந்தது.

ப்ரீத்தி குழந்தையின் பசி தீர்க்கவும் அவனை வாங்கி கொண்டவள், 'பாட்டி குட்டி பையனை கூட்டிட்டு வர சொன்னாங்க அண்ணி நீங்க பால் குடிச்சிட்டு பிரெஷ் ஆகிட்டு கீழ வந்துடுங்க' என்றுவிட்டு செல்ல,

அவளையே சில நிமிடம் பார்த்தவாறு அமர்ந்திருந்தவள் பின் பாலோடு எழுந்து அவன் அறையோடு அமைக்க பட்டிருந்த பால்கனி கதவை திறந்து கொண்டு சென்று நின்றாள்.

காலை சூரிய கதிர்கள் அவளை வரவேற்க முதல் கண்கள் கூச கை வைத்து மறைத்தவள் அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்தவாறு பாலை குடிக்க தொடங்கினாள். அதேநேரம் அவள் கைபேசி சிணுங்க அதை எடுத்து பார்த்தவளுக்கு தாயின் அழைப்பு என்றதும் முகம் மலர எடுத்தவள்,

"எப்படிம்மா இருக்கீங்க..?? சாப்ட்டீங்களா..?? " என்று கேட்க

வசுமதிக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை நேற்று முழுக்க அவரை பதறவைத்த மகளுக்கு இன்றும் சிறு தயக்கத்துடனே அழைத்திருந்தார் ஆனால் அவள் இயல்பாக பேசுவதை கண்டு வாயடைத்து போனார்.

"ம்மா எப்படி இருக்கீங்கன்னு கேட்டேன்..??"

" நா... நல்லா இருக்கேன் ப்ரீத்தி " என்று துளிர்த்த கண்ணீரை முந்தானையில் துடைத்து கொண்டே அவர் கூற

"அப்பா மத்தவங்க எல்லாம் எப்படி இருக்காங்க" என்று அவர்களை பற்றி பேச தொடங்கி அதன் பின் பத்து நிமிடங்களுக்கும் மேலாக தாய் மகளின் உரையாடல் தொடர்ந்ததில் வசுமதி உள்ளம் பூரித்து போனார் அதுவும் விஷ்வா குறித்து அவர் விசாரித்ததர்க்கு 'நல்லா இருக்கார்ம்மா' என்ற ப்ரீத்தியின் பதிலை நம்ப முடியாமல் வாயில் கரம் வைத்து நின்றுவிட்டார் வசுமதி அத்தனை ஆச்சர்யம் ஆனால் மகளை மாற்றி இருக்கும் மருமகன் மீது அத்தனை உயர்ந்த எண்ணம்.

சரிம்மா அப்புறம் பேசுறேன் என்று அவள் கைபேசியை வைக்கவும் விஷ்வாவின் மெசேஜ் வரவும் சரியாக இருந்தது.

மெசேஜை திறந்து பார்க்க ' பிப்டி நைன் டேஸ் மோர் டார்லிங் ' என்று அவள் கேட்டிருந்த இரண்டு மாத கால அவகாசத்தை நினைவு படுத்தி கூடவே பத்து கிஸ்ஸிங் ஸ்மைலி போட்ருந்தான். அதை கண்ட ப்ரீத்தி முகத்தல் வெறுமை படர ஒரு நொடி கண்களை மூடி திறந்து அதை ஏற்று கொண்டால் அவ்வளவே..!!

பாலை குடித்து முடித்து மேலும் வெயிலில் சில நேரம் நின்றவள் அதன் பின் நின்ற நிலையில் சில அடிப்படை உடற்பயிற்சிகள் செய்து முடித்து குளிக்க சென்றால்.

வெளியில் வந்தவளுக்கு அவன் அறையை உபயோகபடுத்த தயக்கம் எழுந்த போதும் இதை எல்லாம் தவிர்க்க முடியாது என்பதால் இயல்பாக தன் போக்கில் தயாராகி லிப்ட் மூலம் கீழே இறங்கி வந்தால். நேற்றே வர்ஷு அவளை லிப்ட்டை உபயோக படுத்த கூறியிருந்தாலும் காலை வந்த போதும் மீண்டும் அதை நினைவு படுத்தி விட்டு சென்றிருந்தால்.

கீழே தரை தளத்திற்கு வந்தவள் கண்ணில் முதலில் பட்டது வசுந்தராதேவி தான் குழந்தையை வைத்து கொண்டு அமர்ந்திருந்தார்.

'குட் மார்னிங் பாட்டி' என்று அவரிடம் வந்தவள் குழந்தையை வாங்குவதற்க்காக கை நீட்ட, இருக்கட்டும்மா முதல்ல சாப்பிட்டுட்டு வா என்றார்.

சரி பாட்டி என்றவள் நீங்க சாப்ட்டீங்களா..? என்றிட,

"ஆச்சுமா இனி நேரத்தோட வந்துடு இந்த நேரத்திற்கு நீ சாப்பிட்டு எப்போ அது பிள்ளைக்கு பாலாகுறது..??" என்று அவர் கேட்க,

'கண்டிப்பா பாட்டி' என்றவள் அங்கிருந்த உணவு மேஜையில் அமர அவளுக்கான உணவுகள் பரிமாற்ற பட்டது. மூன்று இட்லிகளை போதும் என்று கூறிவிட்டவள் பரிமாறிய பட்டம்மாவிர்க்கு நன்றி கூறி இரு நொடி கண் மூடி பிரார்த்தித்து உண்ண தொடங்கினால்.

பாதி உணவில் அவள் எதிரே வந்து அமர்ந்தார் வித்யாதேவி அவரை கண்டதும் மரியாதை நிமித்தமாக 'குட் மார்னிங் ஆன்டி' என்று சிறு புன்னகையுடன் ப்ரீத்தி எழுந்து நிற்க,

'சாப்பிடும் போது எழக்கூடாது உட்கார்' என்றவர் அமர்ந்து அவள் சாப்பிட தொடங்கவும் அவளையே பார்த்திருந்தார்.

அதில் அசௌகரியமாக உணர்ந்தவள் நிமிர்ந்து, 'நீங்க சாப்பிடலையா ஆன்டி' என்று கேட்க,

"சாப்பிடும் போது பேசவும் கூடாது கவனம் சாப்பாடு மேல தான் இருக்கணும்" என்றார் அழுத்தமாக

'சரி' என்று தலை அசைத்தவள் அமைதியாக உண்ண தொடங்கினாள் அனைத்துமே வித்யாவின் மேற்பார்வையில் பட்டம்மாள் தயாரித்த காரம் குறைந்த உணவுகள் ப்ரீத்தி மூன்று இட்லியோடு எழுந்து கொள்வதை பார்த்தவர், 'உட்கார்' என்றார்.

குரலை உயர்த்தவில்லை, கட்டளை இல்லை ஆணை இடவில்லை, மிரட்டலும் இல்லை ஆனாலும் ப்ரீத்தியால் அந்த குரலை மறுத்து பேச முடியில்லை அமைதியாக அமரவும் மேலும் இரண்டு இட்லியை எடுத்து வைத்தவர் 'சாப்பிடு' என்றார்.

தயக்கமாக அவரை பார்க்கவும், வயித்துல இருக்கும் போது மட்டுமில்லை இப்பவும் இன்னும் சில மாசம் குழந்தைக்கும் சேர்த்து சாப்பிடனும் டாக்டர் உனக்கு நான் சொல்ல தேவை இல்லை அதனால சாப்பிடு என்றவர் பட்டம்மாவிர்க்கு கண் காட்ட அவர் சாம்பார் ஊற்றினார்.

'நேத்து ட்ராவல், அலைச்சல், புது இடம்ன்னு நீ பெருசா சாப்பிடலை' என்ற போது தன்னை இத்தனை தூரம் கவனித்து இருக்கிறாரா..?? என்ற ஆச்சர்யம் அவளிடம்.

'அதனால உனக்கு கட்டாயம் இது தேவை' என்றவர் அவள் தட்டை பார்வையால் சுட்டி காட்ட ப்ரீத்தியும் 'சரி' என்பதாக தலை அசைத்தால் ப்ரீத்தி.

பட்டம்மாள் புறம் திரும்பிய வசுந்தரா அவரிடம், "தினமும் நாள் ஒன்னு போல இருக்காது நாளையில் இருந்து காலை டிபனை ரெண்டு வேலையா பிரிச்சி கொடு, தினமும் காலையில் ஆறரைக்கு ப்ரீத்திக்கான பால் ரூம்க்கு போயிடனும் தென் மார்னிங் எய்ட் ஒ கிளாக் ஷார்ப்பா ப்ரேக்பாஸ்ட் பண்ணிடனும். ப்ரீத்தியால முடியும்ன்னா கீழ வந்து சாப்பிடட்டும் இல்லையா தகவல் கேட்டு ரூம்க்கு அனுப்பிடு தென் சாலட் அப்புறம் ஒரு பதினோரு மணிக்கு ஸ்பிரவுட்ஸ் என்றவர் அதன் பின்பான அவளின் அன்றாட உணவு குறித்து பட்டியலிட சிறு மலைப்புடன் அவரை பார்த்தாள் ப்ரீத்தி.

வித்யா கூறிய அனைத்திற்கும் பட்டம்மால் சரி என்று கூறி டைனிங் டேபிளை சுத்தம் செய்ய அதே நேரம் ப்ரீத்தியும் சாப்பிட்டு முடித்திருந்தால்.

அவள் கை கழுவி வரவும் 'தேவ் எங்க ப்ரீத்தி..?' என்றார்.

'தேவ்' என்று அவரை பார்த்தவளுக்கு அப்போது தான் இரவு மட்டுமல்ல காலை எழுந்ததில் இருந்தே அவனை பார்க்காததும் அவனிடம் இருந்து மெசேஜ் மட்டும் வந்தது புரிய இப்போது அவருக்கு என்ன பதில் சொல்லவது என்ற தடுமாற்றம்.

பின்னே அவன் எங்கிருக்கிறான் என்று அவளுக்கு எப்படி தெரியும் நிச்சயமாக அவன் கூறி வைத்திருக்கும் கதைக்கு இப்போது அவள் 'தெரியாது' என்ற பதிலை சொல்லவே முடியாது.

என்ன செய்யலாம் என்று யோசித்தவளுக்கு அருகே இருந்த கைபேசி கண்ணில் விழ அவன் காலை மெசேஜ் அனுப்பிய நம்பருக்கு மெசேஜ் செய்து கேட்கலாம் என்று வித்யாவின் பார்வையில் படாமல் மெல்ல அதை மேஜை மீது இருந்து எடுத்து அதை திறக்க முற்ப்பட,

'என்ன பண்ற ப்ரீத்தி..??'

'அது.. நீங்க... ' என்றவளுக்கு குற்றம் செய்து பிடிபட்ட நிலை

'நான்..??'

'இல்ல தேவ்..!!' என்று நெற்றி வியர்வையை துடைத்து கொண்டு அவரை பார்க்க,

"ஆமா தேவ் எங்கன்னு கேட்டேன் ஆனா என் கேள்விக்கு பதில் சொல்லாம போன் எடுத்தா என்ன அர்த்தம்..?" என்று அவளை துளையிடும் பார்வை பார்க்க,

'அது கால் வந்த மாதிரி இருந்தது அதான் சாரி ஆன்டி" என்றவளிடம்,

'சாரி ஒருபக்கம் இருக்கட்டும் தேவ் எங்க..??' என்றார் கருமமே கண்ணாக

வறண்டு போன இதழ்களை நாவால் ஈரம் செய்தது கொண்டே அவரை பார்த்தவளை நோக்கி வித்யா புருவம் ஏற்றி இறக்க உடனே ப்ரீத்தி கண்களை மூடி நெற்றி பொட்டில் அழுத்தி கொடுக்க நல்ல வேலையாக நேற்று அவன் மருத்துவமனைக்கு சென்றது நினைவு வர,

"ஹா.. ஹாஸ்... ஹாஸ்பிட்டல் போயிருக்காரு ஆன்டி நேத்து சர்ஜரி பண்ணின கேஸ்ல ஏதோ இஷுன்னு காலையிலேயே கால் வந்ததுன்னு கிளம்பிட்டார், நான் தூக்க கலகத்துல சரியா கவனிக்கலை இப்போதான் நியாபகம் வந்தது" என்று ஏதோ அந்நேரத்திற்கு அவரை சமாளிக்கும் விதமாக அதே விதத்தில் நம்பும் படியான பொய்யை கூறவும்,

ஒற்றை புருவம் 'உயர்த்தி அப்படியா..?' என்பதாக வித்யா அவளை பார்த்தவர் பார்வையில் இருந்த எள்ளலை உணராதவள்,

"ஏன் ஆண்டி உங்க கிட்ட சொல்லலையா..??"

"வைப் கிட்ட சொன்னா போதும்ன்னு நெனச்சி இருப்பான்" என்றவர் இதழ்கள் லேசாக வளைய,

"ஐயோ அப்படி எல்லாம் இல்ல ஆன்டி எமெர்ஜன்சின்னு அவசரமா கிளம்பி இருப்பார் அவருக்கு நீங்க ரொம்ப முக்கியம்" என்று சமாளிக்க,

"அப்படியா..?? உன்கிட்ட சொல்லி இருக்கானா..??" என்று கேட்க

அவன் எப்போது அவளிடம் இதை எல்லாம் சொன்னான், நேற்று மருத்துவமனைக்கு செல்லும் முன் அவன் வித்யாவிடம் விடை பெற்ற விதத்தை வைத்து அவளே யூகித்து சொன்னது தான்.

அவர் கேள்விக்கு ப்ரீத்தியின் முகம் போன போக்கை பார்த்த வித்யாதேவியின் கண்கள் இடுங்கியது.

ஹாய் செல்லகுட்டீஸ்...


இதோ "உயிரில் உறைந்த உறவே !!" அடுத்த அத்தியாயம் பதித்துவிட்டேன் கதை எப்படி போகுதுன்னு மறக்காம சொல்லிட்டு போங்க. சென்ற பதிவிற்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் செய்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ருத்ரபிரார்த்தனா
Super
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top