Unnil Naan Thozhiyea-5-1

Advertisement

vigneshwari

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் நட்புக்களே,

இதோ அடுத்த 5-1வது எபியோடு வந்துவிட்டேன். .போன எபிக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் போட்ட நட்புக்களுக்கு நன்றி....படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...ஒரு இரண்டு வரிலயாவது கதைய பத்தி சொல்லுங்கப்பா.....
download (5).jpg

ஹனி காதில் நித்தி வீட்டுக்குள்ள வரும்பொது வலது கால் எடுத்து வைச்சி வந்தியா இல்ல இடது கால் எடுத்து வைச்சசி வந்தியானு யோசிக்கிறேன் என கூற,நித்தி ஏதோ சொல்கிறாள் என்பதை பார்த்த கௌதம் எனக்கும் ஆண்டி என்று கூற ,என்ன ஆண்டியா டேய் எனக்கு ஒன்னும் 50 கிடையாது ஜஸ்ட் 2௦ தான் புரியதா என்று கூறினாள். சரி சரி நித்தி அக்கா எனக்கு சொல்லு என்றவனை பார்த்து போய் அந்த கதவை நல்ல திறந்து வை அப்பதான் சொல்லுவேன் என்றால்.கௌதமும் ஏதோ ரகசியம் தெரிச்சுக்க போறம் னு நினைத்து நித்தி சொன்னதை செய்தான்.


நித்தி அவனை பக்கத்தில் உக்காரவைத்து அவன் தோள் மேல கையை போட்டு அது என்னனா கௌதம் என்றவளை இடைமறித்த கௌதம் நித்தி அக்கா கையை எடு என்று சொல்ல ,நித்தி அவனிடம் டேய் நான் உன் ப்ரெண்டுடா நான் கை போட்டுதான் பேசுவேன் என்று கூற நான் எப்பதான் குளிச்சு ப்ரெஸ்ஸா இருகேன்.நீ என் மேல கைய போட்டா ட்ரெஸ் கசங்கிறும் என்று கௌதம் சொன்னான்.அட பக்கி பயபுல்ல என்று நினைத்துக்கொண்டு கௌதம் எனக்கு தோள்லகைய போட்டதான் சொல்லவரும் எப்படி வசதி என்று அவனை பார்த்து சொல்ல.சரி போட்டுகோ ஆனால் என் ட்ரெஸ்க்கு ஏதும் ஆகக்கூடாது……சரி நித்தி அக்கா சொல்லு என்று கௌதம்கூறினான்.

ஒரு கண்டிசன்..நான் எங்க இருக்கு வரைக்கும் நீ என்னோட பேச்சை தான் கேக்கனும் டில் ஒகே அப்பிடினா நான் சொல்லுவேன் என்றாள் நித்தி. கவிக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை ஆனால் மீ கைக்கு கைக்கு என்று தனது மழலை மொழியில் சொல்ல சரி நானும் கேக்குறேன்,நீ முதல ரகசியத்தை சொல்லு என்று கௌதம் கூற நித்தி, அது என்னன்னா கௌதம் ,ஐய்யோ எவன் கிட்ட என்ன சொல்ல, விட்டமாட்டிக்கானே...என்று நினைக்க...
ஐடியா,கௌதம் நீ என்ன மட்டும் தான் நித்தினு கூப்பிடனும்,ஆனால் ஹனியை நீ ஹனி னு கூப்பிடக்கூடாது அவளை நீ மரியாதைத்தான் கூப்பிடனும் எக்சாம்ப்ல்.... சித்தி இல்லனா அக்கானு ஓகே என்று சொல்ல எவ்வளவு நேரமா முறைத்துக்கொண்டு இருந்த ஹனி,எடு அந்த செருப்பை என்று சொல்ல நித்தி வேகமா கீழே ஓடினாள், ஹனி அவளை துரத்த கவியும் கௌதமும் அவர்கள் பின்னால் ஓட....


நித்தி,ஹனி வேண்டாம் ப்ளீஸ் மீ பாவமா தெரியல.ஹனி நீயெல்லாம் பாவம் இல்லடி என்று அவளை கையில் கிடைத்த பொருள்களை கொண்டு ஏறிய கவியும் கௌதமும் சேர்ந்து கொண்டு நித்தியை அடிக்க, அம்மா............ என்று அவள் காத்த உள்ளே வேளையில் இருந்த மதுலா மற்றும் வசந்த பாட்டி வந்தனர். இவர்களை பார்த்த ஹனி அப்படியே நிறுத்தி விட ஐய்யோ இவங்க கேட்ட நம்ம என்ன சொல்லுறது ஹனி என்று யோசிக்க,கௌதம்,ஜாலியா இருக்கு ஏன் அடிக்குறத நிறுத்துன ஹனி அக்கா. அடப்பாவி அவள் என்னுடைய நித்திய அடிக்கிறது உனக்கு ஜாலியா இருக்க.. உனக்கு இருக்குடா அப்பறம் என்று நித்தியின் மனசாட்சி சொன்னது.

வசந்தா, ஏன் எல்லாரும் நித்தியாவ அடிக்கிறீங்க என்று கேக்க, கவி, க்ராண்ட்மா நைத்து ஹனிய திட்டினா என்று காம்ப்லின்ட் பண்ணினாள்.நித்தி இல்ல பாட்டிமா இவங்க எல்லாரும் பொய்க்காறவங்க என்று சொல்லியவளை பார்த்து சரி விடுடா தங்கம் என்று அணைத்து கொண்டார்.

அதை பார்த்த கவியும் கௌதமும் ஒடிச்சென்று பாட்டி நானும் நானும் என்று சொல்ல அவர்களையும் அனைத்துக்கொண்டார் இதை பார்த்துக்கொண்டு இருந்த ஹனியையும் வசந்தா கூப்பிட ஹனி ஒடிச்சென்று அவரை அனைத்துக்கொண்டாள்.

கம்பனியில் உள்ளே நுழைந்த சூர்யாவை பார்த்து வழியில் வந்த அனைவரும் குட் மார்னிங் சார் என்று சொல்ல சிறு தலையசைப்புடன் குட் மார்னிங் சொல்லிவிட்டு அறைக்குள் சென்றார். சூர்யாவின் பி.எ. ரம்மும் அவன் பின்னால் சென்றான

.சூரியா, ராம் உங்களுக்கு நான் எதுக்கு சம்பளம் தாரேன் எப்பவுமே என் பின்னாடியே வரதுக்கா .ஒரு வேலைய உருப்படியா செய்ய தெரியல என்று கூற ராம் பயந்து இல்ல சார் என்று எதோ கூற வர வாயை மூடுங்க ராம் ரிசன் சொல்லுறதுக்கு நான் உங்கள வேலைக்கு வைக்கல.

போங்க போய் அந்த சங்கரை கூப்பிடுவாங்க என்று காத்த விட்டால் போதும் என்று நினைத்து ஓகே சார் என்று வேகமா சென்றார்.மே ஐ கம் இன் சார் என்று சொல்லிக்கொண்டு உள்ளே செல்ல.சூரிய அவனை பார்த்த பார்வையில்...சார் அவங்க மும்பைனு மட்டும்தான் கண்டுபிடிச்சுருக்ககோம். எங்களால வேர ஏதும் கண்டுபிடிக்க முடியல சார்.

இன்னும் ஒரு வாரம் டைம் தாங்க சார் என்ற சொல்ல இத சொல்ல நான் உங்கள வேலைக்கு வைக்கல இன்னும் 2 நாள் டைம் தரேன் அதுக்குள்ள அந்த நாய் யாருனு கண்டு பிடிச்சு சொல்லனும் என்று கூற கண்டிப்பா சார் என்று சொல்லி விட்டு சென்றான் சங்கர். மும்பையா யாரா இருக்கும்.ஒருவேளை அவனா இருக்குமா ஆனால் அவனுக்கு எப்படி தெரியும் என்று யோசித்தார்.

கார்த்திக் உள்ளே நுழையவும், நேத்து பிடிச்ச அந்த தறுதலை நல்ல சாப்பிடானா என்று கேட்டுக்கொண்ட லாக்ப்க்குள் நுழைந்து அங்க படுத்து தூக்கிக்கிட்டு இருந்தவானை லந்தியால் அடிக்க ஆரம்பிக்க,அவன் ஐய்யோ சார் வேண்டாம் விட்டுருங்க இனிமே எப்படி பண்ணமாட்டேன் எங்க அம்மாவையும் அப்பாவையும் இனிமே நல்ல பார்த்துக்குவேன் சார்.

விட்டுருங்க சார் வலிக்கு என்று சொன்னான்.ஆனால் அவன் சொல்லுவதை கேக்காமல் அடிவெளுத்தி எடுக்க...அய்யோ அம்மா என்று கத்தியவானை பார்த்து இதுக்கு மட்டும் உனக்கு அம்மா வேண்டுமா என்று கூறிக்கு கொண்டு லந்தி உடையும் வரை அடித்து நீ சம்பாதிச்ச பெரிய லாடு லபக்கா...பெத்தவங்கள வச்சு கஞ்சி ஊத்த தெரியல நீயல்லாம் சம்பாதிச்சு எதுக்குடா வெங்காயம்...

சார் இனிமே எங்க அம்மாவையும் அப்பாவையும் நல்ல பார்த்துப்பேன் என்ன விட்டுருங்க சார் என்று சொன்னவனை பார்த்து.. போய் மரியாதையா அவங்க இரண்டு பேரையும் நல்லா பார்த்துக்கனும் இன்னொரு தடவை இந்த மாதிரி பண்ண வாழ்நாள் முழுக்க உனக்கு கம்பி தான் யாபகத்துல வச்சுக்கோ..

கண்ஸ்டாப்பில் இந்த நாய் கிட்ட கையொழுத்து வங்கிட்டு அனுப்பி விட்டுங்க என்று சொல்லி விட்டு தனது இடத்தில் அமர்ந்தவன்.இப்படிதான் எப்படிலாம் எந்த உலகத்துல இருக்கங்கலோ என்று நினைத்துக்கொண்டு தனது வேளையில் முழ்கினான்.

இந்த ஆளு வேற டென்ஷனா இருக்கார இல்ல நார்மலா இருக்காரானு தெரியல..அந்த கவுன்சிலர் வேற பேச சொன்னான்.அவன்கிட்ட வேற பெரிய பில்டப் குடுத்துருக்கோம் என்று யோசனைல இருக்கும் போது,கார்த்திக்,என்ன பழனியப்பன் என்ன யோசனை சொல்லுங்க அந்த கவுன்சிலர் என்ன சொன்னான்.

சார் நீங்க பெரிய ஆளு சார் எப்படி சார் கண்டுபிடிச்சிங்க என்று கேட்டவரை பார்த்து மிஸ்டர்.பழனி நான் ஒரு ஐ.பி.ஸ் ஆபிஸ்ர் மறந்துறாதிங்க.. இல்ல சார் அவங்க ஆளுங்க 2 பேர பிடிச்சு வைச்சிருக்கீங்களா அவங்கள ரிலீஸ் பண்ணனுமா 2இலட்சம் தரேன் னு சொன்னாரு என்றவரை தீப்பார்வை பார்க்க,

ஐயோ சார் அப்படி பாக்காதீங்க நான் நீங்க அப்படிலாம் விடமாட்டிங்கனு அவரு கிட்ட சொல்லிட்டேன் சார்.போங்க பழனி போய் வேலைய பாருங்க என்று தனது வேலையில் மூழ்கினான்.

டேய் கழுதைகளா ஒரு வேலை கூடுத்த ஒழுங்கா செய்யமாட்டிங்களா..அவளை போட்டு தள்ளிட்டு வாங்கனு சொன்ன என் கிட்ட வந்து கதையா சொல்லுற என்று பளார்னு அடியாளை அடித்தார். ஐயா எதோ ஒரு தடவை தெரியாம நடந்துடுச்சு எங்களை மன்னிச்சுடுங்க ஐயா.

அப்பா, அப்பா என்று அந்த வீடே அதிரும் அளவு கத்திக்கொண்டு வந்த ராக்கியை பார்த்து என்னடா என்ன ஆச்சு ஏன் கத்திகிட்டே வார என்று கூறிக்கொண்டு அங்கு இருந்த அடியாள்களை வெளியில் போக சொல்ல அவர்கள் வெளியேறவும் ,அப்பா ஹனியும் அவ ப்ரெண்டு நித்தியாவும் மும்பை வந்துருக்காங்க. அப்பா அதுமட்டும் இல்ல அவங்க 2 பேரும் அந்த கார்த்திக் ஒட கார்ல போனாங்க அப்பா.
என்னடா சொல்லுற நல்ல பார்த்தியா என்று கேக்க ஐய்யோ அப்பா நான் நல்ல பார்த்தேன் அது கார்த்திக் தான்.அவங்களுக்கு இவங்களுக்கு என்ன சம்மதம் என்று கிரண் யோசிக்க. அவங்க 2 பேரும் அவங்க வீட்டுக்குதான் போனாங்கனு பார்த்தியா ராக்கி.


இல்ல அப்பா என்றவனை பார்த்து லவ் பண்ண மட்டும் போதாது கூட அறிவு இருக்கணும். வெளியில் நின்ற அடியாளை கூப்பிட்டு அவங்க 2 பேரும் மும்பைக்கு வந்துருக்காங்க என்று சொல்ல,ஐயா நம்மா ஊருல தான் இருக்காங்க ஈசியா போடுறலாம் ஐயா கவலை படாதீங்க என்று சொல்லி விட்டு சென்றனர்.கிரண் யோசனைல அமர்த்திருந்தான். ராக்கி,எவவ்ளவு தைரியம் இருக்கணும் அவனுக்கு என் செல்லதை அவன் கார்ல கூப்பிடு போறான்.என் செல்லம் கூட கல்யாணம் மட்டும் நடக்கட்டும் அப்புறம் இருக்கு அவனுக்கு.

ஹலோ இந்தப்பக்கம் ஹனி ,அந்த பக்கம் யாரு என்று கேக்க பாண்டிய நாட்டு மன்னன் என்று சொன்னால் ரம்யா....ஒஒ என்று ஹனி சொல்ல.....மும்பை போனா ஒரு கால் பண்ணி சொல்லனும்னு இல்ல..ரொம்ப பண்ணாதீங்க 2 நாய்களும் என்று ரம்யா சொல்ல...சாரி சொரிநாய் நாங்க வந்த அலுப்புல தூங்கிட்டோம் என்று சொன்னாள் ஹனி...உன்னலாம் திருத்தவே முடியாது என்று ரம்யா சொல்ல அந்த பக்கம் சுதா,ஏய் ரம்யா போனை குடு என்று போனை பிடிங்கி,ஹனி அங்க போனது ரேஸ்ட் எடுக்க இல்ல படிங்க.. நாங்க எல்லாரும் இன்னும் ஒரு வாரத்துல வந்துருவோம் என்றாள்.ஒகே சுதா நாங்க பாத்துக்கிறோம் என்று சொல்லி விட்டு போனை வைத்தாள்.

நித்தி,யாரு போன்ல என்று கேக்க,அது நம்ம சுதாவும் ரம்யாவும் என்று ஹனி கூறினாள். என்னவாம் என்று நித்தி கேட்க,நம்மள ஒழுங்க ஆடாம படிக்க சொன்னாள் என்று ஹனி கூறினாள். நித்தி,ஆமா இப்ப வாராங்களாம் இங்க என்று கேக்க, இன்னும் ஒரு வாரத்துல வருவாங்களாம் என்றாள் ஹனி.கௌதம்,ஹனி நித்தி கீழ வருவிங்களா நம்ம மாலுக்கு போறோமா சீக்கிரம் கிளம்பி வாங்க என்று சொல்லிவிட்டு சென்றவனை, ஏய் இங்கவாடா என்று நித்தி சொல்ல.முடியாது போ நான் கீழ போய் கிளம்பனும் என்று சொல்லிவிட்டு சென்றான்.



 
Last edited:

Chittijayaram

Well-Known Member
Hi mam, inda vaalumga mumbai vandum adamgama vilayadudumga, Rocky yaaru pudusa varane, avanum, tharunum Enna pannuvangalo terialaye, nice reading,thanks.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top