உண்மை.. பாத்தி சிஸ்.......
என்னமோ எங்க பார்த்தாலும் கொரனாவா தெரியுது...
இந்த வருடம் பாதிப்பு அதிகம்.. முன்பு இருந்த கவனம் இப்போது இல்லையோ தோணுது, நிறைய இடத்தில்... நோய்.
என் நண்பர்கள்.. அக்கம் பக்கம் வீடு.. என எல்லாம் இதன் தாக்கம்... எனக்கு வந்துட்டா கூட தெரியாது... இப்படி சுற்றி உள்ளவர்களை தாக்கும் போது அதை பார்க்க முடியலை...
மருத்துவமனைகளில் ஈசியா அட்மிஷன் கிடைப்பதில்லையாம்... விடியற்காலை வரை காத்திருந்த என் பக்கத்துவீட்டு பெண் புலம்பல் காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
தடுப்பூசி போட்டுக் கொண்ட அடுத்த வாரம்.. அந்த அண்ணாக்கு கொரொனோ... இரண்டு பிள்ளைகள்... இன்னும் வீடு வரவில்லை...
ஆண்களை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு.. இரண்டு பிள்ளைகளுக்கம் தானும் கொரொனோ டெஸ்ட் எடுத்துக் கொண்டு... நெகடிவ் ரிசல்ட்க்காக காத்திருக்கும் இன்னொரு குடும்பம்...
ஆண்கள் அதிகமாக தாக்குகிறது போல... காலையில் அதிகமாக வாக்கிங் செல்லும் நபர்களை காணோம்... எல்லோரும் தங்கள் வீட்டு மொட்டைமாடியில் பத்து மணி வரை.. வெயிலில் நடக்கிறார்கள்.. என்னவென விசாரித்தால்.. கொரோனா...
எங்கள் வீட்டின் அருகில் ஒரு அண்ணாக்கு கொரொனோ... நெஞ்சு வலிக்கிறது,,, ஆம்புலன்ஸ் வரவில்லை... தானே, காரெடுத்து செல்கிறார்... எங்கள் யாராலும் உதவ முடியவில்லை... ச்சு... ஒன்றும் சொல்ல முடியவில்லை...
எல்லோரும் பாதுகாப்பாக இருப்போம்...
எல்லோரும் நலமாக இருப்போம்...