Thozhiyai thedi

Advertisement

Sundaramuma

Well-Known Member
என்னை போல நீயும்
எண்ணியே இருப்பாயா
எந்தன் முக வரி தேடியே வருவாயா
காத்திருப்பேன் நான் இங்கே
காலமெல்லாம் தேடிடுவேன்
உன் முக வரியை

Ssuper Meera ...
very emotional .....
Missing my dear friend .....
 

Devi29

Well-Known Member
உன்னோடு சேர்ந்து
ஊரெல்லாம் சுற்றி
தெருவெல்லாம் புரண்டு
போகாத இடமில்லை
பேசாத பேச்சில்லை
புரளாத மண்ணில்லை
கிழியாத சட்டையில்லை
வாங்காத அடியில்லை
மகிழ்ச்சிக்கும் குறைவில்லை
ரொம்ப அருமையான வரிகள் சிஸ். ஏக்கத்தை விளைத்தது superb kavithai sis:):):):):):):):):)
பள்ளி பருவத்து நட்பெல்லாம் முகநூலில் மிக உண்டு.
கைபிடித்து சுற்றிய நாட்கள்
தற்போது கனவில் மட்டும் உண்டு
அவரவர் வாழ்க்கை பாதை
குடும்பத்தை மட்டும் தாங்கி இருப்பதால்
இவை யாவும் பழங்கனவு ஆனது
romba naal doubt or poramai vachukalam intha angal matum avargal natpai uyirpodu vaithirupthu eppidi?
 

murugesanlaxmi

Well-Known Member

தோழியைத் தேடி
இன்று பெண் கை பிடித்து
செல்லும் காலம் யோசிக்கையில்
உன் கைப் பிடித்து நடந்த
காலத்தின் மிச்சம் தோணுதம்மா
கண் பார்த்தல்ல
சொல் கேட்டல்ல
இல்லை
இனம் நிறம் பார்த்துமல்ல
மண் புரண்டதால்
தெரு புரண்டதால்
வந்த நட்பே


காக்காய்கடியில் வரும் இனிப்பின் சுவை
பை நிறைக்கும் இனிப்பினிலே கிட்டவில்லை
மண்ணில் புரண்ட சட்டை பாவாடையில்
முடித்து வைத்த பழம் எங்கே
உள்ளத்து அன்பு உன் உள்ளங்கையில்
உருளுதம்மா நெல்லியாக
உலகினில் தேவதைகள் உண்டாமே
உன்னாலே முதல் அறிந்தேன்
பின்னாலே மகளும் தந்தாள்
அந்நாள் அனுபவத்தை
கண்முன்னே கொண்டு வந்தாள்


உன்னோடு சேர்ந்து
ஊரெல்லாம் சுற்றி
தெருவெல்லாம் புரண்டு
போகாத இடமில்லை
பேசாத பேச்சில்லை
புரளாத மண்ணில்லை
கிழியாத சட்டையில்லை
வாங்காத அடியில்லை
மகிழ்ச்சிக்கும் குறைவில்லை
பாலினமே பார்க்கவில்லை
பார்க்கவும் தேவையில்லை
அதுமட்டுமில்லையம்மா
இல்லை இல்லை என
எல்லையில்லாமல்
இல்லைகளும் இருந்தாலும்
தொல்லையும் இல்லை நம்மால்


இல்லாத சொல் இன்று
நீயில்லை என்பதே
நீ எங்கே தெரியவில்லை
போன இடம் அறியவில்லை
கூடும் வழி புரியவில்லை
எனை கூடாமல் போன என் நட்பே
என்றுனை சேருவேனோ
காத்திருக்கேன் வந்துவிடு
விரைவு உலகம்மா
விரைந்து நீ வாராயோ
உன்னை தேடும் வழி ஒன்றை
உரைக்கவே வாராயோ


என்னை போல நீயும்
எண்ணியே இருப்பாயா
எந்தன் முக வரி தேடியே வருவாயா
காத்திருப்பேன் நான் இங்கே
காலமெல்லாம் தேடிடுவேன்
உன் முக வரியை

அருமை சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
yes yes
போன ஊர் தெரியும்
படிச்ச படிப்பு தெரியும்
செய்யும் தொழில் தெரியும்
இருக்கும் இடம் தெரியல
இப்படி தான் எல்லோரும்
miss ஆகிட்டாங்க

மிஸ்ஸாஸ் ஆனதால் மிஸ் ஆனாங்கள் சகோதரி
 

ThangaMalar

Well-Known Member
romba naal doubt or poramai vachukalam intha angal matum avargal natpai uyirpodu vaithirupthu eppidi?
ஆண்களுக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது....
Free to fly anywhere & every where....
ஆணாதிக்க சமுதாயம்...
நட்பை நீட்டிக்க யாரிடமும் அனுமதி வாங்க தேவையில்லை....
 
S

semao

Guest
romba naal doubt or poramai vachukalam intha angal matum avargal natpai uyirpodu vaithirupthu eppidi?
Thanks devi sis

நமக்கு நம்மளோட preference மாறி போவது கூட காரணமா இருக்கலாம்
சில பேர் மட்டும தான் அதை மீறி தொடரணும்னு நினைக்கிறாங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top