Thangammai - Precap 8

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
மனது தீனாவையே நினைக்க, மறுநாள் அவன் கிளம்பும் நேரம் வந்திட, தங்கம்மை பிறந்த வீட்டினர் அனைவருமே வந்திருந்தனர்.

தீனா கிளம்பும் வரைக்கும் கூட எதுவும் பேசவில்லை.. அறையில் சிறிது நேரம் அவளை அணைத்தபடி நின்றிருந்தான் அவ்வளவே..

பின் கிளம்புகையில் “பார்த்து இரு..” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

கார் கிளம்பி வெகு நேரம் வரைக்கும் கூட தங்கம்மை வெளியே நின்றுதான் பார்த்துக்கொண்டு நின்றாள். எப்படியெல்லாமோ வழியணுப்ப எண்ணி

“இதுக்கு தான் உன்னையும் கூட போ சொன்னோம்..” என்று ரோஜா வர,

“அவர் கூப்பிட்டுப்பார் அண்ணி..” என்றாள் உணர்வுகளை மறைத்து.
இப்போது தோன்றியது தானும் சென்றிருக்க வேண்டுமோ என்று. இப்படியெல்லாம் நடக்கும் என்று அவள் மட்டும் என்ன கண்டாளா ??!!


------------------------------------

“ரூம்ல வச்சிட்டு நீ ஏன் கீழ போன..” என்று தீனா கத்த,

‘இதென்னடா...’ என்று பார்த்தாள் தங்கம்மை..

“உன்கிட்ட தான் கேட்கிறேன்.. ரூம்ல போன் வச்சிட்டு நீ ஏன் கீழ போன..” என,

“அ.. அது.. நீங்க போன் பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியாதே..” என்று இவளும் சொல்ல,

“ஏன் ஏன் தெரியாது??!! நான் போனே பண்ணமாட்டேன்னு நினைச்சிட்டியா??” என்றவனுக்கு திரும்பவும் கோவம்.

‘இவ எப்படி அப்படி நினைக்கலாம்..’ என்று..

“இல்லைங்க.. அப்படி எல்லாம் இல்லை..” என்ற தங்கம்மைக்கு இவனுக்கு என்னாச்சு என்ற நினைப்பே..

“இனிமே போன் எப்பவும் உன்கிட்ட தான் இருக்கும்.. நான் அப்பப்போ கால் பண்ணி செக் பண்ணுவேன்..” என, அவன் சொன்ன விதத்தில் தங்கம்மைக்கு சிரிப்பு வந்திட,

---------------------------------

முதல் வாரம் ஊருக்குச் செல்ல நினைத்தான். ஆனால் வேலை அவனை இழுத்துக்கொண்டது.

“நீங்க ஊருக்கு வரலையா??!!!” என்று தங்கம்மை கேட்க,

“வரலை..” என்றான் முகத்தை தூக்கி..

இப்போதெல்லாம் வீடியோ கால் தான் அடிக்கடி.. அதுவும் அவனே தான் ஆரம்பித்தான்.. உன்னை பார்க்கவேண்டும் என்று சொல்லாது “ப்ரித்வி என்ன செய்றான்...” என்று கேட்டு அப்படி ஆரம்பித்தது.

தங்கம்மையும் குழந்தையை காட்டிவிட்டு ‘சரிங்க வச்சிடவா??!!’ என, “ஏன் என் கூட எல்லாம் வீடியோ கால் பேச மாட்டியா??!!” என்று கேட்டு பேச வைத்தான். பின் அது தினமும் தொடர,


காலையில் ஆரம்பித்தால் காலை வணக்கத்தில் இருந்து இரவு வணக்கம் வரைக்கும் வாட்ஸ் அப்பிலும், தீனா ப்ரீயாக இருந்தால் வீடியோ கால் என்றும் அவர்கள் உறவு மேலே மேலே முன்னேற, தங்கம்மைக்கு இந்த சிறிய பிரிவு கூட சரிதானோ என்று தோன்ற, தீனா தான் மிகவும் ஏங்கிப் போனான்.
 

Joher

Well-Known Member
Tks சரயு........

கிளம்பும் போ தெரியல....... கண்ணைவிட்டு போனதும் தான் தெரியுது.......

பிரிவு தனிமை கோவம் வரவைக்குதே......
இப்போ வந்துட்டான் உலக வழிக்கு.......

போன் இருக்குதான்னு செக் பண்ணுறேன்னு சொல்லி பொண்டாட்டி கூட பேசுறியே......
ப்ரித்வி பார்க்கணும் சொல்லி வீடியோ கால்........
இவரு ஒரு whatsapp officerனு நினைச்சு பேங்க் கஜானாவை ஆட்டையை போட்டுட போறாங்க.....
அப்புறம் 1 BHKக்கு பதிலா 3 in 1 ரூம் தான் கிடைக்கும்......

நாம் பிரிந்த நாளில் தான் நம்மை நான் உணர்ந்தேனே
நாம் பிறந்த நாளில் தான் நம் காதல் திறந்தேனே
என்னை நானே தேடி போனேன் பிரிவினாலே நீயாய் ஆனேன்

பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று
நீ என்ற தூரம் வரை நீளதோ எந்தன் குரல்
நான் என்ற நேரம் வரை தூவாதோ உந்தன் மழை
ஓடோடி வாராயோ அன்பே அன்பே அன்பே அன்பே..........
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
நல்லவேளை நெட் வெர்க் பேக் இப்ப சீப்பா கிடைக்குது. இல்ல வாங்கற சம்பளத்த தீனா அதுக்கே கட்டவேண்டியது தான்.. தேவையா இது... பொண்டாட்டிய கூட்டிட்டு போய் கொஞ்ச வேண்டியது தானே...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top