மனது தீனாவையே நினைக்க, மறுநாள் அவன் கிளம்பும் நேரம் வந்திட, தங்கம்மை பிறந்த வீட்டினர் அனைவருமே வந்திருந்தனர்.
தீனா கிளம்பும் வரைக்கும் கூட எதுவும் பேசவில்லை.. அறையில் சிறிது நேரம் அவளை அணைத்தபடி நின்றிருந்தான் அவ்வளவே..
பின் கிளம்புகையில் “பார்த்து இரு..” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.
கார் கிளம்பி வெகு நேரம் வரைக்கும் கூட தங்கம்மை வெளியே நின்றுதான் பார்த்துக்கொண்டு நின்றாள். எப்படியெல்லாமோ வழியணுப்ப எண்ணி
“இதுக்கு தான் உன்னையும் கூட போ சொன்னோம்..” என்று ரோஜா வர,
“அவர் கூப்பிட்டுப்பார் அண்ணி..” என்றாள் உணர்வுகளை மறைத்து.
இப்போது தோன்றியது தானும் சென்றிருக்க வேண்டுமோ என்று. இப்படியெல்லாம் நடக்கும் என்று அவள் மட்டும் என்ன கண்டாளா ??!!
------------------------------------
“ரூம்ல வச்சிட்டு நீ ஏன் கீழ போன..” என்று தீனா கத்த,
‘இதென்னடா...’ என்று பார்த்தாள் தங்கம்மை..
“உன்கிட்ட தான் கேட்கிறேன்.. ரூம்ல போன் வச்சிட்டு நீ ஏன் கீழ போன..” என,
“அ.. அது.. நீங்க போன் பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியாதே..” என்று இவளும் சொல்ல,
“ஏன் ஏன் தெரியாது??!! நான் போனே பண்ணமாட்டேன்னு நினைச்சிட்டியா??” என்றவனுக்கு திரும்பவும் கோவம்.
‘இவ எப்படி அப்படி நினைக்கலாம்..’ என்று..
“இல்லைங்க.. அப்படி எல்லாம் இல்லை..” என்ற தங்கம்மைக்கு இவனுக்கு என்னாச்சு என்ற நினைப்பே..
“இனிமே போன் எப்பவும் உன்கிட்ட தான் இருக்கும்.. நான் அப்பப்போ கால் பண்ணி செக் பண்ணுவேன்..” என, அவன் சொன்ன விதத்தில் தங்கம்மைக்கு சிரிப்பு வந்திட,
---------------------------------
முதல் வாரம் ஊருக்குச் செல்ல நினைத்தான். ஆனால் வேலை அவனை இழுத்துக்கொண்டது.
“நீங்க ஊருக்கு வரலையா??!!!” என்று தங்கம்மை கேட்க,
“வரலை..” என்றான் முகத்தை தூக்கி..
இப்போதெல்லாம் வீடியோ கால் தான் அடிக்கடி.. அதுவும் அவனே தான் ஆரம்பித்தான்.. உன்னை பார்க்கவேண்டும் என்று சொல்லாது “ப்ரித்வி என்ன செய்றான்...” என்று கேட்டு அப்படி ஆரம்பித்தது.
தங்கம்மையும் குழந்தையை காட்டிவிட்டு ‘சரிங்க வச்சிடவா??!!’ என, “ஏன் என் கூட எல்லாம் வீடியோ கால் பேச மாட்டியா??!!” என்று கேட்டு பேச வைத்தான். பின் அது தினமும் தொடர,
காலையில் ஆரம்பித்தால் காலை வணக்கத்தில் இருந்து இரவு வணக்கம் வரைக்கும் வாட்ஸ் அப்பிலும், தீனா ப்ரீயாக இருந்தால் வீடியோ கால் என்றும் அவர்கள் உறவு மேலே மேலே முன்னேற, தங்கம்மைக்கு இந்த சிறிய பிரிவு கூட சரிதானோ என்று தோன்ற, தீனா தான் மிகவும் ஏங்கிப் போனான்.
தீனா கிளம்பும் வரைக்கும் கூட எதுவும் பேசவில்லை.. அறையில் சிறிது நேரம் அவளை அணைத்தபடி நின்றிருந்தான் அவ்வளவே..
பின் கிளம்புகையில் “பார்த்து இரு..” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.
கார் கிளம்பி வெகு நேரம் வரைக்கும் கூட தங்கம்மை வெளியே நின்றுதான் பார்த்துக்கொண்டு நின்றாள். எப்படியெல்லாமோ வழியணுப்ப எண்ணி
“இதுக்கு தான் உன்னையும் கூட போ சொன்னோம்..” என்று ரோஜா வர,
“அவர் கூப்பிட்டுப்பார் அண்ணி..” என்றாள் உணர்வுகளை மறைத்து.
இப்போது தோன்றியது தானும் சென்றிருக்க வேண்டுமோ என்று. இப்படியெல்லாம் நடக்கும் என்று அவள் மட்டும் என்ன கண்டாளா ??!!
------------------------------------
“ரூம்ல வச்சிட்டு நீ ஏன் கீழ போன..” என்று தீனா கத்த,
‘இதென்னடா...’ என்று பார்த்தாள் தங்கம்மை..
“உன்கிட்ட தான் கேட்கிறேன்.. ரூம்ல போன் வச்சிட்டு நீ ஏன் கீழ போன..” என,
“அ.. அது.. நீங்க போன் பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியாதே..” என்று இவளும் சொல்ல,
“ஏன் ஏன் தெரியாது??!! நான் போனே பண்ணமாட்டேன்னு நினைச்சிட்டியா??” என்றவனுக்கு திரும்பவும் கோவம்.
‘இவ எப்படி அப்படி நினைக்கலாம்..’ என்று..
“இல்லைங்க.. அப்படி எல்லாம் இல்லை..” என்ற தங்கம்மைக்கு இவனுக்கு என்னாச்சு என்ற நினைப்பே..
“இனிமே போன் எப்பவும் உன்கிட்ட தான் இருக்கும்.. நான் அப்பப்போ கால் பண்ணி செக் பண்ணுவேன்..” என, அவன் சொன்ன விதத்தில் தங்கம்மைக்கு சிரிப்பு வந்திட,
---------------------------------
முதல் வாரம் ஊருக்குச் செல்ல நினைத்தான். ஆனால் வேலை அவனை இழுத்துக்கொண்டது.
“நீங்க ஊருக்கு வரலையா??!!!” என்று தங்கம்மை கேட்க,
“வரலை..” என்றான் முகத்தை தூக்கி..
இப்போதெல்லாம் வீடியோ கால் தான் அடிக்கடி.. அதுவும் அவனே தான் ஆரம்பித்தான்.. உன்னை பார்க்கவேண்டும் என்று சொல்லாது “ப்ரித்வி என்ன செய்றான்...” என்று கேட்டு அப்படி ஆரம்பித்தது.
தங்கம்மையும் குழந்தையை காட்டிவிட்டு ‘சரிங்க வச்சிடவா??!!’ என, “ஏன் என் கூட எல்லாம் வீடியோ கால் பேச மாட்டியா??!!” என்று கேட்டு பேச வைத்தான். பின் அது தினமும் தொடர,
காலையில் ஆரம்பித்தால் காலை வணக்கத்தில் இருந்து இரவு வணக்கம் வரைக்கும் வாட்ஸ் அப்பிலும், தீனா ப்ரீயாக இருந்தால் வீடியோ கால் என்றும் அவர்கள் உறவு மேலே மேலே முன்னேற, தங்கம்மைக்கு இந்த சிறிய பிரிவு கூட சரிதானோ என்று தோன்ற, தீனா தான் மிகவும் ஏங்கிப் போனான்.