Summer special/வெயிலுக்கு ஏற்ற பானங்கள்

Advertisement

Sahi

Well-Known Member
வெயிலுக்கு புத்துணர்வும், இழந்த நீர்சக்தியை மீட்டும் கொடுக்கும் இயற்கை பானங்கள் நிறைய உள்ளது. அதில் ஒரு சில recap.

1.தர்பூசணி சாறு

தர்பூசணி பழத்தை துண்டுகளாக்கி மிக்ஸியில் அரைத்து தண்ணீர் சேர்த்து அதில் சிறிதளவு உப்பும் மிளகுத்தூளும் சேர்த்து அருந்தினால் சுவையும் அலாதி, களைப்பும் உடனடியாகத் தீரும்.

2. மாதுளை சாறு

நீர்ச்சத்து குறைவதாலோ அல்லது சர்க்கரையின் அளவு குறைவதாலோ ஏற்படும் அயற்சிக்கு உடனடி தீர்வு மாதுளை சாறு. மாதுளை முத்துக்களை உதிர்த்து மிக்ஸில் அரைத்து (விரும்பினால் பால் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம்) வடிக்கட்டி அருந்தினால் சோர்வு உடனடியாக நீங்கும்.

3. பானகம்

200 மிலி (பானையில் வாய்த்த நீர் உகந்தது) நீரில் 1/4 கப் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கரைத்து அதை மண் இல்லாமல் வடிக்கட்டி அதில் சிறிது சுக்கு பொடி, சிறிது ஏலப்பொடி, 1 சிட்டிகை உப்பு, 2 டேபிள் ஸ்பூன் எழுமிச்சை சாறு சேர்த்துக்கலந்து 2 துளசி இலை சேர்த்தால் அருமையான பானகம். உடலுக்கு மிகவும் குளிர்ச்சியைக் கொடுக்கும் வெயிலுக்கும் ஏற்றது (இதை மண் பானையில் ஊற்றி வைத்து சிறிது நேரம் கழித்துக் குடித்தால் மிகவும் சுவையாகவும், சில்லுன்னும் இருக்கும்).

4. நீர்மோர்

வெண்ணை எடுத்த 1/2 டம்ளர் மோரில் 1 டம்ளர் குளிர்ந்த நீர் சேர்த்து, அதனுடன் தேவையான அளவு உப்பு, சிறிது பெருங்காயம், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து அருந்தினால் அதுவே வெயில் காலத்திற்கு ஏற்ற அமிர்தம். இதில் உங்கள் விருப்பத்திற்கு பச்சைமிளகாய் மற்றும் இஞ்சியும் பொடியாக நறுக்கி சேர்க்கலாம். இன்னும் சுவைக்கூடும்.

5. புதினா எழுமிச்சை சாறு

2 டேபிள் ஸ்பூன் கழுவிய புதினாவுடன் 1 துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து அதை வடிக்கட்டி வைக்கவும்.

சிறிது தண்ணீரில் 3 டேபிள் ஸ்பூன் நாட்டுச்சர்க்கரையை கரைத்து அதை மண் இல்லாமல் வடிக்கட்டவும். சர்க்கரை நீரை புதினா இஞ்சி கலவையில் சேர்க்கவும். அதில் 1 சிட்டிகை உப்பு, 2 டேபிள் ஸ்பூன் எழுமிச்சை சாறு கலந்தால் புத்துணர்வு தரும் புதினா எழுமிச்சை சாறு தயார்.
20190322_160502-COLLAGE.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top