Raasitha'S Nin Mel Kaadhalaagi Nindraen P17

Advertisement

Raasitha

Writers Team
Tamil Novel Writer
"ஏங்க... இன்னும் எம்புட்டு நாளுங்க? அந்தப் பார்வதிய பாத்தாலே எனக்குப் பாவக்கா தின்னமாதி இருக்கு. அவளும் அவ மூஞ்சியும். அவகிட்ட போய் அண்ணி வெண்ணீனுகிட்டு. சீக்கிரம் திட்டத்தைச் சொல்லுங்க. நாம இழுத்தடிக்க இழுத்தடிக்க அந்த வக்கீலு எல்லாப் பொறுப்பையும் கதிரவன்கிட்ட ஒப்படைச்சிட போறாரு" எனப் பாரிஜாதம் கூற ,

"இல்ல அதெல்லாம் பண்ணமாட்டாரு. ஏனா உயில்படி அவனோட 25 -ஆவது வயசுலதான் அவன் கைக்குப் போய்ச் சேரும். அதுவரைக்கும் அவனுக்குமட்டுமில்ல, வேற யாருக்கும் தெரிய போறது இல்ல"

"அப்போ உங்ககிட்ட மட்டும் எப்படிச் சொன்னாங்க?"

"நேரடியா கேட்டா அந்த மனுஷ சொல்லிடுவாரா? அவரு நேர்மை நீதின்னு பொழைக்கத் தெரியாத ஆளு. போட்டு வாங்குற விதத்துல போட்டு வாங்குனே. அது ரொம்ப முக்கியமா? இந்த உண்மை கதிரவனுக்குத் தெரிய இன்னு நேர இருக்கு. கொறஞ்சது ஒரு வருசத்துக்கு மேல இருக்கு. நான் இன்னும் இரெண்டே மாசத்துல இவுங்க கல்யாணத்த முடுச்சிடுவே.

சொத்து அவன் கைக்கு வந்து சேருற நாளுக்குள்ள, கதிரவனை நான் என்னோட கைக்குள்ள கொண்டு வந்துடுவே. அதுக்குதான் எனக்கு வர வியாபாரத்தைக் கூட, வேணும்னே அவனுக்கு அனுப்பி நல்ல பேர சம்பாதிக்கிறே" எனக் கூற, பாரிஜாதமோ, "இன்னும் இரெண்டே மாசம்தானா ? ரொம்ப நல்லதா போச்சு. அப்புற சொல்ல மறந்துட்டே, இன்னைக்குச் சாந்தினி வருது. போய்க் கூட்டியாந்துருங்க" எனக் கூற, அவரும் சரியென்று புறப்பட்டார்.

வாசலுக்கு அவளை அழைத்துவர புறப்பட்டவரின் கண்கள் அதிர்ச்சியிலும் கோவத்திலும் சிவந்திருந்தது. காரணம் சாந்தினி மாறனுடன் இரு சக்கர வாகனத்தில் வந்து இறங்கியதே.

மச்சக்காளையின் பின்னோடு வந்த பாரிஜாதமும் இதைப் பார்த்துவிட, அவருக்கு அந்த இடத்திலே சாந்தினியை ஓங்கி அறைய வேண்டும் போல இருந்தது. இருந்தும் இருவருமே தங்களைக் கட்டுப்படுத்தியபடி வீட்டின் உள்வாசலிலே நிற்க, இவர்கள் நிற்பது தெரியாமல், மாறனோ சாந்தினியின் கைகளைப் பிடித்துச் சிரித்தபடியும் ரசித்தபடியும் வம்பு செய்துகொண்டிருந்தான்.

-----------------------------------------------------------------------------------------------------------------------

எந்தக் காரணத்துக்கொண்டு சாந்தினி அந்த மாறன் பையன்கிட்ட கல்யாணம் முடியிற வரைக்கும் பேசாம பாத்துக்கணும். முடியுமா ?”

"கண்டிப்பாங்க, அவளையும் பார்வதியையும் நான் பாத்துக்கிறே" என உறுதி கொடுக்க, மச்சக்காளையும் பாரிஜாதமும் மாறன் கிளம்பும் நாளுக்காகக் காத்திருந்தனர். அதற்குள் சிலபல சூழ்ச்சிகளையும் தயார் நிலையில் வைத்திருந்தனர்.

மாறன் கிளம்பும் நாளும் வந்தது. அவன் கிளம்பி அரைப் பொழுது கூடக் கழியவில்லை. அதற்குள் வீட்டில் பூஜையென்று ஒரு பணிக்கர் வந்து நின்றார். லிங்கமும் பார்வதியும் யாரென்று பார்க்க, பாரிஜாதம் அவர்களிடம் தான்தான் வரவழைத்ததாகவும் வீட்டின் சுபிக்ஷத்திற்குப் பூஜை செய்யப் போவதாகவும், வந்திருப்பவர் இந்தப் பூஜை செய்வதில், ஜோதிடம் எதிர்காலம் கணிப்பதில் தலை சிறந்தவர் என்றும் கூற, எப்போதும் ராசி நக்ஷத்திரம் நேரம் காலம் சகுனம் என அனைத்திலும் நம்பிக்கை அதிகம் கொண்ட லிங்கம் வந்திருந்த பணிக்கரின் மீது மரியாதையான பார்வையைச் செலுத்தினார்.


குடும்பத் தலைவனும் தலைவியும் பூஜையில் அமரும்படி கூற, பாரிஜாதமே பார்வதியை அழைத்தது பார்வதிக்கு நம்ப முடியாத ஆச்சர்யம்தான். ஆனாலும் அவர் அதற்குமேல் யோசிக்கவில்லை. லிங்கத்துடன் பூஜையில் அமர, அவர்களின் ஜாதகத்தையும் கொண்டு வரும்படி வந்திருந்தவர் கூற, ஏற்கெனவே எடுத்து வைத்தார் போலப் பாரிஜாதம் உடனடியாகக் கொண்டு வந்து கொடுத்தார்.

ஒரு சில பூஜைகளைச் செய்தவர், லிங்கத்தின் ஜாதகத்தைப் பார்த்துப் புருவங்கள் சுருங்கிட யோசித்து மீண்டும் மீண்டும் எதையோ எழுதியும் அழித்தும் திருத்தியும் பார்த்துக்கொண்டே இருந்தார். கடைசிவரை அந்தப் பணிக்கரின் முகத்தில் திருப்தி இல்ல்லவே இல்லை.

அவருடைய முகப் பாவங்களைப் பார்த்துக்கொண்டிருந்த, பார்வதி சற்றே உள்ளூர கலக்கம் கொண்டார்.

"என்னாச்சு பணிகரே? ஒன்னும் பிரச்சனை இல்லைல ?" எனத் தயங்கியபடியே பார்வதி கேட்க,

"பிரச்சனை இல்லனு சொல்ல முடியாது. இருக்கு. அதுவும் இந்தக் குடும்பத் தலைவனுக்கு" எனப் பெரிய பீடிகையுடன் ஆரம்பித்தார் வந்திருந்தவர்.
 

banumathi jayaraman

Well-Known Member
பாரிஜாத ஆட்டத்த ஆரம்பிச்சுட்டியே
பாரிஜாத
ஆனால் நினைப்பதெல்லாம்
நடந்து விட்டால் தெய்வம்
ஏதுமில்லை பாரிஜாத

இந்தக் கல்யாணம் நடக்காவிட்டால்
சிவலிங்கத்துக்கு கெடுதல் வருமுன்னு
பணிக்கர் மூலமாக சொல்லி
கதிரவன் and சாந்தினி கல்யாணத்தை
பாரிஜாத நடத்தப் பார்க்கிறாள்
அம்மாவுக்காக கதிர் ஒப்புக் கொள்வான்
ஆனால் மாறனை மறந்து
சாந்தினி இவனை மணம் புரிய
வருவாளா?

இதற்கு நடுவில் யாருக்கு இந்த
உண்மை நிலவரம் தெரிய வரும்?
இதில் ஏதாவது முருகேசனின்
பங்கு இருக்குமோ, ராசிதா டியர்?
 
Last edited:

Saroja

Well-Known Member
பாரிஜாதம் திட்டம் போட்டு பணிக்கர
வரச்சொல்லி இருக்காங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top