P9 இதய கூட்டில் அவள்

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல.... தோழியின் எண்ணம் வனிதாவுக்கு புரிய ஆரம்பித்தது. தீட்டியவனையே பதம் பார்க்கும் கத்தி போல ஆனந்தியும் இருந்தாள்.

வனிதா ஆனந்தியை தனியாக கூப்பிட்டு முதலில் பேசி பார்த்தாள்.

“நீ செய்றது சரியில்லை ஆனந்தி. நீ வேலைக்குத்தான வந்த, வந்த வேலையை மட்டும் பாரு.”

“நான் என் வேலையை மட்டும் தான் பார்க்கிறேன்.”

“என் புருஷனை கவனிக்கிறது, பிள்ளையை கவனிக்கிறது என் மாமனார் மாமியாருக்கு ஐஸ் வைக்கிறது எல்லாம் தான் உன் வேலையா?”

“உன் புருஷனே எதுவும் சொல்லலை பிறகு நீ ஏன் சொல்ற?”

“அவர் என்ன சொல்லணும். அதுதான் நான் சொல்றேன் இல்லை... ஒழுங்கா ஒதுங்கி போயிடு.”

“உன்னைத்தான் இங்க யாருக்கும் பிடிக்கலை இல்லை. நீ வேணா ஒதுங்கி போயிடு.”

ஆனந்தி சொன்னதை கேட்டு வனிதா அதிர்ந்து போனாள்.

“அடிப்பாவி என் வீட்டுக்குள்ள வந்து என்னையே விரட்ட பார்க்கிறியா?”

“சரி நீயும் இருந்திட்டு போ.. நானும் இருந்திட்டு போறேன்.”

********************************************************************************************************************************

“ஏய் நீ வேலையில சேருன்னா சேர்க்கணும், நீ வேண்டாம்னு சொன்னா நிறுத்தணுமா? அவளை ஏன் நிறுத்தணும்? அதுக்கு காரணம் சொல்லு. வேலையை அவ ஒழுங்காதான பார்க்கிறா?”

“அவ வேலையை மட்டுமா பார்க்கிறா? என் வேலையையும் பார்க்கனும்ன்னு நினைக்கிறா?”

“உன் வேலையை நீ ஒழுங்கா பார்த்திருந்தா அவ ஏன் பார்க்கணும்னு நினைக்க போறா.” என சொல்லிவிட்டு விக்ரம் சென்றுவிட... வனிதாவுக்கு அவன் எதை சொல்கிறான் என புரியவில்லை. விக்ரமும் ஆனந்தியின் செயலுக்கு உடந்தையா என சந்தேகம் எழுந்தது.

***************************************************************************************************************************************

“வேண்டாம் ஆன்டி. அம்மாவும் உருளைக்கிழங்கு வச்சிருக்காங்க. எனக்கு அம்மா பண்ணதுதான் பிடிக்கும்.” என்றாள் சுஜி.

தெய்வா ஆனந்தியிடம் பேசுவாரே தவிர...அவள் கொண்டு வருவதை எல்லாம் தொடவே மாட்டார். வனிதா ஆனந்தியிடம் பேசவேயில்லை. அதனால் ஆனந்தி தான் கொண்டு வந்ததை திருப்பி எடுத்துக் கொண்டு சென்றாள்.

இன்று வனிதாவின் பார்வை ஆனந்திக்கு குழப்பத்தைத் தர... என்னவாக இருக்கும் என யோசித்துக் கொண்டே சென்றாள்.

ஆதிரை என்னும் சுறாவளி தன்னை தூக்கி சுழற்றி அடித்து விடும். ஒரு நொடியில் தான் காணாமல் போகப் போகிறோம் என அவளுக்கு அப்போது தெரியவில்லை.

*****************************************************************************************************************************************

முதலில் வெற்றி வர... “வா டா நல்லவனே இன்னைக்குத்தான் உனக்கு மில்லை எட்டிப் பார்க்க நேரம் கிடைச்சுதா?” என விக்ரம் சொல்லும் போதே, ஆதிரையும் வனிதாவும் உள்ளே வர... விக்ரம் அவர்களை கேள்வியாக பார்த்தான்.

“வாங்க முதலாளியம்மா...” என அவன் ஆதிரையை வரவேற்க...

“முதலாளின்னு உங்க ப்ரண்ட் வாய்தான் சொல்லுது...” என ஆதிரை வெற்றியிடம் சொல்லும் போதே விக்ரம் அவன் இருக்கையில் இருந்து எழுந்து இருந்தான். ஆதிரை சென்று அதில் உட்கார்ந்து கொண்டவள், எதிர் இருக்கையை வனிதாவிற்கு காட்டினாள்.
 

Joher

Well-Known Member
:love::love::love:

அவன் என்னவோ பேச இவ என்னமோ புரிஞ்சுக்குறாளே :p:p:p
விக்ரம் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

இப்போ தேவைப்படுதா ஆதிரா சப்போர்ட்.......
ஆனந்தியை துண்டை காணோம் துணியை காணோம்னு துரத்த போறாளா ஆதிரை........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top