P7 இதயக் கூட்டில் அவள்

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
Hi friends

Sorry for the delay. Busy in pongal vacation. Will come with epi tomorrow.

“என் வீட்டுக்காரர் என்னைத் தவிர எல்லார்கிட்டயும் அன்பாத்தான் இருக்கார். ஏனோ என்னைக் கண்டா தான் ஆக மாட்டேங்குது. வேற யாரையும் கல்யாணம் பண்ணி இருந்தா நல்லா இருந்திருப்பாரோ என்னவோ?”

“நீயா தேவையில்லாதது எல்லாம் கற்பனை பண்ணிக்கிற. அவரோட குணமே அப்படின்னா, அவர் யாரை கல்யாணம் பண்ணி இருந்தாலும் இப்படித்தான் இருந்திருப்பார்.”

“ஏன் என்னோட மாமனாரையே எடுத்துக்கோ... என் அத்தைகிட்ட கேட்டு செய்யற வழக்கம் எல்லாம் அவருக்கு இல்லை. அவர் முடிவு பண்ணா போதும்னு நினைப்பார்.”

“நீங்க சொல்ற மாதிரியும் இருக்கலாம் அக்கா. உங்களுக்கு தெரிஞ்சிருக்கும், உங்க ஜாதகம் முதல்ல வந்தது இவருக்குத்தான். உங்களை விட்டு என்னைக் கல்யாணம் பண்ணிட்டாருன்னு இப்பவும் என் மாமனார் மாமியாருக்கு வருத்தம்தான்.”
*******************************************************************************************************************************

“அவருக்கு உங்களைப் பிடிக்கும்ன்னு சொல்றா? அதை அவ எதார்த்தமா சொல்லலை... வேணுமுன்னே சொல்றா.”

“இன்னைக்கு என்கிட்டே சொன்னவ, நாளைக்கு வெளிய நாலு பேருகிட்ட சொல்ல மாட்டான்னு என்ன நிச்சயம்.”

“நாலு பேர் என்னை நம்பினாலும் ரெண்டு பேர் அப்படியான்னு தான் பார்ப்பாங்க. எனக்கு அதெல்லாம் பிடிக்காது.”

“நான் சிவமணியோட பொண்ணு, அண்ணாமளையோட மருமகள். வெற்றியோட மனைவி, என்னை ஒருத்தர் வேற மாதிரி பார்த்தா அதை என்னால தாங்கவே முடியாது. யாரு என்ன பேசினா எனக்கு என்னன்னு எல்லாம் என்னால இருக்க முடியாது.”

****************************************************************************************************************************************

“உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் பிரச்சனைனா அது உங்களுக்குள்ள அதுக்கு காரணம் ஆதிங்கிற மாதிரி வனிதா பேசி இருக்கும் போல... அதோட உனக்கு ஆதிரையை பிடிக்கும்ன்னு வேற சொல்லி இருக்கா...”

“உனக்கே தெரியும் ஆதிரையை பத்தி, இனி அவ மில்லுக்கு வரவே மாட்டா...”

“ஆதிரை மில்லுக்கு வரா வரலை அது இல்லை பிரச்சனை. ஆதிரைக்கு என்ன விருப்பமோ அதுதான். ஆனா வனிதா இன்னொரு தடவை இப்படி பேசினா, நான் சும்மா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன். உனக்கு தெரியும் எனக்கு ஆதிரை எவ்வளவு முக்கியம். நான் அவளை எவ்வளவு விரும்புறேன் அதெல்லாம் உனக்கு தெரியும். இன்னைக்கு என்னால அவ முகத்தை பார்க்கவே முடியலை... அவ இவ்வளவு கலங்கிப் போய் நான் பார்த்ததே இல்லை.”

****************************************************************************************************************************************

விக்ரம் வனிதாவை அடித்ததே இல்லை. ஆனால் இன்று அவன் கொடுத்த அறையில் வனிதாவின் கன்னம் சிவந்து போனது.

“ஆதிரையை பார்க்கும்போது வெற்றி தான் டி எனக்கு நியாபகம் வருவான். அவங்க ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்க அன்பு தான் எனக்கு தெரியும். ஒருநாளும் இந்தப் பெண்ணை நான் ஏன் கல்யாணம் செய்துக்கலைன்னு நான் நினைச்சதே இல்லை...”

“அவ வெற்றிக்குன்னு பிறந்தவ அப்படித்தான் தோணும். ஆனா உன்னோட கேவலமான பேச்சால், நல்ல நட்பு சிதைஞ்சு போச்சு.”

“இப்ப உனக்கு சந்தோஷமா? இதைத்தான நீ எதிர்பார்த்த.”
 

Joher

Well-Known Member
:love::love::love:

லூசாப்பா இந்த வனிதா???
பழைய கதை பேசி பேசியே உள்ளத்தையும் கெடுத்துக்குறா.......
friendship cut ஆகிடுச்சா???

வனிதாக்கு தான் நல்லா இல்லைனாலும் பரவாயில்லை அடுத்தவங்க நல்லாயிருக்கக்கூடாது.......
இனி என்ன பண்ணுவா???
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
புருஷன் பிள்ளைக்கு வேளாவேளைக்கு ஒழுங்கா சோறாக்கிப் போடத் தெரியலே
வேண்டாததெல்லாம் பேச மட்டும் இந்த வனிதாவுக்கு தெரியுதா?
முடிஞ்சு போனதை மாமனார் சொன்னால் அதை புருஷனிடம் கேட்கணும்
அதை விட்டுட்டு சம்பந்தப்பட்ட ஆதிரையிடம் இவள் சொல்வாளா?
இருந்த ஒரே நல்ல நட்பையும் பிரித்து விட்டாளா?
வெளங்குனாப்புலதான்
அடுத்தவளைப் பார்த்து பொறாமைப்பட்டு என்ன ஆகப் போகுது?
முதலில் நீ ஒழுங்காக இருக்கும் வழியைப் பாரு, வனிதா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top