அவங்களோட பெண்ணை
நல்லா வளர்க்கட்டும்
இல்லை நாசமாக்கட்டும்
நமக்கென்ன வந்தது?
அடுத்த வீட்டு லேடி,
ஷக்தி ப்ரியாவை எதுக்கு
நாம குற்றம் சொல்லணும்?
வீட்டுப் பொறுப்பில்லாமல்
எந்த ஒரு கவலையுமில்லாமல்
ஊருக்கு உழைச்சு உத்தமன்-னு
பேர் வாங்குறது, முக்கியமில்லே,
கறிவேப்பிலைக் கொத்து மாதிரி
இருக்கிறது ஒரே ஒரு மகன்
அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை
நீங்க அமைச்சுக் கொடுக்கலியே,
செல்வநாதன் ஸார்?