வெற்றி அன்றிரவும் தாமதமாக வந்தவன், பேருக்கு உண்டு விட்டு, அறைக்குள் சென்று, விளக்கை போடாமலே... அலமாரியில் இருந்து மாற்றுடை எடுத்து கொண்டு குளியல் அறைக்கு சென்று மாற்றிவிட்டு வந்து, கட்டிலுக்கு அடியில் இருந்து மெத்தையை இழுத்து போட்டு படுத்துக் கொண்டான்.
அவன் படுத்த அடுத்த நொடி, அறைக்குள் வெளிச்சம் பரவ, அவனைப் பார்த்தபடி ஆதிரை நின்றிருந்தாள்.
“நீ தூங்கலையா?” என்றபடி வெற்றி எழுந்து உட்கார, அவனை பார்த்தபடி ஆதிரை எதிரில் அமர்ந்தாள்.
*******************************************************************************************************************
பௌர்ணமிக்கு இன்னும் பத்து நாட்களே இருக்க.. சரி பார்ப்போம் என ஆதிரையும் விட்டு விட்டாள். ஆனால் வெற்றி எப்போதும் எதோ யோசனையிலேயே இருந்தான். சரியாக உண்பது இல்லை உறங்குவது இல்லை.
அவனை இழுத்து வைத்து பேசினாலும், அவன் பேச்சிலோ புன்னகையிலோ உயிர்ப்பே இல்லை. தனக்காக நடிக்கிறான் என நன்றாகவே புரிந்தது.
கணவன் இப்படியிருக்கும் போது ஆதிரையால் மட்டும் நிம்மதியாக இருக்க முடியுமா? ஏன்? எதனால் என்பதிலேயே உழன்டு மனஉளைச்சலுக்கு ஆளானாள்.
*******************************************************************************************************************
மனைவி எதற்கு சென்றிருக்கிறாள் என வெற்றிக்கு தெரியும். அவள் விக்ரமிடம் என்ன கேட்பாள் என்றும் தெரியும். ஆனால் அவன் எதுவும் சொல்லவில்லை.”
“சரி பேசிட்டு வா.” என வைத்து விட்டான்.
வனிதா முன்பு தான் வெற்றி ஆதிரையிடம் பேசினான். அதற்கு முன்பு ஆதிரை மில்லில் இருப்பது வனிதாவிற்கு தெரியும். விக்ரமின் டிரைவர் அழைத்து சொல்லி இருந்தான்.
“அவ வந்திடுவா... நீங்க வனிதாவுக்கு குடிக்க எதாவது கொடுங்க.” என ஜோதியிடம் சொன்னவன், மகளை பார்த்துக் கொண்டு அங்கேயே உட்கார்ந்து விட்டான்.
வெற்றியைப் பார்த்து வனிதாவுக்கு ஆச்சர்யமே... மனைவியின் மேல் அவனுக்கு எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது. எவ்வளவு நம்பிக்கையோ அதே அளவு புரிதலும் உண்டு என புரிந்தது.
*******************************************************************************************************************
மில்லுக்கு வந்த வெற்றியை விக்ரம் நன்றாக பிடிபிடியென என பிடித்துக் கொண்டான்.
“நீ ஏன் டா இப்படி இருக்க? ஆதிரைக்கு சந்தேகம் வந்திடுச்சு. இனி அவ விடமாட்டாள்.”
“அப்ப அவகிட்ட சொல்ல சொல்றியா?”
“சொல்லுன்னு சொல்லவும் பயமா இருக்கு. அந்த ஆனந்தி விஷ்யத்துக்கே உன் பொண்டாட்டி என்னை என்ன கிழி கிழிச்சான்னு பார்த்தோமே. இப்ப உன் விஷயம் தெரிஞ்சது. அவ என்ன முடிவு எடுப்பான்னே தெரியலையே?”
“அது தான் டா எனக்கு சொல்லவும் பயமா இருக்கு. எனக்கு எவனைப் பத்தியும் கவலை இல்லை. ஆனா ஆதி என்னை தப்பா நினைச்சா என்னால தாங்க முடியாது டா...”
“எதுக்கு டா உனக்கு இந்த டென்ஷன். பணத்தை கொடுத்து தலைமுழுகிட்டு பேசாம இருக்கலாம். நீதான் சொன்னா கேட்க மாட்டேங்கிற.”
அவன் படுத்த அடுத்த நொடி, அறைக்குள் வெளிச்சம் பரவ, அவனைப் பார்த்தபடி ஆதிரை நின்றிருந்தாள்.
“நீ தூங்கலையா?” என்றபடி வெற்றி எழுந்து உட்கார, அவனை பார்த்தபடி ஆதிரை எதிரில் அமர்ந்தாள்.
*******************************************************************************************************************
பௌர்ணமிக்கு இன்னும் பத்து நாட்களே இருக்க.. சரி பார்ப்போம் என ஆதிரையும் விட்டு விட்டாள். ஆனால் வெற்றி எப்போதும் எதோ யோசனையிலேயே இருந்தான். சரியாக உண்பது இல்லை உறங்குவது இல்லை.
அவனை இழுத்து வைத்து பேசினாலும், அவன் பேச்சிலோ புன்னகையிலோ உயிர்ப்பே இல்லை. தனக்காக நடிக்கிறான் என நன்றாகவே புரிந்தது.
கணவன் இப்படியிருக்கும் போது ஆதிரையால் மட்டும் நிம்மதியாக இருக்க முடியுமா? ஏன்? எதனால் என்பதிலேயே உழன்டு மனஉளைச்சலுக்கு ஆளானாள்.
*******************************************************************************************************************
மனைவி எதற்கு சென்றிருக்கிறாள் என வெற்றிக்கு தெரியும். அவள் விக்ரமிடம் என்ன கேட்பாள் என்றும் தெரியும். ஆனால் அவன் எதுவும் சொல்லவில்லை.”
“சரி பேசிட்டு வா.” என வைத்து விட்டான்.
வனிதா முன்பு தான் வெற்றி ஆதிரையிடம் பேசினான். அதற்கு முன்பு ஆதிரை மில்லில் இருப்பது வனிதாவிற்கு தெரியும். விக்ரமின் டிரைவர் அழைத்து சொல்லி இருந்தான்.
“அவ வந்திடுவா... நீங்க வனிதாவுக்கு குடிக்க எதாவது கொடுங்க.” என ஜோதியிடம் சொன்னவன், மகளை பார்த்துக் கொண்டு அங்கேயே உட்கார்ந்து விட்டான்.
வெற்றியைப் பார்த்து வனிதாவுக்கு ஆச்சர்யமே... மனைவியின் மேல் அவனுக்கு எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது. எவ்வளவு நம்பிக்கையோ அதே அளவு புரிதலும் உண்டு என புரிந்தது.
*******************************************************************************************************************
மில்லுக்கு வந்த வெற்றியை விக்ரம் நன்றாக பிடிபிடியென என பிடித்துக் கொண்டான்.
“நீ ஏன் டா இப்படி இருக்க? ஆதிரைக்கு சந்தேகம் வந்திடுச்சு. இனி அவ விடமாட்டாள்.”
“அப்ப அவகிட்ட சொல்ல சொல்றியா?”
“சொல்லுன்னு சொல்லவும் பயமா இருக்கு. அந்த ஆனந்தி விஷ்யத்துக்கே உன் பொண்டாட்டி என்னை என்ன கிழி கிழிச்சான்னு பார்த்தோமே. இப்ப உன் விஷயம் தெரிஞ்சது. அவ என்ன முடிவு எடுப்பான்னே தெரியலையே?”
“அது தான் டா எனக்கு சொல்லவும் பயமா இருக்கு. எனக்கு எவனைப் பத்தியும் கவலை இல்லை. ஆனா ஆதி என்னை தப்பா நினைச்சா என்னால தாங்க முடியாது டா...”
“எதுக்கு டா உனக்கு இந்த டென்ஷன். பணத்தை கொடுத்து தலைமுழுகிட்டு பேசாம இருக்கலாம். நீதான் சொன்னா கேட்க மாட்டேங்கிற.”