ஹாய் மல்லி,
நீ என்பது யாதெனில்...
கேள்வியாய் தொடங்கி...
தோல்வியாய் அடங்கி...
வேள்வியாய் முழங்கி...
வாழ்வியல் மரபின்
வாத்சல்யம் சொன்ன விடையில்...
நீ என்பது நானாக...
நான் என்பது நாமாக...
நாம் என்பது நமதென்றால்....
நம் உலகம் நம் கையில்...!
நீ என்பது நான்
என்ற வழக்கு...
காலம் காட்டும்
விடிவான கிழக்கு...!
அருமை, அற்புதம், அழகின் பேரழகான வாழ்வியல் எதார்த்தம் சொன்ன கதை. வாழ்த்துக்கள் மல்லி, நன்றி