Naan Ini Nee - Precap 29

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
அனுராகாவிற்கு தான் ஏன் இங்கு வந்தோம் என்பதே விளங்கவில்லை. ஆனால் வீட்டிலிருந்து கிளம்பியதுமே அவளின் மனதில் தோன்றியது D- வில்லேஜ் மட்டும்தான்.

வேறெங்கு செல்லவும் அவள் மனம் இடம்கொடவில்லை..!!

D- வில்லேஜ் வந்த பின்னும் கூட, அவளால் ஒரு இயல்பில் இருக்க முடியவில்லை..

அவளை அடையாளம் கண்ட ரிசப்ஷன் பெண்,முன்னே இவள் செய்த கலாட்டாவை எண்ணி “ரூம் இல்லை மேம்..” என,

“எனக்கு ரூம் இல்லைன்னு, உங்க பாஸ்கிட்ட சொல்லுங்க.. தென் என்கிட்டே சொல்லுங்க..” என்றவள் இடம் விட்டு நகரவில்லை.

ரிஷப்ஷன் பெண்ணோ, மேனேஜரை அழைக்க, அவர் வந்தவரோ “மேம் கலாட்டா செய்யாம கிளம்பிடுங்க..” என,

‘தோடா...’ என்று பார்த்தவள், “உங்க பாஸ்கிட்ட கேட்டிட்டு சொல்லுங்க..” என்றாள் அப்போதும்.

அவள் இங்கே இருக்கக் கூடாது என்று சொல்வதற்கு தீபனுக்கு மட்டுமே உரிமையுண்டு என்பது அவளது எண்ணம். இருவருக்கும் இடையில் இருக்கும் பிரச்னைகள் எல்லாம் வேறு. ஆனால் இது வேறு..

“ம்ம் கேளுங்க.. நீங்க கேட்கறீங்களா இல்லை நான் கேட்கவா..” என்று அனுராகா குரலை உயர்த்த,

-------------------------------------------------

புனீத் ஒருவழியாய் தீபனை பிடித்து அவன் சேகரித்த தகவல்களையும் சொல்லிட, அனைத்தையும் கேட்டவன் கேட்ட முதல் கேள்வியே “இதெல்லாம் அனுக்கு தெரியுமா??!” என்பதுதான்.

“ம்ம் தெரியும்டா..” என,

“ஷிட்...!! ஏன்டா.. என்கிட்டே ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்லிருக்க வேண்டியதுதானே..” என்று சாய்ந்து நின்றிருந்த காரினை, கை முட்டியால் குத்த,

“எத்தனை டைம்தான்டா உனக்கு ட்ரை பண்றது..” என்றவன், பின் தயங்கி “இன்னொரு விஷயம் தீப்ஸ்..” என,

“என்ன மிதுன் ஆ!!!!” என்றான் தீபன் அழுத்தம் திருத்தமாய்...

----------------------------------------------


“அங்க இருக்கிறது சேப் இல்லைன்னா.. வேற பிளேஸ் வந்திடுங்க..”என்றவன் “ம்ம்.. D வில்லேஜ் கூட்டிட்டு போயிடு தர்மா.. நான் சொல்லிடுறேன்..” என்று தர்மாவிடம் சொன்னவன்,

அடுத்து சேட்டிற்கு அழைத்து “என்ன சேட் உங்க வீட்டு பொண்ணு உங்களுக்கு வேணாமா.. லாஸ்ட்ல என்னையே போட பார்த்தாச்சு இல்லையா..” என்று உறும,

“இல்ல.. இல்ல பேட்டா... ஷர்மா எப்படி வந்தான்னு தெரியாது..” என,

“ஓஹோ!!! ஷர்மா வரலைன்னா.. நான் இப்போ இல்லை அப்படிதானே..” என்றவன்,

“ஆனதை பார்த்துக்கோ சேட்.. இனி உன்னால எதுவும் செய்ய முடியாது..” என்றான் உஷ்ணக் குரலில்..

“இல்ல பேட்டா.. நான்.. நான் சொல்றதை ஒரு வார்த்தை..” எனும்போதே,

“அதை போய் மிதுன்கிட்ட சொல்லு...” என்று போனை வைத்திட,

-------------------------------------------

அனுராகா வீட்டில் இல்லை என்ற செய்தியே தீபனுக்கு அதிர்வை கொடுக்க, அவள் D வில்லேஜில் இருக்கிறாள் என்ற நினைப்பே, அவள் தன்னோடு வந்து சேர்ந்தது போலிருந்தது.

‘என்கிட்டே சொல்லிருக்கலாம்..’ என்று எண்ணினாலும்,

“ராகா..!!!” என்று அவளின் பெயரை உச்சரித்தவன், “ம்ம் நான் வேணாம்.. ஆனா அங்க மட்டும் போவியா நீ..” என்றெண்ணியவன் “நான் வரமாட்டேன் நினைச்சியா??!!!” என்று யோசிக்க,

காதர் வந்தவரோ “தம்பி நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க.. ஒரு வாரம் போல நீங்க இங்க இருக்கவே வேணாம்.. ஆர்த்தி பொண்ண அவங்க வீட்ல விட்டுடறேன்.. எதுவும் சரின்னு எனக்கு படலை..” என,

“என்ன காதர்ணா.. எல்லாமே சரியாதானே போயிட்டு இருக்கு..” என்று தீபன் சொல்ல,

“இல்ல தம்பி.. எனக்கு அப்படி தோணலை. அந்த ஷர்மா அவன் எப்படி வந்தான் நடுவில.. யோசிச்சீங்களா..” என, தீபனின் முகம் மாறிவிட்டது.
 

Joher

Well-Known Member
:love::love::love:

என்னம்மா உங்களுக்கு வேலை வேணுமா இல்லையா???
பாஸோட பாஸுக்கே ரூம் இல்லையா???? உங்க D வில்லேஜே இல்லாமல் பண்ணிடுவா......
ஓடிப்போ அந்த பழைய ரூமையே குடு.......

அதே ரூம் குடுத்தாச்சா?????
வர்றார் பாஸ் பின்னாடி....... அப்புறம் தெரியும் D-village பாஸ் யாருன்னு......

எல்லோரும் மிதுன் னு ஒரே இடத்துக்கு வந்துட்டாங்க.......
எங்கேயோ மிதுன்???
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஓ அனுராகா போயிருக்கும்
அதே D village-க்கு ஆர்த்தியுமா?
இதனால தீப்ஸ்க்கு எதுனா
பிரச்சனை வருமோ?
சேட் தீப்ஸ்ஸின் வழிக்கு வரலையா?
ஷர்மா எப்படி நடுவில வந்தான்?
காதர் பாய் சொல்லுறதையும்
கொஞ்சம் கேளு தீபன்
 

RajiChele

Well-Known Member
Ha ha raga kovichutu deeps place ku poitu sema!!  epo sis rendu perum meet panu vanga??? Eagerly waiting for ud.. :):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top