மிகவும் அருமையான பதிவு மகேஸ்வரி
.தேனுவை காணாமல் தீனா,சுமதி தவிப்பது கண்கலங்க வைக்குது
.தன்னோட கூட்டாளிங்க செஞ்சுருப்பாங்கன்னு நெனச்சு கையில் கிடைச்சவனை அடிபின்னுவது,அவனில்லை என தெரிவதுடன்,அந்த இக்கட்டான நேரத்திலும் அவன் குழந்தைகளுக்கு சாப்பாடு வாங்கி தரசொல்லும் தீனாவை பாராட்ட வார்த்தையில்லை
அடப்பாவி...கோபியா கடத்துனது
.சின்ன குழந்தைய மயக்கம் வர்றது போல அடிச்சிருக்கான்
மனுசனா இவன்
.நல்லவேளை குழந்தை கமலம் கிட்ட கிடச்சா,தன் கவனக்குறைவால் தான் தேனு காணாம போய்ட்டானு குற்றவுணர்ச்சியில் இருந்த ராசாத்தியம்மாவை சுமதி சமாதானம் செய்து தேனுவை கொடுப்பது அருமை
.
தேனு தன்னை போல பணத்துக்காக பிச்சை எடுக்கறவங்கட்ட,பிள்ளை கடத்துறவன்ட்ட மாட்டி இருந்தா என்ற எண்ணமே தீனாவை கலங்க வைக்குது
.புதுவரவு வரப் போகுது
. சுமதி மயங்கி விழ இதுதான் காரணமா
.சுதா போலிஸ் ஆகிட்டா
திலகவதியின் தம்பி சுதாவை கல்யாணம் பண்ண போறான்
.கமலம் இப்பதான் சந்தோஷமா இருக்கிறார்
.
சுமதி,தீனாவுக்கு ரெட்டை பசங்க,தேனு தம்பிங்களுக்கு அப்பாம்மா பேர்,அட்ரஸ் சொல்லித்தருவது அருமை
.சுமதி வேலை பார்த்த கார்மெண்ட்ஸை சுமதியே வாங்கி அசத்திட்டா
.தாயும், பிள்ளையா இருந்தாலும், வாயும்,வயிறும் வேறுதான்,பணம் தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என குணா சொல்வது சரிதான்
.
அடப்பாவி...அக்கா பெண்கிட்டயே தப்பா நடந்துக்க பார்க்கறானே கோபி மனுசனா இவன்
தேனு அப்பா இவன்தானா,மகளையே கடத்தியிருக்கான்
.எத்தனையோ பெண்கள் வாழ்க்கையை சீரழித்த கோபி,பிச்சைக்காரனாக தெருநாய் கடித்து இறந்தது சரியான தண்டனை...
பெற்றவர்கள் இல்லாமல் அண்ணன் ஆதரவில் வளர்ந்து,அண்ணியின் கொடுமைக்கு ஆளாகி வீட்டை விட்டு வந்த சுமதி,சூழ்நிலை காரணமாக தேனுக்கு அம்மாவாகவும்,தீனாவின் மனைவியாக மாற,சுமதி வந்த தருணம் ரௌடியாக இருந்த தீனா மனைவி,மகள் அன்பால் திருந்தி கார்மெண்ட்ஸ்
முதலாளியாகி,குடும்பம்,சொந்தங்களுடன் சந்தோஷமான வாழ்க்கை வாழ்வது அருமை
.
அருமையான குடும்பகதை.எளிமையான நடை.நிறைவான முடிவு.வாழ்த்துக்கள் மகேஸ்வரி
.