ANP-7

Advertisement

Gayus

Writers Team
Tamil Novel Writer
Hii..frds& sis 7th epi pottuten..comments kodukka mar and hidden inga...happy reading:):)

அத்தியாயம் – 7

உன்னை மறக்க நினைத்தாலும்...
உன் கண்கள் என்னை மறக்கவிடவில்லை...
“இளா..... அப்பா உனக்கு மாப்பிள்ளைப் பார்க்கப் போறாங்களாம்..... அதான் உங்கிட்ட ஒரு வார்த்தை கேட்க சொன்னார்டா..... நீ என்ன சொல்ற இளா....” அவளின் அம்மா போனில் கேட்க......
இதைக் கேட்டதும் அவளின் நினைவில் வந்ததது.... அவனின் முகம் தான்..... தன் எண்ணப்போக்கை நினைத்தவள்.... அதிர்ந்து பின் நிதானமாக “உங்க இஷ்டம்மா....” என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்.... “ச்ச்ச... நான் ஏன் அவன பத்தியே நினைக்கிறேன்..... இனிமேல் அவன பத்தி நினைக்ககூடாது....” தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.... நினைப்பது எல்லாம் நடப்பதில்லையே.....

இரவு வீட்டிற்கு செல்லும் வழியில் ஆதியின் மொபைல் ஒலிக்க.... அம்மா என்றதும் எடுத்துப் பேசியவன்... அவர் சொன்ன விஷயத்தைக்கேட்டு எரிச்சலுற்றான்..... “அம்மா.... எப்ப கால் பண்ணாலும் கல்யாணப் பேச்சுதான.... டாப்பிக்க சேன்ஞ்ப் பண்ணுங்கம்மா....” என்று சொல்ல.... “அதெல்லாம் எனக்கு தெரியாது.... நான் உனக்கு பொண்ணப் பார்த்துட்டேன்.... நாளைக்குப் பொண்ணு வீட்லருந்து தகவல் வந்துரும்.... சென்னைல தான் இருக்காங்களாம்... ஒகே சொல்லிட்டாங்கனா... வர ஞாயிறு அன்னைக்கு பொண்ணுப் பார்க்கப் போறோம்.... சனி கிழமை காலைல நானும், நந்தினியும் அங்க இருப்போம்....” என்று சொல்லி உடனே வைத்துவிட்டார்....

பாவம் அவரும் என்னதான் செய்வார்..... இரண்டு வருடமாக கேட்டுக் கொண்டு இருக்கிறார்.... “லவ் எதாவாது பண்றியாட..” என்று கேட்டதற்கும் பதில் இல்லை.... அதான் அவரே முடிவெடுத்துவிட்டார்....
ஆதி தன் அம்மாவிற்கு மீண்டும் அழைக்க..... அணைத்து வைக்கப் பட்டுள்ளது என்று வர.... “இந்த அம்மா இருக்காங்களே....” என்று தலையிலே அடித்துக் கொண்டான்.... இவனின் செய்கையைப் பார்த்த விஷ்வா “என்னடா.... ஏன் இப்படி தலையிலேயே அடிச்சிக்கற....” என்று கேட்க.... அம்மா சொன்னதை சொல்ல.... “ஹப்பா.... ரொம்ப சந்தோஷம்... நீ குடும்பஸ்தன் ஆகிட்டேனா... நானும் ஒருப் பொண்ணப்பார்த்து லைப்ல செட்டில் ஆயிடுவேன்....” என்று சொன்னவனை கண்டு “துரோகி... அதான் எனக்கே தெரியாம ஏற்கனவே பொண்ணப் பார்த்துட்டியேடா.... அப்புறம் என்ன....” என்று அவன் தலையிலேக் கொட்டினான்.....
தலையை தேய்த்துக் கொண்டே “நான் எப்படாப் பொண்ணப் பார்த்தேன்...” என்று கேட்க... “ஓ.. அப்போ மார்னிங் ஆபீஸ் வந்த பொண்ணு யாருடா.... “

“ஆஹா.... இவன் எல்லாத்தையும் பார்த்துட்டான் போலவே... என்ன சொல்லி சமாளிக்கறதுனு தெரியலையே...” என்று யோசித்தவனைக் கண்டு சிரித்தான் ஆதி.... “டேய் ரொம்ப யோசிக்காத... உன் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்டுடிச்சி... என்ன சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிக்கிற அதான... சரி ஒப்பனா கேக்கறேன்... ஏண்டா அந்த பொண்ண அவாய்ட் பண்ற... உன்ன ரொம்ப.. உண்மையா லவ் பண்றா போலடா...” என்று ஆதி கேட்க...

“எனக்கும் தெரியும்டா.. ஆனா இதெல்லாம் எனக்கு ஒத்து வராதுடா.... அவள பார்த்தாளே தெரியுது ரிச்னு... எனக்குலாம் பொண்ணு தர மாட்டாங்கடா.... இப்போ மட்டும் அம்மாவும், அப்பாவும் என்கூட இருந்தா... கண்டிப்பா அவள யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன்டா... அதான் மச்சான்...” என்று சொல்லும் நண்பனைக் கண்டு... வருத்தப்பட்டவன்.. கூடவே ஒரு முடிவும் எடுத்தான்...

“ஆனா ஒன்னு மட்டும் தெரியலடா.... நான் அவள லவ் பண்றனா இல்லையானு... அத கண்டுபிடிக்க எதாவது ஐடியா சொல்லேண்டா...” என்று சொன்னவனை... “ச்ச்ச... இவனுக்கு போய் வருத்தப்பட்டேனே...” என்று நொந்துகொண்டான் ஆதி....

இளாவின் வீட்டில், சிவராம் “சீதா.... நம்ம நிலாக்கு அந்த பையன் தான் கரக்டா இருப்பான்... இப்போதான் ராஜன்கிட்ட போன்ல கேட்டேன்.... ரொம்ப நல்ல பையன்.. நான்கூட கோர்ட்ல பார்த்துருக்கேன்... பட் பேசுனதுல்ல.... ரேஷ்மி அப்பாகிட்ட சொல்லிட்டேன்... அவரும் பையனோட அம்மாகிட்ட சொல்லிடுவாரு.... நாளைக்கு அவங்ககிட்டப் பேசிடலாம்.... ஒகே... வா....” என்று கேட்க... அவரும் “ரொம்ப சந்தோஷம்ங்க...” என்று சொல்லிவிட்டு... தூங்கிப் போயினர்.....

சுந்தரிப்பாட்டி தனது அறையில் உறங்கிக் கொனண்டிருக்க..... வினிஷா அறையின் பால்கனி வழியே அந்த உருவம் உள்ளே வந்தது.... எதையோ தேடிக்கொண்டிருந்தது.... புக் ஷெல்பின் இடுக்கில் மாட்டிக்கொண்டிருந்த பட்டனை எடுக்க முயற்சி செய்ய.... புக்ஸ் எல்லாம் கீழே விழ... எடுத்து அடுக்கி வைத்துக் கொண்டிருக்க யாரோ வரும் சத்தம் கேட்க.... உடனே பால்கனியின் பின்னாடி ஒளிந்துக்கொண்டது.....

பாட்டிக்கு வினிஷாவின் நினைவு திடீரென்று வர... எழுந்து அவளின் அறைக்கு சென்றார்.... பால்கனி கதவு திறந்து இருக்க.... லாக் செய்துவிட்டு வந்துப்படுத்தார்.... அந்த உருவமோ... “அய்யோ அந்த பட்டன் மட்டும் போலீஸ்காரன்கிட்ட கிடச்சது.... எப்படியாவது கண்டுபுடிச்சிடுவானே.... இப்போ என்னப் பண்றது....” என்று யோசித்துவிட்டு.... “இப்போதைக்கு அவன் இங்க வரமாட்டான்... அப்புறம் வந்து எடுத்துட்டுப் போகலாம்...” என்று வந்த வழியே திரும்பிச்சென்றது.....

தூங்கப்போகும் நேரத்தில் விஷ்வாவின் மொபைல் ஒலிக்க.. எடுத்து காதில் வைத்தவன்.... “ஹாய்... விஷு...” என்று பெண் குரல் கேட்க.... யாரென்று கண்டுபிடித்தவன்.... “என் நம்பர் உனக்கு எப்படிக் கிடச்சது..” என்று அவன் கேட்டாலும்.... உள்ளுக்குள் அவ்வளவு சந்தோஷம் அவனுக்கு.... “எப்படியோ கண்பிடிச்சேன்... சரி அத விடு... நம்ம மேட்டருக்கு வா... நான் சொன்னதுக்கு பதில் சொல்லு....” என்று அவள் விடாப்பிடியாக நிற்க... இனிமேல் அவளின் மனதில் ஆசை வளரவிடக்கூடாது என நினைத்தவன்... தன் மனதில் இருப்பதை வெளிப்படையாக சொல்லிவிட்டான்....

அவன் சொல்வதையெல்லாம் கேட்டவள்... “நானும் கிட்டதட்ட ஒரு அநாதை மாதிரி தான் விஷு...” என்று... எல்லாத்தையும் சொல்லிவிட்டு... “நீயும் என்ன பிடிக்கலன்னு சொல்லிடாத விஷு....” என்று அழ ஆரம்பித்துவிட்டாள்.... அவள் அழுவதை அவனால் தாங்கிக்கொள்ள முடியாமல்..... “ஏய்... ஷாலி அழாதம்மா.... உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்....” என்று அவன் சொல்ல.... “நிஜமாவா....” என்று அவள் கேட்க.... “ஆமா.... இனி நீதான் எல்லாம் எனக்கு... நான்முடிவுப் பண்ணிட்டேன்.... ஐ லவ் யூ.....” என்று அவன் சொல்ல.... வெட்கம்பட்டுக்கொண்டே... ஏன் அதகூட டெரர்ரா சொல்றீங்க...” என்று அவள் கேட்க.... சிரித்தவன்... பின் ஏதோ ஏதோப் பேசிக்கொண்டே இருவரும் தங்களின் துணையை நினைத்து தூங்கினர்.....

ஆனால் ஆதி, தன் அம்மா சொன்னதையும், இளாவையும் தான் நினைத்துக் கொண்டிருந்தான்.... இதுவரை எந்த பெண்ணிடமும் சலனப்படாதவன்... இவளிடம் மட்டும் ஏன் எனக்கு இவ்வளவு ஈடுபாடு... “நான் அவள லவ் பண்றேனோ... ம்ம்ம்... ஒகே.. அத நாளைக்கு கன்பார்ம் பண்ணிடலாம்... “

அய்யோ பாவம் ஆதி... அடுத்த இரண்டு நாட்களுக்கு அவள் இந்த ஊரில் இருக்கமாட்டாள் என்று அவனுக்கு தெரியவில்லை.... அவள் டாக்டர்ஸ் கேம்ப் விஷயாமாக செல்லவிருக்கிறாள்....

காலை விடிந்ததும்... விடாது போன் பேசிக்கொண்டிருக்கும் நண்பனைக் கண்டு எரிச்சலுற்றவன்.... “டேய்... அப்படி யார்கிட்டதான்டா மொக்க போட்டுட்டு இருக்க...” என்று ஆதி கேட்க.... “ம்ம்ம்.... சாரிடா மச்சான்... சொல்ல மறந்துட்டேன்... நானும் ஷாலிய ரொம்ப லவ் பண்றேன்டா.... அவகிட்டயும் சொல்லிட்டேன்...” என்று விஷ்வா சொல்ல... “இது எப்போடா நடந்தது....” என்று ஆதி சந்தோஷமாக கேட்க... “அது நேத்து நீ ரொம்ப நேரம் எதையோ நினைச்சிட்டு உட்கார்ந்து இருந்தல்ல அப்போடா....” என்று சொல்ல.... “ச்ச்ச... இவன் பேசறதுக்கூட தெரியாம.... அவளப்பத்தி நினைச்சிட்டுருந்துருக்கேன்...” என்று நினைத்துக் கொண்டு.... “ரொம்ப சந்தேஷம்டா மச்சான்...” என்று தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தான்... ஆதி...

ஃபார்மல் உடையில் ஹாஸ்பிட்டலின் உள்ளே நுழைந்த ஆதி... கண்களை சுழலவிட... அவள் தான் கண்ணில் படவில்லையே... எதிரில் ஹரிஷ் வர... “ஹாய் ஹரிஷ்...” என்று ஆதி சொல்ல... “ஹலோ சார்...என்ன இந்தப் பக்கம்... அதான் போஸ்மாடர்ம் முடிஞ்சி பாடியையும் வீட்டுக்கு அனுப்பி எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சே....” என்று அவன் விடாமல் கேட்க... “ஹரிஷ் கொஞ்சம் முச்சுவிடுங்க... நான் மிஸ் இளாவப் பார்க்க வந்தேன்... அவங்க இல்லையா...“ என்று கேட்க.. “அவங்க டூ டேஸ் கேம்ப் போயிருக்காங்க சார்... எனி இம்பார்டன்ட்...” என்று கேட்க... “இல்ல அவங்கக்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் அவ்வளவு தான்... ஒகே சி யூ லேட்டர்...” என்று சொல்லிவிட்டு சென்றான்...

“ச்ச்ச... எப்பவும் நான் பார்க்க நினைச்சா மட்டும் என் கண்ணுலப் படமாட்றா...” என்று நினைத்துக்கொண்டே வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தவனின் மொபைல் ஒலிக்க.. அம்மா தான்.. “ம்ம்ம்.. சொல்லும்மா...” என்று சொல்ல... “டேய் பொண்ணு வீட்ல ஒகே சொல்லிட்டாங்கடா... பொண்ணு போட்டோ வாட்சப்ல அனுப்பிருக்கேன்டா... நானும் தங்கச்சியும் சனி கிழமை வந்துடுவோம்டா..” என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார்... “இந்த அம்மாக்கு இதே வேலையாப் போச்சு நான் என்ன சொல்ல வரன்னே கேட்கமாட்றாங்க...” என்று வாய்விட்டுப் புலம்பியவன்.. “போட்டோவப் பார்க்கலாமா வேண்டாமா..” என்று யோசித்தவன்... “வேண்டாம்” என்று சொல்லிவிட்டு அலுவலகம் நோக்கி சென்றான்...

இங்கே ஒய்வு அறையில் அமரந்து தனது அப்பா மொபைலில் அனுப்பி வைத்த மாப்பிள்ளையின் போட்டோவைப் பார்த்து அதிர்ந்த இளா “ஆஹா.. இவன் ஏற்கனவே நம்மளக்கண்டா முறைப்பான்... இதுல வாழ்க்கப்பூறாவா... ம்ம்ம்... அவனுக்கு என்னப் புடிக்குமா...” “அப்போ உனக்கு பிடிச்சிருக்கா...” என்று மனசாட்சி கேள்வி கேட்க... அதனை அடக்கியவள்.. “முதல்ல அவன்கிட்ட இருந்து பதில் வரட்டும்... எப்படியா இருந்தாலும் பொண்ணுப் பார்க்க வருவான்ல அப்ப பார்த்துக்கலாம்...” என்று சொல்லிவிட்டு அவனின் கண்களைப் பார்த்தவள்... மெய் மறந்து “இவனோட கண்ணால தான் நான் எப்பவும் இவனையே நினைச்சிட்டுருந்துருக்கேன்...” என்று சொல்லிக்கொண்டாள்...

நாளை வீடு மாற்றுவதால்.... இரவே எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்தனர்... விஷ்வா போன் பேசிக்கொண்டே வேலை செய்ய... அதைக்கண்ட ஆதி “லவ்ன்னு ஒன்னு வந்துட்டா நண்பன மறந்துடறாங்கப்பா...” என்று புலம்பிக்கொண்டே வேலையை முடித்தான்...

படுக்கையில் விழுந்த ஆதிக்கு அம்மா சொல்லியது நினைவு வர போனை எடுத்துப் பார்த்தவன்.. வாட்சப்பை ஒப்பன் செய்து பார்க்க பெண்ணின் முகத்தைப் பார்த்தவனின் முகம் பிரகாசமானது... உடனே தன் அம்மாவிற்கு கால் செய்ய “ம்ம்ம்... சொல்லுடா பொண்ணுப் பிடிச்சிருக்கா...” என்று கேட்க... “இந்தப் பொண்ண எப்படி உங்களுக்கு தெரியும்மா...” என்று அவன் கேட்க... “அதுவாடா.. நாங்க புதுசா குடிவந்துருக்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டுல இருக்கறவங்க பழக்கம்டா.. அவங்க மூலமாதான்டா தெரியும்...” என்று சொன்னார்...
கொஞ்சமும் யோசிக்காமல் “அம்மா எனக்குப் பொண்ண ரொம்பப் பிடிச்சிருக்கும்மா...” என்று சொல்லிவிட்டு போனை வைத்தவனின் நினைவு மொத்தமும் அவளே... “என்ன ஆச்சு இந்தப் பையனுக்கு கல்யாணப் பேச்சு எடுத்தாலே கத்துவான்... இப்போ பொண்ணப் பார்த்தவுடனே கவுந்துட்டானா... ம்ம்ம்.. ஏதோ அவன் சம்மதிச்சதேப் போதும்... “ என்று நிம்மதியாக தூங்கிப்போனார்...

-தொடரும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top