AMP - 19

Advertisement

Gayus

Writers Team
Tamil Novel Writer
Hii... Frds & siss... AMP 19 epi pottachu padithuvittu comments kodukka marakkadhinga... Happy Reading...:):):)


அத்தியாயம் - 19

நீயும் என்னை பிரிந்தால்...
எந்தன் பிறவி முடியுமே...
மீண்டும் வந்து சேர்ந்தால்...
மறுபிறவி தொடருமே...

ஆதி அந்த இடத்திற்குள் நுழைய.. அவன் முன்னாடி இரண்டு அடியாட்கள் வந்து நின்றனர்... காரைவிட்டு இறங்கிய ஆதியை செக் செய்தவர்கள் அவனிடம் இருந்த துப்பாக்கியை வாங்கிவிட்டு.. "ம்ம்ம்.. போ.." என்று சொல்ல... ஆதி முன்னே நடக்க.. இருவரும் அவனின் பின் சென்றனர்.. அந்த இடம் ஒரு பெரிய குடவ்ன் மாதிரி இருந்தது... உள்ளே சென்ற ஆதியின் தலையில் பின்னாடி வந்த ஒருவன் கட்டையால் அடிக்க... ஆதி சுதாரிப்பதற்குள் அவனை ஒரு சேரில் கட்டிவைத்தனர்... அங்கே வந்த தாஸ் "என்ன.. போலீஸ் லாப்டாப் எங்க.." என்று கேட்க... ஆதி "டேய்.. முதல்ல என் பொண்டாட்டிய நான் பார்க்கனும்.. அப்பதான் நான் சொல்லுவேன்..." என்று திமிறிக்கொண்டே சொல்ல... "ம்ம்ம்... பொண்டாட்டி மேல அவ்ளோ லவ்வு.. டேய்.. பசங்களா இவன் பொண்டாட்டிய இங்க கூட்டிட்டு வாங்கடா..." என்று தாஸ் சொல்லவும்... இளா நிதானமே இல்லாமல் நடந்து வர... "இளா.." என்று ஆதி கத்த... லேசாக நிமிர்ந்து பார்த்தவள் ஆதியின் உருவம் மங்கலாக தெரிய "ஆது வந்...வந்துட்டீங்களா..." என்று குழறியபடி சொல்லிக்கொண்டே கீழே குனிந்துகொண்டாள்...

"ம்ம்ம்... பார்த்துட்டல.. லாப்டாப் எங்க இருக்குன்னு சொல்லு.." என்று தாஸ் கேட்க.. "கார்ல இருக்கு.." என்று ஆதி சொல்ல.. தாஸ் அங்கிருந்த ஒருவனை அனுப்பி எடுத்து வர சொன்னவன்.. ஆதியிடம் சென்றவன் "டேய்.. உனக்கொன்னு தெரியுமா... உன் பொண்டாட்டி மேல எனக்கு ஒருகண்ணு.. என்னமா இருக்கா தெரியுமா.." என்று சொல்ல.. ஆதி கை முஷ்டிகள் இறுக நின்றிருந்தான்.. "இப்போ.. உன் கண்ணு முன்னாடியே அவள நான் அனுபவிக்கனும்.. அதுதான் உனக்கான தண்டனை.. ஒவ்வொரு நாளும் ஏண்டா இவன்கிட்ட வச்சிக்கிட்டோம்னு.. நீ நினைச்சே சாகனும்டா..." என்று இளாவின் சேலையை உருவ சென்றான்.. "வேணாம்டா.. அவள விட்டுடு.. உனக்கு என் மேலதான கோவம்.. என்ன என்னவேணா செஞ்சிக்கோ..." என்று ஆதி கத்திக்கொண்டே பின் பாக்கெட்டில் வைத்திருந்த பிளேடை எடுத்து கயிற்றை அறுத்துக்கொண்டிருந்தான்... தாஸ் இளாவின் சேலையை உருவ.. அவள் கீழே விழுந்தாள்... ஆதி கயிற்றை அவிழ்த்துவிட்டு வேகமாக வந்தவன் தாஸின் வயிற்றிலே ஒரு குத்துவிட்டான்.. தாஸ் தூரபோய்விழ.. ஆதி இளாவை நோக்கி செல்ல.. அடியாட்கள் தாக்க வந்தனர்... அவர்கள் அனைவரையும் தன் கைவரிசையால் ஈடுகட்டியவன்... இளாவிடம் சென்றவன் தன்னுடைய சட்டையை கழற்றி அவளுக்கு போர்த்திவிட்டான்... "லாலீபாப்.. இங்க பாருடி கண்ணத்திற..." என்று அவளின் கன்னத்தை தட்ட... லேசாக விழித்தாள்.. அதற்குள் தாஸ் அவனை தாக்கினான்.. இருவரும் மோதிகொண்டிருக்க... துப்பாக்கியை ஆதியிடம் இருந்து வாங்கிய அடியாள் எழுந்து ஆதியை சுட வர.. இளா அவனை பார்த்துவிட்டு தடுமாறி எழுந்தவள்... ஆதியின் பின்னாடி வந்து நிற்கவும்... அந்த அடியாள் சுடவும் சரியாக இருந்தது... இளாவின் நெஞ்சில் புல்லட் பாய்ந்தது...

ஆதி துப்பாக்கி சவுண்ட் கேட்டவுடன் திரும்பிய ஆதி இளாவை கண்டு அதிர்ச்சியுற்றான்... "லாலீபாப்.." என்று கத்திக்கொண்டே அவளை தாங்கிபிடிக்க... தாஸ் அந்த இடத்தைவிட்டு செல்ல முயல... அதற்குள் விஷ்வா போலீஸ் போர்ஸுடன் அங்கே வந்திருந்தான்... தாஸை கைது செய்ய சொல்லிவிட்டு ஆதியிடம் சென்ற விஷ்வா "ஆதி... என்னாச்சிடா..." என்று கேட்க.. ஆதி "டேய்.. என்.. என்ன காப்பாத்தபோய்தாண்ட இப்படி ஆச்சு... எனக்கு.. என் லாலீபாப் வேணுன்டா..." என்று சொல்லியவனின் கண்களில் கண்ணீர்... "சீக்கிரம் தூக்கு ஹாஸ்பிட்டல் போகலாம்..." என்று விஷ்வா சொல்லவும் தான்... ஆதிக்கு நிதானமே வந்தது... இளாவை தூக்கிக்கொண்டு வேகமாக காருக்கு சென்றான்...

இளாவுக்கு ICUவில் ட்ரீட்மெண்ட் போய்க்கொண்டிருந்தது... விஷ்வா, ஆதி மற்றும் இளாவின் வீட்டிற்கு தகவல் சொல்ல அனைவரும் பதறியவர்கள்... சென்னை வந்துகொண்டிருந்தனர்... ஆதி வெளியே உள்ள இருக்கையில் கண்களை மூடி அமர்ந்திருந்தான்... "ஏய்.. லாலீபாப்.. உனக்கு ஒன்னும் ஆககூடாது... என்னவிட்டு போயிடாத... கடவுளே.. என் லாலீபாப் திரும்ப எனக்கு முழுசா கிடைக்கனும்.." என்று மனதில் வேண்டுதல் வைத்துக்கொண்டிருந்தான்..

ஆப்ரேஷன் முடிந்து வெளியே வந்த மருத்துவரிடம் விஷ்வா விசாரிக்க.. கண்ணை திறந்த ஆதி அவரிடம் "டாக்டர்... அவ..அவளுக்கு ஒன்னும் இல்லல..." என்று கேட்க.. "மிஸ்டர் ஆதி.. பதட்டப்படாம கேளுங்க... ஷீ இஸ் ஆல் ரைட்.. ஷோல்டர் கீழே அடிப்பட்டு இருக்கறதால வலி ஜாஸ்தியா இருக்கும்.. சோ.. மயக்கமருந்து கொடுத்து இருக்கேன்.. நாளைக்கு காலையில கண்முழிச்சிடுவாங்க... ஓகே.." என்று அந்த மருத்துவர் சொல்லவும் தான் ஆதிக்கு உயிரே வந்தது... "தேங்ஸ் டாக்டர்... தேங்யூ சோ மச்..." என்று கைகுலுக்கியவன் "டாக்டர் நான்.. அவள பாக்கலாமா..." என்று ஆதி கேட்க... "ம்ம்ம்.. போய் பாருங்க.." என்று டாக்டர் சொல்லிவிட்டு சென்றார்...

உள்ளே சென்ற ஆதி இளாவை முழுதாக பார்த்தவன்.. அவளின் அருகில் சென்று இருக்கையில் அமர்ந்தான்... அவளின் கையை தன் கையில் பிடித்துக்கொண்டவன்.. "லாலீபாப்... இனிமே உனக்கு எந்த கஷ்டமும் வர விடமாட்டேன்... உன் மேல ப்ராமிஸ்டி... என்னடா இவன் என்மேல ப்ராமிஸ் பன்றானேன்னு நினைக்கிறியா... என்னோட உயிர் உன்கிட்டதானே இருக்கு.." என்று சொன்னவன்.. அவளின் இதழில் தன் இதழை ஒற்றியெடுத்தான்...

வெளியே சென்று விஷ்வாவிடம் "அவன எந்த ஸ்டேஷன்ல வச்சிருக்காங்க... அவன்கூட இருந்த ஆளுங்களையும் அரஸ்ட் பன்னியாச்சா..." என்று கேட்டவனை கண்டு விஷ்வா மனதில் "ம்ம்ம்.. இவ்வளவு நேரம் இது தெரியாமையாடா இருந்த.. லவ்வுன்னு ஒன்னு வந்துட்டா.. கடமை கன்னியம் கட்டுப்பாடு எல்லாம் பறந்துபோயிடுது.." என்று எண்ணிக்கொண்டிருந்தவனின் முதுகிலே ஒன்னுவைத்த ஆதி "எதுவும் பறந்துப்போகலாடா... நமக்கு புடிச்சவங்களுக்கு ஒன்னுன்னா எல்லாருமே அப்நார்மலாதான் அந்த டைம்ல தெரிவாங்க.." என்று சொல்ல... "சரிடா.. க்ளாஸ் அப்பறமா எடு... அந்த பொறுக்கிய XXX ஸ்டேஷன்ல வச்சிருக்காங்க.. கூட இருந்தவனுங்களும் அங்க தான் இருக்கானுங்க..." என்று விஷ்வா சொன்னான்.. "சரிடா.. நான் போய் பார்க்கிறேன்.. இளாவ பார்த்துக்கோ..." என்று சொல்லி நடந்தவனை.. "டேய் ஆதி... அவன என்னப்பன்னலாம்.." என்று விஷ்வா கேட்டு நிறுத்தினான்.. திரும்பிய ஆதி "வழக்கமா இந்த மாதிரி தப்புபன்றவனுங்களுக்கு பன்ற மாதிரி பன்னவேண்டியதுதான்.." என்று கண்ணில் வெறியோடு சொல்லிவிட்டு சென்றான்...

இரவு பதினொரு மணியளவில் ஆதி மற்றும் இளாவின் குடும்பத்தினர் மருத்துவமனை வந்தனர்... அனைவரும் அவளை பார்த்துவிட்டு வர.. இளாவின் அம்மா அங்கே இருப்பதாக சொல்ல... "வேண்டாம்.. ஆன்டி.. நீங்க போங்க.. ஆதி வந்தான்னா அவன் பார்த்துப்பான்..." என்று விஷ்வா சொல்ல... இளாவின் அப்பா சிவராம் "சீதா.. நம்ம பொண்ண நம்மளவிட மாப்பிள நல்லா பார்த்துப்பார்... வா.. காலையில அவ கண்முழிச்சதும் வந்துடலாம்... நீ வேற மாத்திர சாப்டனும்.." என்று அவரை சமாதானம் செய்து அழைத்து சென்றனர்...

பன்னிரண்டு மணிக்கு ஹாஸ்பிட்டல் வந்த ஆதியிடம் வீட்டினர் வந்து சென்றதை சொல்ல... "ம்ம்ம்.. ஒகே.. நீயும் கிளம்புடா.. நாளைக்கு மார்னிங் வந்தாபோதும்... போகும்போது அம்மாக்கும் நந்துக்கும் டிபன் வாங்கிட்டு போயிடு.. நான் அவங்களுக்கு போன்பன்னி பேசுறேன்..." என்று சொல்ல.. "ம்ம்ம்.. நீ பாத்துக்கோடா..." என்று விஷ்வா கிளம்பினான்... ஆதி நேராக இளாவின் அறைக்கு சென்றான்..

சிறையில் தாஸுக்கு பலவிதமான ட்ரீட்மெண்ட்டை உபயோகித்து அவனின் வாக்குமூலங்களை சேகரித்தனர் காவல்துறையினர்... வினிஷாவின் கொலையை பற்றி சொல்ல ஆரம்பித்தான் "ஒரு நாள் நான் மாடியில அபின் அடிச்சிட்டு இருந்தேன் அப்போ அந்த பொண்ணு எங்கிட்ட ... அண்ணா.. எங்க வீட்ல தண்ணீ வரல... சின்ன பசங்க யாராவது மேல டேங் டேப் மூடியிருப்பாங்க.. கொஞ்சம் அத சரிபன்றீங்களான்னு.. கேட்டப்பதான் தெரியும்... அந்தபொண்ண பாலோப்பன்னி அவங்க ப்ளாட்ட தெரிஞ்சிகிட்டேன்... அதுக்கப்புறம் என் வீட்டு பால்கனில இருந்து அந்த பொண்ணு ரூம்க்கு போகமுடியும்னு தெரிஞ்சது... எப்பவுமே அவ பால்கனி கதவ மூடாம தூங்கிடுவா... அப்போ நான் போய் அவ முகத்துல மயக்கமருந்து அடிச்சிடுவேன்... அப்புறம் நான் அவள அனுபவிச்சிட்டு வந்துடுவேன்... இது அவளுக்கே தெரியாது..." என்று சொன்னவனை உயிரோடு மட்டும் தான்விட்டனர்... மத்தபடி எல்லா வகை ட்ரீட்மெண்ட்டையும் செய்தனர் போலீசார்....

ஆதி இளாவின் பக்கத்தில் அமர்ந்த வாக்கிலேயே உறங்கினான்... காலை ஆறுமணியளவில் கண்விழித்த ஆதி இளாவை கண்டு ஷாக்கானான்.. பின்ன அவள் தன் கண்களால் அவனை சைட் அடித்துக்கொண்டிருந்தாளே... ஐந்து மணிக்கெல்லாம் கண்விழித்தவள் தூங்கும் ஆதியைதான் பார்த்தாள்... பிறகு நடந்த ஒவ்வொன்றும் அவளுக்கு நினைவு வர... மறுபடியும் மயக்கம் வருவது போல் இருந்தது.. பின்பு தன்னவனை பார்த்துக்கொண்டே இருந்தாள்...

"லாலீபாப்... கண்முழிச்சிட்டியா..." என்று ஆதி கேட்க... "ம்ம்ம்.." என்று மட்டும் சொன்னவளை "என்னடி.. இப்படி சைட் அடிக்கிற.." என்று கேட்க "என் புருஷன் நான் பார்ப்பேன்... உங்களுக்கு பிடிக்கலனா நீங்க என்ன பார்க்காதீங்க..." என்று இளா சொல்ல... "எனக்கு பிடிக்கலனு யார் சொன்னது... நான் உன்னுடைய ப்ராப்பர்டி... நீ என்ன வேணா பன்னுடி.." என்று ஆதி சொல்லவும்... சிரித்த இளா அடிப்பட்ட இடம் வலிக்கவும் முகம் சுலித்தாள்.. "ஏய் ஏய்... ரொம்ப ஸ்டெயின் பன்னிக்காத.." என்று அவளின் கைகளை பிடித்துக்கொண்டான் ஆதி... ஹரிஷ் மற்றும் வீட்டிலிருந்து அனைவரும் வர... எல்லோரும் நலம் விசாரிக்க.. என்று இருந்தனர்.. இளாவுக்கு பசி எடுப்பதுப்போல் இருக்க.. ஆதியை பார்த்தாள்.. அவனும் இவளைதான் பார்த்துக்கொண்டிருந்தான்.. "என்ன.." என்று ஆதி கேட்க.. "பசிக்குதுங்க.." என்று சைகை காமித்தாள்... "லாலீபாப் வாங்கிட்டு வரவா.." என்று கேட்க... "ம்ம்ம்..." வேகமாக தலை அசைத்தாள்... இருவரும் சைகை பாஷையில் பேசிக்கொண்டிருக்க... அங்கே இருந்த குடும்பத்தினர் இவர்களை கண்டு சந்தோஷமடைந்தனர்... ஏனோ இருவரும் நேற்று நடந்த நிகழ்வை பற்றி பேசவில்லை...

- தொடரும்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top