DivyaaKumar
Member
Good story....But make that physcho to get punished in most haunted way...ஆதியும், விஷ்வாவும் தற்கொலைகள் நடந்த ஏரியாவை சுற்றி உள்ள டெக்ஸ்டைல்ஸில் உள்ள, மூன்று மாதத்திற்கு முன்னாடி ரெக்கார்ட் செய்த சிசி டிவி கேமராவை செக் செய்யும் வேலையில் இறங்கினர்... மதியம் இரண்டு மணியளவில் ஆதிக்கு ஹரிஷிடம் இருந்து போன் வர எடுத்து பேசினான்... "ஆதி நீ சொன்ன பேர்ல நேத்து யாரும் ட்ரீட்மெண்ட் பன்னல.." என்று ஹரிஷ் சொல்ல.. "ஓஓ.. ஓகே தேங்ஸ்மா..." என்று போனை வைத்தவன்.. ஒரு முடிவுக்கு வந்தான்...
இப்படியே நாட்களும் சென்றது.. ஆதி இளாவின் திருமணத்திற்கு ஏழு நாட்களே இருக்கும் பட்சத்தில் சென்னையில் உள்ள நண்பர்களுகெல்லாம் இன்விட்டேஷன் வைக்க என்று பிசியாக இருந்தான் ஆதி.. அந்த சமயத்தில் விஷ்வா பக்கத்து வீட்டிற்கு குடிப்பெயர்ந்தான்.. ஆதிக்கும் அவன் இப்படி செய்வான் என்று தெரியும்.. நண்பர்கள் அல்லவா..
ஹரிஷின் வீட்டிற்கு சென்று ஆதி இன்விடேஷன் வைக்க.. பாட்டியும் அங்கே தான் இருந்தார்.. அதில் இருந்த மணப்பெண் இளா என்று தெரியவர.. "ஆதி யூ ஆர் வெரி லக்கி.. ஷீ இஸ் கரக்ட் மேட்சிங் யூ.. ஆனா செம்ம வாலு பார்த்து இருந்துக்கோ.." என்று ஹரிஷ் சொன்னதும்.. "ம்ம்ம்.. அப்போ என் தங்கச்சிக்கூட செம வாலுதான் நீயும் பார்த்து இருந்துக்கோ..." என்று சொன்ன ஆதியை அதிர்ச்சியாக பார்த்தவன் "உனக்கு எப்படி தெரியும்.." என்று திக்கிதினறிக் கேட்டான் ஹரிஷ்.. "அதெல்லாம் அப்பவே தெரியும்.. மறக்காம கல்யாணத்துக்கு வந்துரு.. இல்லனா நந்து என்ன உண்டுஇல்லனு பன்னிடுவா..." என்று சொன்ன ஆதியிடம் "ரொம்ப தேங்ஸ் மச்சான்.." என்று சொல்லி கட்டிக்கொண்டு விடுவித்தான்..
கல்யாணத்திற்கு நான்கு நாட்களே இருக்க ஊருக்கு கிளம்பினார்கள்.. ஆதியும் விஷ்வாவும்.. கேஸை ராஜனிடம் கொஞ்ச நாளைக்கு ஒப்படைத்திருந்தனர் இருவரும்... ஆனால் ஆதிக்கு அந்த கல்பிரிட் அவனாக இருந்தால்.. என நினைத்துக்கொண்டே தான் ஊருக்கு சென்றான்...
இளா குடும்பத்தினரும் ஊருக்கு புறப்பட்டனர்.. பூர்வீக வீட்டை நோக்கி... ரேஷ்மியின் வீடும் ஆதியின் வீடும் பக்கத்து பக்கத்து வீடுதான்.. ரேஷ்மியின் அம்மாதான் இளாவை பற்றி ஆதியின் அம்மாவிற்கு சொன்னது.. இளாவின் பூர்வீக வீடும் அதே தெருவில் தான் இருந்தது...
- தொடரும்...