Akila Mugilan's Oru Kural Polae Nee Enakullae 5

Advertisement

mallika

Administrator
இங்கு இது நடக்கும் போதே விஷயம் தெரிந்து அர்ஜுனின் மொத்த குடும்பமும் வந்து விட்டது எல்லாரும் ஒரு ரூமில் இருந்தனர் ..இதை எல்லாம் பார்த்த சரணுக்கு அப்படி ஒரு கோவம் அர்ஜுன் மேல்.

அர்ஜுன் ஐ ஓங்கி ஒரு அறை விட்டான் சரண் ..யாருமே எதிர்பார்க்க வில்லை

பார்த்தியா நீ என் குடும்பத்துக்கு என்ன காரியம் பண்ணி வச்சிருக்கன்னு.அவளோட அண்ணன் இரண்டு பேர் இங்க இருக்கோம் ஆன யாரோ ஒருத்தவன் அவளுக்கு ஆறுதல் சொல்றான் ..நாங்க அவ கிட்ட போய் நெருங்க முடியாத அளவு இருக்கோம் ..

போதும் டா சாமி உங்க உறவு எல்லாம் "அவ கால்ல விழுந்தாச்சும் நான் அவள கூப்பிட்டு வீட்டுக்கு போறேன் தயவு செஞ்சு திரும்ப வராத.. லைஃப் ஃபுல் ஆ அவ என் தங்கச்சியா வே இருக்கட்டும் " என்று கத்தினான் ..

அண்ணா பிளீஸ் கொஞ்சம் அமைதியா இரு அவனும் பாவும் நீயும் தான் பார்க்குறியே என்று கார்த்திக் சமாதானம் செய்தான்

இவ்வளவு நடந்தும் அர்ஜுன் ஒரு வார்த்தை பேச வில்லை...

நான் போய் அவ கிட்ட பேச போறேன் என்று வைஷ்ணவி சரண் இருவரும் ரூம் விட்டு வெளியே வந்து அவளை நோக்கி சென்றனர் கூடவே கார்த்திக்கும் வருனும் இணைந்து கொண்டனர் ..

இவள் கண்ணை மூடி படுத்திருந்தாள் ..மிதுன் ஷ்ரத்தா விற்கு ஜூஸ் வாங்குவதற்கு சென்று விட்டான் ..

சரண் போய் அவள் சேரின் கீழ் மண்டியிட்டு அமர்ந்து அவளின் தலையை தடவி கொடுத்தான் ..சரண் அதிகம் பேச மாட்டான் ..அவனை பொறுத்தவரை ஷ்ரத்தா அவனின் மகள் ...எப்பொழுதும் அவள் என்ன கேட்டாலும் இப்படி தான் தலையை தடவி கொண்டு சரி என்று சொல்லுவான் ..

ஷ்ரத்தா விற்கு தலையில் கை பட்டதுமே தன்னையும் அறியாமல் அண்ணா என்று முணுமுணுத்தாள்..வேகமாக கண்ணை திறந்து பார்த்தாள் அனைவரும் இவள் முன் நின்று இருந்தனர் ..

ஷ்ரத்தா விற்கு என்ன என்று விவரிக்க முடியாத உணர்வு . இவர்களை பார்த்து விட்டால் இவர்களை விட்டு விலக முடியாது என்பது அவளுக்கு நன்றாக தெரியும்...என்னவோ இனிமேல் எதுவும் அவள் கையில் இல்லை என்று புரிந்து விட்டது .

அவளின் குடும்பம் யாரும் வேண்டாம் என்ற வாழ ஆரம்பித்தாலும் இவர்களின் பாசம் அவளை அடிக்கடி ஏங்க வைக்கும் .

அவளின் கோவம் அனைத்தும் அர்ஜுன் மேல் தான் ...அவள் தப்பு செய்து விட்டாள் என்ற குற்ற உணர்ச்சியால் தான் இவர்களை தவிர்த்தால்,

எத்தனை முறை சரண் சொல்லி இருப்பான் "அர்ஜுன் கிட்ட லிமிட்டாக பழகு" என்று .

சரண் தான் முதலில் பேசினான் என்னை மன்னித்து விடு அம்மு ..அன்னைக்கு நான் உன்னை தனியா விட்டுட்டு போகனும்னு நினைக்கல .சிட்சுவேசன் பிளீஸ் அம்மு எங்க கூட வந்துவிடு என்று கூப்பிட்டு விட்டான் ..

எதுவுமே பேச வில்லை ஆனால் அவர்களை கட்டி கொண்டாள் ..இப்போதைக்கு அதுவே போதும் என்று ஆகி விட்டது ..

நீங்க எப்படி இங்கே என்று கேட்டாள் ..கார்த்திக் பையன் பொறந்துருக்கான் என்று சரண் சொன்னதும் வாவ் சூப்பர் அண்ணா..அப்புறம் வந்து பார்கிறேன் என்று சொல்லி விட்டு அவளின் அண்ணியை நோக்கினாள்..

வைஷ்ணவி ஷ்ரத்தா வை பார்த்துக் கொண்டு இருந்தாள் ..இப்படியா வளர்த்தேன் நான் உன்னை என்ற கேள்வி அந்த பார்வையில் இருந்தது ..

ஷ்ரத்தா அவள் அண்ணியின் கையை பிடித்து என்னை மன்னித்து விடுங்கள் என்று வேண்டினாள் .

வைஷ்ணவி க்கு ஷ்ரத்தா வின் மேல் கோவம் இருந்தது தான் .. ஆனால் அவளை பார்த்ததும் அனைத்தும் மறந்து விட்டது ..ஷ்ரத்தா நெற்றியில் ஒரு முத்தம் குடுத்து இனிமேல் உன்னை நான் எங்கேயும் விட மாட்டேன் என்று சொல்லி விட்டாள் .

மிதுன் எப்பொழுதோ வந்து விட்டான்..அவனுக்கு பார்த்ததும் புரிந்தது ஷ்ரத்தா வின் குடும்பம் என்று ..

மிதுன் ஷ்ரத்தவிடம் வந்து யார் இவங்க என்றான்..அவள் அண்ணியை காட்டி உனக்கு நான் எப்படியோ அப்படி தான் இவங்க எனக்கு என் செகண்ட் மாம் .என் அண்ணி அப்புறம் அண்ணா என்று மூவரையும் அறிமுக படுத்தினாள் ..

அந்த அறிமுக படுத்தலிலே தெரிந்து விட்டது மிதுன் அவளுக்கு எவ்வளவு முக்கியம் என்று ..

வருணிடம் மன்னிப்பு கேட்டாள்" எனக்கு தெரியும் உங்களுக்கு இப்ப தான் தெரிஞ்சிருக்கும் " வர்ஷு சொல்லலைன்னு கோபப்படாதிங்க னா சாரி என்றாள்..

பார்ரா என் குட்டி தங்கச்சி நல்லா பேச கத்துகிட்டா என்று அந்த இடத்தை சற்று இயல்பாக வருண் மாற்றினான்..

நான் உன் குட்டி தங்கச்சி இல்ல,உள்ளே என்னோட ஜூனியர் இருக்கு ..

எவ்ளோ வளந்தாலும் நீ குட்டி தங்கச்சி தான் என்று வருண் அவளை வாரினான் ..

அப்பொழுது வர்ஷினி வந்து நாளை க்கு ஒரு சின்ன ஆபரேஷன் இருக்கு அதை பண்ணிட்டா பிராப்ளம் இல்ல என்று சொன்னாள்.

நாளைக்கே பண்ணனுமா என்று மறுபடியும் அழுவதற்க்கு தயார் ஆனாள் ..

அம்மா தாயே மறுபடியும் ஸ்டார்ட் பண்ணாத என்று சொல்லி விட்டு மிதுன் டாக்டரிடம் சரி என்று சொன்னான் ..இவளும் தலை ஆட்டினாள் ..இப்ப நான் பேபி பார்க்க போகவா ?

சரி போ ..இப்போதைக்கு நீ மட்டும் போ கொஞ்சம் நேரம் கழிச்சு எல்லாரும் பார்க்கட்டும் என்று சொல்லி விட்டு அவளின் ரூம் நோக்கி நடந்தாள் ..

இப்பொழுது தான் வர்ஷுவிர்க்கு வருண் அவளை அடித்தது நியாபகம் வந்தது .
எரும மாடு என்னையே அடிச்சுட்டான் ..வரட்டும் அவனுக்கு இருக்கு என்று திட்டி கொண்டிருந்தாள் .

அப்பொழுது வருணும் அவளை சமாதானம் பண்ணுவதற்காக வந்து அவளிடம் அடி வாங்கி கொண்டிருந்தான் ..

குழந்தையை பார்த்து விட்டு வந்து ஷ்ரத்தா மறுபடியும் சேரில் உட்காந்து விட்டாள்..இப்பொழுது கொஞ்சம் தெளிவாகி விட்டாள் ..

சரண்,வைஷ்ணவி,கார்த்திக் மூவரும் அவளுடன் தான் இருந்தனர் ..

அவளுக்கு புரிந்தது இனிமேல் அவர்கள் இவளை விட்டு நகர மாட்டார்கள் என..

மிதுன் எழுந்து இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தான் ..இப்ப எதுக்கு இப்படி நடந்துட்டு இருக்க என்று ஷ்ரத்தா திட்டினாள் ..கூடவே சேர்த்து என்ன சர்ட் இது பூ பூ வா போட்டு இப்படி தான் காலேஜ் போறியா நீ என்று அதற்கும் திட்டினாள் ..

பார்த்திருந்த அனைவருக்கும் சிரிப்பு வந்தது ..

அந்த பக்கம் அர்ஜுன் அமைதியாக ரூமினுல் இருந்தான் ..

அர்ஜுனின் அப்பா .."ஏண்டா அமைதியா உட்காந்து இருக்க எதாச்சும் பேசு அர்ஜுன் ...இப்ப அவ உன் கண்ணு முன்னாடி இருக்கா போய் அவ கிட்ட மன்னிப்பு கேளு" .என்று சொன்னார்.

இல்ல டாட் இப்ப நான் அங்க போன மறுபடியும் எப்படி இங்க இருந்து கெளம்பி போலாம்னு அவ யோசிப்பா ..எனக்கும் என்ன பண்ணுறதுனு தெரியல நான் கொஞ்சம் வெளிய போய்ட்டு வரேன் என்று வேகமாக கிளம்பி வெளியே சென்று விட்டான் ..காரை எடுத்துக் கொண்டு மனம் போன போக்கில் போய்க் கொண்டு இருந்தான்..

கொஞ்சம் நேரம் கழித்து ரூம் க்கு வந்து பார்த்த கார்த்திக் அர்ஜுன் எங்க ? என்றான்..

தெரியல வெளிய போனான் ..அவன் ரொம்ப அப்செட் போல ..நம்ப என்ன பண்ண முடியும் அவன் தான் எதுவா இருந்தாலும் பண்ணனும் ..என்று ராகவன் சொல்லி விட்டு நானும் மாதுவும் வந்து ஷ்ரத்தா வை பார்க்கிறோம் என்று குழந்தையை பார்க்க சென்றனர்.

ராகவனும், மாதுவும் வந்து வராண்டாவில் உட்கார்ந்து இருந்த ஷ்ரத்தா விடம் மன்னிப்பு கேட்டனர் ..

உன்னால் முடிஞசா எங்களை மன்னிச்சிடு மா.. எங்க பையன் பண்ண தப்புக்கு நாங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்..என்று வேண்டினர்..

பரவாயில்லை விடுங்க என்று மட்டும் சொன்னாள்..பழைய படி உட்காந்து கொண்டாள் ..

அங்கு கார்த்திக் அனைத்து விஷயத்தையும் ரோஹிணி யிடம் சொல்லி முடித்து இருந்தான் ..
ஷ்ரத்தா வும் கார்த்திக்கின் குழந்தையை பார்க்க வந்தாள்..

ரோஹிணி யுடன் ஒரு வார்த்தை பேச வில்லை ..இது எதிர் பார்த்தது தான் ..அர்ஜுன் எந்த அளவு த்ரோகம் செய்தானோ அதில் பாதி பங்கு ரோஹிணி க்கும் உண்டு..இங்கு இருந்தால் எதாவது பேசுவார்கள் என்று கார்த்திக்கிடம் சொல்லி விட்டு வெளியே வந்து விட்டாள்..

இப்பொழுது குழந்தையை நார்மல் வார்டு க்கு மாற்றி இருந்தார்கள் ..அனைவரும் ஒவ்வொருவராக சென்று பார்க்கலாம் என்று நர்ஸ் சொல்லி விட்டு சென்றார்.

எல்லோருக்கும் குழந்தையை பார்க்க வேண்டும் என்று ஆசை ,இவளை தான் அனைவரும் பார்த்தனர் .அர்ஜுனின் பெற்றோரை நோக்கி நீங்க போய் பாருங்க என்றாள் ..

அவர்களுக்கும் ஆச்சரியம் தான் மாதங்கி ராகவனை முதலில் சென்று பார்க்க சொன்னார் .

அவர் உள்ளே சென்றவுடன் மாதங்கி இவளிடம் வந்து குழந்தை பேர் என்னம்மா என்று கேட்டார்.."அருந்ததி" என்று சொன்னாள்..அவர்களுக்கு அப்படி ஒரு சந்தோசம் அது அவரின் முதல் பெண்ணுக்கு வைத்த பெயர் அந்த குழந்தை சிறு வயதிலேயே இறந்து விட்டது ..இதை அர்ஜுன் ஒரு முறை இவளிடம் சொல்லி நமக்கு குழந்தை பிறந்தா இந்த பேர் தான் வைக்கணும் ..அட்லீஸ்ட் நம்ப பொன்ன பார்தாலாச்சும் அவங்க கஷ்டம் குறையும் என்று சொல்லி இருந்தான் என்ன தான் அவன் மீது கோவம் இருந்தாலும் அந்த பெயரை தான் வைத்தாள் ..

அவர் ஷ்ரத்தா வின் கையை பற்றி கொண்டு ரொம்ப நன்றி மா என்றார் ..

எனக்கு தெரியும் ஆண்டி ..அதான் இந்த பேர் வச்சேன் ..உங்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸ் கூட இருக்கு போய் குழந்தையை பாருங்கள் தெரியும் என்றாள் ..


:):)
 

mallika

Administrator
ராகவன் வெளியே வந்து மாது குழந்தை அப்படியே நம்ப அருந்ததி மாதிரி இருக்கு நீ போய் பாரு போ என்றார் அவர் பேச்சிலேயே அப்படி ஒரு குதுகளம்.

அடுத்தடுத்து அனைவரும் சென்று பார்த்து வந்தனர் ..பார்த்த அனைவருக்கும் தோன்றியது இவள் குழந்தை இவளை விட அழகு ..அதும் அந்த ரோஜா நிறம் அர்ஜுன் மற்றும் சரண் குடும்பத்தில் யாருக்கும் கிடையாது ..ஏனெனில் அவர்கள் அனைவரும் மாநிறம் ஆனால் களையான முகம் ..

கார்த்திக்கை கூடம் காலேஜில் கிண்டல் செய்வார்கள் தங்கச்சி சொல்ற ஆன கொஞ்சம் கூடம் சம்பந்தம் இல்லை என்று ..

சரண்,கார்த்திக்,வைஷ்ணவி அனைவருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி ,சரனுக்கு 2 ஆண் பிள்ளைகள் இப்பொழுது கார்த்திக் கும் ஆண் பிள்ளை தான் ..நேற்று கூடம் வைஷ்ணவி " ஒரு வேளை நம்ம குடும்பத்துக்கு பெண் பிள்ளையை பார்த்துக்க தகுதி இல்லனு தான் கடவுள் குடுக்க மாட்டாங்குறாங்க போல " என்று சொன்னாள்.

இப்பொழுது நம்ம குடும்பத்தில் பெண் வாரிசு என்று அவ்வளவு மகிழ்ச்சி ..

குழந்தை முழித்து விட்டது என்றதும் அனைவரும் உள்ளே சென்றனர் ..கூட்டத்தை பார்த்ததும் குழந்தை மிரண்டு மறுபடியும் கண்ணை மூடி கொண்டது..அதை பார்த்த ஷ்ரத்தா

"பேபி நடிக்குறா மம்மா பார்த்தாச்சு" என்று சொன்னதும் பேபி கண்ணை முழித்து கொண்டது ..எழுந்து ஷ்ரத்தா வை கட்டி கொண்டது .. பேபி யாரு வந்திருக்கா பாரு என்று சொன்னாலும் அது அவளை விடமால் இறுக்கி அணைத்து கொண்டது ..

இனிமேல் யாரும் இவளை தனியே அனுப்ப மாட்டார்கள் என்று அவளுக்கு தெரியும் குழந்தையை பழக விடுவது நல்லது என்று அவளை பார்க்க வைத்தாள்.. பேபி ஷ்ரத்தா விடம் இருந்து மிதுனிடம் தாவி கொண்டது ..

அரு பேபி இவங்க எல்லாம் யாருன்னு உனக்கு நான் சொல்லவா என்று மிதுன் கேட்டதும் எதக்கு தெரியும் என்று அது அதோட பாசையில் சொன்னது ..

என்ன உதக்கு தெரியுமா என்று அவனும் அவளை கிண்டல் செய்தான் ..ஷ்ரத்தா பக்கத்தில் இருந்த பில்லோவை எடுத்து அவனை அடித்து என் பொண்ணை கிண்டல் பண்ண கொன்றுவேன் உன்னை என்று திட்டினாள் ,

அய்யய்யோ பா நாங்க பயந்துட்டோம் .. போவியா

சரி இரு உன் பொண்ணு எவ்வளவு கரெக்டாக சொல்றா பார்ப்போம் என்று சொல்லி விட்டு அரு விடம் திரும்பி இவர்கள் எல்லாம் யாருன்னு சொல்லு பேபி என்றான் ..

அது முதலில் "ராகவ் தாத்தா,மாது பாத்தி,சரண் மாமா,காத்தி மாமா,வை அத்தை" என்று கரெக்ட் ஆக சொன்னது ...

ராகவனுக்கு கால் தரையில் நிக்க வில்லை பேத்தி தன்னை தாத்தா என்றதும் ..உலகத்தையே கொண்டு வந்து காலில் வைக்கும் அளவு வேகம் அவருக்கு..

சரணையும் கார்த்திக் யையும் கேட்கவே வேணாம் ..

ஆனால் மிதுனு க்கு தலை சுற்றியது ..அரு க்கு எப்படி இவர்களை எல்லாம் தெரியும் என்று கேட்டான்..நான் பெயின்டிங் வச்சிருக்கேன் அதுல இவங்க எல்லாம் இருப்பாங்க அதை காட்டிருக்கேன் என்றாள் ..

இது வரை யாரும் பேச பயந்த விசயத்தை மிதுன் தைரியமாக கேட்டான் ..எல்லோரையும் காட்டியிருக்க சரி .. "அரு வோட அப்பா வ காட்டிருக்கியா அவளுக்கு" என்று கேட்டான்.

மிதுன் கேட்டதுக்கு பதில் தராமல் ,சரி நீ வேணும்னா காலேஜ் போய்ட்டு மார்னிங் வாடா என்றாள் ,இதுக்கு மேல் இதை பத்தி பேசுவது என்றாள் நீ வெளியே போ என்று மறைமுகமாக சொன்னாள்.

நான் எங்க போவேன் ..நீ ஹாஸ்பிடல் காலி பன்ற வரைக்கும் நானும் இங்க தான் என்று அங்கிருந்த நோயாளியின் உறவினர் படுக்கும் மெத்தையில் படுத்து கொண்டான்.

வைஷ்ணவி ,"ஷ்ரத்தா பேபி க்கு என்ன சாப்பிட குடுப்ப நான் போய் வீட்டில் இருந்து எடுத்துட்டு வரேன் .,,"என்று கேட்டாள்.

பால் தான் அதை இங்கேயே வாங்கி குடுக்கலாம் .இதுக்கு எதுக்கு வீட்டுக்கு
அலைஞ்சுக்கிட்டு வீண் அலைச்சல் வேணாம். நீங்க வீட்டுக்கு கெளம்பி போங்க அங்க பசங்க தனியா இருப்பாங்க அண்ணி என்றாள் ..

இப்பயும் நான் என் பொண்ணு கூட தான் இருக்கேன் ..ஒரு தடவை விட்டுட்டு போனேன் அவ என்னை விட்டுட்டு 4 வருஷம் பிரிஞ்சி போய்ட்டா இனிமேல் விட்டுட்டு போக மாட்டேன் என்று உட்காந்து கொண்டாள் ..சரணும் மிதுன் அருகில் அமர்ந்து விட்டான்..

மிதுன் மைண்ட் வாய்சில் "என்னடா இந்த குடும்பம் விக்ரமன் படத்த விட ஓவர் ஆ பண்றாங்க " சரி ஜாலியா வேடிக்கை பார்போம் என்று பார்த்துக் கொண்டு இருந்தான் .

கார்த்திக் நீ போ ரோஹிணி கூட இரு என்று சொல்லி அனுப்பி விட்டாள் ..மாதங்கி யும் பெண்ணை பார்க்க வேண்டும் என்று சென்றார் ..ராகவன் அங்கேயே அமர்ந்து பேத்தியையே பார்த்து கொண்டிருந்தார் .அதுவும் தாத்தா வையே பார்த்தது ஆனால் அவர் கை நீட்டி கூப்பிட்டா மட்டும் அம்மாவிடம் ஒட்டிக் கொள்ளும் ..

இதை ஷ்ரத்தா வும் கவனித்தாள் ஆனால் அருந்ததி சின்ன வயசில் இருந்தே யாரிடமும் அதிகமாக போக மாட்டாள் .

கொஞ்சம் நாள் ஆகும் வரமாட்டாள் என்று மொட்டையாக சொன்னாள் அவரே மாமா சொல்லு மா என்றார் ..

சரி என்னும் விதமாக தலையை ஆட்டினாள் .

அவளுக்கு இப்பொழுது ஒரே குழப்பம் இவர்கள் எல்லாம் இங்கு இருக்கும் போது அவன் எங்கே என்று "ஏன் உனக்கு அவனை இப்ப பார்க்கணுமா "என்று அவளின் மனசாட்சி கேள்வி கேட்டது ..

சரனும் அப்பொழுது அர்ஜுனை பற்றி தான் யோசித்து கொண்டு இருந்தான் ,கோபத்துல அடிச்சிட்டோம்,அவனும் தான இவ இல்லாமல் கஷ்ட பட்டான் என்று ..சரி அவனுக்கு கால் பண்ணுவோம் என்று எழுந்து வெளியே வந்தான் .

இதற்கு நடுவில் வருண்,கார்த்திக் இருவரும் மாறி மாறி அவனுக்கு கால் செய்து பார்த்து கொண்டு இருந்தனர்.

இவங்க எலலாம் பயப்படும் மாதிரி அர்ஜுன் சோகமா இல்லை ,ஒரு பெரிய டாய் ஷாப்பில் அவன் பொண்ணுக்கு பொம்மையாக வாங்கி குவித்து கொண்டு இருந்தான் ..

குழந்தை உடல் நிலை பற்றிய கவலை இருந்தாலும் ...அவர்கள் வந்து விட்டார்கள் என்ற மகிழ்ச்சி .

நாளையில் இருந்து ஷ்ரத்தா வை சமாதானம் செய்ய வேண்டும் ,, டைம் கிடைக்காது இல்ல அதான் இன்னைக்கே அனைத்தும் வாங்கி கொண்டு இருந்தான் , டிரஸ்,சின்ன சின்ன பொம்மைகள் அனைத்தும் வாங்கி முடித்து விட்டான்..அப்பொழுது தான் சரணின் கால் வந்தது.

சொல்லு மச்சான் என்று குரல் உற்சாகமாக கேட்டது , சரண் ஒரு நிமிடம் காதில் இருந்து போனை எடுத்து நம்பர் சரியா என்று பார்த்தான் ,அடிச்சதுல இவனுக்கு நட்டு கழுண்டுருச்சா என்று நினைத்தான் . "டே எங்கடா இருக்க ஹாஸ்பிடல் வந்து உன் குழந்தையை பாரு வா" என்றான்.

நான் என் பொண்ணுக்கு டாய்ஸ் வாங்கிட்டு இருக்கேன் ..

டே ஃபர்ஸ்ட் பொண்ணுக்கு நீ தான் அப்பண்ணு அவ கிட்ட மூஞ்சு காட்டு வா .என்று கோபமாக கத்தினான்.

நாளைக்கு வரேன் மச்சான் ஆல்ரெடி 7 இப்ப வந்தா அவ என்னை திட்டி டென்ஷன் ஆகி தூங்க மாட்டா சோ நாளைக்கு வரேன் என்று போன் கட் பண்ணி விட்டான் ..

சரண் அப்படியே சென்று பால் வாங்கி கொண்டு வந்து குடுத்து விட்டு,மிதுணை சாப்பிட அழைத்து சென்றான் .

மிதுணிடம் பேசிய கொஞ்சம் நேரத்து லேயே தெரிந்தது ..மிதுன் பார்ன் வித் சில்வர் ஸ்பூன் என்று ..

வரும் வழியில் கார்த்திக்,ஷ்ரத்தா இருவருக்கும் பார்சல் வாங்கி வந்தான் .

கார்திக்கிற்கு அவன் ரூமில் குடுத்து விட்டு ஷ்ரத்தா விற்கும் குடுத்து வற்புறுத்தி சாப்பிட சொன்னான் .. அரு ஷ்ரத்தா வின் மொபைலில் கார்ட்டூன் பார்த்து கொண்டு இருந்தாள் .

ராகவனிடம் நீங்க கெளம்பி வீட்டுக்கு போய்ட்டு மார்னிங் வாங்க டேப்லெட் வேற போடணும் என்று சொன்னான் .

அவர் பேத்தியை பார்த்தார் இங்க தான் இருப்பா மாமா ..நாளைக்கு வாங்க . இனிமேல் அவ கூட வேற விளையாட வேண்டி இருக்கு சோ உடம்ப பார்த்துக்க வேண்டாமா என்று வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு.திரும்பி வைஷுவை பார்த்தான் அவளும் ஷ்ரத்தா வும் எதோ பேசி கொண்டு இருந்தனர்,

வைஷு நீயும் வீட்டுக்கு கிளம்பு அங்க அத்தை யால ரெண்டு பசங்களை யும் சமாளிக்க முடியாது..நான் உன்னை விட்டுட்டு அகைன் இங்க வரன் வா..என்று அழைத்து சென்றான்.

ஆமா அண்ணி நீங்க போய்ட்டு மார்னிங் வாங்க..

அவளுக்கும் வீட்டுக்கு போக வேண்டிய அவசியம் இருந்தது..கண்டிப்பா அவளின் இரண்டாவது மகன் அவளை தேடுவான் ..

சரி என்று கெளம்பி வெளியே சென்றாள்
.நான் போய்ட்டு விட்டுட்டு வரேன் என்று இருவரிடமும் சொல்லி விட்டு சரண் வெளியே வந்தான் ..

இப்பொழுது ரூமில் ஷ்ரத்தா,மிதுன்,பேபி மூவர் மட்டும் இருந்தனர்..

மிதுணும் , அரு வும் மொபைலில் கேம் விளையாடி கொண்டு இருந்தனர்.போதும் ரெண்டு பேர் விளையாடுனது வாங்க ஒரு வாக் போய்ட்டு வந்து படுக்கலாம் என்று கூப்பிட்டாள்.

ரெண்டும் அசையவே இல்லை ,பக்கத்தில் போய் மொபைலை பிடுங்கி இருவரையும் முறைத்தாள் .. வேறு வழயில்லாததால் இருவரும் எழுந்து வெளியே வந்தனர்.
 

mallika

Administrator


காரிடாரில் நடந்து கொண்டு இருக்கும்போது முன்னாடியே கேக்கணும் நினைச்சேன் ரெண்டு பேரும் எதுக்கு சென்னை வந்தீங்க அதும் என்கிட்ட கூடம் சொல்லல என்று மிதுன் கேட்டான்.

ஷ்ரத்தா அவனிடம் அவார்டு பத்திய விஷயங்களை சொல்லி கொண்டு இருந்தாள்..அதற்கு மிதுன் வாழ்த்திவிட்டு ...என்கிட்ட சொல்லியிருந்தா நானும் வந்து இருப்பேன்ல என்றதும் பேபி அது சர்ப்ரைஸ் என்றாள்.

இதுல எனக்கு என்ன சர்ப்ரைஸ் என்று மிதுன் கேட்டான் ..

அதுவா நாளைக்கு உன் காலேஜ் வந்து உன் லெக்சரர் லாம் மீட் பண்ணி உனக்கு சர்ப்ரைஸ் குடுக்கலாம் என்று இருந்தோம் என்று அவனை கிண்டலாக பார்த்து சொன்னாள்..

அட பாவிங்களா அம்மாவும் பொண்ணும் இப்படி ஒரு திட்டம் வேற வச்சு இருந்தீங்களா ..நல்ல வேளை கடவுள் என்னை காப்பாதிட்டாரு.அப்படியே நடந்து கொண்டே ரோஹிணி இருக்கும் அறைக்குள் வந்தனர் ..

அங்கு மாது பாட்டியை பார்த்ததும்..பாத்தி என்று அழைத்தாள்..

அச்சோ என் தங்க பொண்ணு பாட்டி பார்க்க வந்து இருக்கீங்களா என்று அவளை வந்து தூக்க வந்தார் ஆனால் அவள் ஷ்ரத்தா பின்னாள் வந்து ஒழிந்து கொண்டாள்..

பேசுவா ஆன கிட்டலாம் உடனே வரமாட்ட ..கொஞ்சம் பழகின பிறகு வருவா என்று அவருக்கு சமாதானம் கூறினாள்..

ரோஹிணி அப்பொழுது தான் பேபியை பார்த்தாள் ..அவளின் அம்மா ரூம் வந்ததில் இருந்து பேத்தியை பத்தின பேச்சு தான் ..சோ இவள் அருந்ததியை சுவாரசியமாக பார்த்து கொண்டு இருந்தாள்..

அருந்ததியும் "ரோஹிணி அவளது கையில் இருந்த குழந்தை யை எட்டி எட்டி பார்த்து கொண்டு இருந்தது"..

ரோஹிணி குழந்தையை கை நீட்டி அழைத்து இங்க கிட்ட வந்து தம்பி பாரு வா என கூப்பிட்டாள்.

அது அவங்க அம்மாவை பார்த்தது ..ஷ்ரத்தா கண்களால் போ என்று சொன்னதும் தளிர் நடை இட்டு குட்டி குழந்தையை போய் பார்த்தது ..

நான் யாருன்னு தெரியுமா அரு என்று ரோஹிணி கேட்டாள்..

அது தனது கன்னத்தில் கை வைத்து யோசிப்பது போல் செய்து .."ரோதி அத்தை" என்றது ..பெயர் சரியாக வாயில் வரவில்லை ..ஆனால் ரோஹிணி க்கு கண்கள் பனித்தன.

இந்த குட்டி தம்பி பேர் என்ன?,நான் தொடவா?,இவன் ஏன் தூங்குறான்?,என்கிட்ட பேசுவானா ?..இவன் விரல் ஏன் குட்டையாக இருக்கு?என்று வரிசையாக அவளின் மழலை மொழியில் கேள்வியாக கேட்டு கொண்டிருந்தாள்.

வீட்டுக்கு போய் விட்டு வந்த சரண்,கார்த்திக்,மிதுன்,ஷ்ரத்தா,மாதங்கி அனைவரும் ரோஹிணி அவளுக்கு பதில் சொல்ல முடியாமல் படும் பாட்டை பார்த்து ரசித்து கொண்டு இருந்தனர் ..

என் பொண்டாட்டி யையே பேச்சுல திணற வச்சிட்டா உன் பொண்ணு சூப்பர் தான் என்று கிண்டல் பண்ணான் கார்த்திக்..

கார்த்திக் மரியாதை யா போய்டு இல்லனா இந்த ஸ்டேண்டு எடுத்து அடிச்சுடுவேன் ..என்று ரோஹிணி கத்தினாள்..

ஷ்ரத்தா தான் அவளை கேள்வி கேட்க விடாமல் செய்து ரூமிற்கு செல்லலாம் என அழைத்தாள்..

ரூம் வாசல் வரை வந்து விட்டு " மம்மா குத்தி பையன் பேர் கேட்டுட்டு வரேன்" என்று மறுபடியும் ரோஹிணி அருகில் சென்று பெயர் என்ன என்றாள்..

நாங்க இன்னும் குட்டி தம்பிக்கு பேர் வைக்கலயே ..நீங்க ஒரு பேர் சொல்லுங்க அதையே நம்ப வச்சிடுவோம் என்று ரோஹிணி சொல்லி கொண்டிருந்தாள்..

அதற்கு அரு பேபி லைனாக ,"பீம், சின்சான்,டாம், சுக்கி,டோரா, காளியா "என்று கார்ட்டூன் பெயராக சொல்லி கொண்டிருந்தாள்..
ஷ்ரத்தா விர்க்கு சிரிப்பு வந்து விட்டது ..

கார்த்திக் தான்" எல்லா பெயரும் சூப்பரா இருக்கு இதுல எதாச்சும் ஒரு பெயரை வாச்சிடலாமா ரோஹி" என்று கேட்டு அவளின் முறைப்பை பெற்று கொண்டான்..

பேபி வா நாளைக்கு நேம் வைப்பியாம் என்று ஷ்ரத்தா கூட்டி கொண்டு சென்றாள்..

சரண் வந்த சிறிது நேரத்திலேயே மிதுன் வெளியே சென்று அவன் ஆளிடம் கடலை போட ஆரம்பித்து விட்டான் ..

இவர்களும் வெளியே வந்து போன் பேசி கொண்டிருந்த மிதுணின் தலையில் தட்டி அவனையும் அழைத்து கொண்டு ரூமிற்கு வந்து சேர்ந்தாள்.

மிதுனை ஒரு பெட்டில் படுக்க சொல்லி விட்டு இவள் பேபி இருந்த பெட்டில் படுத்தாள் ..அது கொஞ்சம் பெரிய பெட் தான் ..பக்கத்தில் படுத்த குழந்தையை தட்டி கொடுத்துக் கொண்டே அர்ஜுனை பற்றி யோசித்தாள்..

ஆம் அர்ஜுனை பற்றி தான் யோசித்து கொண்டிருந்தாள்..குடும்பம் முழுதும் இங்கே இருக்கும் போது அவன் மட்டும் எங்கே போனான்..அர்ஜுனின் குடும்பம் பற்றிய பாசம் இவளுக்கு தான் தெரியுமே,இவளின் இந்த நிலைமைக்கு காரணமும் அதான்.. அவன் ஒரு நாள் கூட வெளியே தங்க மாட்டான் .

கொஞ்சம் நேரம் கழித்து அரு வின் ஆப்ரேஷன் பற்றிய பயம் வந்து விட்டது ..சாதாரண லேசர் ஆபரேஷன் தான் என்றாலும் அவளின் குழந்தை எப்படி இந்த ஹாஸ்பிடல்,மருந்து இதை எல்லாம் தாங்குவாள் என்று கவலையாக இருந்தது .

அனைத்தும் யோசித்து கொண்டு அவள் தூங்கவே விடியற்காலை ஆனது நடுவில் கார்த்திக் ,சரண் இருவரும் அடிக்கடி பார்த்து விட்டு சென்றனர் ..மிதுன் அடிக்கடி எழுந்து பார்த்து கொண்டான்.

அனைவர் மனதிலும் இருந்து வந்த ஒரே கேள்வி இந்த அர்ஜுன் மனசுல என்ன தான் நினைத்து கொண்டு இருக்கிறான் ..இன்னும் அவளை வந்து பார்க்கவில்லை என்று தான் .

மறுநாள் காலை அனைவரும் வந்து விட்டனர் ..எல்லோரிடமும் சொல்லி விட்டாள் யாரா இருந்தாலும் குழந்தையிடம் நார்மலாக பேசுங்க..அவ ஈஸியா கண்டு பிடிப்பா சோகமா இருக்காதிங்க என்று சொல்லி விட்டு இவளும் மிதுனும் எப்பொழுதும் போல் அவளிடம் விளையாடி கொண்டு இருந்தனர்.

குழந்தையை ஆபரேஷன் தியேட்டருக்குள் கொண்டு சென்றதும் ..ஷ்ரத்தா அங்கிருந்த சேரில் அமர்ந்து கொண்டாள்..சரண் அவளின் பக்கத்தில் வந்து உட்கார்ந்ததும் ..,

அம்மு அழாதடா ஒன்னும் இல்லை இன்னைக்கு சாயந்திரம் பேபி நார்மல் ஆகிடுவா என்று அவளது தலையை தடவி கொண்டு இருந்தான் ..

அப்பொழுது தான் அர்ஜுன் அங்கு வந்தான் ..அவனின் அப்பா,கார்த்திக் ,சரண் மூவரும் அவனை முறைத்து கொண்டு இருந்தனர்..இவ்வளவு லேட்டாக வந்ததிற்கு ..

அர்ஜுன் க்கு சீக்கிரம் வர வேண்டும் என்று ஆசை தான் ஆனால் அவன் குழந்தை ஆபரேஷன் செய்ய போகும் போது எந்த பிரச்சனையும் வேண்டாம் என்று பார்க்கிங்கில் வெயிட் செய்துகொண்டு இருந்தான்.

அனைவருக்கும் என்ன ஆகும் என்ற பயம் வந்து ஒட்டி கொண்டது..."ஷ்ரத்தா எப்படி ரியாக்ட் பண்ணுவாள்" என்ற பயம் தான்..

அர்ஜுன் முகத்திலும் அப்படி ஒரு பதற்றம் ..அவன் மகளை இப்படி ஒரு நிலைமையிலா முதன் முதலில் பார்க்க வேண்டும் என்று உடனே அவன் மனைவியின் நினைத்து இன்னும் பதற்றம் வந்தது ..

மிதினுக்கு அர்ஜுனை பார்த்ததும் ஆச்சர்யம் இவர் ஃபேமஸ் டைரக்டர் ஆச்சே ,அதுமட்டும் இல்லாமல் நிறைய நல்லது செய்யும் ஒரு செலிபிரிட்டி என்று தெரியும் .

நேற்று இங்கு வந்ததில் இருந்து மிதுன் ஒன்றை நன்றாக புரிந்து கொண்டான் ஷ்ரத்தா சாதாரண வீட்டு
பெண் இல்லை என்று தெளிவாக புரிந்தது.அது போல் அர்ஜுனை யும் யாரோ சொந்தகாரர் போல் நினைத்து கொண்டான் .

அர்ஜுன் வந்தவன் ஷ்ரத்தா முன் மண்டியிட்டு "Mrs.ஷ்ரத்தா அர்ஜுன்" என்று கூப்பிட்டான் ..
ஷ்ரத்தா விற்கு அந்த குரலின் சொந்த காரனை தெரியாமல் இருக்குமா.

உடனே சரண் மடியில் இருந்து எழுந்து நடக்க ஆரம்பித்தாள் .

இரண்டு அடி எடுத்து வைத்ததும் நின்ற இடத்தில் இருந்தே அர்ஜுன் அவளின் கையை பிடித்தான் .

ஷ்ரத்தா அவனின் முகத்தை இதுவரை நிமிர்ந்து கூடம் பார்க்கவில்லை.கையை விடுவிக்க போராடினால் முடியவில்லை .

அர்ஜுன் அவளின் முன் வந்து நின்று கையை விட்டான் .அவன் எதோ பேச ஆரம்பிக்கும் போது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை வைத்து "ஐ ஹேட் யூ" என்று சொல்லிவிட்டு வேகமாக சென்று விட்டாள்.

அர்ஜுன் அந்த இடத்திலேயே ஸ்தம்பித்து நின்று விட்டான்.










 

mila

Writers Team
Tamil Novel Writer
aru kutty supera per v aikiringa enga v2 papakum per vaikiringala??:)
Arjun appdi enna thaan senjan??:mad:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top