17.அன்பின் வெற்றிவேல்

Advertisement

Pavidurai

Member
காலை சமையல் வேலைக்கு உதவிசெய்துவிட்டு 8 மணிப்போல் தன் அறைக்கு வந்து புறப்பட்டாள்.....


அவள் நின்றிருந்த ட்ரெஸ்ஸிங் டேபிள் நேராக இருந்த சோபாவில் அமர்ந்து அவன் மனையாள் அவசரமாக தலை வாரி கிளம்புவதையை பார்த்துக்கொண்டுடிருந்த வெற்றியை பார்த்த செல்வி கண்ணாடியில் தெரிந்த தன் கணவனின் பிம்பத்தை பார்த்து என்ன என புருவம் உயர்த்த ..........................

ஒரு நொடி ஜெர்க்காகி,' பின் அவள் பாராமல் சமாளித்து ஒன்றுமில்லை...... என தன தோள்கள் இரண்டையும் குலுக்க ...........

அவளும் தனது முகவாயை தன் இடது தோளில் இடித்து,தான் விட்ட வேலையை தொடர்ந்து முடித்து......... தனது காலேஜ் பக்கை தூக்கிக்கொண்டு வெளில வர ,அதற்காகவே காத்திரூந்தது போல அவள் பின்னோடுவர ,........

பின்னால் திரும்பி என்ன? பின்னாடியே வாரிங்க ....என முறைத்து கொண்டே கேட்க , மறுபடியும் முன்னாடி செயததை போல தன் தோள்கள் இரண்டையும் குலுக்க ...........


அவனை" போடா" என வாய் அசைத்து ஹாலில் உள்ள சோபாவில் பக்க வைத்துவிட்டு டையனிங் ஹாலில் அமர்ந்துகொண்டு அத்த என அழைக்க "இதோ வரேண்டா" என உள்ளிருந்து குரல் கொடுத்தார் .......

வேகமாக அவள் அருகில் வந்த வெற்றி அவள் பக்கத்தில் வந்தமர்ந்து அவளின் தாடையை தன் புறம் திருப்பி ,என்னடி சொன்ன?......... என கேட்க

ஐயோ! விடுங்க வெற்றி ,என்ன பண்ணுறீங்க ........என அவனது கையை தட்டி விட பார்க்க அது முடியாமல் போக
ஏங்க அத்த வந்தா தப்பா நினைப்பாங்க என கெஞ்ச ..............

கொஞ்சமும் அசராமல் சொல்லுடி என்ன சொன்ன," டா.......வா" ...... இப்போ சொல்லுபாப்போம் .....அவளை சீண்டவே அவள் பக்கத்தில் அமர்ந்தவன் உரிமையுணர்வு தோன்ற ......என்று அவள் கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதிக்க .................அவளோ தன் கண்களை விரித்து ஆவென பார்க்க ,மணி வரும் சத்தம் அரவம் கேட்டு தள்ளி அமர்ந்தான்.

அதன்பின் ஒன்றுமே நடக்காததை போல் வெற்றி சாப்பிட்டு எழ அவளுக்குத்தான் சாப்பாடு உள்ளே போவேனா என்றது.



அவள் சாப்பிடாமல் இருந்ததை பார்த்து என்னடா, காலேஜ் போகணும்னு சொல்லிட்டு சாப்ப்பிடமா இருக்க சாப்பிடுடா என வாஞ்சியாக சொல்ல .......ம்ம்ம்ம் என தலையை உருட்டிக்கொண்டு ஒருவழியாக சாப்பிட்டு எழ டைம் ஆனதால் வேகமாக வெளியில் வர.................
நம்ம ஹீரோ வாசலில் தனது பைக் அமர்ந்து அவளை அழைக்க அவளோ மறுப்பாக தலையசைத்தாள். அவன் முறைக்க அவளும் முறைத்தாள் ..........

அவனோ அம்மா நாங்க கிளம்புறோம் ............என சத்தம் கொடுக்க
வெளியில் வந்தவர் "சரிடா" பார்த்து போய்ட்டுவாங்க .........

மணி, ஏறு டா .......அவளை ஊக்க வேறுவழியில்லாமல் வண்டியில் ஏறினால் ........ தன் அம்மாவுக்கு விடை கொடுத்து இருவரும் கிளம்ப வரும் வழியில் அமைதியாக இருந்த செல்வியை பார்த்து சைடு மிர்ரரில் பார்த்து புன்னகைத்துக்கொண்டே அவளிடம் பேச ஆரமிக்க , அமைதியாக இருக்க சட்யென்று வண்டியை நிறுத்தி அவளிடம் என்ன என்று கேட்க ,

அப்போதும் அமைதியாக இருந்தவளை பார்த்து முறைத்துக்கொண்டு," நான் உன் ஹஸ்பான்ட் தான ;நா கிஸ் பண்ண கூடாதா ?.............

என்ன சொல்லுவாள் ,'பண்ணலாம் என்றா' ? ...........இப்போதே அவனது முகம் பார்க்க முடியாமல் தவிக்க அவனது கேள்விக்கு என்ன பதில் சொல்ல.......

ஏய் சொல்லுடி ......

சற்றேன்று நிமிர்ந்து ,அவன் முகம் பார்த்து என்னவெண்ண பண்ணலாம் ,.........இப்ப ஓகேவா போலாம் வண்டியை எடுங்க லேட்டா ஆகுது ......ஆச்சாரியமாக அவளை பார்த்துவிட்டு வண்டி எடுக்க ,..........ஒருவழியாக காலேஜ் வந்து சேர்ந்தனர் .

அவனுக்கும் புரிந்துதான் இருந்தது ,அவளது அவஸ்த்தை ; இருந்தும் அவனுக்கு அவளது வாயால் கேட்க ஆவல்,
அவளுக்கும் முதல் நாள் என்பதால் ஆடிட்டோரியம் அழைத்து சென்று விட்டுவிட்டு தனது அறைக்கு வந்தான்.

முதல் நாள் அவளுக்கு வகுப்பு இல்லை என்பதால் மதியமே வீட்டுக்கு விட வெற்றியிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள் .


வீட்டில் பூகம்பமே காத்துக்கொண்டிருக்க தனது தோழியோடு வீடு வந்தால் நம் நாயகி ,அவள் வாசலில் வரும்போதே சத்தமாக ஒரு குரல் கேட்க யாராக இருக்கும் என எண்ணிக்கொண்டே உள்ளே வர ,

மணிதான் வாடா இது நம்ம மாமாவோட அத்த உங்க கல்யாணத்தோடு உடம்பு முடியாம இருந்ததால் வரமுடியல ....என அறிமுகபடுத்த சிரித்த முகமாக அவர் காலில் விழுந்து வணங்கி
அவரிடம் நலம் விசாரிக்க ..........

அவரோ தன் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு ம்ம்ம் என்றார்.






 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top