14(1).அன்பின் வெற்றிவேல்

Advertisement

Pavidurai

Member
ஏ லூசு இதுக்கெல்லாம் போய்
யாராவது அழுவாங்களா........ முதல்ல கண்ணத்தொட என அதட்ட .........

அவளும்,
"மூக்கினை உறிஞ்சிக்கொண்டே தனது புறங்கையால் கண்ணை துடைத்தாள்"...................

அதைப்பார்த்துக்கொண்டிருந்த வெற்றிக்கு ,"ஒரு அடம்பிடிக்கும் குழந்தை பொம்மை கேட்டு அழுவது போல் இருந்தது".அவளை பார்த்து கொண்டே கையை பிடித்து இழுத்து தன் பக்கத்தில் நிறுத்தி..........

மெதுவாக அவளது கண்ணீரை துடைத்து விட்டு ,அவளை தன் மார்போடு அணைத்து முதுகை நீவி விட்டான்.........

அவளும் அவனைக் கட்டிக் கொண்டாள்......சிறிது நேரம் விட்டு, பின் அவளை தன்னிடமிருந்து பிரித்து தன் முன் நிறுத்தி சரி," சொல்லு" என்க........

அவன் என்ன சொல்கிறான் என புரியாமல், அவள் என்ன? என அவனை நிமிர்ந்து பார்த்து கேட்க.............


மேஜர் சப்ஜெக்ட் என்ன எடுத்த?......


அவனது கேள்வியில்
அவனை வினோதமாக பார்த்தாள்............


அவளது பார்வையின் பொருள் புரியாமல்...... என்ன சொல்லுடி? எதுக்கு இப்படி பாத்துட்டு இருக்க?.....


என்ன?.... "நான் என்ன படிக்கிறேன்னு தெரியாம தான் அட்மிஷன் எல்லாம் வாங்கிட்டு வந்தீங்களா?...... என கேள்வியாய் புருவம் உயர்த்த".........

அவனோ கூலாக, ஆமா தெரியாது........ உன் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம்னு வாங்கிட்டு வந்தேன்......

சரி, சரி.......கேள்வி மேல கேள்வி கேட்காமல் , நான் கேட்டதுக்கு பதில் சொல்லு"..........

அவனை முறைத்துக் கொண்டே பாட்னி(botany-தாவரவியல்)....



"ஏய் செல்வி! உண்மையாவா சொல்ற"?....... என ஆச்சரியமாக வினவ....


இதுல பொய் சொல்ல என்ன இருக்கு..........ஏன் அப்படி கேக்கறீங்க?....

உனக்கு நான் என்ன மேஜர் பாடம் எடுக்குறனு தெரியுமா?............


இல்லையே...... அப்பாதான் நீங்க ××××× காலேஜ்ல ஒர்க் பண்றீங்கன்னு சொன்னாங்க.............

சரி சொல்லுங்க அப்படி என்ன சப்ஜெக்ட்(பாடம்) எடுகிறிங்க?.......


ஏய் ,"நீயும் நானும் ஒரே மேஜர்"........... நான்தான் உனக்கு பாடம் எடுக்க போறேன் . நான்தான் பிஜி கிளாஸ் இன்சார்ஜ்...........

"ஜாலி"... "ஜாலி"... ரொம்ப சந்தோஷம்.........நானும்
கிளாஸ்ல ஜாலியா இருக்கலாம்.... எப்ப வேணா லீவ் போடலாம். இந்த இன்டெர்னல் டேஸ்ட் ,ப்ராஜெக்ட் வைவா, செமினார் ,.........
etc...எதுக்கும் பயப்பட வேண்டாம்.......
எல்லாம் நீங்களே பார்த்துபிங்க....... என செல்வி துள்ளி குதிக்க.......


துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த அவளது கையை பிடித்து நிறுத்தி தலையில் கொட்டு வைத்து........

என்ன சொன்ன....? என்ன சொன்ன.....?.. திருப்பி சொல்லு..
திருப்பி சொல்லு......
கொண்ணுருவேன் பாத்துக்க ..........

அவளோ தன் தலையினை தடவிக் கொண்டே அவனை முறைக்க....

.....என்னடி.... நீ நல்லா படிப்ப
உன்னோட முன்னேற்றத்திற்கு நான் தடையா இருக்க கூடாதுன்னு சொல்லி உன்ன படிக்க வைக்கனும் நெனெச்சென் ........ஆனா நீ பொல்லாத கேடி வேலையெல்லாம் பார்ப்ப போல இருக்கு........

அடியே!" இதெல்லாம்(ஒபீ அடிக்கலாம்) நினைச்சுக்கிட்டு நீ காலேஜ்க்கு வரதுன்னா வரவே வேண்டாம் ; படிக்கிறதா இருந்தா வா".........
"அதே மாதிரி டெய்லி நடத்துற பாடத்துல டவுட் இருந்தா... நான் வீட்டுக்கு வந்ததும் கேளு சொல்லித்தாரேன் .... தினமும் இப்படி இரண்டு மணி நேரம் படிக்கனும் இல்ல தூங்க விட மாட்டேன்".... என அவன் மூச்சு கூட வாங்காமல் பேசிக்கொண்டே இருக்க......

ஹலோ.....வெயிட் .....வெயிட் ......என எட்டி ,"அவனது வாயை பொத்தி போதும் போதும் ...போதும்... நிறுத்துங்க.... நிறுத்துங்க...

என்னென்ன எதுமே தெரியாம பாசாக்கிருக்கேன் நினைச்சிங்களா....... ஃபஸ்ட் கிளாசில் பாஸ் இருக்கேன்.....

நானும் நல்லா படிக்கத்தான் செய்வேன் . ஒரு பேச்சுக்கு சொன்னா ஓவரா சீன் போட்டு இருக்கீங்க.......

பாருங்க ....பாருங்க...... "நீங்க சொல்லித் தந்தாலும் சொல்லி தரட்டாலும் ஃபர்ஸ்ட் மார்க் வாங்கிறேனா இல்லையான்னு மட்டும் பாருங்க...... ..

"அடியே போதும் போதும் சும்மா அடிச்சுவிடாத" ........என வம்பிலுக்க....


" வேண்டாம் சும்மா இருங்க.......

கடுப்பான கடிச்சி வைச்சுடுவேன்"..........என ஓற்றை விரல் நீட்டி மிரட்ட...


வெற்றி,
ஐயோ! சின்ன பொண்ண போய் எனக்கு கல்யாணம் பண்ணி கொடுத்து.......... என்னை ,"உன் கூட மல்லுக்கட்ட வச்சுட்டாங்களே" என போலியாக வருத்தப்பட....

தன் கைகளை இடுப்பில் ஊன்றி நிமிர்ந்து அவனை தீயாக முறைத்தவள் .......

தன் கால் பெருவிரலைத் தரையில் ஊன்றி ,எட்டி அவனது காதை
பிடித்து திருக...........


டீ...விடுடி விடுடி வலிக்குது ...
வலிக்குது...கத்திகொண்டே ; அவளது கையை தட்டிவிட.....


அவன் தட்டி விட்டதில்
கீழ விழ போனவள்........" பேலன்ஸ் செய்ய அவனது தோளை பிடித்தாள்...


"அவளின் நிலை உணர்ந்தவன் கைகளும் தானாக அவளது இடுப்பை பிடிக்க"..........

ஏற்கனவே , அவள் விழபோனதில் டாப்ஸ் விலகி இருக்க........

அவனது கை அவளது வெற்றிடையில் பதிந்தது........


அவள் அதிர்ந்து வெற்றியை பார்க்க......

அவனும் அதே போல் அவளை பார்த்தான் ... ...

அவனும் அவள் பார்வையை புரிந்து சட்டென்று விலகி நின்றான்.......... அவளும் சுதாரித்து விலகி நின்றாள்........

இருவரும் அப்படியே நிற்க இவர்களை தேடி வந்த கவின்........

வெற்றியை பார்த்து
டேய்! என்னடா.... ரெண்டு பேரும் இப்படி நிக்கிறிங்க என்னடா ஆச்சு?.......

இருவரும் ஒருசேர,

அது ஒன்னும் இல்ல," சும்மா சும்மா" தான்.......


டேய் என்னடா நடக்குது? இங்க ..... உங்க முகமே சரியில்ல........


அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ சொல்லு, இப்ப எதுக்கு வந்த?...........


டேய் எதுக்கு இப்போ இவ்ளோ பதட்டபடுற?.... என்னடா வெற்றி.......



ஒன்னும் இல்ல ....
சொன்னா கேளுடா கவின்.....முதல்ல நீ எதுக்கு வந்தன்னு சொல்லு.....

கவின் இருவரையும் பார்த்து கொண்டு நிற்க..

வெளியில் கவி என்னடா பண்ணுற..... அவங்கள கூட்டிட்டு வர சொன்னா.....நீ என்னடா செய்ற?.........

இதோ அம்மா என வெற்றி செல்வியின் கையை பிடித்து வெளியில் வர. ..........

என்னடா நடக்குது இங்க..... என கவினும் அவர்கள் பின்னாடி வந்தான்.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top