'வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே !!' - முன்னோட்டம்

Advertisement

Rudraprarthana

Well-Known Member
"வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே !!" டீசர்:

10900


'என்ன மிஸ்டர் சரண் என்கிட்டே ஏதாவது சொல்லனுமா..??' என்று தன் முன் வந்து நின்றவனை அவள் இமைக்காமல் பார்க்க,

அவனோ அவள் கேள்வியை புறம் தள்ளி பின்னங்கழுத்தை வருடி கொடுத்தவாறு அழுத்தமாக அவளை பார்க்க அவனுக்கு சளைக்காமல் அவளும் திருப்பி அவனை பார்த்து வைத்தாள்.

அவள் பார்வையில் சினம் துளிர்க்க 'ஏய் என்னடி கொழுப்பா' என்று சீறியவன் அவள் சுதாரிக்கும் முன் ஒரு கரத்தால் அவளை தூக்கி தோளில் போட்டுக்கொள்ள அதை எதிர்பாராதவள் உடனே,

'என்ன பண்றீங்க விடுங்க என்னை... மிஸ்டர் சரண் விடுங்க' என்று திமிறியவளை அசட்டை செய்து அருகே இருந்த அறைக்குள் தூக்கி சென்றவன் கதவை தாளிடவும் அவனிடம் இருந்து துள்ளி கீழே இறங்கியவள்,

'வாட் இஸ் திஸ் மிஸ்டர் சரண்..??' என்று அவள் ஆரம்பிக்கவுமே,
'அடிங்க' என்று கை ஓங்கி கொண்டு அவளை நெருங்க ஒரு நொடி திகைத்து பின்னடைந்தாள்.

கண்களில் மிரட்சியுடன் நின்றவளை தலை முதல் கால் வரை அளவிட்டவன்

"ஆளைப்பாரு ஆழாக்கு சைஸ்ல இருந்துட்டு வந்ததுல இருந்து நானும் பார்க்கிறேன் ஓவரா துள்ளிட்டு இருக்க" என்று அவளை சுவரில் சாய்த்து இருபுறமும் கரங்களால் சிறைபிடித்து,

"இன்னொருமுறை மிஸ்டர் சரண் சொல்லி பாருடி தெரியும்.. " என்று எச்சரிக்க,

அவளோ தலை சாய்த்து 'சொன்னா..??' என்று புருவம் ஏற்றி இறக்க,

" மொத்த பல்லையும் தட்டி கையில கொடுத்துடுவேன்"

'ஓஓ' என்று அவள் உதட்டை சுழிக்க,

சுழித்த அவள் இதழ்களை இரு விரலால் பிடித்தவன் 'என்னடி ஓஒ ' என்று தன் மூச்சு காற்று முகத்தில் அறையும் வண்ணம் அவளை நெருங்கி,

'சொல்லகூடாதுன்னா கூடாது' என்று கட்டளையிட்டவனின் கரம் இதழ்களை விடுத்து மெல்ல கீழே இறங்க,

"ஏன் சொல்ல கூடாது அது தானே உங்க பேரு..?? மிஸ்டர் சர.." என்றவளின் பேச்சு அவன் கரம் சென்று சேர்ந்த இடத்தை உணர்ந்து தடை பட்டு போக விக்கித்து போய் அவனை பார்த்தாள்.



ஹாய் செல்லகுட்டீஸ்...


சரண் - கீர்த்தி , விஷ்வா - ப்ரீத்தி இரண்டு கதைகளுக்கும் வேறு வேறு தலைப்பு கொடுத்து பிரித்து இருக்கிறேன்... இனி சரண் கீர்த்தி கதை 'வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே !!' என்ற தலைப்பில் வரும்.. இவங்க கதைக்கு இது பொருத்தமா இருக்கான்னு சொல்லிட்டு போங்க... விஷ்வா - ப்ரீத்தி கதையின் தலைப்பு அடுத்த முன்னோட்டத்தின் போது அறிவிக்கப்படும்.

நன்றிகள்

ருத்ரபிரார்த்தனா
 

Akila

Well-Known Member
"வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே !!" டீசர்:

View attachment 10900


'என்ன மிஸ்டர் சரண் என்கிட்டே ஏதாவது சொல்லனுமா..??' என்று தன் முன் வந்து நின்றவனை அவள் இமைக்காமல் பார்க்க,

அவனோ அவள் கேள்வியை புறம் தள்ளி பின்னங்கழுத்தை வருடி கொடுத்தவாறு அழுத்தமாக அவளை பார்க்க அவனுக்கு சளைக்காமல் அவளும் திருப்பி அவனை பார்த்து வைத்தாள்.

அவள் பார்வையில் சினம் துளிர்க்க 'ஏய் என்னடி கொழுப்பா' என்று சீறியவன் அவள் சுதாரிக்கும் முன் ஒரு கரத்தால் அவளை தூக்கி தோளில் போட்டுக்கொள்ள அதை எதிர்பாராதவள் உடனே,

'என்ன பண்றீங்க விடுங்க என்னை... மிஸ்டர் சரண் விடுங்க' என்று திமிறியவளை அசட்டை செய்து அருகே இருந்த அறைக்குள் தூக்கி சென்றவன் கதவை தாளிடவும் அவனிடம் இருந்து துள்ளி கீழே இறங்கியவள்,

'வாட் இஸ் திஸ் மிஸ்டர் சரண்..??' என்று அவள் ஆரம்பிக்கவுமே,
'அடிங்க' என்று கை ஓங்கி கொண்டு அவளை நெருங்க ஒரு நொடி திகைத்து பின்னடைந்தாள்.

கண்களில் மிரட்சியுடன் நின்றவளை தலை முதல் கால் வரை அளவிட்டவன்

"ஆளைப்பாரு ஆழாக்கு சைஸ்ல இருந்துட்டு வந்ததுல இருந்து நானும் பார்க்கிறேன் ஓவரா துள்ளிட்டு இருக்க" என்று அவளை சுவரில் சாய்த்து இருபுறமும் கரங்களால் சிறைபிடித்து,

"இன்னொருமுறை மிஸ்டர் சரண் சொல்லி பாருடி தெரியும்.. " என்று எச்சரிக்க,

அவளோ தலை சாய்த்து 'சொன்னா..??' என்று புருவம் ஏற்றி இறக்க,

" மொத்த பல்லையும் தட்டி கையில கொடுத்துடுவேன்"

'ஓஓ' என்று அவள் உதட்டை சுழிக்க,

சுழித்த அவள் இதழ்களை இரு விரலால் பிடித்தவன் 'என்னடி ஓஒ ' என்று தன் மூச்சு காற்று முகத்தில் அறையும் வண்ணம் அவளை நெருங்கி,

'சொல்லகூடாதுன்னா கூடாது' என்று கட்டளையிட்டவனின் கரம் இதழ்களை விடுத்து மெல்ல கீழே இறங்க,

"ஏன் சொல்ல கூடாது அது தானே உங்க பேரு..?? மிஸ்டர் சர.." என்றவளின் பேச்சு அவன் கரம் சென்று சேர்ந்த இடத்தை உணர்ந்து தடை பட்டு போக விக்கித்து போய் அவனை பார்த்தாள்.



ஹாய் செல்லகுட்டீஸ்...


சரண் - கீர்த்தி , விஷ்வா - ப்ரீத்தி இரண்டு கதைகளுக்கும் வேறு வேறு தலைப்பு கொடுத்து பிரித்து இருக்கிறேன்... இனி சரண் கீர்த்தி கதை 'வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே !!' என்ற தலைப்பில் வரும்.. இவங்க கதைக்கு இது பொருத்தமா இருக்கான்னு சொல்லிட்டு போங்க... விஷ்வா - ப்ரீத்தி கதையின் தலைப்பு அடுத்த முன்னோட்டத்தின் போது அறிவிக்கப்படும்.

நன்றிகள்

ருத்ரபிரார்த்தனா
Hi
I think Need to read all yours... Then only this series will be clear..
Who is Vishwa-Preethi--- Is also continuation of Nenjamellam Alare -- Characters???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top