வம்பு செய்யும் தும்பி

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer


"தும்பி
நீ செய்யும்
வம்பு தான்
தீரவில்லை
தினமும்"


"மழை
அறிகுறியாய்
நீ
மாநிலத்தில்
திரிகையில்
மகிழ்ச்சியாய்
இருக்கிறது"


"சாலையில்
செல்லும்
வாகனங்களின்
வேகத்தில்
உன் சிறகுகள்
செயலிக்கையில்
வேதனை தான்
விளைகிறது"


"புராணங்களில்
நீ
தூது சென்றாயே
மழை வரும்
செய்தியையாய்
தூதாய் எங்களுக்கு
தந்தாயோ"


"அறிகுறி
சொல்லும்
நீ
அழிவது
நீதியோ"


"உனக்கென
ஓர் இடத்தில்
நிம்மதியாய் இரு
தும்பி"


"மழையின்
அறிகுறியை
உணர்த்தாமல்
இருக்க உன்னால்
முடியாது என்றால்
ஒன்றும் கவலை
கொள்ளாதே
ஒரு
நாள் மழையின்
வரவு
மண்ணில்
நின்று விடும்
மனிதர்களின்
மரத்தேவைகளினால்"


"மனிதகுலம்
மிருகமாய்
மாறி
காலம் பல
கரைந்துவிட்டது
வண்டினம்
உன்னை
வாகனங்களால்
வதைத்து விடுவான்"


"வசைபாடக்கூட
உன்னால்
முடியாது
நீ
வசைபாடினாலும்
மாறும் கூட்டம்
இது கிடையாது"


"வம்பு செய்யாதே
தும்பியே
மனிதன்
வராத இடம்
தேடி
துயில் கொள்"


"நீயாக
தேடி வந்து
வஞ்சக
மனிதக்கூட்டத்திடம்
வம்பு செய்தால்
அழித்திடுவான்
அகங்கார மனிதன்
உன்னை
அடியோடு"


"வம்பு
செய்யாதே
தும்பியே"
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top