ரமாலட்சுமி's எங்கிருந்தோ வந்தாள்.......

Advertisement

Joher

Well-Known Member
ரமாலட்சுமி's எங்கிருந்தோ வந்தாள்....... Completed story.....

முதல் எபி முதல் கடைசி எபி வரை கொஞ்சமும் அந்த த்ரில் குறையாமல் என்னாச்சு எனும் கேள்வியோடு move ஆன ஸ்டோரி......

பதவி & அதிகாரத்தோடு பணமும் அரசியலும் சேர்த்தால் வாழ்க்கையில் கெட்டதோ நல்லதோ என்ன வேணா நடத்திக்கலாம்....... அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை இதில் படிக்கலாம்......

நிறைய நாட்டில் அங்கங்கே நாம் பார்த்து படித்து கடந்த சம்பவங்கள் இருந்தாலும் இப்படியெல்லாம் கூட நடந்துப்பாங்களா எனும் கேள்வியை பல நேரம் முன்வைக்குது கதை.......

மாதுரி மனநல மருத்துவமனை தீ விபத்தில் சிக்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள்...... ஒரு பக்கம் விசாரணை போனாலும் என்ன நடந்தென்று புரியாமல் தடுமாறும் விசாரணைக்கு பக்கபலமாக வந்து சேரும் மிதுன்......

விபத்துக்கு காரணமானவன் வந்து தன்னை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகளால் கதையின் விசாரணை கோணங்கள் மாற, மனநல மருத்துவமனையின் கோர முகம் வெளியே வருது......

மெத்த படித்த மிருகங்களின் பணவெறி, பதவி வெறி, அதிகார வெறி. காமவெறி அத்துமீறல்கள் குடும்பங்களை எப்படியெல்லாம் சிதைக்கும் என்பதை கதையின் போக்கில் அட்டகாசமா சொல்லியிருக்காங்க.......

மக்களை காக்க வேண்டிய அரசும் அரசியலும் கைகோர்த்து ஆடும் வெறியாட்டம் முடிவுக்கு வரும் இடம் சூப்பர்......

வழக்கமான ஹீரோ காதல்னு வரும் கதைகளில் இருந்து வித்தியாசமா கடைசி வரை கதையோடவே ஒன்றிக்கவைத்து கடைசியில் அப்பாடானு சந்தோசமா முடியும் கதை.......
நல்ல ஒரு சஸ்பென்ஸ்-த்ரில்லர் ஸ்டோரி....... எடுத்தால் படிக்காமல் வைக்க முடியாது........ அவ்ளோ இன்டர்ஸ்டிங்கா போகுது கதை......

படிக்காதவங்க ட்ரை பண்ணுங்க......

லிங்க்: https://tamilnovelwriters.com/community/forums/rama-lakshmis-engiruntho-vanthaal.107/?order=post_date&direction=asc
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top