“படைத்த பிரம்மனுக்கும்
பிரம்மிப்பை தந்தவள்
அவள்
பேசாத பதுமை
அவள்”
“வாய் உதிர்க்காத
வார்த்தை
அவள்
கண்கள்
பேசிடும்
கருவிழி
அழகாய் அசைந்தாட”
“ஊமை
அவள் என
பட்டம்
கொடுத்தனர் பலர்
அவள்
உதிர்க்கும்
ஒரு சிரிப்பில்
உடைந்து போனது
பட்டங்கள் எல்லாம்”
“உதறித்
தள்ளியவர்களை
எல்லாம்
தன்மானம் இழக்காமல்
வென்றெடுத்தாள்
மௌன மொழியாள்”
“மௌனமும்
அழகு தான்
உணர்ந்தேன்
ஒரு முறை
அவளைக்கண்டதிலிருந்து”
“காற்றில்
அவள்
கைகள்
அசைத்து
கண்களில்
அவள்
அபிநயம் பிடித்து
என்னோடு அவள்
பேசிட
இழந்தேனே
என் சுயத்தை
பிரம்மன்
வரைந்தத ஓவியம்
அவளின்
செய்கையில்”
“மௌன மொழியில்
மனம் கொய்தவளே
கொய்த்த
என் இதயத்தை
கொலை
செய்துவிடாதே
உன் மேல்
நான் கொண்ட
உண்மை நேசத்தை
உடைத்து”
“உன் மௌனமொழியில்
விழிகளில்
யாழ் மீட்டி
சொல்லடி
ஒரு வார்த்தை
என் உயிர் வேண்டும்
ஒரு வார்த்தை
நேசத்தின்
அடையாளமாய்
காற்றில் கரையாத
காதல் வார்த்தை ஒன்று”
“காத்திருக்கிறேன்
பெண்ணே
மௌன மொழியாள்
உன்
மணாளன் ஆகும்
மணித்துளிக்காக”