மௌன மொழியாள்

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer

“படைத்த பிரம்மனுக்கும்

பிரம்மிப்பை தந்தவள்

அவள்

பேசாத பதுமை

அவள்”



“வாய் உதிர்க்காத

வார்த்தை

அவள்

கண்கள்

பேசிடும்

கருவிழி

அழகாய் அசைந்தாட”



“ஊமை

அவள் என

பட்டம்

கொடுத்தனர் பலர்

அவள்

உதிர்க்கும்

ஒரு சிரிப்பில்

உடைந்து போனது

பட்டங்கள் எல்லாம்”



“உதறித்

தள்ளியவர்களை

எல்லாம்

தன்மானம் இழக்காமல்

வென்றெடுத்தாள்

மௌன மொழியாள்”



“மௌனமும்

அழகு தான்

உணர்ந்தேன்

ஒரு முறை

அவளைக்கண்டதிலிருந்து”



“காற்றில்

அவள்

கைகள்

அசைத்து

கண்களில்

அவள்

அபிநயம் பிடித்து

என்னோடு அவள்
பேசிட


இழந்தேனே

என் சுயத்தை

பிரம்மன்

வரைந்தத ஓவியம்

அவளின்

செய்கையில்”



“மௌன மொழியில்

மனம் கொய்தவளே

கொய்த்த

என் இதயத்தை

கொலை

செய்துவிடாதே

உன் மேல்

நான் கொண்ட

உண்மை நேசத்தை

உடைத்து”



“உன் மௌனமொழியில்

விழிகளில்

யாழ் மீட்டி

சொல்லடி

ஒரு வார்த்தை

என் உயிர் வேண்டும்

ஒரு வார்த்தை

நேசத்தின்

அடையாளமாய்

காற்றில் கரையாத

காதல் வார்த்தை ஒன்று”



“காத்திருக்கிறேன்

பெண்ணே

மௌன மொழியாள்

உன்

மணாளன் ஆகும்

மணித்துளிக்காக”


 

Attachments

  • jdwmLhhgeccsi.jpg
    jdwmLhhgeccsi.jpg
    12.3 KB · Views: 0

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப ரொம்ப அழகு டா கனி :love::love:
எங்க நற்பவிக்கு பொருத்தமான வரிகள் ♥♥♥
படைத்த பிரம்மனையே பிரமிக்க வைக்கும் மௌன மொழி தேவதைகளின் அழைகைப் போலவே இதுவும் அழகானதொரு கவிதை.
வாழ்த்துகள் :love::love:
 

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
ரொம்ப ரொம்ப அழகு டா கனி :love::love:
எங்க நற்பவிக்கு பொருத்தமான வரிகள் ♥♥♥
படைத்த பிரம்மனையே பிரமிக்க வைக்கும் மௌன மொழி தேவதைகளின் அழைகைப் போலவே இதுவும் அழகானதொரு கவிதை.
வாழ்த்துகள் :love::love:
"வாழ்த்திடும்
வஞ்சமில்லா நெஞ்சை
வணங்கும் கனி":love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top