மையல் கொண்டேன் - 5

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
மையல் – 5

சூர்யா இருக்கையில் அமர்ந்து தனக்கு கொடுக்கபட்ட வழக்குகளின் விவரங்களை பார்த்து கொண்டும் இனி என்ன செய்ய வேண்டும் என்றும் பட்டியலிட்டு கொண்டிருந்தான்

யாழினி “சார் நீங்க கேட்ட அந்த பெண்கள் காணாமல் போன வழக்கில் நமக்கு கிடைத்த பாரன்சிக் அறிக்கை சார்” என கோப்பை நீட்ட அதை பெற்று கொண்டு அதில் கவனத்தை செலுத்தினான்

சார் அந்த பெண்கள் உடல் சித்தைந்துள்ளது அதோடு அவர்கள் கற்பழிக்க பட்டுள்ளனர் இரண்டு பெண்களின் உடலிலும் அதற்கான மாறுதல்கள் உள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர் அதோடு இதுவரை 12 பெண்கள் காணாமல் போனதாக புகார் பதிவாகி உள்ளது

சூர்யாவும் கோப்பில் உள்ள விவரங்களை பார்வையிட்டு கொண்டே யாழினி சொல்வதை கேட்டு கொண்டிருந்தான் அப்போது உள்ளே வந்த வேந்தன் சார் நீங்க சொன்ன மாதிரி ஆன்லைன் சூதாட்டம் அதிகமாக நடக்கும் இடங்கள் அதை நடத்துபவர்கள் பற்றிய விவரங்கள் இதில் உள்ளது சார் இவர்களுக்கு எல்லாம் தலைமையாக சுனில் என்பவன் செயல் பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது

அந்த கோப்புகளையும் பார்வையிட்டான் என்ன வேந்தன் சுனில் என்பவன் தான் இதற்கு தலைமை என சொன்னிர்கள் அவனை பற்றி எந்த விவரமும் இதில் இல்லை அவனின் புகைப்படம் கூட இல்லை ஏன்

சார் அவனை பற்றி எந்த விவரமும் தெரியவில்லை அதோடு இதுவரை அவனை நேரில் யாரும் சந்தித்தாக தகவலும் இல்லை அவன் அனைத்தும் போன் மூலம் அல்லது இன்டர்நெட் மூலமாக செய்வதாக தகவல்

ம் இந்த சூதாட்டத்தில் இடுபடுபவர்கள் முதலில் தொடர்பு கொள்ளும் ஆட்களை முதலில் பிடியுங்கள் அவர்கள் மூலமாக அந்த சுனிலை பிடிக்கலாம் அதோடு அவர்களுக்கு சந்தேகம் வராமல் நம்முடைய ஆட்களை சூதாட்டம் அதிகம் நடைபெறும் இடங்களில் கவனிக்க சொல்லுங்கள் அவர்கள் மாட்டினால் உடனே இங்கு கொண்டுவர சொல்லுங்கள்

யாழினி நீங்க இந்த இரண்டு பெண்களின் பேஸ்புக்,வாட்சாப் இவற்றில் இவர்கள் யாருடன் அதிகம் chat செய்துள்ளனர் அவர்களின் விவரங்கள் எனக்கு வேண்டும் அதனுடன் இந்த பெண்களின் குடும்ப விவரம் மொத்தமும் அவர்களுடைய chat விவரங்களுடன் சேர்ந்து எனக்கு கொடுங்கள்

வேந்தன் அந்த சுனிலை பற்றி வேறு விவரங்கள் கிடைக்குமா என பாருங்கள் முடிந்த அளவு அனைத்து முயற்ச்சிகளும் எடுங்கள் அவனை பற்றி சிறு விவரம் கிடைத்தாலும் உடனே என்னை தொடர்பு கொள்ளுங்கள்

நான் கேட்ட அனைத்து விவரங்களும் முடிந்த அளவு விரைவாக விசாரித்து கொண்டு வாருங்கள் இப்பொழுது நீங்கள் போகலாம்

வேந்தனும்,யாழினியும் வெளியே வர எதிரில் உள்ள இருக்கையில் வரு தனது தோழி சுபாவுடன் சூர்யநிலவனை கான காத்திருந்தாள் இவளை பார்த்த வேந்தனோ என்ன ஜான்சிராணி இந்த பக்கம் வந்துள்ளது இவங்களுக்கு தான் போலீசே பிடிக்காது பின்பு எதற்கு அதுவும் உடன் ஒரு பெண்ணையும் அழைத்து வந்துள்ளது இந்த ஜான்சிராணி இன்று யார் தலை உருல போகிறதோ தெரியவில்லை இவர்களை பார்க்கும் போதெல்லாம் யாராவது வசமாக வாங்கிகட்டிகின்றார்கள் இன்று யார் வாங்க போறாங்களோ தெரியலையே

யாழினி “யாரை பார்த்து வேந்தன் இப்படி புலம்புறீங்க”

எல்லாம் நமக்கு எதிரில் உள்ள இருக்கையில் அமர்ந்து இருக்கிறார்களே இரு பெண்கள் அவர்களை பார்த்துதான் அதிலும் அந்த மெருன் கலர் சுடிதார் போட்டு இருக்கங்களே அந்த பெண்ணை இரண்டு முறை இதற்கு முன்பு சந்தித்தேன் என்ன தைரியம் தெரியுமா என இரண்டு முறை அவளை சந்தித்த நிகழ்வு குறித்து கூறினான்

தைரியமான பொண்ணு தான் சரி அதற்கு எதற்கு நீங்கள் இப்படி புலம்புறீங்க அவர்கள் ஏதாவது புகார் கொடுக்க வந்திருப்பார்கள் அதனால் உங்களுக்கு என்ன வந்தது

அது இல்லை யாழினி இவங்க கலெக்டர் மேம் பொண்ணு என நினைக்கிறேன் இவர்கள் என்ன பிரச்சனை என்றாலும் அவரிடம் சொன்னாள் அவர் பார்த்து கொள்ள போகிறார் பின் எதற்கு இங்கு வரவேண்டும் அதை பற்றி சிந்தித்து கொண்டிருக்கிறேன்

அந்த பொண்ணு கலெக்டர் மேம் பெண் என எதை வைத்து சொல்கிறாய் நான் சொன்னேனே இவங்களை தொடர்ந்து சென்றோம் என்று அப்பொழுது அவங்க கலெக்டர் மேம் வீட்டினுள் சென்றார்கள் அதை வைத்து கூறுகிறேன்

சரி வாங்க என்ன என விசாரிப்போம் என யாழினி முன்னால் செல்ல வேண்டாம் யாழினி சொன்னாள் கேளு எப்படியும் சரியான பதில் கிடைக்காது இரண்டு முறை அனுபவ பட்டிருக்கேன் சொன்னாள் கேளு என யாழினியிடம் சொல்லி கொண்டே வர அதற்குள் அவள் வரு இருக்கும் இடத்தை அடைந்து விட்டாள்

வேந்தனும் பின்னே சென்று நிற்க வேந்தனை கண்டுகொண்ட வரு அவனை பார்த்து சிநேகமாக புன்னகைக்க அவனோ “இப்பொழுது நம்மை பார்த்து புன்னகைத்தார்களா சந்தேகமாக நோக்க”

வரு “என்ன வேந்தன் சார் இரண்டுமுறை சந்தித்துவுள்ளோம் அதற்குள் என்னை மறந்து விட்டிர்களா”

இல்லை மேம் நீங்க இரண்டுமுறையும் முறைத்து கொண்டுதான் இருந்தீர்கள் அதனால் என்னை பார்த்து சிநேகமாக புன்னகைக்கவும் இது எனக்கு தான என சின்ன டவுட் வேறதுவும் இல்லை

யாழினி “யாரை பார்க்க வேண்டும் ஏதாவது புகார் கொடுக்க வந்துள்ளீர்கள் என்றால் என்னிடமே கொடுக்கலாம்”

நாங்கள் ACP சூர்யநிலவன் அவரை பார்க்க வந்துள்ளோம் அவரிடமே எதற்கு வந்தோம் என தெரிவிக்கிறோம் மேம்

அவர் இப்பொழுது பிஸியாக உள்ளார் என்னிடம் தெரிவியுங்கள் அவரிடம் நான் தெரிவித்துவிடுகிறேன்

பரவாயில்லை மேம் அவர் ப்ரீ ஆகும் வரை இருத்து பார்த்து விட்டே செல்கிறோம் அதில் எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை

யாழினி கோவத்துடன் அங்கிருந்து செல்ல வேந்தன் “நான் அப்பொழுதே சொன்னேன் கேட்டாயா இப்பொழுது பார் எப்படி பதிலடி வருகிறது”

இருந்தாலும் அந்த பொண்ணுக்கு திமிர் அதிகம் தான் இவளை சும்மா விட மாட்டேன் நானும் சரியான பதில் கொடுக்கிறேன் அவளுக்கு என கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்

அதன் பின்பு வருவும்,சுபாவும் சூர்யாவை பார்க்க அனுமதியுடன் உள்ளே செல்ல வருவை பார்த்ததும் சூர்யாவின் மனது துள்ளிகுதித்தது கூடவே “என்ன மேடம் என்னை தேடி வந்திருக்காங்க என்ன விசியமாக இருக்கும் எப்படியும் நம்மிடம் சமாதானமாக பேச வர போவதில்லை என முளை சொல்ல மனமோ ஆமா நீ பேசின பேச்சுக்கு உன்னை மடியில் வைத்து கொஞ்சுவாள் பாரு என்னைக்கு அவள் கையால் அடி வாங்க போறியோ தெரியவில்லை என ஆஜர் ஆக”அதை தவிர்த்து என்ன விவரம் என வினவினான்

சுபா “சார் எங்கள் தெருவில் அனுமதியில்லாமல் பார் நடத்திவருகிறார்கள் அது மட்டுமல்லாது அங்கு வருபவர்கள் தெருவில் போவோர் வருவோர்களை வம்பிழுகிறார்கள், இதனால் தெருவில் நடக்கவே முடியவில்லை வண்டியில் சென்றாலும் குடித்துவிட்டு மேலே வந்து மோதுவது போல் ஓட்றாங்கள் இதற்கு நீங்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் சார்”

சூர்யாவின் கதோ சுபா சொல்வதை வாங்க அவனுடைய கண்களோ நிகாவை விட்டு அகலவில்லை

வரு “எப்படி பார்க்கிறான் பாரு தடிமாடு அப்படியே கண்ணை நோண்டணும் விட்டால் கண்களாலே என்னை முழுங்கிவிடுவான் போல இப்பொழுது மட்டும் என்ன பார்வை வேண்டி கிடக்கு அன்னைக்கு அப்படி பேசும்போது மட்டும் இவனுக்கு முளை எங்க போச்சு என சரமாரியாக அவனை மனதில் திட்டிகொண்டிருக்க”

அவனோ நீ என்ன நினைக்கிறாய் என நான் அறிவேன் என பார்வை செலுத்த சுபா “என்ன இவர் வருவையே பார்த்து கொண்டிருக்காரு நாம சொன்னதை கேட்டாரா இல்லையா என்று நினைக்க”

நீ சொன்னதை கேட்டேன் என தெரிவிக்கும் விதமாக அவளை நோக்கி நீங்கள் இதை பற்றி உங்களுடைய ஏரியா காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வில்லையா

கொடுத்தோம் சார் ஆனா எந்த மாறுதலும் இதுவரை நடக்க வில்லை அதனால் உங்களிடம் புகார் கொடுக்க வந்துள்ளோம், நீங்க வெளியே வேந்தன் ஒரு SI இருப்பாரு அவரிடம் என்னிடம் சொன்னதை புகாராக எழுதி கொடுங்கள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ எடுக்கிறேன் என்றான்

சுபா வெளியில் செல்ல வரு,சூர்யா மட்டுமே அந்த அறையில் இருக்க சூர்யா தன்னுடைய இருக்கையில் இருந்து எழுந்து வரு அமர்ந்துள்ள இருக்கையின் இருபுறமும் கைவைத்து அவளை தன்னுடைய கைகளுக்குள் கொண்டுவந்தான்

அவளின் முன் குனிந்து வையை குவித்து அவளின் நிற்றியில் ஊத அந்த காற்றில் அவள் நெற்றியின் விழுமாறு முன்னே சிறிதாக வெட்டிவிட்டிருந்த முடிகள் அசைய அவன் அவ்வாறு செய்யவும் அவளுடைய தேகம் சிலிர்த்தது அதை கண் மூடி ரசித்தவள் பின் அவனை நோக்கி வெட்டும் பார்வை ஒன்றை விசினாள் அவளுடைய பார்வையில் ஈர்க்க பெற்றவன் என்ன நிகா அத்தான் மேல கோவம் இன்னும் குறையவில்லையா

யாருக்கு யாரு அத்தான், இந்த அத்தான்,பொத்தான் என்று சொல்லும் வேலையெல்லாம் வேண்டாம் நான் எப்பொழுதும் போல் அமைதியாக இருக்க மாட்டேன் (ஏதோ இப்பொழுது மட்டும் அமைதியா இருகின்ற மாதிரி)

பாருடா என்னுடைய நிகா செல்லத்துக்கு கோவத்தை சரி அத்தான் வேண்டாம் மாமா ஓகே வா என அவளின் காதோரம் இதழ்களை லேசாக உரசிய வாரு கேட்க

அவனின் செய்கைகளில் அவளினும் ஒருவித மாற்றத்தை உண்டாக்கியது அதோடு காதுமடல் கூச இருக்கையின் பின்னே தலையை நகர்த்தி எதுவாக இருந்தாலும் இரண்டு அடி தள்ளி நின்று சொல்லு பக்கத்தில் வர வேலை வேண்டாம் எச்சரிக்க அவனோ இன்னும் அவளின் அருகே குனிந்து என்ன நிகா நான் பக்கத்தில் வந்தால் உன்னுடைய கோவம் நிலைக்காது என்று தானே என்னை தள்ளி நிற்க சொல்கிறாய்

மன்னாகட்டி யாராவது வந்தால் என்ன நினைப்பார்கள் அந்த அறிவு கூட இல்லை உன்னையெல்லாம் யார் ACPயாக தேர்வு செய்தது

யாராவது வந்து விடுவாங்க இதுதான் உன்னுடைய பிரச்சனை அப்ப நான் உன் பக்கத்தில் வருவதில் உனக்கு எந்த ஆச்சேபனையும் இல்லை அப்படிதானே

போடா என அவனை தள்ளிவிட்டு வெளியே வந்தாள் அவனோ அவளின் செய்கைகளை கொண்டு புன்னகைத்து கொண்டு சிக்கிரமே நாம் சேர்ந்து வாழ்வோம் நிகா அவள் சென்ற திசையை பார்த்து கொண்டே கூறினான்

மையல் தொடரும்..................

Hai friends next updateவுடன் வந்துவிட்டேன் படித்து உங்கள் கருத்துகளை கூறுங்கள் உங்கள் கருத்துகளை பெற ஆவலுடன் உள்ளேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top