மெல்லிய காதல் பூக்கும் P25

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
லீவ்ல போக முன் கதையை முடிக்கலாம்னு பார்த்தேன் முடியாதுனு தோணுது முடிஞ்ச அளவு டெய்லி UD தர ட்ரை பண்ணுறேன்.:geek::geek:

download (14).jpg


"அப்பா எனக்கு ஒன்னும் ஆபத்தில்லை நான் அங்க இருந்து தப்பிச்சிட்டேன் நீங்க ஒன்னும் பயப்படாதீங்க" மெதுவான குரலில் மலர் சொல்ல





பதட்டமாக ரத்னவேல் "மலர் மலர் இப்போ நீ எங்க இருக்க, நானே வரேன்... சொல்லு"







கீதாராணி எங்கே ஒளிந்திருக்கிறாள் என்பதை அறிந்து கொள்வது முக்கியமாக ரத்னவேலை மிரட்டி பணிய வைக்க முடியாது என்றறிந்த மலர்விழி எவ்வாறு பேச வேண்டும், எவ்வாறு பேசினால் ரத்னவேல் வாய் திறப்பார் என்பதை அறிந்து ஸ்பீக்கர் மூடில் பேசிக் கொண்டிருக்க அமுதனும் ப்ரதீபனும் அவள் அருகில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.


images (9).jpg




"பதட்ட படாதீங்கப்பா நான் சொல்லுறத கேளுங்க. அத்தைய காப்பாத்த நான் கடத்தப் பட்டதாகவே இருக்கட்டும் அப்போ தான் போலீஸ் அந்த யாதவமாதவன தேடுவாங்க. அத்த சேப்பா தானே இருக்காங்க?" திட்டம் போட்டு தூண்டிலையும் போட்டாள் மலர்





மகளின் குரல் கேட்டு சந்தோஷமும், பதட்டமும் அடைந்த ரத்னவேல் "ஆ... அவ பத்திரமா இருக்கா..." என்று விட்டு ஒருவேளை மலர்விழியின் குரலில் யாராவது பேசுகிறார்களோ! போட்டு வாங்குகிறார்களோ! அல்லது யாதவமாதவே மலர்விழியை மிரட்டி பேச வைத்திருப்பானோ! என்று தோன்ற உஷாரானார்.





"மலர் அடுத்த வாரம் உன் பொறந்த நாள் வருதேமா... அதுக்குள்ள இப்படியெல்லாம் நடக்கணுமா? " கண்ணீர் குரலில் சொல்ல





"என்ன இந்தாளு சம்பந்தம் சம்பந்தமில்லாம பேசுறான்" அமுதனின் மூளை குறுக்கு கேள்வி எழுப்ப ப்ரதீபனோ மினிஸ்டரின் உள்குத்துப் புரிய கேலியாக புன்னகைத்தான்.





"என்னப்பா என் பொறந்த நாள் தான் இரண்டு மாசத்துக்கு முன்னாடியே வந்துருச்சே! நீங்க கூட பிளாட்டினம் வாட்ச், அத்த வைர நகை வாங்கித் தந்தாங்களே! தந்தப்போ கூட அடுத்த வருஷம் புருஷன் கூட இருந்து பரிசு வாங்கணும்னு சொன்னீங்க அத்த வேற புருஷன் மட்டும் போதாது வயித்தையும் உப்பி வச்சிக்க டபிள் பரிசு தரேன்னு கிண்டல் பண்ணங்களே! மறந்துட்டீங்களா?" வெட்கப்பட்டு பேசினால் எவ்வாறு குரல் குலையுமோ அவ்வாறு முயற்சி செய்து பேசிக் கொண்டிருக்க, அவள் பொய்யாக வெட்கப்படுவதை புருவம் உயர்த்திப் பார்த்திருந்தான் அமுதன்.





தன் தந்தையின் சுபாவம் அறிந்திருந்தமையால் அலைபேசியில் பேசி ரத்னவேலை நம்ப வைப்பது கடினம் என்று மலர்விழி அவர் எந்த மாதிரி கேள்விகளை எழுப்புவார் எந்தமாதிரி பதில்களை எவ்வாறு சொல்ல வேண்டும் என்று ஒத்திகை பார்த்து அவரின் கேள்விக்கு தகுந்த மாதிரி பதிலளித்து தான் ரத்னவேலின் வாரிசு என நிரூபித்தாள் மலர்.





Screenshot_20190714-162725_Instagram (1).jpg

அவளின் பதிலில் ரத்னவேலின் எண்ணத்தை கைப்பற்றிய அமுதன் செய்கையாலையே! "கிரிமினல் குடும்பம்" என்று சொல்ல மலர் அவனை முறைக்க பிரதீபன் அவர்களின் செல்ல சண்டையை பார்த்திருந்தான்.





"அத்தைய நம்மளோட எந்த இடத்திலையும் தங்க வைக்காதீங்க சேப் இல்ல. உங்க ப்ரெண்ட்ஸ் யாராவது நம்பிக்கையானவங்க கிட்ட உதவி கேளுங்க. நானும் அது மாதிரியான ஒரு இடத்துல தங்க ஏற்பாடு செய்ங்க"







"இல்லமா... அவ எங்க இடத்துல தான். பெங்களூர்ல புதுசா வாங்கின பில்டிங்ல ஒரு பகுதி கட்டி முடிச்சிட்டாங்க, மத்த பகுதி வேல நடக்குது. அங்க தான் இருக்கா. யாருக்கும் சந்தேகம் வராது. கூடவே செல்வமும் என் தொண்டர்கள் ரெண்டு பேர் இருக்காங்க. நீயும் அங்க போய்டு. நான் வண்டி ஏற்பாடு பண்ணுறேன்.
 

banumathi jayaraman

Well-Known Member
குடும்பமே கிரிமினல் குடும்பமா இருக்கு
எதுக்கும் நீ கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருந்துக்கோ, கனி அமுதா
ஹா ஹா ஹா
ஹப்பா ஒரு வழியா கீதாராணி இருக்கிற இடத்தை ரத்னவேல் சொல்லிட்டான்
அந்த கீதா மூதேவிக்கு என்ன தண்டனை கிடைக்குதுன்னு பார்க்கணும்
சீக்கிரமா அப்டேட் கொடுங்க, மிலா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top